ஈழத்துச் சோமு என எழுத்துத்துறையில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவர் எழுத்தாளர் சோமகாந்தன். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக எழுத்துத்துறையில் தனக்கெனத் தடம்பதித்த ஒரு எழுத்தாளராக திகழ்கின்றார். அவர் எழுதுவதோடு மட்டும் நின்றுவிடாது எழுதுவோரை ஊக்கப்படுத்தும் வகையிலே தனது உடல் நலத்தைக்கூடபாராது பல முயற்சிகளை முன்நின்று உழைத்துவந்த, ஒரு இலக்கியப் படைப்பாளி என்றால் தவறாகாது.

யாழ் குடாநாட்டில் வடமராட்சிப்பகுதியில் கரணவாய் என்னும் கிராமத்தில் கலட்டி என்னும் இடத்தில் பிறந்து வளர்ந்தவர்தான் திரு. சோமகாந்தன் அவர்கள். அவர் தனது ஆரம்பப்படிப்பினை கரணவாய் குருக்கள் பாடசாலையில் ஆரம்பித்தார் அவருக்கு ஆதிசைவப் பரம்பரையில் தோன்றிய ஸ்ரீ வைத்தியநாதக் குருக்களால் ஏடுதொடக்கப்பட்டு அவரிடமும், ஸ்ரீ செவ்வந்திநாதக் குருக்கள் போன்றோரிடமும் ஆரம்பக் கல்வியைப் பெற்றுக்கொண்டதோடு, கல்வியில் ஆர்வத்தைத் தூண்டிவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அத்தோடு பலவித பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டு கல்வி கற்கமுடியாதிருந்த வேளையிலும் ஊக்கமும் தந்து அவரின் கல்விப்பணி தொடரக் காரணர்களாக அவர்கள் விளங்கினர். அவர்களை எழுத்தாளர் சோமகாந்தன் அவர்கள் வாழ்க்கை முழுமையும் நினைவில் வைத்திருந்தமையை அவரோடு உரையாடியபோது வெளிப்படையானது.

சாதாரண  அந்தணர் குடும்பமொன்றில் பிறந்தவர் திரு.சோமகாந்தன், 1930களில் அந்தணர் குடும்ப வாழ்க்கை எத்தகையது என்பதனை சற்றுத் திரும்பிப்பார்த்தால் தெரியும். ஓரே ஒரு அந்தணர் குடும்பம்தான் கரவெட்டியில் உள்ள கலட்டிப்பிரதேசத்தில் வாழ்ந்து வந்தது. மக்கள் வசதிகள் வாய்ப்புக்கள் அற்ற காலகட்டத்தில் கோயிலை நம்பி வாழ்க்கை நடத்துவது எத்துணை சிரமமானதாகக் காணப்பட்டது என்பது சொல்லித்தான் விளங்கிக் கொள்ளவேண்டும் என்பதல்ல. ஆலய மணியக்காரனின் ஏற்பாட்டில் அக்கோயிலுக்கு உரித்தான குடும்பத்தினரின் அனுசரணையுடனேயே அவர்கள் வாழ்க்கை நடத்தினர். அக்கால கட்டத்தில் இந்தியாவில் இருந்து வந்து குடியேறிப் புரோகிதம் செய்யும் அந்தணர்களுக்கு கலட்டி போன்ற கிராமியச் சூழலில் தோட்டம் செய்கின்ற ஒரு வாய்ப்புக்கள் குறைந்த ஒரு கிராமியச்சூழலில் வளர்ந்தவர் அவர். யாழ் மாவட்டத்தில் மிகப் பிரபலமான கோவில்களில் சிவாச்சாரியார்களாக இருந்தவர்கள் போக ஏனைய பிராமணர்களின் வாழ்கைத்தரம் மிகமோசமானதாக இருந்தது. இந்தியாவில் ஆக்கம் செலுத்துபவர்களாக பிராணமர்கள் இருக்க ஈழத்தில்  மேல்மட்டத்திலுள்ள நில உடமையாளர்கள் பிராமணர்களைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்து அடிமைகள் போல உணவும் உடையும் கொடுத்து வந்தனர். இதனாலர் அவர்ளகள் மேல்மட்டத்தவர்களின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கவேண்டிய மூன்றாந்தரமானவர்களாக நடத்தப்பட்டனர் என்பது உண்மை. ஐயர் கோயிலைக் கூட்டு, கழுவு, துடை என அதிகாரம செலுத்தும் நிலை இன்றும் காணமுடிகின்றது. அன்றாடம் சீவியத்திற்கே திண்டாடவேண்டிய நிலை அவர்களிடம் காணப்பட்டது. நிலமற்றவர்களாக வாடைவீட்டில் குடியிருப்பவர்களாக, கோயில்களில் கிடைக்கும் வருமானத்தோடு, திவசம், மாளையம், அந்தியேட்டி, திருமணம் போன்ற சேவகம் ஆற்றும்; சடங்குளினால் கிடைக்கப்பெறும் வருவாயைக் கொண்டு வாழ்க்கையை ஓட்டவேண்டிய இக்கட்டான நிலையில் இருந்தவர்கள் இவர்கள். அவ்விதமான ஒரு வறிய குடும்ப நிலைதான் சோமகாந்தனின் பெற்றோரிடமும் காணப்பட்டது. அவரது வீட்டின் அயலில் இருந்தவர்கள் கோயிலுக்குள் உட்புகமுடியாத வர்ணத்தர்களாகக் காணப்பட்டனர். அவர்களின் வீட்டு முற்றத்தில் கால் பதிப்பதே பாவம், தீட்டு, குற்றம் எனக் கற்பிக்கப்பட்டு ஒதுக்கிவைக்கப்பட்டார்கள். இதனால் மற்றைய சிறவர்களுடன் சேர்ந்த விமைளயாடும் வாய்ப்புக்களும் இந்தப் பிராமணப்பிள்ளைகளுக்க மறுக்கப்பட்டது. ஐயா எனத் தூக்கிவைத்து ஒதுக்கிவைக்கும் நிலையாளர் சமூப்பிரஞ்னைகளில் தலையிடமுடியாத சமூகத்திற்கு வெளியே தனித்துவமாக ஒதுக்குப்புறமாக வாழுகின்ற ஒரு இனமாக பிராமணக்குடும்பங்கள் அகத்திலிருந்து அல்லல் பட்ட நிலைமைகள் நிதர்சனமானவை.

