ஐ.நா. தொடக்கம் அறுகம்பே வரை : அய்னாவின் கட்டுரையை முன்னிறுத்தி! - ஜோதிகுமார் -

1
இஸ்ரேலியர்களை இலக்குவைத்து தாக்குதல் நடத்த இருப்பதாக, இதுவரை ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும், இவர்களில் ஒருவரைத்தவிர மற்ற அனைவரும் இலங்கையைச் சார்ந்தவர்கள் எனவும், ஒருவர் மாத்திரம் மாலைத்தீவு பிரஜை எனவும் கூறப்படுகின்றது. பிரதான நபர் இன்னும் கைதாகவில்லை எனக்கூறப்பட்டாலும் இன்றுவரை அவர் கைது செய்யப்பட்டாரா என்பது குறித்துச் சரியான தகவல்களில்லை. தாக்குதல் தொடர்பிலான கைதுகளும், எழுந்த களேபரமும் கடந்த ஒக்டோபர் மாத இறுதியை ஒட்டி இடம்பெற்ற நிகழ்வுகளாகும்.
தமிழ்த் தீவிரவாதத்தைப் போலவே, இஸ்லாமியத் தீவிரவாதத்தின் தலையெடுப்பும் இலங்கைக்கு ஒன்றும் புதிதானதில்லை. ஆனால், முன்னைநாள் சட்டமா அதிபர் லிவேரா முதல் முன்னைநாள் புலனாய்வு இயக்குனர் ஷானி அபேயசேகர வரையில், எடுத்துரைக்கும் பிரதான விடயம் யாதெனில், இவற்றில் அரச பங்கேற்பு உண்டு என்பதும் இத்தீவிரவாதிகள் அரசால் தீன்போட்டு வளர்க்கப்பட்ட சக்திகளாவர் என்பதுமேயாகும். இவ்அடிப்படையில், இத்தீவிரவாதிகள் முன்னெடுக்கும் தாக்குதல்களுக்கு, ஓர் ஆழமான அரசியல் சதி உண்டு என்பதும் - அதற்கூடு நாட்டின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற (அல்லது மாற்றியமைக்க) செய்யப்படுகிறது, என்பதுமே மேலவர்களின் கூற்றில் முக்கியத்துவப்படும் செய்தியாகிறது.
இது உண்மையாக இருக்கலாம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களைக் கட்டவிழ்த்துவிட்டு, அதற்கூடு நாட்டில் இனவாதத்தைத் தலைவிரித்து ஆடச்செய்துவிட்டு, அதற்கூடு கோட்டாபாய ஆட்சிக்கு வந்தார் என, வாதிடுவோரும் உண்டு.



ஊதா நிற மண்ணுள்ள அந்தக் கடற்கரையைப் பார்க்காமல் திரும்புவதற்கு எனக்கோ மனமிருக்கவில்லை. தேசிய பூங்கா ஒன்றுக்கு ஊடாகச் சென்று, காடு போன்ற பிரதேசமொன்றைத் தாண்டி Pfeiffer Beachஐத் தேடினோம். அதற்கான பாதையென மிகவும் ஒடுங்கிய வழியொன்றை google map காட்டியது. அதற்குள்ளால் கார் போய்வர முடியுமா என்பது பெரும் சந்தேகமாக இருந்ததால், அது சரியான வழிதானா என மகளுக்குக் குழப்பமாக இருந்தது. எனவே அதனைத் தாண்டிச் சற்றுத் தூரம் போய் வழியிலிருந்த கடை ஒன்றில் Pfeiffer Beachக்கு எப்படிப் போவதெனக் கேட்டோம். அந்த ஒடுங்கிய வழிதான் அதற்கான வழியென்றார்கள். இருட்டத் தொடங்கிவிட்டது, இப்படி ரிஸ்க் எடுத்து அங்கு போகத்தான் வேண்டுமா என்பது மகளின் கேள்வியாக இருந்தது. நானோ போய்த்தான் பார்ப்போமே என அடம்பிடித்து ஒருவாறாக அங்கு போய்ச் சேர்ந்தோம். அப்போது, அங்கிருந்தவர்கள் எல்லோரும் விலகிக்கொண்டிருந்தார்கள். அதனால் கொஞ்சம் பயம் பிடித்துக்கொண்டது. இந்த மண் ஊதாவாக இருக்கிறதா, வந்ததற்குப் பிரயோசனமா என்றா மகள். ஆனால் எனக்குப் பிடித்திருந்தது, இருப்பினும் நீண்ட நேரம் அங்கிருக்க முடியவில்லை. நன்கு இருட்ட முன்பாக அவசரமாக வெளியேற வேண்டியிருந்தது. வழியில் சூரியன் மறைவதைப் பார்த்தபின் நகருக்குள் நுழைந்தோம்.

