யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் அறிக்கை மற்றும் பாலியல்ரீதியிலான அழுத்தங்கள், வன்முறைகள் பற்றியும்...
அண்மைக்காலமாகப் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்களால் புரியப்படும் பாலியல் வன்முறைகள் பற்றிய குற்றச்சாட்டுகளை முன்வைத்துச் சமூக ஊடகங்களில் செய்திகள் பரவிக்கொண்டிருக்கின்றன. இதில் எவ்வளவு தூரம் உண்மை, பொய் என்பது பூரண விசாரணைகளின் பின்புதான் தெரிய வரும். அண்மையில் கூடப் பேராதனைப் பல்கலைககழகத்தில் பேராசிரியர் ஒருவர் இவ்விடயத்தில் குற்றவாளியாக இனங்காணப்பட்டுத் தண்டிக்கப்பட்ட செய்திகளை அறிந்திருக்கின்றோம்.
பல்கலைக்கழகங்களில் மட்டுமல்ல அதிகாரம் தலைவிரித்தாடும் அனைத்துத் துறைகளிலும் இந்நிலை இருப்பதை அறிந்திருக்கின்றோம். அரச உதவிகளில் தங்கியிருக்கும் பெண்கள் குறிப்பாக விதவைகள் மீது அவ்வுதவிகளை வழங்குவதற்குப் பொறுப்பான அரசியல் அதிகாரிகளால் பாலியல் ரீதியிலான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டதைச் செய்திகள் வாயிலாக அறிந்திருக்கின்றோம். அரசியல்வாதிகளால் இவ்வித அழுத்தங்கள் கொடுக்கப்பட்டதாகச் செய்திகள் வந்ததை அறிந்திருக்கின்றோம். இப்பொழுது அதிகமாகப் பல்கலைக்கழகங்களில் இவ்விதமான அழுத்தங்கள் மாணவிகள் மீது பிரயோகிக்கப்படுவதாகச் செய்திகள் வருகின்றன.




எல்லாப் பாதைகளும் ரோமாபுரியை நோக்கிச் செல்கின்றன என்ற வாசகம், அக்காலத்து ரோம ராச்சியத்தின் முக்கியத்துவத்தை விளக்குவதற்காகச் சொல்லப்படுகிறது. அதைப் போலவே, நாங்கள் ஏற்கனவே கட்டார் வழியாகச் செல்ல திட்டமிட்டிருந்த எங்களது இத்தாலியப் பயணம் திசை மாறியது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது மேற்கொண்டிருந்த போரின் காரணமாக மத்திய கிழக்கு வழியாகச் செல்லும் எங்களது பயணம் ரத்து செய்யப்பட்டதாகவே நினைத்திருந்தோம். ஆனால், இறுதி இரண்டு நாட்களுக்கு முன்பு, மத்திய கிழக்கைத் தவிர்த்து மாற்றுப் பாதையில் விமானப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டதாகத் தகவல் வந்தது: “புறப்படுங்கள்” என்ற அறிவிப்பு.
மனிதர்களின் கலை, இலக்கிய ஆர்வம் இயல்பிலேயே ஊற்றெடுப்பது. அந்த ஊற்றை நேர்த்தியாக சமூகத்திற்கு பயன்படும் விதத்தில் நதியாக்குவதில்தான் அவர்களின் ஆளுமைப்பண்பு வெளிப்படுகிறது. அத்தகைய வற்றாத ஓடும் நதிதான் எங்கள் மாவை நித்தியானந்தன். இவ்வாறு சில வருடங்களுக்கு முன்னர், மெல்பனில் நண்பர் மாவை நித்தியானந்தனின் பவள விழா நடைபெற்ற வேளையில் எழுதிய ஆக்கத்தில் குறிப்பிட்டிருந்தேன்.

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையினரின் (FeTNA) மாநாடு, ரொறன்ரோவில் நிகழ்ந்திருந்தபோது, அதில் பங்குபற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருந்தது. அதற்காக மொழிபெயர்ப்பு வேலைக்கூடாக என் சினேகிதிகளில் ஒருவராக மாறியிருந்த வசந்திக்குத்தான் நன்றி கூறவேண்டும். அது நிகழ்ந்து, 13 வருடங்களுக்குப் பின்னர், இப்போது நியூஜேர்சியில் நிகழ்ந்திருந்த அவர்களின் 39வது மாநாட்டில் கலந்துகொள்ளும் சந்தர்ப்பம் எனக்கு வாய்த்திருந்தது. வழமைபோல இந்த மாநாடும் ஜூலை இரண்டாம், மூன்றாம், நான்காம் திகதிகளில் நிகழ்ந்திருந்தது.
பாலத்தை கடந்து, கார், குன்று போல் அமைந்திருந்த, மேட்டு நிலத்தில் ஏற தொடங்கிய போது, சூட்டு முள் அசாதாரணமாக உச்சத்தை தொட்டிருந்தது. திடுக்கிட்டேன். காரை வலப்புறமாய் ஒடித்துத் திருப்பினேன். இரு புறமும் காடுகள். வலப்புறமாய், மற்றொரு கார் வாயை பிளந்து கொண்டு நின்றிருந்தது. எனது காரைப் போல சூடேறி இந்த வனாந்தர பிரதேசத்தில் ஆள் அரவமற்று அகப்பட்டுக் கொண்டிருக்கிறதா என்ன? அந்த காரின ட்ரைவர் கதவுகளின் ஜன்னல் வழியாக யாருடனோ கதைத்தப்படி நின்றிருந்தான்.


