கலைஞர் மு.கருணாநிதியின் தமிழ்மொழிப் பங்களிப்பு - குறளோவியம், தொல்காப்பியப் பூங்கா & திருக்குறள் உரை!
கலைஞர் மு.கருணாநிதியின் குறளோவியம், தொல்காப்பியப் பூங்கா. திருக்குறள் உரை & சங்கத்தமிழ்த் தொகுப்புகளை அவரது முக்கிய தமிழ்மொழிப்பங்களிப்புகளாக நான் கருதுகின்றேன். இவற்றுடன் சிலப்பதிகாரத்தை மையமாக வைத்து அவர் எழுதிய நாடகம், அதனையொட்டி வெளியான பூம்புகார் திரைப்படம் இவையும் முக்கியமானவை. பாடல்கள் கோலோச்சிக்கொண்டிருந்த தமிழ்த் திரையுலகை வசனத்துக்குத் திருப்பியதில் கலைஞரின் வசனங்கள் முக்கியமானவை. பராசக்தி, மனோஹரா, ராஜாராணி & பூம்புகார் போன்ற திரைப்படங்களின் வசனங்கள் மிகவும் புகழ் பெற்றவை. அவர் ஆட்சியில் அமைத்த வள்ளுவர் கோட்டம், குமரி முனையில் அமைத்த வள்ளுவர் சிலை இவையும் முக்கியமான பங்களிப்புகள். இவை தவிர அவரது பல படைப்புகள் புனைகதைகளாக, அபுனைவுகளாக, நாடகங்களாக & திரைக்கதைகளாக வெளிவந்துள்ளன. ரோமாபுரிப்பாண்டியன், பாயும் புலி பண்டாரக வன்னியன், பொன்னர் - சங்கர் ஆகியவை முக்கியமான வரலாற்றுப் புனைவுகள். பல பாகங்களாக் வெளிவந்த நெஞ்சுக்கு நீதி சுயசரிதையும் முக்கியமான தொகுப்புகள்.
கலைஞரின் 'தொல்காப்பியப் பூங்கா' , குறளோவியம், திருக்குறள் உரை ஆகியவை தற்போது இணையத்தில் கிடைக்கின்றன.
கலைஞரின் எழுத்தின் முக்கியமான அம்சம் - அது சாதாரண வாசகர்கள் தொடக்கம், தீவிர வாசகர்கள் வரையில் செல்லும் தன்மை மிக்கது. அனைவரையும் மகிழ்விப்பது. அதனால்தான் அறிஞர்கள் தொடக்கம் சாதாரண வாசகர்கள் வரையில் அவரது எழுத்தை இரசிக்கின்றார்கள். அழகு மிகு ஓவியங்களுடன் கூடிய அவரது தொகுப்புகள் கருத்துக்கு மட்டுமல்ல கண்களுக்கும் விருந்தளிப்பவை.
தொல்காப்பியப் பூங்கா'வில் தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியத்தின் முக்கிய அம்சங்களை எவ்வளவு இனிமையாக, எளிமையாக & சுவையாகச் சாதாரண வாசகர்களிடம் எடுத்துச் செல்கின்றார் என்பதை அத்தொகுப்பை வாசிக்கும் எவரும் அறிந்து கொள்வர். தமிழ்க்கனி வெளியீடாக வெளிவந்துள்ளது.
கலைஞரின் குறளோவியம் 'குறளோவியம்' அழகான ஓவியங்களுடன், பாரதி பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ளது.
திருக்குறளுக்குக்குக் கலைஞர் எழுதிய உரை நூலாகத் தமிழ்க்கனி வெளியீடாக வெளிவந்துள்ளது.
குறளோவியம் நூலை வாசிக்க
தொல்காப்பியப் பூங்கா நூலினை வாசிக்க
வெளிவந்த இந்நூலுக்கு அணிந்துரையினைப் பேராசிரியர் க.அன்பழகனும், பதிப்புரையினைப் பேராசிரியர் மா.நன்னன் அவர்களுகும் எழுதியிருக்கின்றார்கள். பல பதிப்புகளைக் கண்ட நூலிது.
'திருக்குறள் கலைஞர் உரை' நூலை வாசிப்பதற்கான இணைப்பு
அறிஞனே! நீ வாழி!
மானுட சிந்தனையாற்றலின் வலிமையினை உணர்த்தும் ஆளுமையாளர் ஆல்பேர்ட் ஐன்ஸ்டைன். அவரது காலம் வரை நிலவி வந்த வெளி, நேரம், புவியீர்ப்பு பற்றிய கோட்பாடுகளை ஆட்டங்காண வைத்தவை ஆல்பேர்ட் ஐன்ஸ்டைனின் சார்பியற் கோட்பாடுகள்.