சோமகாந்தன் தனது இடைநிலைப் படிப்பை கரவெட்டி விக்னேஸ்வரக் கல்லூரியில் ஆரம்பித்துப் பின்னர் தன்முயற்சி காரணமாக மகாஜனக்கல்லூரிக்குச் சென்று முன்னுக்கு வந்தவர். விக்னேஸ்வரக் கல்லூரியில் கல்வி கற்கும் காலமே இவரின் எழுத்துப்பணிக்கு வித்திட்ட களமாக அமைந்தது. அங்கு ஆசிரியத் தம்பதிகளாகக் கடமையாற்றிய ஐ.சி. மாஸ்ரர் என அழைக்கப்படும் ஐ.சித்தர் அவர்களின் அரவணைப்பிலும் ஊக்குவிப்பிலும் இலக்கியத்தில் நாட்டமும், எழுதுவதற்கான ஆக்கத்திறனையும் பெற்றுக்கொண்டார் திரு. சோமகாந்தன். மகஜனாக் கல்லூரியும் இவரின் எழுத்தாற்றலுக்குத் தூபமிடப்பட்டதோடு இவருக்கு தலைமைத்துவப் பண்பைக் கற்றுத்தந்த பாடசாலையாக அமைந்தது. மகஜனாக் கல்லூரியின் ஆண்டுவிழாவில் கண்காட்சி போன்ற நிகழ்வுகளில் முன்நின்று உழைத்தவர் சோமகாந்தன். சிறந்த அறிவிப்பாளராக இனங்காணப்பட்டவர். இவரது திறமையை மகஜனாக் கல்லூரி கண்டுகொள்ள முடியாமைக்கு அவர் அமைதியானவராக இருந்ததும், பிராமணராக இருந்ததும் ஏனைய சமூக மாணவர்களோடு இணையமுடியாமலிருந்ததம் காரணிகளாக இருக்கலாம். மற்றயை மாணவர்களைப் போன்று இவர் எல்லாத் துறையிலும் ஈடுபாடுகொள்ள முடியாத நிலையும் அக்காலகட்டத்தில் இவரின் முதன்மையைக் கண்டறியவிடாது தடுத்த காரணிகளாக அமைந்திருக்கலாம். வெறும் புத்தகப் பூச்சியாக மட்டுமே அவரது இளமைக்காலம் கழிந்தோடுடியாது. விளையாட்டுக்களிலோ, நாடகக் குழுக்களிலோ இவர் சேர்த்துக் கொள்ளமுடியாமைக்க இவர் பிராமண வகுப்பச் சார்ந்தவர் என்ற ஒரே காரணம் கற்பிக்கப்பட்டது.

