மண்ணும் சொல்லும்: மஹ்மூத் தர்வீஷின் கவித்துவ இயக்கவியலும் , எம்.ஏ. நுஃமானின் மொழிபெயர்ப்பு அரசியலும்! (பகுதி 1) - ஏ.எச்.எம்.நவாஷ் (ஈழக்கவி) -

தத்துவார்த்த அறிமுக உரை (Comprehensive Introduction)
1. நுழைவாயில்: உலக இலக்கியப் பரப்பில் எதிர்ப்பின் அழகியல் (The Aesthetics of Resistance)
இருபதாம் மற்றும் இருபத்தியோராம் நூற்றாண்டின் உலக இலக்கியப் பரப்பில், ஒடுக்குமுறைக்கு எதிரான கவிதை மொழி என்பது வெறும் சொற்களின் சேர்க்கையாக இருக்கவில்லை. அது வரலாற்றின் சிதைவுகளுக்குள் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் ஒடுக்கப்பட்ட மக்களின் அசைக்க முடியாத கூட்டு நனவிலியாக (Collective Unconscious) விளங்கியது. லத்தீன் அமெரிக்காவின் பப்லோ நெருடா, கியூபாவின் நிக்கோலஸ் கியென், ஆப்பிரிக்காவின் லியோபோல்ட் செங்கோர் மற்றும் நுகுகி வா தியாங்கோ போன்ற ஆளுமைகளின் வரிசையில், மத்திய கிழக்கின் ஆகப் பெரும் தத்துவார்த்தக் குரலாக ஒலிப்பவர் பலஸ்தீனத்தின் தேசியக் கவிஞர் மஹ்மூத் தர்வீஷ் ஆவார்.
ஆக்கிரமிக்கப்பட்ட ஒரு நிலப்பரப்பில், சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்ட (Internally Displaced) ஒரு சமூகத்தின் இருத்தலியல் துயரத்தை, உலகளாவிய மானுடப் பொதுத்தளத்திற்கு நகர்த்திய பெருமை தர்வீஷுக்குரியது. கவிதை என்பது அழகியல் இன்பம் தரும் ஒரு நுகர்வுப் பொருள் அல்ல; மாறாக, அது காலனிய மற்றும் சியோனிச ஆக்கிரமிப்பாளர்களின் மேலாதிக்கச் சொல்லாடல்களை (Hegemonic Discourses) உடைத்தெறியும் ஒரு 'பொருளாயுதக் காரணி' (Material Weapon) என்பதை அவரது ஒட்டுமொத்த கவித்துவத் தடமும் நமக்கு நிரூபித்துக் காட்டுகிறது.
2. தமிழ் அறிவுச்சூழலும் பேராசிரியர் எம்.ஏ. நுஃமானின் கொடையும் (The Tamil Intellectual Context)
தமிழ் இலக்கியச் சூழல், குறிப்பாக ஈழத்து இலக்கியப் பரப்பு, தசாப்த காலங்களாகப் போர் மற்றும் இடப்பெயர்வின் வலிகளைத் தன் சொந்தக் குருதியில் அனுபவித்த ஒன்று. இத்தகையதொரு சூழலில், பலஸ்தீனத்தின் ஆகப் பெரும் எதிர்ப்புக் குரலான தர்வீஷை தமிழ் வாசகப் பரப்பிற்கு அறிமுகம் செய்ததன் மூலம், பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் அவர்கள் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க பண்பாட்டுப் பரிமாற்றத்தை (Cultural Exchange) நிகழ்த்தியுள்ளார்.


நகரம் 1916 ஆம் ஆண்டின் முதல் யுனெஸ்கோ நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டுப் பாதுகாக்கப்படும் நகரமாக உள்ளது. சுற்றி வர திராச்சை தோட்டங்கள் சுற்றியிருக்கும் நிலப்பரப்பில், ஒரு குன்றின் மேல் அமைந்துள்ள இந்த நகர், கோட்டைச் சுவர்களால் பாதுகாக்கப்பட்டது.

இலக்கியவாதியும் ஊடகவியலாளருமான நிலாந்தன் எழுதிய பதிவு ஒன்றிலிருந்து முன்னாள் ஆசிரியரும், தன்னலமற்ற தொழிற்சங்கவாதியுமான சிவராசா மாஸ்டர் அவர்கள் யாழ்ப்பாணத்தில் மறைந்துவிட்டார் என்ற துயரமான செய்தியை படித்தேன்.



