பெண்ணுரிமைப் புரட்சி: பாரதியாரும் பாரதிதாசனும்! - முனைவர் அ. கார்வண்ணன்

கட்டுரையாளர்: முனைவர் அ. கார்வண்ணன், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி, சென்னை – 600061.
முன்னுரை
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ் சமூகம் அடைந்த மறுமலர்ச்சியில் பெண்ணுரிமையும் சமூக விடுதலையும் பிரிக்க முடியாத இரு பெரும் கூறுகளாக விளங்கின. காலங்காலமாக ஆணாதிக்கச் சமூக அமைப்பிலும் வைதிகச் சடங்குகளிலும் கட்டுண்டு கிடந்த பெண்ணினத்தை விடுவிப்பதில், மகாகவி சுப்பிரமணிய பாரதியும் அவரது வழியைப் பின்பற்றிப் புரட்சிகரக் கருத்துகளை படைத்த பாவேந்தர் பாரதிதாசனும் ஆற்றிய பங்களிப்பு ஒப்பற்றது. பாரதி தேசிய மற்றும் ஆன்மீகச் சிந்தனைகளின் பின்னணியில் பெண்ணுரிமையைப் பாடினார். அவரைத் தொடர்ந்து, பாரதிதாசன் தந்தை பெரியாரின் சுயமரியாதை மற்றும் பகுத்தறிவு இயக்கத்தின் பின்னணியில் ஜாதி ஒழிப்பையும் பெண்ணுரிமையையும் இணைத்துப் புரட்சிக் கருத்துகளை முன்வைத்தார். எனவே, இவ்விரு ஆளுமைகளின் பெண்ணுரிமைச் சிந்தனைகள் மற்றும் சமூக விடுதலைப் பங்களிப்புகள் குறித்தும் அவற்றுள் நிலவிய கோட்பாட்டு முரண்பாடுகள் குறித்தும் ஆரய்வது இக்கட்டுரையின் நோக்கமாகிறது. பாரதி கண்ட புதுமைப் பெண்
சமூக, அரசியல், பொருளாதார விடுதலைகளுக்கு இணையாகப் பெண் விடுதலைக்கும் பாரதியார் முதன்மை இடமளித்தார். பெண்களை வெறும் இல்லறப் பொருளாக மட்டுமே பார்த்த சமூகப் பார்வையை மாற்றி, அவர்களைச் 'சக்தி' வடிவமாகவும், தேசத்தின் உன்னதமான மனிதர்களாகவும் நிலைநிறுத்துவதற்கான முயற்சியை அவர் தனது படைப்புக்களின் வழி வெளிப்படுத்தினார்.



சிங்கங்கள் தொடர்பான பல்வேறு வர்ணனைகள் உண்டு. ஆபிரிக்க காட்டு சிங்கங்கள் கருத்தை கவருவன. அவற்றின் கண்கள், போத்தல்களின் கண்ணாடி துண்டுகள் பதிக்கப்பட்டவை போன்றவை. பாவமற்றவை. சிங்கங்களை எதிர்கொள்ள நேர்ந்தால், அவற்றின் கண்களைப் பார்ப்பதைத் தவிர்த்துவிட வேண்டும் என்ற அறிவுரையும் காணப்படுகின்றது. ஆனால், மிருகங்களில் கண்களை கொண்டே, மனிதன், அவற்றின் அடுத்த கட்ட நகர்வுகளைக் கணிக்க சாபம் கொண்டுள்ளான். எனவேதான், சிங்கங்களின் கண்களைப் பார்ப்பதைத் தவிர்ப்பது என்பது முடியாத காரியமாகிறது.



* கட்டுரையாளர்: முனைவர் ஆ. சந்திரன், உதவிப் பேராசிரியர், தமிழ் முதுகலை மற்றும் ஆய்வுத்துறை, தூயநெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), திருப்பத்தூர், திருப்பத்தூர் மாவட்டம் 
மகேந்திரன் இரத்தினசபாபதி என்ற முல்லை அமுதன் அவர்கள் இலங்கையின் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். புலம்பெயர்ந்து இங்கிலாந்தில் வசித்து வருகின்றார். கவிதை, சிறுகதை, நாவல், இதழாளர் என பல துறைகளில் கால்பதித்துத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர். தொடர்ந்து இலண்டனின் காற்றுவெளி இதழை வெளியிட்டு வருகின்றார். இவரது இலக்கியப்பயணம் உலகளாவிய நிலையில் பல படைப்பாளர்களையும் படைப்புகளையும் வெளிக்கொணர்ந்திருக்கிறது என்பது மறுக்கவியலாத உண்மை.