அவரது ஆரம்ப வாழ்வின் சூழல்தான் தனது கதைக்கு களமாகவும், அடித்தளமாகவும் அமைந்தது என்று கூறும் அவரிடம் பதிந்துள்ள சமூகப்பார்வை எத்தகையது என்பதனை நாம் உணர்ந்துகொள்ளலாம். மிக இளமை நினைவுகளோடு தான் கண்டு, அனுபவித்த பட்டறிவினை கருப்பொருளாக்கிய ஒரு கதைதான் ‘நிலவோ நெருப்போ’ என்னும் கதை. | அவர் வாழ்ந்த சூழல் புகையிலை, மிளாகாய் மரக்கறித் தோட்டங்கள் சூழ்ந்த இடம். அங்கு குஞ்சர் கடை, மூத்த விநாயகர் கோவிலடி எனப்படும் இடங்களில் தோட்டத்தின் மண்ணை வளப்படுத்துவதற்காக பாவட்டை, பூவரசு, காவிளாய் போன்ற இலை குழைகளை உரமாக நிலத்திலே புதைப்பது வழக்கம், இக் குழைகளை இவ்வூரைச் சேர்ந்த சில இளம்பெண்கள் தலையிலே கட்டாகக்கட்டி விற்பதற்காகச் சுமந்து வருவார்கள். அவ்விதம் வரும் பெண்களிடம் தரகர்கள் அவற்றை வாங்கி வியாபாரிகளுக்கு விலைபேசி விற்பதும் அல்லது வேறு இடங்களுக்கும் கொண்டு சென்று விற்பதும் வழக்கம். அவ்விதம் கொண்டுவரும் பெண்களில் இளமையும் அழகும் கூடியவர்களிடம் கூடிய விலைகொடுத்து குழைக்கட்டை வாங்கும் தரகர்கள் கபடநோக்கத்தோடு அவர்களுடன் நெருங்கிப்பழக முற்பட்டு அபலைப் பெண் ஒருவரைப் பின்தொடர்ந்து சென்று மூக்குடைபட்ட ஒரு கதைதான் ‘நெருப்போ நிலவோ’ என்னும் கதை. இவ்விதமான உண்மைச் சம்பவத்தால் மனம் பாதிக்கப்பட் நிலையினை ஏழ்மையிலும் சீரிய வாழ்வினைப் பின்பற்றும் பெண்ணினத்தின் பெருமையைப் பறைசாற்றி நிற்கின்றது, அவரது முதலாவது கதை. இக்கதை அவருக்குப் பல பாராட்டுக்களைத் தேடித்தந்தது மட்டுமன்றி எழுத்துத் துறையில் முன்னேற ஊண்டுகோலாக அமைந்தது எனலாம். அவரது சிறுகதைத் தொகுப்பாக இது வெளிவந்து உடனேயே முடிவடைந்ததால் பின்னர் இரண்டாவது தொகுப்பையும் வெளியிட்டார்.

அடுத்து அவர் எழுதிய நூல் வரதர் வெளியீடாக ‘விடிவெள்ளி பூத்தது’ ஒரு ஆண்டிற்குள்ளேயே தமிழ் நாட்டில் மறுபிரசுரமானது. இற்றைக்கு 80-90 ஆண்டுகளுக்கு முன்னர் காணப்பட்ட வடமராட்சிப் பிரதேச கிராமியச் சூழலைப் படம்பிடித்துக் காட்டுவதாக அது அமைந்தது. இந்நூலுக்கு வல்லிக்கண்ணன் அவர்கள் அணிந்துரை எழுதியது மட்டுமன்றி சிறந்த கதை எனவும் பாராட்டியுள்ளார்.

இவரது எழுத்தாற்றல் அதாவது சமூக கட்டமைப்பற்றிய தெளிவான பார்வை பிரபல ஈழத்து முற்போக்கு எழுத்தாளர் கணேசலிங்கன் அவர்களைக் கவர்ந்தது மட்டுமன்றி முன்னுரையும் எழுதித்தர ஒப்புக்கொண்டு எழுதினார் என்றால் இவரது எழுத்து நடையைப் பற்றி குறிப்பிடவேண்டியதில்லை. பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்களும் இவரது எழுத்தாற்றலை நயந்து பாராட்டத் தவறவில்லை. எழுத்துலகில் இவருக்கு அனுசரணையாக இருந்து ஊக்குவித்தவர்களுள் பேராசிரியர் க.கைலாசபதி அவர்களும், சிவத்தம்பி அவர்களும் குறிப்பிடத்தக்கவர்கள்.