நீலகிரி படகர்கள் குறிஞ்சி வாழ்வியலை இடையாறாது பின்பற்றி வருபவர்கள். அவர்களை நீலகிரியில் வாழ்கின்ற குறிஞ்சி ஆயர்கள் எனலாம். ‘நாக்கு பெட்டா’ என்று வரையறுத்து வாழ்கின்ற நீலகிரியின் இவர்தம் புழங்குவெளி சிறப்பான கட்டமைப்பினை உடையது. இயற்கை சான்றது. தகவமைப்பின் நுட்பங்களை உட்செறித்தது. காலநிலைக்கேற்பக் காப்பு நிலையைத் தரித்தது. கடும் குளிரினையும், அடர் பனியினையும், அடை மழையினையும் கொண்ட நீலகிரியில் வாழ்வதற்குப் புறப் பாதுகாப்பினைத் தாண்டி, உணர்வுநிலை நீடும் அகப் பாதுகாப்பும் அவசியம். இது, சுற்றத்தால் அமைவது. அவ்வகையில் ‘மதிலு’, ‘அக்க பக்கா’ எனும் படகர்களின் புறம் சார்ந்த தொல்கூறுகளையும், ‘ஏகித்து கட்டோது’ எனும் அகம்சார்ந்த கூறினையும் இக்கட்டுரை ஆய்கிறது. இவை மூன்றும் சங்கக் கூறுகளோடு நெருங்கிய தொடர்புடையது நோக்கத்தகுந்தவை.

மலையக தமிழ் சமூகத்தில் நாடகமும் அரங்கியலும் கற்றல் கற்பித்தல் செயற்பாடானது சில பாடசாலைகளில் மட்டுமே கற்பிக்கப்படுகின்றது. இந்நிலையில் மாணவர்களிடம் நாடக தயாரிப்பு நெறிமுறைகளும் முகாமைத்துவ நடவடிக்கைகளும் மிகக் குறைவாகவே உள்ளது. நாடகத்தில் தயாப்பு முகாமைத்துவ விடயங்களை உட்புகுத்தி காத்திரமான நாடகத்தினூடாக சிறந்த அரங்க நிர்வாகிகளை வெளிக்கொணர முடியும்.
ஈழத்து வன்னிப் பிரதேச எழுத்தாளர்களுள் தனித்துவமான படைப்பாளுமையாகத் திகழ்பவர் தாமரைச்செல்வி. சிறுகதை, நாவல் ஆகிய இரு இலக்கிய வடிவங்களிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ள அவர், ஈழத்துத் தமிழிலக்கிய வரலாற்றில் அழியாத தடம் பதித்தவராக விளங்குகிறார். அவரது படைப்புகள் வெறும் கற்பனைச் சித்திரங்களாக அல்லாது, காலத்தின் சமூகச் சுவடுகளையும் மக்களின் வாழ்வியலையும் பதிவு செய்த ஆவணங்களாக அமைந்துள்ளன.








* கட்டுரையாளர்: முனைவர் ஆ. சந்திரன், உதவிப் பேராசிரியர், தமிழ் முதுகலை மற்றும் ஆய்வுத்துறை, தூயநெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), திருப்பத்தூர், திருப்பத்தூர் மாவட்டம் 
மகேந்திரன் இரத்தினசபாபதி என்ற முல்லை அமுதன் அவர்கள் இலங்கையின் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். புலம்பெயர்ந்து இங்கிலாந்தில் வசித்து வருகின்றார். கவிதை, சிறுகதை, நாவல், இதழாளர் என பல துறைகளில் கால்பதித்துத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர். தொடர்ந்து இலண்டனின் காற்றுவெளி இதழை வெளியிட்டு வருகின்றார். இவரது இலக்கியப்பயணம் உலகளாவிய நிலையில் பல படைப்பாளர்களையும் படைப்புகளையும் வெளிக்கொணர்ந்திருக்கிறது என்பது மறுக்கவியலாத உண்மை.



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