செயற்கை நுண்ணறிவின் ஆளுகையில் உலகம் உழலுகின்ற இன்றும் இயற்கைகென்று மாறாத இயல்புண்டு; தரமுண்டு. இதை உயிரிகளால், குறிப்பாக மனிதனால் ஆக்க முடியாது. ஆக்க முயற்சித்தாலும் அதன் தன்மை இயற்கையில் கிளைத்ததுபோல் இராது எனும் கோட்பாடு உயிர்த்திருக்கிறது. இக்கோட்டை நன்னூலாரின் “இயற்கைப் பொருளை இற்றெனக் கிளத்தல்” (நன். சொல். நூ. 404) எனும் சூத்திரத்தோடு ஒப்புநோக்கி மேலும் விளங்கிக்கொள்ளலாம். இயற்கைசார் பயன்பாட்டுநிலையார்ந்து மற்றெல்லா உயிரிகளுக்கு இயற்கையிலேயே விரவியிருந்த சூழலியல் சமநிலைப் பேணலிருந்து பகுத்தறியும் அறிவைக்கொண்ட மனிதன் பெரிதும் விலகியிருந்தான். அவனின் மனமானது விலங்குநிலை மனதிலிருந்து நனவிலிநிலை, நனவுநிலை என்று பரிணாம வளர்ச்சியுற்றது மானுட சமூகத்திற்கு ஏற்றம் தந்தாலும் சூழல்சார்ந்து பெருமளவில் சுயநலத்தையே விளைத்தது எனலாம். ஆனால், தன் வாழ்வியல் தகவமைப்பில் இயற்கையை நன்றாகப் புரிந்துகொண்ட இனக்குழு சமூகங்களிடையே இயற்கை எல்லோருக்குமானது எனும் சூழலியல் சமநிலைக் குறித்த தெளிவும், பிரஞ்ஞையும் மிகுந்திருந்தது. இயற்கையின் துணையின்றி வாழவியலாது எனும் தெளிவிருந்தது. அது அடுத்த தலைமுறைக்கும் செல்லவேண்டுமென்ற அக்கறையிருந்தது எனலாம்.
மற்றவர்களை விட எழுத்தாளர்களிடம் சகமனிதநேயம் அதிகம் இருக்கும் என்று நம்புவதும், அதிகம் இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பதும்கூட ‘அன்றாடத்தி லிருந்து அதீதம்’ தானோ – தெரியவில்லை. ஆனால், பாழாய்ப்போன மனது அப்படியே எதிர்பார்க்க, நம்ப பழகிவிட்டது. ஒவ்வொரு முறை அந்த எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் பொய்க்கும்போதும் நிறையவே வலிக்கிறது.
மனித சமூகம் உருவான காலத்திலிருந்தே கதைகள் மனித வாழ்வின் ஓர் அங்கமாக இருந்து வருகின்றன. மனிதனின் அனுபவங்கள், உணர்ச்சிகள், போராட்டங்கள், ஆசைகள், அச்சங்கள் மற்றும் சமூக மாற்றங்கள் அனைத்தும் கதைகளின் மூலம் தலைமுறையிலிருந்து தலைமுறைக்கு கடத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் இலக்கியம் என்பது வெறும் பொழுதுபோக்கு சாதனம் மட்டுமல்ல; அது ஒரு சமூக ஆவணமாகவும், சிந்தனையின் கருவியாகவும், மாற்றத்தின் ஊடகமாகவும் விளங்குகிறது.



ஒரு கவிதை தனக்குரிய இலக்கணங்களால் மட்டுமே பெறுமதியினைப் பெறுவதில்லை. மொழிச் செழுமை மிகுந்த சொல்லழகு ஓசை நயம் குறியீடு படிமம் எனும் அணிகலன்களை தனதாக்கி சமூகம் அரசியல் வாழ்வியல் என்ற தளங்களின் ஊடாக உண்மைகளைைக் குறிப்பால் உணர்த்தி, எளிமையும் ஆழமும் கொண்டியங்கும் கவிதைகளே இன்று ரசனைக்குரியனவாக விதந்துரைக்கப் படுகின்றன. 
சமீபத்தில் ஒரு நண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது, “எனது கலாச்சாரக் கூறுகளில் அரிசிச் சோற்றைத் தவிர மற்ற எதையும் நிராகரிக்க முடியும்” என்று சொன்னேன்.


உடலுக்குள்



கனடாவில் இருந்து வெளிவரும் உதயன் பத்திரிகை நடத்தும் உதயன் சர்வதேச விருது விழா சென்ற சனிக்கிழமை 6-6-2026 அன்று ரொறன்ரோவில் நகெட் அவென்யூவில் உள்ள எஸ்டேட் பாங்குவிற் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இலங்கையில் இருந்து வருகை தந்த மனோ கணேசன் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
18 வயதுக்குட்பட்டோர் அனைவருமே குழந்தைகள் என்று குறிப்பிடப் படுவது பொதுமக்கள் மனங்களில் சற்று குழப்பத்தை ஏற்படுத்துவது உண்மைதான். மழலையர், சிறு குழந்தைகள், சற்றே பெரிய குழந்தைகள், வளரிளம்பருவத்தினர் என குழந்தை என்ற பிரிவின் கீழ் பலர் இடம்பெறுவர். ஆனால், அவர்கள் எல்லோருமே குழந்தைகள் தான் என்பதை பெரியவர்கள், வளர்ந்தவர்கள் உணரவேண்டியது அவசியம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