இவர் எழுதிய 'ஈழத்து இலக்கியம் - பல்துறை நோக்கு'  என்னும் நூல் ஈழத்து இலக்கியம் பற்றிய ஆய்வுக்கு வழிகோலியது என பேராசிரியர்கள் அருணாசலம், நுஃமான் போன்றோர் குறிப்பிட்டுள்ளமை கருத்திற்கொள்ளற்பாலதே. ‘பொய்கை மலர்’ என்னும் ஆன்மீகப் பண்பாட்டு நூலை பேராசிரியர் நுஃமான் பாராட்டியும நயந்தும் குறிப்பிட்டுள்ளார். இது மாவிட்டபுரம் கந்தன் ஆலயத்தில் ஆரம்பித்து கதிர்காமக் கந்தனிடம் சென்று முடிவடையும் பிரயாணக்கட்டுரையாக அமைந்துள்ளது. கரையோரப் பாதைவழியாக கதிர்காமத்திற்குச் செல்லும் முருக பக்தர்களின் பிரயாணத்தை விபரிக்கும் நல்லதொரு நூலாக இது அமைந்தது. இதனோடு தொடர்புடையதாக ஜேர்மென் சாமி என அழைக்கப்படும் பற்றிக் ஹரிசன் அவர்கள் நேரடியாக தரைமார்க்கமாகப் பலதடவைகள் சென்றவர் என்பதும் அவர் மேற்கொண்டு குறும் விபரணத்திரைப்படம் பெரிதும் உதவியதும் எனலாம். இந்தக் கரையோரப் பாத யாத்திரை பற்றிய பிரயாணக் கட்டுரையை வாசித்த நேயர்கள் பலரிடமிருந்தும் பாராட்டுக்கடிதங்கள் கிடைத்தன. குறிப்பாக தமிழகத்திலிருந்து பெருந்தொகையான வாசகர்களிடமிருந்து பாராட்டுக் கடிதங்களைப் பெற்றதோடு அவரை எழுத்துத் துறையில் தூண்டக் காலாக அமைந்ததெனலாம் எனப் பேராசிரியர் தில்லைநாதன் இவரது எழுத்துக்களைப் பலதடவைகள் பாராட்டிப் பேசியுள்ளதோடு எழுதியும் உள்ளார். ஈழத்திலும், தமிழகத்திலும் இவரது எழுத்தாற்றல் பிரபலமானது மட்டுமன்றி பலராலும் ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளது என்பதுதான் வெளிப்படை.

சிறந்த ஒரு எழுத்தாளராகத் தன்னை வரையறுத்துக் கொண்ட சோமகாந்தன் அவர்கள் ஒரு வானொலி விற்பன்னராகவும் திகழ்ந்தார். 60 களில் வானொலியில் தத்துவச் சித்திரம், விபரணச் சித்திரம் என்பனவற்றைத் திருக்குறள், நாலடியார், திரிகடுகம் என்பனவற்றை அடிப்படையாகக் கொண்டு சமூகப்பார்வையினை முன்நிறுத்தி நடத்தி வந்தார். இவை ஒழுக்க விழுமியங்களை எமது சிறார்கள் பின்பற்றத் தக்கவகையில் அமைந்திருந்தமை பலரதும் பாராட்டை இவருக்குப் பெற்றுத்தந்தது.

‘’மழை பொய்த்து விட்டால்’ என்னும் நிகழ்வு கலைஞர் கருணாநிதி அவர்களின் பாணியிலே மதியழகன், சண்முகரட்ணம் ஆகியோர் இலங்கை வானொலியில் பணியாற்றியவேளை செய்து வந்துள்ளார். இது பலரதும் பாராட்டைப் பெறவைத்ததோடு பிரபலமடையவும் செய்தது.

‘நிகழ்வுகளும் நினைவுகளும்’ என்னும் தலைப்பில் ஒரு பக்கத்தில் மூன்றி அல்லது நான்கு நிரல்களை நிரம்பும் வகையில் வாராவாரம் பத்திரிகையில் வெளிவந்த கலாச்சார விழுமியங்களை உள்ளடக்கிய விடயங்களின் தொகுப்பாக காந்தன் கண்ணோட்டம் என்னும் நூலாக கே.எஸ். சிவகுமார் அவர்களின் முன்னுரையுடன் வெளியாகியது. இது முக்கிய கதைகள், சம்பவங்களை உள்ளடக்கிய மிகவும் வாசகர்களால் வரவேற்கப்பட்ட தொடராக வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.

