கல்வியும் சமூக அபிவிருத்தியும் - தமிழ்மொழித்திறன் விருத்தியை அடிப்படையாகக் கொண்ட பார்வை - கலாநிதி சு. குணேஸ்வரன் -

- ஓவியம் - AI -
அறிமுகம்
உலகில் வாழும் உயிரினங்களிலிருந்து மனிதனை வேறுபடுத்துவது ஆறாம் அறிவாகிய பகுத்தறிவுதான். அந்தப் பகுத்தறிவைப் பிரயோகிப்பதற்கு எமக்குச் சாத்தியமான வழியாக அமைந்ததுதான் கல்வி. அறிவுசார்ந்தோர் சமூக முன்னேற்றத்திற்காகச் சேர்த்துவைத்த தேட்டம்தான் அது. கல்வியின் மூலமே ஒரு மனிதன் உலகை அறிந்து கொள்கிறான். உலகத்து மாந்தர்களையும் வாழவேண்டிய வழிவகைகளையும் அறிகிறான். கல்வியும் பகுத்தறிவுச் சிந்தனையும் இல்லையென்றால் இத்தனை வேகமாக மனிதன் முன்னேறியிருக்க முடியாது. கல்வி மிகப்பெரிய ஒரு பாய்ச்சலை மனித சமூகத்தில் நிகழ்த்தியிருக்கிறது.
கல்வி அறிவினைப் பெற்ற ஒரு மனிதன் தன் வாழ்வினை நிலைநிறுத்துவதற்கு ஏற்ற தொழிலைப் பெற்றுக் கொள்கிறான். மற்றவர்களோடு இணைந்து வாழவேண்டிய பண்பாட்டைக் கற்றுக்கொள்கிறான். வாழ்வில் முன்னேறும் வழிவகைகளை ஆராய்ந்து பார்க்கிறான். தனக்கும் தன்னைச் சார்ந்தோருக்கும் வழிகாட்டியாக இருக்கக் கற்றுக்கொள்கிறான். கல்வி இல்லையென்றால் ஒருவன் வாழ்க்கையின் கடைநிலைக்கே செல்லவேண்டியவனாக இருக்கிறான். மிகப் பிரயத்தனப்பட்டே தன் வாழ்வைக் கொண்டு நடாத்தவேண்டியவனாக இருக்கிறான். கல்வி ஒருவருக்கு அறிவையும் ஆளுமையையும் தருகிறது. எந்தக் காரியத்தையும் துணிச்சலுடன் செய்வதற்கு உரிய உத்வேகத்தைத் தருகிறது.
கல்வியின் ஊடாக சமூக அபிவிருத்தியை நோக்கி நகரமுடியும். விருத்தி என்பது தொடர்ச்சியான முன்னேற்றகரமான மாற்றம் எனப் பொருள்படும். எனவே, மொழியைப் பிழையறக் கற்பதனூடாக ஒரு நிலையில் இருந்து இன்னொரு உயர்வான நிலைக்குச் செல்லமுடியும்.
மாணவர்களிடம் இருக்கக்கூடிய பொதுவான மொழித்திறன் இடர்ப்பாடுகளாக எழுத வாசிக்கத் தெரியாமை, உச்சரிப்புப் பிரச்சினை, வாசிப்பு முறையில் பிரச்சினை, தெளிவற்ற எழுத்து, இலக்கண ரீதியான தவறுகள் ஆகியவை கட்டுரையாளர் ஒரு தமிழாசிரியர் என்ற வகையில் அவதானிக்கப்பட்டுள்ளன. முன்பள்ளிப் பருவத்திலும் பாடசாலைப் பருவத்திலும் மாணவர்களின் மொழித்திறன் இடர்ப்பாடுகளுக்கான காரணங்களை ஆராய்வதும் அவற்றை நிவர்த்தி செய்வதற்கான சில ஆலோசனைகளை முன்வைப்பதும் அவசியமானதாகும்.


என் நினைவின் இன்னொரு கதாபாத்திரம்தான் பீடா மாஸ்ரர். உங்களை எப்படி அவரிடம் கூட்டிச்செல்வது என்பதுதான் என் சவால்.சரி, என்னால் முடிந்தவரை இந்த இடத்திலிருந்து உங்களை அழைத்துச்செல்கின்றேன். மனோஹராத்தியேட்டர் சந்திக்கு வாருங்கள். அங்கே எல்லோரும் சந்திப்போம். அங்கிருந்து எல்லோருமாக நடப்போம்.


1964 இல் எம்.டி.வாசுதேவன் நாயரால் எழுதப்பெற்ற இந்த மலையாள நாவல் அப்போது ஒரு இலட்சம் பிரதிகள் விற்பனையைக் கண்டது. தமிழில் பல மொழிபெயர்ப்புகளைக் கண்டபோதிலும், கடைசியாக 2017 இல் காலச்சுவடு பதிப்பாக ரீனா ஷாலினி அவர்களால் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டுள்ளது. ரீனா ஷாலினி மலையாளத்தை தாய்மொழியாகக் கொண்டவர்.