ஒரு கதையை, அதைப் படிப்பவர்களின் மனதில் நீண்டகாலம் தங்கியிருப்பதற்கு ஏற்றவாறு எழுதுவது என்பது பல எழுத்தாளர்களுக்குச் சவாலான விடயம். அதை மொழியில் காட்சிப்படுத்துவது எனலாம் . அதற்காக எழுத்தாளர்களான நாம் சில யுக்திகளைக் கையாள்வோம்.

இறுகப் பொத்தியிருந்த தனது காதுகளிலிருந்து கைகளை லோசாக விலக்கிப்பார்த்தாள் கெப்பி. இன்னும் அலைபேசியின் அழைப்பொலி ஓய்ந்தப்பாடில்லை. மீண்டும் இறுக மூடினாள். அவளின் செவிப்பறை முழுக்க அந்த அழைப்பொலிக்கு அவளது மனமே ‘காடுபோக்க (காட்டுப்பூனை)… காடுபோக்க... காடுபோக்க… காடுபோக்க…’ எனும் வார்த்தையைக் கோர்க்க, இறையத் தொடங்கிற்று.
மத்தாப்பும் பட்டாசும் மனமெல்லாம் மகிழ்வும்



மாலையின் காற்று தழுவியதுபோல மனதில் ஏதோ ஆழமான வெறுமை. கிராமத்தின் எல்லைக்கே நெருங்கிய அவனது வீட்டின் ஓரத்தில் காற்று ஓடிக்கொண்டிருந்தது. ஆனால் அந்த காற்று அவன் மனதை எட்டவில்லை. ஒவ்வொரு நாளும் ஏதோவொரு வழியில் வாழ்வின் சுவை குறைந்தது போலவே தோன்றியது. வளவின் மதிலோரத்து மரங்கள் கூட இப்போது பசுமையற்றவையாகத் தோன்றின.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள குமுளமுனை என்பது அண்ணாவியார் நாகலிங்கம் நெல்லிநாதன் பிறந்து வளர்ந்து வாழ்ந்துவரும் ஊராகும். இக்கிராமம் வன்னியின் குறுநில மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்ட கிராமமாகும். சோழராட்சிக்காலத்தில் திருகோணமலையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிசெய்த வளந்தொட்டுக் குளம் பெருக்கிய மன்னான குளக்கோட்ட மன்னனின் ஆட்சிக்கும் இக்கிராமம் உட்பட்டிருந்தது. தண்ணிமுறிப்புக் குளம் இவன் காலத்தில் கட்டப்பட்டது என்பது வரலாற்றாய்வாளர்களின் துணிபு. இக்கிராமத்தில் ‘வன்னியன் வளவு’ ‘வன்னியன் கிணறு’ ‘யானை கட்டிய புளி’ என்னபன வன்னியர் இக்கிராமத்தில் குடியேறி வாழ்ந்து வந்துள்ளனர் என்பதற்கான சான்றுகளாகக் காணப்படுகின்றன. பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்துவரும் இக்கிராமத்தவர்கள் தங்கள் ஓய்வு நேரத்தை கோலாட்டம், கும்மி, கூத்துப் போன்ற கலைகளில் செலவு செய்துள்ளனர். வெளியிடங்களிலிருந்து அண்ணாவிமாரை அழைத்துவந்து கூத்துக்களைப் பழகி மேடையேற்றி ஆடி வருவது வழமையாக இருந்துவந்துள்ளது.

மிஸஸ் மல்லார்டுக்கு (Malard ) இதய சிக்கலால் பாதிப்புள்ளது என்பதைப் பார்த்து, அவரது கணவரின் இறப்பின் செய்தியை மிக மெதுவாகச் சொல்ல மிகுந்த கவனம் செலுத்தப்பட்டது.