இவற்றை இவர் ஏனைய அறிவியல் அறிஞர்கள் போல் பரிசோதனைக் கூடங்களில் பரிசோதனைகள் செய்து ,அவற்றின் மூலம் நீருபிக்கப்பட்ட முடிவுகளாகக் கண்டறியவில்லை. தன் சிந்தனையாற்றலின் மூலம், சிந்தையென்னும் பரிசோதனைக்கூடத்தில் கண்டறிந்தார்.
பின்னரே பல வருடங்களின் பின்னரே பரிசோதனைகள் மூலம் அவை உண்மைகளாக நிரூபிக்கப்பட்டவை.
மார்ச் 14, அவரது பிறந்ததினம்.
என் சிந்தையைப் பாதித்த அறிவியல் ஆளுமையாளர்களில் ஆல்பேர்ட் ஐன்ஸ்டைனுக்கும் முக்கிய இடமுண்டு.
அறிவியல் அறிஞன் இவனது
காலம் வெளி பற்றிய கோட்பாடுகள்
ககனத்தின் இருப்புப் பற்றிய ,நிலவிய
கோட்பாடுகளை
ஆட்டங்காண வைத்தவை.
அடியோடு ஆட்டங்காண வைத்தவை.
சிந்தையில் சோதனைகள் செய்தே
சரி, பிழை அறிந்தான்.
சிந்தனை ஆற்றலின் சக்தியினைச்
மானுடர் நாம் அறிய வைத்தான்.
மகத்தான மனிதனிவன்
பிறந்ததினம், மார்ச் 14, இன்று.
போற்றுவோம்! நினைவு கூர்வோம்!
இருப்புப் பற்றிய
என் புரிதலுக்கு உன்
இருப்பு மூலம்
அறியத் தந்தாய்!
அறிஞனே! நீ வாழி!
நடிப்புக்குரலோன் டி.எம்.எஸ்!
எம் தலைமுறையினரின் வாழ்க்கையில் பின்னிப்பிணைந்த ஆளுமைகளில் தமிழ்ச் சினிமாப் பாடகர்களும் அடங்குவர். அவர்களில் டி.எம்.எஸ் முக்கியமானவர். அவரது குரலுடன் நாமும் வளர்ந்தோம். கனவுகள் கண்டோம். துயரத்தில் ஆழ்ந்தோம். மகிழ்ந்தோம். இன்பத்தில் ஆடினோம்.
அவரது இக்காணொளி எவ்விதம் இதுவரை என் கண்களில் படாமல் ஒளிந்திருந்தது?
இதில் அவர் தான் பாடகராக எவ்விதம் தமிழ்ச் சினிமாவில் அறிமுகமானார் என்பதை விபரிக்கின்றார். அக்காலகட்டச் சென்னை வாழ்க்கையின் நிலையினை விபரிக்கின்றார். அவரது சினிமா வாழ்க்கைக்கு நடிகர் திலகம் எவ்விதம் முக்கிய காரணமாக விளங்கினார் என்பதை எடுத்துரைக்கின்றார். எவ்விதம் மக்கள் திலகமும், நடிகர் திலகமும் தன் வெற்றிக்குக் காரணமானவர்களாக இருந்தார்கள் என்பதை நினைவு கூர்கின்றார். அவர் எவ்விதம் பாடல்களைப் பாடுகின்றார் என்பதை விளங்கப்படுத்துகின்றார். அற்புதமான காணொளி. காணொளியைப் பார்க்கையில், கேட்கையில் இன்பம் பொங்குகின்றது. நல்லதொரு காணொளி. டி.எம்.எஸ் என்னும் ஆளுமையினை நன்கு வெளிப்படுத்தும் காணொளி.
காணொளி டி.எம்.எஸ் எவ்விதம் நடிகர் திலகத்தின் மூலம் தூக்குத்தூக்கியில் பாட அனுமதிக்கப்படுகின்றார் என்பதுடன் ஆரம்பிக்கின்றது. அவர் நடிகர் திலகமாகவே மாறிக் குரலில் நடித்திருக்கும் சிறந்த பாடல்களில் ஒன்றான 'அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே' பாடலுடன் முடிகின்றது. சிறப்பாக இருக்கின்றது.
https://www.youtube.com/watch?v=HJd3OtNqZrQ