2000 ஆண்டில் இவரால் எழுதப்பட்ட ‘ஈழுத் தமிழருக்கு ஏன் இந்த வேட்கை’ என்னும் சமகால பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு எழுதிய நூல் பெரும் வரவேற்றைப் பெற்றுள்ளது. பேச்சு வார்த்தை எப்போதும் பேரினவாதிகளின் பக்கமே நிற்கும் நிலையினைச் சுட்டிக்காட்டுவதாக அமைந்துள்ளது. எனினும் அடுத்த அத்தியாயத்தினைப் பேச்சுவார்த்தையின் முடிவா அல்லது முறிவா என்பது பற்றி எழுதத் தீர்மானித்திருந்தார். தமிழ் மக்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள் என்பது அவர் அடிமனத்தில் ஆழப்பதிந்துவிட்ட விடயம் அது அந்தரங்கமாக ஆத்மாவைக் கேள்வி கேட்டுக்கொண்டிருந்தது.. அக்கருத்தினை மக்கள் மத்தியில் தருவது பொருத்தம் என்னும் கருத்தினை அவர் கொண்டிருந்தார்.. அவர் எழுதத் தீர்மானித்திருந்த  விடயம் அரசியல் சார்ந்ததாக அமைந்திருக்கும். இவை ஈழத்துச் சோமு அவர்கள் கனடா வந்திருந்தவேளை அவரோடு உறவாடி, உரையாடியதன் வழியாக் கிடைத்தவை.

ஆங்கலத்தில் அவர் எழுதி வெளியான நூல்களில் Lanka and ramayanam 300 பக்கங்களைக் கொண்டது. வரலாற்றுத் துறைப் பேராசிரியர் முனைவர் பத்மநாதன் அவர்களுடன் இணைந்து யுனெஸ்கோ நிதியுதவியுடன் Anccient temple of Siva in Sir Lanka என்னும் சிதைந்துபோன சிவ ஆலயங்கள் பற்றிய நூலையும் எழுதினார்.

தமிழில் முதலாவது கைநூலை வரதரோடு இணைந்து 1970ல் வெளியிட்டார். ஆறுமுக நாவலர் நூற்றாண்டு மலர் வெளியீட்டுக் குழுவில் செயலாளராக விரைந்து பணியாற்றி அந்த நூல் சிறப்பாக வெளிவரக் காரணமாகச் செயற்பட்டார். இக்காலகட்டத்தில் பேரசிரியர் சிவத்தம்பி, பேராசிரியர் கைலாயபதி, பேராசிரியர் சு.வித்தியானந்தன் போன்றோருடன் நெருங்கி உறவாடும் வாய்ப்பையும் பெற்றுக் கொண்டார். ஆறுமுகநாவலரைப் பற்றிய பல உண்மைகளை வெளியே கொண்டுவர அவர் அரும்பாடுபட்டு உழைத்தார். இவரின் சேவை ஆறுமுகநாவலரை சமயசேவையாளராக மட்டுமன்றித் தமிழ் வளர்த்த ஆசானாகவும், தமிழ்ப் பாடசாலைகளைக் கட்டி தமிழ்ப்பிள்ளைகளின் கல்விக்கு ஊக்கமும் ஆக்கமும் இட்டு வளர்த்த தோடு மட்டுமன்றி அவர் அக்காலகட்டத்தில் அசுரவேகத்தில் பரவிய கிறிஸ்த்தவ மதத்திற்கு தமிழ் மக்கள் தாவாமல் பல பணிகளை ஆற்றிவந்தார் என்ற செய்திளை மிக ஆணித்தரமாக எடுத்துரைத்துள்ளார். இவ் உண்மைகளை வெளிக் கொண்டுவர சோமகாந்தன் பாடுபட்டுழைத்துள்ளார் என்பது மறுக்கமுடியாது.

எழுத்தாளர்கள் நாட்டின் விடுதலைக்காக உழைக்கமுடியும், இன ஒற்றுமையப் பேணமுடியும், அறிவினை அனைவரும் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்ற உயரிய நோக்குக்கொண்டவராக அவர் திகழ்ந்தார். முற்போக்குத் தன்மை கொண்ட அவர் தமிழ், சிங்கள எழுத்தாளர்களின் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளும் அவசியத்தை உணர்ந்த செயற்பட்டார். ‘எழுத்தால் இணைவோம்’ என்ற கருத்தை முன்னிலைப்படுத்தி செயற்பட்டார்.

1974ல் தமிழ் சிங்கள எழுத்தாளர்களை இணைத்து பண்டாரநாயக்க சர்வதேச மகாநாட்ட மண்டபத்தில் தமிழ் எழுத்தாளர்களை உலகு அறிய வைக்க பாரிய ஒரு மகாநாட்டை நடாத்த அரும்பாடுபட்டார். இதில் முஸ்லிம், தமிழ் எழுத்தாளர்கள் மட்டுமன்றி சிங்கள எழுத்தாளர்களும் இணைந்து கருத்துப் பரிமாற்றத்தினை மேற்கொண்டனர். சிங்கள சிறுகதைகளின் தாக்கத்தையும் அதன் ஆழத்தையும் தமிழ் எழுத்தாளர்களும் வாசகர்களும் அறிய வைக்கவேண்டும் என்னும் அவாவும் அதேபோன்று தமிழ் எழுத்துக்களைச் சிங்களத்தில் மொழிபெயர்க்கவேண்டும் என்னும் ஆதங்கமும் அவரிடம் இழையோடியது.

