பேராசிரியர் மா.சின்னத்தம்பியின் 'காலம் அறுபது' பற்றிச் சில குறிப்புகள்.... - வ.ந.கிரிதரன் -

எழுத்தாளர் ஜெயமோகனின் தளத்தில் பேராசிரியர் மா.சின்னத்தம்பி எழுதிய 'காலம் அறுபது ' வாசித்தேன். மேலோட்டமாக வாசித்தபோது காலம் சஞ்சிகையின் வரலாறு பற்றிய தகவற் பிழைகளை அவதானிக்க முடிந்தது.
கட்டுரையின் ஓரிடத்தில் "செல்வம் என்ற ஆசிரியர் கனடாவில் வாழ்கின்ற இளைஞர்களின் ஆர்வத்தால் சஞ்சிகை வெளி வருவதாக ஒற்றை வசனத்தில் ஆசிரிய தலையங்கத்தை பதிவு செய்திருந்தார்." என்றொரு குறிப்பு வருகிறது. பொதுவாக இவ்விதம் கூறாமல் யார் அவர்கள் என்பதையும் கூறியிருந்திருக்கலாம். உண்மையில் செல்வம் காலம் சஞ்சிகையை ஆரம்பித்தவர்கள் நான்கு பேர் என்று குறிப்பிடுகின்றார். ஒருவர் செல்வம். அடுத்தவர் குமார் மூர்த்தி. மேலுமிருவர். அவர்களின் பெயர்களை அவர் குறிப்பிடவில்லை. அவ்விருவரும் ஒதுங்கிவிட செல்வமும், குமார் மூர்த்தியும் தொடர்ந்து பத்தாண்டுகளாகக் காலம் இதழை நடத்தி வந்திருக்கின்றார்கள் என்னும் தகவலைக் 'காலம்' செல்வம் நவம்பர் 2001 வெளியான குமார் மூர்த்தி நினைவுச் சிறப்பிதழின் ஆசிரியத் தலையங்கத்தில் குறிப்பிட்டிருக்கின்றார்.








குழந்தைகளை அடிப்பது கொடூர வன்முறைச் செயல். காலத்திற்கும் குழந்தைகளுக்கு உளவியல் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. சக குழந்தை அடிவாங்குவதைக் கையறுநிலையில் பார்த்துக்கொண்டிருக்கும் குழந்தை யும் மனரீதியாக பாதிப்படையும் என்று பல உளவியல் ஆராய்ச்சிகள் எடுத்துரைக்கின்றன.
புதிதாய் பிறந்த வருடத்தின் ஆரம்பநாளில் பூமராங் எனும் காலாண்டு மின்னிதழ் வெளிவந்திருக்கிறது. அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வெளியீடாக வந்திருக்கும் இவ்விதழ், முதற்பார்வையிலேயே எமது கவனத்தை ஈர்த்துக் கொள்கிறது. அட்டை வடிவமைப்பு இதழை ஆவலோடு புரட்ட வைக்கிறது. 

(நான் காதல் என்றேன், அவள் டேற்ரிங் என்றாள்.


அண்மையில் நடந்த நிகழ்வுகளில் இரண்டு விடயங்கள், முக்கியமானவையாக காணப்படுகின்றன:
கடந்த 10 ஆம் திகதி சனிக்கிழமை அதிகாலை நான் வதியும் புறநகரத்திலிருந்து மெல்பன் நோக்கி பயணத்தை தொடங்கிய வேளையில், சிட்னியிலிருந்து இலக்கிய நண்பரும் வானொலி ஊடகருமான கானா. பிரபா தொலைபேசியில் தொடர்புகொண்டு, நண்பர் கலாமணி மறைந்துவிட்டார் என்ற துயரச்செய்தியை பகிர்ந்துகொண்டபோது அதிர்ந்துவிட்டேன். கடந்த ஆண்டு ஜூலை மாதம் 02 ஆம், 03 ஆம் திகதிகளில் எனது சில பொழுதுகள் வடமராட்சியில் அவருடன் கரைந்தது. அவர் தனது இரண்டாவது புதல்வனின் வீட்டிலிருந்து, மூத்த புதல்வன் பரணீதரனின் இல்லத்தில் நடந்த எனது 'சினிமா: பார்த்ததும் கேட்டதும்' புதிய நூலின் ( ஜீவநதி வெளியீடு ) வெளியீட்டு அரங்கிற்கும் வருகை தந்தார்.


யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சமூகத்தினருக்கு வணக்கம்,

கம்பராமாயணத்தில் விலங்குகள், பறவைகள்,நீர்வாழ்வன குறித்துக் கூறியுள்ளதைப் போல சில பூச்சிகள் குறித்தும் கம்பர் கூறியுள்ளார். அவற்றுள் குழவி,விளக்கு விட்டில் பூச்சி,மின்மினிப்பூச்சி,சிலந்திப் பூச்சி, வண்டு,தும்பி, மிஞிறு,இந்திரகோபப்பூச்சி,ஈ, எறும்பு, சிவப்பு எறும்பு,சிற்றெறும்பு,கரையான் முதலிய பூச்சிகள் குறித்து கம்பர், தம் இராமாயணத்தில் கூறியுள்ள பூச்சிகள் குறித்து ஆராய்வோம்.

இலங்கை, இந்தியா உட்பட கீழைத்தேய - மேலைத்தேய நாடுகளில் ஊடகவியலாளர்கள் மிகுந்த கவனத்தை பெற்றிருப்பவர்கள். அவர்களுக்கு எழுத்துத்தான் வாழ்வளித்தது. அதேசமயம் பலரது உயிரையும் அந்த எழுத்து வாங்கியிருக்கிறது ! ஊடகத்துறையில் காணாமல் போனவர்கள் , கொல்லப்பட்டவர்கள், அச்சுறுத்தப்பட்டவர்கள் பற்றியெல்லாம் நாம் அறிந்திருக்கின்றோம். சிலர் நாடு கடத்தப்பட்டனர். வேறும் சிலர் நாடுவிட்டு நாடு ஓடியிருக்கின்றனர்.



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









