நேர்காணல்: கவிஞரை அறிந்துகொள்வோம் – அவருக்கு உதவிக்கரம் நீட்டுவோம்! - லதா ராமகிருஷ்ணன் -

அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்,
ஆலயம் பதினாயிரம் நாட்டல்,
பின்னருள்ள தருமங்கள் யாவும்,
பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்,
அன்னயாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைத் தமிழ்க்கவிஞருக்கு ஆதரவுக்கரம் நீட்டுதல்'
பாரதி இன்று இருந்திருந்தால் சக கவிஞர் ஆத்மாஜீவின் இன்றைய நோய் வருத்தும், நிதிநெருக்கடி அலைக்கழிக்கும் நிலைக்காக வருந்தி மேற்கண்டவாறு தனது கவிதையின் இறுதிவரியை மாற்றியமைத்திருக்கக்கூடும். கவிஞர் ஆத்மாஜீவ் முகநூற் பக்கம்
எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும் 10 பேர் வெற்றிபெற்றிருக்கிறார்கள், பரவலான கவனத்தைப் பெற்றிருக்கிறார்கள் என்றால் அவ்வத்துறைகளிலான UNSUNG HEROES அதற்கு மும்மடங்குக்கும் மேல். தற்காலத் தமிழ்க்கவிதையுலகில் அத்தகைய ஒருவர் ஆத்மாஜீவ். உடல் நிலைசார் நெருக்கடியும், நிதிநிலை சார் நெருக்கடியுமாக அவர் சமீபகாலமாக எழுதிவரும் கவிதைகள் மிகவும் துன்பகரமானதாக ஒலிக்கின்றன. கவிதை என்றாலே சோகம் ததும்புவது தானே, தமிழ்க்கவிஞர்களுக்கு உலகாயுதவாழ்வில் இன்னல்களும் இல்லாமையும் உடன்பிறந்த வையாயிற்றே, என்று பலவாறாகப் பேசி நம் மனதை சமாதானப்படுத்திக்கொண்டு கவிஞர் ஆத்மாஜீவின் கவிதைகளைக் கடந்துபோய்விடலாகாது. சமீபகாலமாக தனது ஃபேஸ்புக் வெளியில் அவர் உதவிகேட்டு எழுதும் வரிகளில் ஒரு கவிஞரின் துயரம் பீறிடுகிறது. அதைத் தாண்டி தமிழ்க்கவிதையார்வலர்கள், அமைப்புகள் தனக்கு உதவாதா என்ற ஏக்கம், உதவுவார்கள் என்ற நம்பிக்கை பீறிடுகிறது. தனிநபர்களாக முடிந்த உதவியை மனமுவந்து செய்பவர்கள் இருக்கிறார்கள். எள்ளல் பார்வையோடு அவரை விமர்சிப்பவர்கள் இருக்கிறார்கள். அவருக்கு உதவி தேவை. உதவ முடிந்தவர்கள் உதவவேண்டும் என்ற வேண்டுகோளோடு மின்னஞ்சல் வழி கேள்விகள் அனுப்பி அதற்கு அவர் அளித்திருக்கும் பதில்களை ஒரு நேர்காணலாக உங்களிடம் பகிர்ந்துள்ளேன். - லதா ராமகிருஷ்ணன் -
லதா ராமகிருஷ்ணன்: தரமான கவிஞராக உங்களை அறிவேன். நீங்கள் நடத்திய காலக்ரமம் சிற்றிதழ்களைப் படித்திருக்கிறேன். என்னுடைய ஓரிரு கவிதைகளும் அதில் வெளியானதாக நினைவு. இருந்தாலும் உங்களைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம் தாருங்கள். இலக்கியத்தில் எப்படி ஆர்வம் ஏற்பட்டது?
ஆத்மாஜீவ்: இயற்பெயர் வி.சி.இராஜேந்திரன், 12.11.1966 ல் நெய்வேலியில் பிறந்து 28 ஆண்டுகள் அங்குதான் வளர்ந்தேன் வாழ்ந்தேன். கந்தக நிலத்திலிருந்துதான் எனது கலை இலக்கிய வாழ்க்கை துவங்கி வளர்ந்து அவ்விடத்திலேயே முடிந்தது. 13 வயதில் பள்ளி ஆண்டுவிழா நாடகத்தில் நடிக்க ஆரம்பித்ததுதான் எனது கலை சம்பந்தமான துவக்கமாக இருந்தது. நாடகம் எழுதி இயக்கி நடிக்கத் துவங்கியதில் தான் எழுத்தார்வம் நாடகத்திலிருந்து சிறுகதைக்கும். கவிதைக்குமாக இடம் பெயர்ந்தது. எட்டாம் வகுப்பு படிக்கும்போது, கலீல் ஜிப்ரானின் "முறிந்த சிறகுகள்" தொகுப்புதான் என்னை கவிதை எழுத கவர்ந்திழுத்தது. அந்த வயதில் எனக்கேற்பட்ட பால்ய காதலின் ஈர்ப்பில் அந்த பெண்ணுக்காக வடிவமைத்து கவிதையென நினைத்து எழுதிப் பழகினேன்.