தமிழ் மொழிக்குத் தொண்டாற்றியவர்களை மறந்துவிடக்கூடாது என்னும் நோக்குடன் தமிழ்க்கவிதையில் புதமைசெய்த சிற்பி பாரதிக்கு விழா எடுக்கவேண்டும் என உழைத்தவர்களில் சோமகாந்தன் முக்கியமானவர். 1980இல் நீதியரசர் தம்பையா அவர்களின் தலைமையில் பாரதி நூற்றாண்டு விழாக்குழவின் தேசிய செயலாளராகப் பணியாற்றி விழா சிறப்புற உழைத்தார். பாரதியின் கருத்தாளம் மிக்க பாடல்களின் சிறப்பைத் தமிழ் உலகம் அறிய வைக்கவேண்டும் என்னும் கருத்துக்கு முன்னுரிமை கொடுத்து பாரதிபற்றிய கட்டுரைகளையும் பிரசுரிக்கத் தூண்டினார்.

1964இல் அ.ந.கந்தசாமி அவர்களின் ஆய்வின் முயற்சியினால் மகாகவி பாரதியவரகள் யாழ்ப்பாணத்துச் சாமி எனக்குறிப்பிட்டுத் தனது ஞானகுருவாகக் கொண்டிருந்த மோனம் அருளம்பலம் அவர்கள் பிறந்து வாழ்ந்த வியாபாரிமூலையில் விழா எடுத்து நினைவுச் சின்னமும் நிறவ அரும்பாடுபட்டார். எழுத்தாளர் அ.ந.கந்தசாமியின் கனவை நிலை நிறுத்தவேண்டும் எனும் நோக்கோடு மோனம் அருளம்பலனாரின் பிறந்த இடத்தை அறிந்து அங்கிருந்த கோயில் வீதியில் அவருக்காக ஒரு நினைவுத்தூபியை எழுப்பக் காரணராக இருந்தார். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் செயலாளராக அவர் செயற்பட்டவேளை வடக்கையும் தெற்கையும் கிழக்கையும் மேற்கையும் இணைக்கும் பணியில் முயற்சிகளை மேற்கொண்டார். மோனம் அருளம்பலனாரின் நினைவுத்தூபி அமைப்பதில் முற்போக்கு எழுத்தத்னர்கள் முனைப்புக்காட்டிய வேளை பிரேம்ஜி ஞானசுநதரம், அ.ந.கந்தசாமி, போன்றவர்களுடனும் பேராசிரியர்கள் சு.வித்தியானந்தன், கைலாசபதி, சிவத்தம்பி, தில்லைநாதன் ஆகியோருடன் இணைந்து செயற்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

எழுத்தோடு நின்றுவிடாது விமர்சனம், ஆய்வுகள், விழாக்கள் என்பனவற்றை நடத்தி விழிப்புணர்வை மேற்கொண்ட ‘ஈழத்துச்சோமு’ மக்களால் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 1991இல் இவரது இலக்கியப் பணியைக் கௌரவித்து திருகோணமலை இலக்கிய நண்பர்களினால் ‘இலக்கியக்குரிசில்’ பட்டம் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார்.

1992 இல் நாவலர் சபையின் செயலாளர் நாயகமாக நியமனம் பெற்று மிகச் சிறப்பாகச் செயற்பட்டார். பேராசிரியர் க.கைலாசபதி அவர்களைப் பதிப்பாசிரியராகக் கொண்டு நாவலர் பற்றிய ஆய்வுக்கட்டுரைகள் அடங்கிய பாரிய நூலை வெளியீடு செய்தார்.