தமிழ்ச் சமூகத்தில் அறம் சார்ந்த கருத்துக்கள் நெடுங்காலமாகவே இருந்து வரும் ஒன்று. பண்பட்ட வாழ்வியலைத் தொடங்கிய காலந்தொட்டு அறத்திற்கும் அறம் சார்ந்த வாழ்வியல் முறைக்கும் தமிழ்ச்சமூகம் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளன . அத்தகைய முன்னெடுப்புகளின் தொடர்ச்சியைத் திருக்குறளில் நாம் காண்கிறோம். குறிப்பாக, அறத்தின் மையமாக இருக்கும் இல்லறம், அந்த இல்லறத்தின் செயல்பாடு எவ்வாறு அமைந்திருக்க வேண்டும்? இல்லறத்தினுடைய மேன்மைகள் எவை? இல்லறத்தின் தேவை என்ன? என்பன போன்ற சிந்தனைகள் இன்றைய காலத்திற்கும் பொருந்தும் விதமாக அன்றே திருக்குறளில் சொல்லப்பட்டுள்ளன. அவற்றைக் குறித்த ஒரு பார்வையை இந்தக் கட்டுரை முன்வைக்கிறது
வழமைபோல இந்த வருடமும் பனி கொட்டத் தொடங்கிவிட்டது. தரை எல்லாம் பனி வயலாகக் காட்சி தருகின்றது. மரங்கள் எல்லாம் இலை உதிர்த்து வெண்பனியால் போர்வை போர்த்திருக்கின்றன. புலம்பெயர்ந்த பின் இப்படியான காட்சிகளை ஒவ்வொரு வருடமும் பார்த்ததால்தான், புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் வாழும் நிலச்சூழலையை வைத்து ‘ஆறாம் நிலத்திணை’ பனியும் பனி சூழ்ந்த பகுதியும் என்ற ஆய்வுக் கட்டுரையை நான் முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாட்டுக்காக எழுதினேன். சங்க இலக்கியத்தில் வரும் ஐந்து நிலத்திணைகளுடன் ஆறாம் நிலத்திணையாக சான்றோர் இதை ஏற்றுக் கொண்டார்கள்.


என்னுடைய முதலாவது மின்னஞ்சல் கணக்கை ஆரம்பித்த நாள் எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. அப்போது, எனக்கு ஐந்து வயது, கூகிளுக்கு ஏழு வயது, என்னுடைய மூத்த அக்கா பல்கலைக்கழகத்துக்காக வீட்டைவிட்டு வெளியேறத் தயாராகிக் கொண்டிருந்தா. அதற்கு முதல் வருடம்தான் இந்தப் புதிய மின்னஞ்சல் சேவையை கூகிள் அறிமுகப்படுத்தியிருந்தது. எனக்குப் பிடித்த அக்காவுடன் நான் தொடர்பில் இருப்பதற்கு மின்னஞ்சலொன்றை உருவாக்குவது நல்லதென நாங்கள் நினைத்தோம். இது, என்னுடைய நண்பர்களில் பலர் அவர்களுடைய சொந்த மின்னஞ்சல் முகவரிகளை உருவாக்குவதற்குப் பல வருடங்களுக்கு முன்னையதானது, இணைய உலகுக்கான என்னுடைய நுழைவு 2005ஆம் ஆண்டு இலையுதிர்காலத்திலேயே ஆரம்பித்துவிட்டது.

நல்லன நடக்க வேண்டும்
அந்த புடாபெஸ்ட் ஹொட்டேல் அறையில் நடு நிசியில் படுக்கையிலிருந்து எழுந்தபோது பசியில் வயிறு குடைந்தது. அவசரமாக எழுந்து குளித்துவிட்டு நாங்கள் வெளியே வந்தபோது மூடிய உணவுக் கடைகள் எங்களை வரவேற்றன. கடந்த ஆறு மாதங்களாக மெல்போனில், இஸ்ரேல் பாலஸ்தீன் போரினால் நான் புறக்கணித்திருந்த மெக்டொனாலாட் மட்டுமே இரவில் எங்களுக்கு அமுதசுரபியாகியது. நடு இரவு கடந்துவிட்டது என்பதை தொலைபேசி காட்டியபோதும் மின்சார வெளிச்சத்தில் அந்த நகர்ப்பகுதி அமோகமாக குளித்ததால் இரவு பகலாகத் தெரிந்தது. எங்கள் மேலோட்டமான பார்வைக்கு ஹங்கேரியின் தலைநகர் புடாபெஸ்ட் பாதுகாப்பான நகராகவும் தெரிந்தது.
உலகத்தில் வாழ்ந்த, வாழ்கின்ற, வாழும் மக்கள் அனைவரும் ஏற்றும் அதனைப் பின்பற்றக் கூடிய வகையில் வாழ்வியல் கருத்துக்களைக் கூறும் நூலாகத் திருக்குறளைப் படைத்துள்ளார் வள்ளுவர். 'உலகப் பொதுமறை' எனப் போற்றற்குரிய திருக்குறளில் கூறாத கருத்துக்கள் ஒன்றுமில்லை என்று போற்றத்தகும் சிறப்பால். 'எல்லாப் பொருளும் இதன்பால் உள' என்றனர். இத்தகு சிறப்புகள் பலவும் உடைய திருக்குறளில் “இல்லறம்” என்பது குறித்துக் கூறப்பட்டுள்ள வாழ்வியல் கருத்துக்களைத் தொகுத்துரைப்பது இதன் நோக்கமாகும்.




புதிதாக பிறந்த ஒரு தினம். கிராமத்தின் ஒவ்வொரு மூலையிலும் பரபரப்பு. எல்லோரும் அலைமோதுகின்றனர். அன்றைய வாக்குப்பதிவு நாள் என்பதால் மக்கள் நெரிசலாக வாக்களிக்க வருகிறார்கள். கிராமத்தின் வீதிகளெங்கும் வாக்களிப்பு சின்னங்கள் மட்டுமே கண்களுக்குப்படுகின்றன. காகம், மைனா, புறா.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









