ஊடகவியலாளர் டேவிட் ஜெயராஜ் (டி.பி.எஸ்.ஜெயராஜ்) மறைவு பத்திரிகைத் துறைக்கு பெரிய இழப்பு! - நடேசன் -
ZOOM MEETING: https://us06web.zoom.us/j/82713649366#success

இலங்கைத் தமிழர் சமூகத்தைச் சேர்ந்த அனுபவமிக்க பத்திரிகையாளராக டேவிட் ஜெயராஜ் விளங்கினார். அவர் ஒரு சாதாரண செய்தியாளர் மட்டுமல்ல; கூர்மையான சமூகக் கவனிப்பாளராகவும் திகழ்ந்தார். அவரது எழுத்தின் அடையாளம் நேர்மையே. எந்த அலங்காரமோ மிகைப்போ இல்லாமல், உண்மையை உண்மையாகவே பதிவு செய்தார். அவருடன் கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், அவரது செய்தி வெளியீட்டின் நேர்மையை யாரும் கேள்விக்குட்படுத்த முடியாது.
அவரது வாசகர்கள் தமிழர் சமூகத்தைத் தாண்டி பரவியிருந்தனர். எனது பல சிங்கள நண்பர்கள்கூட செய்தித்தாளை எடுத்தவுடன் முதலில் அவர் எழுதிய கட்டுரைகளையே வாசிப்பார்கள். இவ்வாறு சமூகத்தின் பல தரப்பினரிடமும் நம்பிக்கையைப் பெற்றிருப்பது ஒரு பத்திரிகையாளனுக்குக் கிடைக்கும் அரிதான சாதனையாகும்.
நான் இளமையிலிருந்தே அவரது எழுத்துக்களை வாசித்து வருகிறேன். ஐலன்ட் பத்திரிகையில் அவரது கட்டுரைகளை முதன்முதலாக வாசித்தபோது, அவை எனக்குள் ஒரு புதிய விழிப்புணர்வை ஏற்படுத்தின.
நான் ஆஸ்திரேலியாவிற்கு இடம்பெயர்ந்தபின், அவர் கனடாவின் டொராண்டோவில் குடியேறினார். இருந்தபோதிலும், இலங்கைத் தமிழர் அரசியலைப் பற்றித் தொடர்ந்து எழுதி வந்தார். 1987 ஆம் ஆண்டு நான் ஆஸ்திரேலியாவில் உதயம் பத்திரிகையைத் தொடங்கியபோது, அவருடன் தொடர்ச்சியான தொடர்பில் இருந்தேன். அவரது பல கட்டுரைகளை தமிழில் வெளியிடும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது.






அது புதிய வண்ணத்துப்பூச்சி 
[ராஃபெல்லின் புகழ்பெற்ற ஓவியம் 'The School of Athens'. பிளேட்டோ விரலை மேலேயும், அரிஸ்டோட்டில் உள்ளங்கையைக் கீழேயும் காட்டியபடி இருக்கும் சித்திரம் அது. ராஃபெல்லின் அந்த உன்னதமான ஓவியம், வெறும் வண்ணங்களின் தொகுப்பல்ல; அது மனிதச் சிந்தனையின் இரு துருவங்களுக்கிடையிலான நித்திய உரையாடல். அந்த ஓவிய உரையாடல் கவிதையாக உயிர்ப்பாகியுள்ளது.]

கனடாவில் உள்ள சண்டிலிப்பாய் ஐக்கிய மன்றத்தின் கலைச்சங்கமம் - 2026 ஆண்டு விழாவும் மற்றும் இரவு விருந்தும் சென்ற சனிக்கிழமை 2300, ரொறன்ரோ லோறன்ஸ் வீதியில் உள்ள ‘வயிட்சீல்ட் விருந்தினர் மண்டபத்தில்’ சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அவுஸ்ரேலியாவில் இருந்து வருகை தந்திருந்த சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகக் கொண்ட வாசுகிதேவி மகாதேவன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
தமிழில் கவிதை, சிறுகதை, இலக்கியக்கட்டுரை, நூல்ஆய்வு என தன்னை இலக்கிய உலகில் அறியப்பட்ட எழுத்தாளர் சு.சோமசுந்தரி அவர்கள் காற்றுவெளி, தமிழ்நெஞ்சம், முத்தமிழ்நேசன், முத்தமிழ்க்கலசம், பதிவுகள் இணையம், ஞானம், வல்லினச்சிறகுகள், ஊடறு போன்ற பல இதழ்களின் மூலம் நமக்கு அறிமுகமானவரின் சிறுகதையைத் தனித்து நூலாக்குகின்ற அவரின் தெரிவு இன்றைய காலத்திற்கு அவசியமானதொன்று.