தமிழ்மொழியோடு மட்டுமன்றி இந்துமதத்திற்கும் அவர் பணியாற்றத் தவறவில்லை, இந்துக் கோயில்கள் பற்றி எல்லாம் ஆய்வுகளை மேற்கொண்டிருந்தார். கோயில்களின் தல வரலாறு பற்றி ஆய்வுசெய்து அவற்றை முதன்மைப் படுத்திப் பதிவாக்க இந்து கலாச்சார அமைச்சின் ஊடாக அரும்பணியாற்றி யுள்ளார். இவரின் சமயப் பணியை அறிந்து 1993ல் நீர்கொழும்பு இந்து இலக்கிய மன்றம் மேற்கொண்ட விழாவில் ‘தமிழ் மாமணி’ என்னும் பட்டத்தினை முன்னைநாள் அமைச்சர் சௌமியமூர்த்தி தொண்டமான் வழங்கிக் கௌரவித்தார். யாழ்ப்பாணச் சமூகத்திற்கு மட்டுமன்றி ஈழத்தின் பலபாகங்களிலும் உள்ள அனைத்து இந்து மதத்தினரும் பயனுறும் வண்ணம் சேவையினை மேற்கொண்டு அவர்களின் மனங்களில் தனக்கென ஒரு இடத்தைத் தக்வைத்துக் கொண்டார். எழுத்தாளர் முருகபூபதியுடன் தனது உறவைப்பேணி பல்வேறு ஆலோசனைகளையும் நல்கிவந்தார்.

சோமகாந்தனின் அளப்பரும் இலக்கியப்பணியையும், சமூக பணியையும் பாராட்டி, நயந்து 1994ல் இலங்கை கலாச்சார அமைச்சு தமிழ் மொழிக்கும் தமிழ்ச் சமூகத்திற்கும் மேற்கொள்ளும் சேவைகளைப் பாராட்டி ‘தமிழ் ஒளி’ என்னும் பட்டத்தினை வழங்கிக் கௌரவித்தது.

1962இல் சென்னையில் இடம்பெற்ற அனைத்து இந்திய தமிழ் எழுத்தாளர் மகாநாட்டில் இலங்கையின் பிரதிநிதியாகக் கலந்துகொண்டார். இவ்விழாவிற்குப் பிரதம விருந்தனராக நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் வருகைதந்திருந்ததோடு இவரைப் பாராட்டி ஈழத்தில் இவர் செய்யும் பணிகளை அறிந்து பெருமையும் மகிழ்ச்சியும் அடைந்தார் எனின் அவரின் பணியின் சிறப்பைப் பற்றிக் குறிப்பிடவும் வேண்டுமோ? என்னும் அளவிற்கு அவர் தமிழே வாழ்வு, தமிழே உயிர் மூச்சு என இறுதிவரை வாழ்ந்து காட்டிய ஒரு எழுத்தாளன் மட்டுமல்ல சமூகப்போராளியாகவும் நினைவுகூரப்படுகின்றார்.

1995ல் பேராசிரியர் ஞானசம்பந்தன் தலைமையில் இடம்பெற்ற சேக்கிழார் விழாவில் கலந்துகாண்டார். இந்த விழாவில் ‘இலங்கையில் பெரியபுராணம் ஏற்படுத்திய தாக்கம்’ என்னும் ஆய்வுக்கட்டுரையைச் சமர்ப்பித்து பாராட்டினைப் பெற்றுக்கொண்டார். யாழ்ப்பாண மண்ணில் கந்தபுராணக் கலாச்சாரத்தத் தவழவிட்ட ஆறுமுக நாவலரின் பணியைத் தொதடர்ந்து இவரது ஆய்வு பெரிய புராணம் பெரும் தாக்கத்தினை இந்து சமயத்தவரிடையே ஏற்படுத்தியது என்பதனை அவர் ஆதாரபூர்வமாக எடுத்துக் காட்டியிருந்தமை மகாநாட்டு அமைப்பாளர்களைக் கவர்ந்துகொண்டது எனலாம்.

1996ல் ஈழத்து எழுத்தாளர்களை ஒருங்கிணைத்து தேசிய மகாநாட்டினைக் கூட்டி வல்லிக்கண்ணன், பொன் நீலன், தாமரை மகேந்திரன் ஆகியோரை தமிழகத்திலிருந்து வரவழைத்து உரையாற்றவும் செய்தார்.

2001ம் ஆண்டு பம்பாயில் இடம்பெற்ற சிம்மய இயக்க மகாநாட்டில் இலங்கையின் பிரதிநிதியாகக் கலந்துகொண்டு சிறப்பித்தார். பம்பாய்க்குச் சென்றிருந்த சமயம் திடீர் இதயநோய்த்தாக்கத்திற்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிப்பப்பட்டு நாடுதிரும்பினார் என்பதும் தனது உடல் நலத்திற்கு மேலாக தமிழ், சமயப் பணிகளில் அதிக ஈடுபாடு கொண்டு உழைத்துவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கனடாவில் இயங்கும் ‘உதயன் பத்திரைகையால் நடத்தப்படும் ஆண்டு விழாவான ‘உதயன் விழாவிற்கு’ சிறப்பு அதிதியாக வரவழைக்கப்பட்டு கலந்துகொண்ணட சோமகாந்தன் தம்பதியினர் இங்கு இரண்டு மாதங்கள் வரை தங்கியிருந்து தமிழர் அதிகமாக வாழும் பிரதேசங்கள் மற்றும் ஆலயங்களுக்கு வருகை தந்து தங்கள் கனடா பிரயாண அனுபவங்களை நூலுருவாக்கியும் தந்திருந்தார். மீண்டும் கனடாவிற்கு வந்து தனது கனடிய அனுபவங்கள் பிரயாணக் கட்டுரைத் தொகுதி நூலை வெளியீடு செய்யத்திட்டமிட்டிருந்த சோமகாந்தன் அவரகள் எதிர்பாராத விதமாக இப்புவிவாழ்வை முடித்துக்கொண்டமை எழுத்தாளர் உலகத்திற்கு மட்டுமல்ல வாசர்களுக்குமே பேரதிர்ச்சியைத் தந்தது என்பது நிதர்சனமாகும்.