“தங்க வேலாயுதபுரம்” – “அங்குதான் காணி வாங்கி இருக்கின்றேன். காட்டு தொங்கல். யானைகள் அலைந்து திரியும் காட்டு தொங்கல்”.
அண்மைக்காலமாகப் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்களால் புரியப்படும் பாலியல் வன்முறைகள் பற்றிய குற்றச்சாட்டுகளை முன்வைத்துச் சமூக ஊடகங்களில் செய்திகள் பரவிக்கொண்டிருக்கின்றன. இதில் எவ்வளவு தூரம் உண்மை, பொய் என்பது பூரண விசாரணைகளின் பின்புதான் தெரிய வரும். அண்மையில் கூடப் பேராதனைப் பல்கலைககழகத்தில் பேராசிரியர் ஒருவர் இவ்விடயத்தில் குற்றவாளியாக இனங்காணப்பட்டுத் தண்டிக்கப்பட்ட செய்திகளை அறிந்திருக்கின்றோம்.




வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையினரின் (FeTNA) மாநாடு, ரொறன்ரோவில் நிகழ்ந்திருந்தபோது, அதில் பங்குபற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருந்தது. அதற்காக மொழிபெயர்ப்பு வேலைக்கூடாக என் சினேகிதிகளில் ஒருவராக மாறியிருந்த வசந்திக்குத்தான் நன்றி கூறவேண்டும். அது நிகழ்ந்து, 13 வருடங்களுக்குப் பின்னர், இப்போது நியூஜேர்சியில் நிகழ்ந்திருந்த அவர்களின் 39வது மாநாட்டில் கலந்துகொள்ளும் சந்தர்ப்பம் எனக்கு வாய்த்திருந்தது. வழமைபோல இந்த மாநாடும் ஜூலை இரண்டாம், மூன்றாம், நான்காம் திகதிகளில் நிகழ்ந்திருந்தது.



நீலகிரி படகர்கள் குறிஞ்சி வாழ்வியலை இடையாறாது பின்பற்றி வருபவர்கள். அவர்களை நீலகிரியில் வாழ்கின்ற குறிஞ்சி ஆயர்கள் எனலாம். ‘நாக்கு பெட்டா’ என்று வரையறுத்து வாழ்கின்ற நீலகிரியின் இவர்தம் புழங்குவெளி சிறப்பான கட்டமைப்பினை உடையது. இயற்கை சான்றது. தகவமைப்பின் நுட்பங்களை உட்செறித்தது. காலநிலைக்கேற்பக் காப்பு நிலையைத் தரித்தது. கடும் குளிரினையும், அடர் பனியினையும், அடை மழையினையும் கொண்ட நீலகிரியில் வாழ்வதற்குப் புறப் பாதுகாப்பினைத் தாண்டி, உணர்வுநிலை நீடும் அகப் பாதுகாப்பும் அவசியம். இது, சுற்றத்தால் அமைவது. அவ்வகையில் ‘மதிலு’, ‘அக்க பக்கா’ எனும் படகர்களின் புறம் சார்ந்த தொல்கூறுகளையும், ‘ஏகித்து கட்டோது’ எனும் அகம்சார்ந்த கூறினையும் இக்கட்டுரை ஆய்கிறது. இவை மூன்றும் சங்கக் கூறுகளோடு நெருங்கிய தொடர்புடையது நோக்கத்தகுந்தவை.

மலையக தமிழ் சமூகத்தில் நாடகமும் அரங்கியலும் கற்றல் கற்பித்தல் செயற்பாடானது சில பாடசாலைகளில் மட்டுமே கற்பிக்கப்படுகின்றது. இந்நிலையில் மாணவர்களிடம் நாடக தயாரிப்பு நெறிமுறைகளும் முகாமைத்துவ நடவடிக்கைகளும் மிகக் குறைவாகவே உள்ளது. நாடகத்தில் தயாப்பு முகாமைத்துவ விடயங்களை உட்புகுத்தி காத்திரமான நாடகத்தினூடாக சிறந்த அரங்க நிர்வாகிகளை வெளிக்கொணர முடியும்.
ஈழத்து வன்னிப் பிரதேச எழுத்தாளர்களுள் தனித்துவமான படைப்பாளுமையாகத் திகழ்பவர் தாமரைச்செல்வி. சிறுகதை, நாவல் ஆகிய இரு இலக்கிய வடிவங்களிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ள அவர், ஈழத்துத் தமிழிலக்கிய வரலாற்றில் அழியாத தடம் பதித்தவராக விளங்குகிறார். அவரது படைப்புகள் வெறும் கற்பனைச் சித்திரங்களாக அல்லாது, காலத்தின் சமூகச் சுவடுகளையும் மக்களின் வாழ்வியலையும் பதிவு செய்த ஆவணங்களாக அமைந்துள்ளன.



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