மாரி காலத்தில் மட்டுமே சல சலத்து ஓடும். வானம் பார்த்த வரண்ட பூமி வாழ் கிராமிய மக்களின் பார்வையில் அது கொள்ளை அழகைக் கொடுத்துப் பாயும். அதன் கருணையில் செழித்துக் கொழிக்கும் நெற் பயிர்கள் நன்றி சொல்லத் தாமும் தலை சாயும். நண்டுகள் ஓடும், மீன்கள் துள்ளும். அது கண்டு நாரைகள், கொக்குகள் திரள் திரளாய்ப் பறந்து அவற்றை கொத்திக் கொண்டோடும். ஆற்றின் இருமருங்கிலும் உள்ள நெற்பயிர்களுக்கு நீர் பற்றாதிருந்தால் நீர் இறைக்கும் இயந்திரங்கள் கட, கடவெனச் சத்தம் எழுப்பி இறப்பர் குளாய்களினூடாக ஆற்றில் பாயும் வெள்ள நீரை வயல்களுக்குள் பாய்ச்சும். கமக்காரர் முகங்களில் ஒளி வெள்ளம் பளிச்சிடும். சின்னப் பெடியங்கள் அதில் கப்பல் செய்துவிட்டு விளையாடியதும், அரைக்காற் சட்டையுடனோ, கோவணத்துடனோ அல்லது அவையின்றி அம்மணமாகவோ உன்னிப்பாய்ந்து நீச்சல் அடித்து கொட்டம் போட்டதெல்லாம் அந்தக்காலம்.

“நேற்றைய செய்தி, நாளை வரலாறாகிவிடும். செய்திகளே படைப்பிலக்கியமாக உருமாறும்போது, அதனை வாசிக்கும் வாசகர்களுக்கு கிட்டும் வாசிப்பு அனுபவத்தில், தங்களையும் இனம்காணத்தூண்டும். சில வேளைகளில் தம்மைத்தாமே சுயவிமர்சனம் செய்யவும் வழிகாண்பிக்கும். “ இவ்வாறு சில வருடங்களுக்கு முன்னர், எழுத்தாளர் வி. எஸ். கணநாதன் அவர்கள் வெளியிட்டிருந்த சத்தியம் மீறியபோது என்ற கதைத்தொகுதி பற்றிய எனது வாசிப்பு அனுபவத்தை எழுதியிருந்தபோது குறிப்பிட்டிருந்தேன். தற்போது வி. எஸ். கணநாதன், நிம்மதியைத் தேடி என்ற மற்றும் ஒரு கதைத்தொகுப்பினை வரவாக்கியுள்ளார்.


அவுஸ்திரேலியா - விக்ரோரியா மாநிலத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு V C E உயர்தரப் பரீட்சையில் தமிழ்ப்பாடத்தில் தோற்றி, மிகச்சிறந்த புள்ளிகளைப்பெற்ற மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நோக்கத்தில், அவுஸ்திரேலியாவில் நீண்ட காலமாக இயங்கும் அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம், தமிழ்மொழிச்சாதனை விழாவை எதிர்வரும் 30 ஆம் திகதி ( 30-03-2025 ) ஞாயிற்றுக்கிழமை மெல்பனில் நடத்துகிறது.

