(தொடர் கட்டுரை) ஜெயமோகனின் வெள்ளையானை நகர்த்தும் அரசியல் (6) - எல்.ஜோதிகுமார் -
6
அத்தியாயம் ஒன்பதில் பின்வரும் பகுதி காணப்படுகின்றது:
“அவர்களில் இரண்டு பேர் இலங்கையில் இருந்து வந்தவர்கள். ஒரு வயதான சீமாட்டி. அவள் பெயர் திருமதி கெல்வின். அவளுடைய மருமகன் திருவாளர் கெல்வின். நுவரெலியாவில் தோட்டங்களை உண்டுபண்ணி கொண்டிருக்கின்றார்” (பக்கம்-268)
சம்பாசனை நடக்கும் காலப்பகுதி நாவலின் பிரகாரம் 1878.
ஆனால் இலங்கையின் நுவரெலிய வரலாற்றை எடுத்து நோக்கினால் நுவரெலிய பிரதேசத்தில் முதல் தோட்டமான யெதர்செட் (Hethersett), 150 ஏக்கரில் சிங்கோனாவால் பயிரிடப்பட்டு, W.Floverdew என்பவரால் ‘1881’ லேயே நிர்மானத்துக்குள்ளாகின்றது. மேற்படி முரணை பிரதானமாக கொள்ளாவிட்டாலும், மேற்படி இலங்கை தோட்டங்கள் தொடர்பிலான குறிப்பு, தவிர்கமுடியாதபடி, நாவலின் தலையாய கதாப்பாத்திரமான ஏய்டன் எனும் மனிதனையும் இதே ஆங்கிலேய காலனித்துவ ஆட்சியின் போது இலங்கை தோட்டங்களுக்கு வந்து சேர்ந்த இன்னுமொரு இளைஞனான பிரிஸ்கேட்டிலையும், இருவேறு வரலாற்றுப் பாத்திரங்களாக, எம்மை ஒரு கணம், ஒப்பு நோக்க செய்து விடுகின்றது.