அதிபர் பொ. கனகசபாபதி கனடாவில் நினைவுகூரப்பட்டார். - குரு அரவிந்தன் -

மகாஜனக் கல்லூரி முன்நாள் அதிபர் அமரர் பொ. கனகசபாபதி அவர்கள் எம்மைவிட்டுப் பிரிந்த 10 வது ஆண்டு நினைவுநாள் கனடாவில் ரொறன்ரோவில் உள்ள மல்வேன் பூங்காவில் 4-9- 2024 அன்று நினைவு கூரப்பட்டது. பொதுவாக ஒருவர் மறைந்த தினம் என்றால் அது ஒரு சோகசம்பவமாக இருக்கும். அதைத் தவிர்ப்பதற்காகத்தான், அவர் புகுந்த மண்ணில் தமிழ் இனத்திற்கு ஆற்றிய சேவையைப் பாராட்டி அதிபரின் பிறந்த தினத்திலன்று ஒவ்வொரு வருடமும் இங்குள்ள நண்பர்கள், பழைய மாணவர்கள், மற்றும் குடும்பத்தினரால் நினைவு கூரப்படுகின்றது.
இங்குள்ள நண்பர்களும், பழைய மாணவர்களும் இணைந்து அவரது நினைவாக, உள்ளுராட்சி மன்றத்தின் உதவியுடன் மல்வேன் பொதுப் பூங்காவில் ஒரு மரத்தை நட்டு, அதன் கீழ் ஒரு இருக்கையையும் வைத்திருக்கிறார்கள். இருக்கையிலும், நினைவு மரத்தின் கீழும் அவரைப் பற்றிய விபரங்கள் குறிக்கப்பட்டிருக்கின்றன. பூங்காவுக்கு வரும் அத்தனை பேரும் அதை வாசித்துச் செல்லும்போது, நினைவுத்தூபி போல, தமிழர்கள் கனடாவில் வாழ்ந்த அடையாளத்தையும், அவர்கள் ஆற்றிய சேவையையும் அது காட்டி நிற்கின்றது. புலம் பெயர்ந்த தமிழர் ஒருவருக்குக் கிடைத்த பெருமையாக இது கருதப்படுகின்றது.
மகாஜனக்கல்லூரிக் கீதத்துடன் நிகழ்வு ஆரம்பமானதைத் தொடர்ந்து அகவணக்கம் இடம் பெற்றது. முதலில் பழைய மாணவர் சங்கத் தலைவர் ஆசிரியர் திரு. புவனச்சந்திரன் அவர்களின் உரை இடம் பெற்றது. அவர் தனது உரையில் பழைய மாணவர் சங்கத்தை கனடாவில் ஆரம்பித்து வைக்கக் காரணமாக இருந்த பெருமை மதிப்புக்குரிய திரு. பொ. கனகசபாபதி அவர்களையே சேரும். அவர் மகாஜனாவில் கற்பித்த காலத்தில் நானும் அங்கு ஆசிரியராக இருந்தேன். கனடாவில் ‘அதிபர்’ என்று அழைத்தால், தனது சிறந்த பண்புகளால் எல்லோரையும் கவர்ந்த இவரைத்தான் குறிப்பிடுவதாக எல்லோரும் புரிந்து கொள்வார்கள். இவர் புலம்பெயர்ந்த எங்களுக்கு வழிகாட்டியாக இருந்து ஆற்றிய சேவையால், தமிழ் இனம் இன்று தலைநிமிர்ந்து நிற்கின்றது’ என்று தனது உரையில் குறிப்பிட்டார்.






உறவினர்களையும், தனக்கு வேண்டப்பட்டவர்களையும் நலம் விசாரிப்பது சிறந்த பண்பாடும், பழக்க வழக்கமாகும். அத்தகைய பண்பாட்டிற்கும், பழக்கவழக்கங்களுக்கும் கொண்ட நலம் விசாரித்தலுக்கு கம்பர் தன் இராமாயணத்தில் முக்கியத்துவம் அளித்துள்ளார் என்பதனைக் கம்பராமாயணத்தின் வழி ஆராய்வோம்.
எழுத்தாளர் ஸ்ரீரஞ்சனி அவர்கள், தாயகத்தில் இருந்து மேற்குலகின் பல பாகங்களுக்கும் புலம்பெயர்ந்த பலரது வாழ்வியல் மற்றும் மனப்போராட்டங்கள் பற்றி பல வித்தியாசமான சிறுகதைகளைப் படைத்துள்ளார். அக உணர்வுகளை ஆழமாக வெளிப்படுத்தும் கதைசொல்லலில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டவர் இவர். அத்துடன் கருவுக்கும் களத்திற்கும் பொருத்தமான அழகியல் உணர்வுடன் கூடிய வித்தியாசமான தலைப்புகளைத் தெரிவு செய்வதிலும் அதிக கவனம் செலுத்துவார். வாசகரைக் கதைக்குள் கவரும் முதல் ஈர்ப்பாக அதன் தலைப்பே அமைவதால் ஒரு சிறந்த உத்தியாகவும் இதைப் படைப்பாளர் கையாள்கிறார் .
கிட்டத்தட்ட 1150 ஏக்கரில், 80 குடியிருப்புகளை நிர்மூலமாக்கும், பரந்த வகையிலான தாக்குதல் இதுவாகும். இதில் அமெரிக்கா, ஐக்கிய ராஜ்ஜியம், போலந்து போன்ற நாட்டின் வீரர்களும், அந்நாடுகளின் பல்வேறு நவீன ஆயுதங்களும் நேரடியாக களமிறக்கப்பட்டது என்று பரவலாக நம்பப்பட்டாலும், ஏனைய நேட்டோ நாடுகளும், இதில் நேரடியாக சம்பந்தப்பட்டிருக்கும் என ஊகிக்கப்படுகிறது.
மிக நீண்டகால வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழ்க் கவிதை மரபில், கடந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில், ஒரு பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியவர், பாரதி. தமிழுக்குக் கிடைத்த அரும்பெருஞ் சொத்து என்பதை தமிழினம் உணரத்தவறியிருந்த காலத்தினைக் கடந்து, மறைந்துபோன பாரதியை, கற்றோரும் மற்றோரும் இனங்காணக்கூடிய வகையில், சரிவர அறிமுகம் செய்தவர்களில், ஈழத்து அறிஞர்கள் இருவர் முக்கியமானவர்கள். ஒருவர் சுவாமி விபுலானந்த அடிகள்; மற்றவர் பேராசிரியர் கைலாசபதி.



