அப்பாவை ஆண்டவனாய் அனு தினமும் போற்றுகிறேன் ! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா , மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண் , அவுஸ்திரேலியா -
தந்தையர்தினக் கவிதை!
ஈன்றெடுத்தாள் அம்மா எனைச் சுமந்தார் அப்பா
சான்றோனாய் என்னை சபை வைத்தார் அப்பா
நான் தடுக்கும் வேளை தாங்கிடுவார் நாளும்
வானளவு உயர வாழ் வளித்தார் அப்பா
ஊனுருக எனக்குப் பால் கொடுத்தாள் அம்மா
உயரோங்கி நிற்க உழைப் பீந்தார் அப்பா
தனக் கெனவே எதுவும் சேர்க்காத அப்பா
எனக் கெனவே தேடி குவித்திட்டார் வாழ்வில்
விருப் பென்று எதையும் வெளியிடார் அப்பா
பொறுப் புடனே யாவும் ஆற்றிடுவார் அப்பா
என் உயர்வு ஒன்றே தனக்கான தென்பார்
கண் மணியாய் கருத்தில் இருத்தினார் அப்பா
தோழேற்றி என்னைச் சுகங் காண்பார் அப்பா
தோழனாய் இப்போ ஆகி விட்டார் எனக்கு
வாழ்வினிலே எனக்கு வரம் ஆனார் அப்பா
வணங்கு கின்ற தெய்வமாய் தெரிகிறார் அப்பா