இந்தியப் பயணத்தொடர் (3) : காஷ்மீர் பூந்தோட்டங்கள்! - நடேசன் -

தாஜ்மஹாலைக் கட்டிய மன்னர் ஷாஜகானின் தந்தையான முகலாய மன்னர் ஜஹாங்கீர் (Emperor Jahangir) இறுதி காலத்தில் மரணப் படுக்கையிலிருந்தபோது, அவரது உதவியாளர் ஒருவர்,“இந்த இறுதிக் காலத்தில் நீங்கள் எதை விரும்புகிறீர்கள், மகாராஜா?” என்று கேட்டபோது, அவர்,“காஷ்மீர் மட்டுமே; மற்றவை பிரயோஜனமில்லை,” என்றார்.
இதிலிருந்து, தற்போதைய அரசுகளான பாகிஸ்தான் மற்றும் இந்தியா — காஷ்மீர் நிலம் தொடர்பான செயல்களையும், அவர்கள் மனநிலையையும் — நாம் ஊகிக்க முடியும்.
அவுஸ்திரேலியாவிலிருந்து சென்ற எங்கள் ஆறு பேருக்குக் “காஷ்மீரில் பார்ப்பதற்கு என்ன உள்ளது?” என்ற கேள்வி வந்தபோது, அதற்கு என்ன பதில் சொல்லலாம்?
காஷ்மீர் — நீர்வளம், நிலவளம் கொண்ட பிரதேசம். வெண்பனியால் கம்பளித் தொப்பி அணிந்த மலைச் சிகரங்கள், நீரோடைகள், விரல்களைப் போல பரந்து விரியும் மரகத பள்ளத்தாக்குகள், கங்கைபோல இல்லாமல் இந்தியாவின் அழுக்கைச் சுமக்காத, பனி கரைந்து ஓடும் சுத்தமான ஆறுகள் என இயற்கையின் கொடைகள் நிறைந்தது. இந்தியாவின் பிற பகுதிகளில் உள்ள அரண்மனைகள், கோட்டைகள், கோவில்கள் இங்கு இல்லை.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஒரு காலத்தில் இந்துக்கள், பின்னர் புத்தமதத்தினரைப் பின்பற்றியவர்கள், தற்போது இஸ்லாமிய மதத்தைப் பின்பற்றுகிறார்கள். பௌத்தம் காஷ்மீர் வழியாக, மத்திய ஆசியா, கிழக்காசியா வரை பரவியது. இது சில்க் ரோடு எனப்படும் ஆசிய–ஐரோப்பிய வாணிகப்பாதையின் ஒரு கிளையாக இருந்தது.


அழகான உடை பெண்ணின்







மனிதனின் மெய்யில் தோன்றும் சில உணர்வுகளை அவரவர்களின் செயல்பாடுகள் மூலமாகவும் குறிப்புகள் மூலம் அறியலாம்.பேச்சுமொழித் தோற்றத்திற்கு முன்பே மனிதன் தன் உள்ளத்து உணர்ச்சிகளை உடலைசைவுகளால் வெளிப்படுத்தினான். உள்ளத்து உணர்ச்சிகளின் வெளிப்பாடாக உடலின் மேல் தோன்றும் புறக்குறிகள் மெய்ப்பாடுகள் என அழைக்கப்பெறுகின்றன. மெய்யின் படுதல் மெய்ப்பாடு, அதாவது, உணர்ச்சி மெய்யில்(புற உடலில்) வெளிப்படுதல் மெய்ப்பாடு எனப்படும். உண்மைத் தோற்றம் உண்மை நிகழ்ச்சி, உண்மை நிலை என்றெல்லாம் பொருள் விளக்கம் பெறுகிறது. மெய்ப்பாடுகள் என்பவை மிகவும் நுண்மையானவை.அத்தகைய மெய்பப்பாடுகளை குறுந்தொகையில் மூலம் காணலாம்.



தாரை என்ற சொல்லுக்குக் ’கண்ணின் மணி’ என்று பொருள் தருகிறது திவாகரம்.தாரை, கிட்கிந்தை நாட்டின் வானரகுல அரசன் வாலியின் மனைவி.சுக்ரீவனுக்குத் துணையாக இராமன் வந்துள்ளதையும், உன் உயிரை எடுப்பதற்காகவே அவன் வந்துள்ளான் என்று நம்மீது அன்புடையவர்கள் கூறினர் என்று சொன்னாள். இளையபெருமாள் கோபத்துடன் வருவதைக்கண்டு, தவறு செய்த வானரர்களைக் கடிந்து பேசிவிட்டு, தானே நேராக இலட்சுமணனிடன் சென்று இதமாகப்பேசி, அவன் கோபத்தைத் தணித்து, சுக்ரீவன் மீது பிழை இல்லை என்று புரியவைத்து, ஒரு ராசமாதாவாக நடந்துகொண்டாள். தாரையின் அழகு, புத்திசாலித்தனம்,அமைதி,தவறு செய்தவரிடத்து கண்டிக்கும் மனநிலை, வானர குலத்தைக்காக்க அவள் செய்யும் முயற்சி, வாலி இறந்ததால் கைம்மைத் தோற்றம் என்று பன்முகத்தன்மை கொண்ட தாரை குறித்துக் கம்பராமாயணம் கூறியுள்ள கருத்துக்களை இக்கட்டுரையில் ஆராய்வோம்.

- இலங்கைத் தமிழ் நாடக வரலாற்றில் அ.ந.கந்தசாமியின் 'மதமாற்றம்' ஒரு மைல் கல். மதம் என்னும் கருத்தியலை அங்கதச் சுவையுடன் சாடும் வேறெந்த நாவலும் இலங்கையில் மேடையேறியதாக நான் அறியவில்லை. அப்படி இருந்தால் , அறிந்தவர்கள் அதனை இங்கு பகிர்ந்துகொள்ளலாம்.



சுண்ணாம்புத்திண்ணையில் கால்கள் சுகமாய் நேராய்க்கிடக்கின்றன.காலங்களைக்கடந்துவந்த அனுபவங்கள் ஆச்சியின் பாதங்களில் தெரிகின்றன.அந்தப்பாதங்களில் விடைபெறுகின்ற வெயில் கொஞ்சிவிட்டுப்போகுது. உடலில் கொழுப்பென ஒன்றையும் காணமுடியாமல் பாலைவனப்பாறைகளாய் உடல் சதிராடுது. ஆச்சிக்கு எந்த ஆசைகளும் கிடையாது.








பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