முதல் நாளிரவு நேரம் பிந்திப் படுக்கைக்குச் சென்றதால், அடுத்த நாள் ஆறுதலாக விழித்தெழுவது என்பதுதான் திட்டம். ஆனால், ரொறன்ரோ நேரத்தைவிட ஒரு மணி நேரம் முந்தியதாக இருந்த Aruba நேரம் என்னை ஏழு மணிக்கு முன்பாகவே விழிக்கச்செய்து விட்டது. ‘மீராவின் தம்பி’, ‘சிறகடித்துப் பறப்போம்; என்ற என் இரண்டு சிறுவர் நூல்கள் யாழ்ப்பாணத்தில் அறிமுகம் செய்யப்பட்டிருந்த வீடியோவைத் தனுசன் அனுப்பியிருந்தார். நேரத்துடன் எழும்பியதால் அதனை உடனேயே பார்க்க நேரமிருந்தது. அதனூடாக முன்பின் தெரியாத இரு ஆசிரியர்கள் என் நூல்கள் பற்றிப் பார்வையைப் பகிர்ந்ததைக் கேட்கமுடிந்ததில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அதை முழுமையாகப் பார்த்துமுடித்ததும் அது பற்றி ஒரு குறிப்பெழுதவேண்டும் போலிருந்தது. உடனடியாக எழுதி, தனுசனுக்கு அனுப்பிச் சரிபார்த்துவிட்டு, வீரகேசரி வாரஇதழுக்கு அனுப்பினேன்.
உ. வே.சா என்றால் - உழைப்பு , வேகம் ,சாதனை என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். எங்கள் தமிழ் மொழி யின் ஏற்றத்தைப் பறைசாற்ற இலங்கியங்கள் குவிந்திருக்கின்றன என்று - மேடை களில் முழங்குகிறோம். கருத் துக்களாய் கட்டுரைகளை வரைந்து குவி க்கின்றோம். பல்கலைக்கழகங்களில் பலவித ஆராய்ச்சிகள் செய்து நூல்களாய் வெளியிடுகின்றோம். இப்படி யெல்லாம் நாங்கள் செய்வதற்கு ஆதாரமாய் ஆணிவேராய் இருப் பவரை நினைத் துப் பார்க்க வேண்டாமா ? ஆம் .... கட்டாயம் நினைத்துப் பார்க்கவே வேண்டும். அந்தப் பேராளு மைதான் உ.வே.சா என்னும் தமிழ் த் தாத்தா டாக்டர் மகாமகோபாத்தியாய சாமிநாத ஐயர் அவர்கள் ஆவார்.
ஒல்லாந்தின் முக்கிய துறைமுக நகரமான அம்ஸ்டர்டாம், எங்கள் படகின் இறுதித் தரிப்பாக இருந்தது. ஏற்கனவே 150 வருடங்கள் இலங்கைத்தீவை ஆண்டவர்கள் என்பதால் அவர்களை பற்றிய பல விடயங்களைக் கேள்விப்பட்டுள்ளேன். எஇலங்கையை விட்டு அவுஸ்திரேலிய வந்தபின் இலங்கையிலிருந்து வெளியேறிய ஒல்லாந்து கலப்பினத்தவர்கள் அதாவது இலங்கையில் அவர்களை ‘பேர்கர் ‘என்போம் அவர்கள் பலர் எனது மிருக வைத்திய நிலையத்திற்கு செல்லப்பிராணிகளை கொண்டு வருவார்கள். எனது கிளினிக்கில் வேலை செய்த நேர்ஸ் ‘கலி’ தனது பூட்டன் இலங்கையில் முதலாவது சேவையர் ஜெனரலாக இருந்தவர் எனவும் – அதற்கான ஆதாரங்களை காட்டினாள்.





சோக்ரடீசின் மெய்யியல் விசாரணை சிறைகூடத்தில் எவ்வாறு இருந்தது என்பதனை ‘சிந்தனைக் களமாகிய சிறைக்கூடம்’ என்ற அடிப்படையில் அலசியுள்ளார். மரண தண்டனைக் கைதியாக முப்பது நாள்கள் சோக்ரடீஸ் சிறையில் வாழ்ந்தார். சிறையில் நடந்தவைகளை திரைகாவியம் போல நூலாசிரியர் காட்சிபடுத்தியுள்ளார். சோக்ரடீஸ் அவரது நண்பன் கிரீட்டோ ஆகியோருக்கிடையிலான உரையாடல் நாடகப்பாணியில் தரப்பட்டுள்ளது. சோக்ரடீஸ் இன் பேச்சு முழுவதும் மெய்யியல் விசாரணையே வியாபித்திருந்தது. நாடும் சட்டமும், ஆன்மாவும் மரணமும், நல்ல மரணம், தெய்வத்திற்கு நேர்த்திக் கடன். நீட்சே, சடமும் அகமும், ஒர்பிக்வாதிகளின் மரணக் கோட்பாடு, நப்ஸ்-சுயம், ரூஹ், சித்திலெப்பை: ரூஹ் போன்ற மினிதலைப்புகளில் சோக்ரடீஸ் இன் மெய்யியலை ஒப்பாய்வு செய்துள்ளார். சோக்ரடீஸ் நஞ்சை உட்கொள்ள முன்னும் பின்னும் நிகழ்ந்தவைகளை ஒரு திரைப்படத்தின் இறுதி காட்சிபோலவே நூலாசிரியர் சித்திரித்துள்ளார். மாதிரிக்கு சில வரிகள் வருமாறு,
“ பெண்கள் தங்கள் தலையிலிருந்து வீட்டை இறக்கி வைக்க வேண்டும் “ “ பெண்கள் தங்கள் தலையிலிருந்து வீட்டை இறக்கி வைக்க வேண்டும். சம்பளம் இல்லாத வேலை செய்பவர்களாக அவர்கள் தொடர்ந்து இருக்கக் கூடாது. இயந்திரப் பயன்பாடு பெண்களுடைய உணர்வுகளை மழுங்கடித்து விடக் கூடாது “ என்று அமெரிக்க வாழ் எழுத்தாளர் அருள்மொழி அவர்கள் பெண்கள் படைப்புகள் பற்றிய கருத்தரங்கை துவக்கி வைத்து பேசுகையில் குறிப்பிட்டார் ( இவரின் டைரி, அமெரிக்காவில் சாதி ஆகிய நூல்கள் முக்கியமானவை. இரண்டும் பாரதி புத்தகாலயம் வெளியீடு )