பல உண்மைகளை மனத்துக்குள் போட்டு மறைத்து, அதனை வெளியே விடாமல் வைத்திருப்போர்களிடம் சில கேள்விகளை நாம் கேட்கின்றோம். அக்கேள்விகள் கொண்டு வரும் பதில்கள் உள் மன ஆழங்களை வெளியே கொண்டு வருகின்றது. மூடி வைத்திருக்கும் பல உண்மைகள் வெளிப்படுகின்றது. வழக்கறிஞன் கேட்கின்ற கேள்விகளே உண்மைக் குற்றவாளியை இனம் கண்டு பிடிக்கிறது. உண்மை நிரபராதிகளை வெளிக் கொண்டுவருகின்றது. சொல் படாமல் எதுவும் வெளிவராது. அதுபோல் உழியில்லாமல் மண் உண்மையைத் தராது.
அவசரமாகக் குளித்துவிட்டு வினோ வெளியில் வந்தாள். ஆசைதீரக் குளிப்பதற்கோ, ஆற அமரவிருந்து சாப்பிடுவதற்கோ நேரம் கிடைப்பதில்லை என்ற நினைவில் கசிந்த கண்ணீர்த் துளிகள் அவளின் முகத்திலிருந்த நீர்த்திவலைகளுடன் சேர்ந்துகொண்டன. ஈரமாயிருந்த முகத்தையும் உடலையையும் துவாயினால் உலர்த்தியபடி, குளியலறைக் கண்ணாடியில் முன் நின்றவளுக்கு தான் வரவர அழகில்லாமல் போவதாகத் தோன்றியது. கன்னங்கள் மேலும் உட்குழிந்தும், கண்களின் கீழிருந்த கருவளையங்களின் அளவு பெருத்துமிருந்தது. சர்மிக்கு வரவர என்னைப் பிடிக்காமல் போவதற்கு இவையும் காரணமோ என மனதிலெழுந்த எண்ணம் அவளை மேலும் அழுத்தியது.
(1963 இல் தமிழ் இலக்கியக் களத்தின் நிகழ்வுகளால் மையப்படுத்தப்பட்ட கதை. தினகரன் பத்திரிகையில் வெளியானது. அகஸ்தியரின் பிறந்த தினம் ஆகஸ்ட் 24. அதனையொட்டி அவரது மகள் எழுத்தாளர் நவஜோதி ஜோகரட்னம் அனுப்பி வைத்த சிறுகதை. அவருக்கு நன்றி. )
‘சொற்கள் வனையும் உலகம்’, ‘தடங்களில் அலைதல்’ நடராசா சுசிந்திரனின் கட்டுரைத்தொகுப்பு நூல்கள் வாசிக்கக் கிடைத்தமை மனதில் உற்சாகத்தை ஏற்படுத்தியது. இரு நூல்களும் ‘சுவடு வெளியீடாக’ 2023 டிசம்பரில் வெளிவந்துள்ளன. இரண்டு நூல்களுமே கட்டுரை வடிவத்தைக் கொண்டிருப்பது என்பது அவற்றினை வகைப்படுத்திப் பலவிடயங்களை திரும்பிப்பார்த்து அசை போடுவதற்கும், பலவற்றை அறிந்து கொள்வதற்கும் மிகச் சுவையாக இருப்பதைச் சுட்டிக்காட்ட வேண்டும்.

(1996- லண்டன் 'தமிழ் டைம்ஸ்' சஞ்சிகையில் ஆங்கிலத்தில் வெளியான இந்தக் கதை நான் ஏன் இலங்கையில் சமாதானத்துக்காகவும் ஒற்றுமைக்காகவும் பிரச்சாரம் செய்கிறேன் என்பதை விளக்கும்.)



நிர்மலனுக்கு அது கனடாவில் முதல் இரவு.. முதல் உறக்கம். பின்னாள்களில் உறக்கத்தைத் தொலைக்கும் இரவுகள் வர வாய்ப்புகள் உண்டு என்பதைச் சிறிதும் உணராதவன் என்பதால் அவன் உறக்கத்தில் நிம்மதியும் ஒட்டியிருந்தது.