அவுஸ்திரேலியாவில் இயங்கிவரும், அஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச் சங்கம்எழுத்தாளர்களுக்காக ஓர் எழுத்தாளர் விழாவையும் மற்றும், தமிழ் இலக்கியம், கலை தொடர்பான நிகழ்வுகளையும் கடந்த 25 வருடங்களாக நடத்திவருகிறது.
முதன்முதலாக நான் கருத்தரித்திருந்தபோது, இலங்கையிலிருந்த சித்தியுடனும், அவவின் சில சினேகிதிகளுடனும் பருத்தித்துறையிலிருந்து, நுவரெலியாவுக்குச் சென்றிருந்த பயணமொன்று மீளவும் என் நினைவுக்கு வந்தது. அந்தப் பயணத்தின்போது, செங்குத்தான குன்றுகளில் ஏறவேண்டியிருந்தபோதுகூட, தனது ஒன்பது மாதக் குழந்தையைச் சித்தியின் சினேகிதி ஒருவர் மிக இயல்பாகவும், எவ்வித தயக்கமும் இல்லாமலும் தூக்கிக்கொண்டு வந்திருந்தார். அப்போது நான் எடுத்திருந்த நிழல்படங்களில், அந்தக் குழந்தை நீர்வீழ்ச்சியருகே, மலையோரக் காய்கறிக் கடையில், ஏரிக்கரையில் என எல்லாவிடங்களிலும், சிலநேரங்களில் விழித்தபடியும், சிலநேரங்களில் உறங்கியபடியும், ஆனால், எப்போதும் தூக்கி வைத்திருந்தபடிதான் இருக்கிறார். சில ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் இலங்கைக்கு என் கணவருடன் சென்றிருந்தபோது, சமைக்கும்போதும், வீதிகளில் அல்லது கடற்கரையில் நடந்து கொண்டிருந்தபோதும், தன் ஒரு வயதுப் பேத்தியைத் சித்தியும் அவ்வாறே தூக்கிவைத்துக் கொண்டிருந்ததும் என் நினைவுக்கு வந்தது. இலங்கையில் எடுக்கப்பட்டிருந்த என்னுடைய பழைய நிழல்படங்கள் உள்ளடங்கலான ஏனைய நிழல்படங்களை மீளப் பார்த்தபோதும், அவற்றிலிருக்கும் குழந்தைகளை யாரோ ஒருவர் தூக்கிவைத்திருப்பதையே நான் பார்த்தேன்.

சுயசரிதை பாங்கில் அமைந்த 'ஒரு விதையின் இருமலர்கள்' – 'Two Blooms of One Seed' என்ற நூல் எனக்கு அண்மையில் படிக்கக் கிடைத்தது. நண்பர் ஶ்ரீபாலன் இதனை எனக்குத்தந்தார். இந்நூலை எழுதியிருப்பவர் எனது மற்றும் ஒரு நண்பர் திரு. கந்தசாமி சரநாதன். கவிதைத்துறையில் ஈடுபாடுமிக்கவரான சரநாதன், தனது கதையையும் கவிதையாகவே புனைந்துள்ளார். அதனால், இலக்கிய நயத்தையும் நாம் உணர்கின்றோம். தமிழிலும் ஆங்கிலத்திலும் இந்நூல் படைக்கப்பட்டிருக்கிறது.


கலை என்பது சிலருக்கு பொழுதுபோக்காகவும் சிலருக்கு உள்ளூறும் உணர்வாகவும் இணைந்து வாழ்வுடன் பிரிக்க முடியாததாக உள்ளது. இவ்வாறான ஒரு உண்மைக் கலைஞராக, வாழ்வியலை ஆழ்ந்து படித்து அதிலிருந்து சிறந்த அனுபவங்களை உளம்கொண்டு நாடகங்களையும் நடிகர்களையும் உருவாக்கியவர் திரு.க. பாலேந்திரா அவர்கள். 
அமெரிக்கா நினைத்தால் எதனையும் செய்யலாம். உற்பத்தி சங்கிலிகளையும், விநியோக பாதைகளையும் ஒருங்கே சிதைத்து மூடலாம். பொருளாதார தடைகளை விதிக்கலாம். முழு உலகத்தையும் பட்டினி போட்டு அலைய செய்யலாம். கடற் பாதைகளை, கைப்பற்றி, தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட செய்யலாம்.

[அண்மையில் யாழ்ப்பாணக் கோட்டையில் நடந்த அகழ்வாய்வுகள் பற்றிய ஆங்கிலக் ஆய்வுக்கட்டுரையையும் (Recent Excavations and Survey at Jaffna Fort in 2017 and Reflections on the Antiquity of Indian Ocean Trade”), அதன் உள்ளடக்கத்தையும் கூகுள் நனொ பனானா மூலம் பெற்றுப் படித்தேன். இது வெளிப்படுத்தும் தகவல்களை இக்கட்டுரையில் பாவித்துள்ளேன். தகவற் பிழையெவையாவது தென்பட்டால் அறியத்தாருங்கள் ]

முன்னுரை


பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