வசிகரன் எழுதிய ‘நோவிலும் வாழ்வு’ என்ற கவிதைத்தொகுதி ஆக்காட்டி வெளியீடாக வந்துள்ளது. வசிகரன் இலக்கியச் செயற்பாட்டாளராகவும் சூழலியல் மற்றும் சமூகச் செயற்பாட்டாளராகவும் இருக்கின்றார். தொண்டைமானாற்றையும் அதனை அண்டிய பிரதேசங்களையும் பகைப்புலமாகக் கொண்டமைந்த மரபுரிமைச் சின்னங்கள் தொடர்பான 'கரும்பவாளி' என்ற ஆவணப்படம் ஒன்றையும் தயாரித்திருக்கிறார். அவர் எழுதிய ‘நோவிலும் வாழ்வு’ என்ற கவிதைத்தொகுதி போருக்குப் பிந்திய தலைமுறையினர் வாழ்வைப் பார்க்கும் கோணத்தைப் பேசுவதாக அமைந்துள்ளது.
இன்று கவனயீர்ப்புப் பெறும் சமகால ஈழத்துக் கவிஞர்களுள் இக்பால் அலியும் ஒருவராவார். இவர் ஓர் ஊடகவியலாளராக தன்னை அடையாளப்படுத்தும் அதேவேளை நாடறிந்த கவிஞராகவும் அறியப்படுகிறார். ஓர் ஊடகவியலாளன் தன்னைச் சுற்றி நிகழும் அசாதாரண சம்பவங்களை செய்திகளாக்குவது போல ஒரு கவிஞனும் தான் காணும் சமூக மாற்றங்களை தன் கவிதைகளுக்குள் பாடுபொருளாக்குகின்றான். இவ்வகையில் இக்பால் அலியின் கவிதைகளை நோக்கும்போது ஓர் ஊடகவியலாளனுக்குரிய செய்திப் பார்வையும், நுணுகிய நோக்கும்; இவரின் கவிதைகளில் இயல்பாய் இணைவதோடு சமுதாயப் பற்றுமிக்க கவிதா ஆற்றலும் அதனை மொழிவயப்படுத்துவம் திறனும் இவரிடம் ஒருங்கே அமைந்துவிடுகின்றன.
இன்றைய உலகிலே முக்கியமாகப் பேசப்பட வேண்டிய ஒரு விடயம் உலக அமைதி. உலக அமைதி என்று சொல்லுகின்ற போது அது இடவாகு பெயராக அமைந்திருக்கின்றது. உலக மக்களின் அமைதியைக் குறிக்கின்றது. அதற்குள்ளாகவே உலக சமாதானமும் அடங்கி விடுகின்றது. உலகம் சமாதானமாக இருந்தாலேயே வாழுகின்ற ஒரு வாழ்க்கையை நிம்மதியாக நிறைவு செய்வோம். நாம் அன்பாலே உலகு செய்யவில்லை, வன்பாலேயே உலகு செய்திருக்கின்றோம். அனைத்து உயிர்களையும் ஒன்றாக நினைக்கும் பக்குவம் மனங்களுக்கிடையே ஏற்படாத காரணமே மனங்களைச் சிதைத்து உலகத்தின் அமைதியைக் கெடுக்கின்றது.

சங்க இலக்கியத் நூல்களான எட்டுத்தொகையில் ஒன்று பதிற்றுப்பத்து ஆகும். 'ஒத்த பதிற்றுப்பத்து’ என்ற அடைமொழி கொண்ட பதிற்றுப்பத்து சேரர் மன்னர்களின் வாழ்க்கையையும், அந்நாட்டு மக்களின் பழக்க வழக்கங்களையும் படம்பிடித்துக் காட்டுகிறது. புறப்பொருள் பற்றிய செய்திகளைத் தொகுத்துரைப்பது அகவற்பாக்களால் ஆனது. புறநானூறுக்கும், பதிற்றுப்பத்துக்கும் ஒரு வேற்றுமை உண்டு. முடி மன்னர் மூவரையும், வேளிர் முதலிய பிறரையும் பற்றிய பாடல்களின் தொகுதி கொண்டது புறநானூறு. ஆனால் பதிற்றுப்பத்தோ சேரமன்னர்களையே பற்றிய பாடல்களின் தொகுதி எனலாம். அத்தகைய சேரநாட்டின் வளம் குறித்து ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