திருமதி பத்மா சோமகாந்தன் அவர்கள் இங்குள்ள ஆலயங்களில் சமயச் சொற்பொழிவுகள் நிகழ்த்தி இந்து மதத்தினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுக்கொணடார். திருமதி சோமகாந்தன் தன்னை ஒரு பெண்ணிய வாதியாக இனங்காட்டிக் கொண்டவர். பெண்கள் விடுதலைக்காகப் போராடி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. 1954ம் ஆண்டு தொடக்கம் அவர் எழுத்துலகில் பிரவேசித்து சிறுகதைகள் பலவற்றை எழுதியுள்ளார் எனினும் அவரது பார்வை சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள்மீதே உள்ளது என்பது அவரது செயற்பாடுகள் காட்டி நிற்கின்றன. இவர் எழுதிய முதலாவது சிறுகதைக்கு முதலாவது பரிசு கிடைத்தது. ஆசிரியராகப் பணியைத் தொடங்கிய இவருக்கு பல உயர் பதவிகள் தேடி வந்தன எனினும் கணவனின் உடனிருக்கவேண்டிய விருப்பினால் அவற்றை ஏற்க மறுத்துள்ளார். ஈழத்து மாண்புறு மகளிர் என அடையாளம் காணப்பட்ட 25 பேர்களில் தங்கம்மா அப்பாக்குட்டி, கோகிலா மகேந்திரன் போன்றோரின் வரிசையில் இவரும் இன்று முன்னணியில் உள்ள ஒரு எழுத்தாளராவார். பெண்களுக்கான கல்வி மேம்பாட்டுக்காக தனது இறுதி மூச்சுவரை உழைத்து வந்துள்ளார். ‘பெண்களின் குரல்’ என்னும் சஞ்சிகைக்குப் பொறுப்பாகவிருந்து அது வெளிவர ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்துவந்துள்ளார். வீரகேசரியில் பெண்கள், இளம்பிள்ளைகளுக்கான வழிமுறைகள், பற்றிய கட்டுரையினை பத்மா என்னும் பெயரோடு புதன்தோறும் எழுதி வந்தள்ளார். ‘கடவுளின் பூக்கள்’ என்னும் கதைக்கு சார்க் மகளிர் சங்கத்தின் பரிசு, லில்லி தேவசிகாமணி பரிசு 1994இல் இவருக்குக் கிடைத்தது. 1997இல் இவர் எழுதிய பெண்ணியம் சார்ந்த ‘புதிய வார்ப்புக்கள்’ என்னும் நூலுக்கு மார்க்கா பரிசில் கிடைத்தது. இவர் எழுதிய ‘வெள்ளி மலர்கள்’எனும் கதைக்கு இந்து பத்திரிகை விதந்துரை செய்தமை குறிப்பிடத்தக்கது. தமிழ் பாடவிதான ஆலோசகராகக் கடமையாற்றியும் உள்ளார். ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கான விரிவுரைகளையும் செய்து வந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

“சமூகக் கட்டுகளிலிருந்து விடுதலை பெற அவர் சந்தித்த சவால்களை பெரும் எதிர்ப்புகளைக் கதை கதையாக அவர் கூறுவார்”.என்று பேராசிரியர் மௌனகுரு பதிவிட்டுள்ளமை கருத்திற்கொள்ளற்பாலது. ஈழத்து மூத்த பெண் எழுத்தாளர்களில் ஒருவரான பத்மா சோமகாந்தன் ஜனாதிபதியின் பரிசினைத் தட்டிக்கொண்ட சிறந்த எழுத்தாளராகவும் சமூக சேவகராகவும் இனங்காணப்பட்டவர். துணைவர் இறந்த பின்னர் கனடாவிற்கு வந்திருந்த அவரை எனது வீட்டிற்கு அழைத்த உரையாடியது இன்றுபோல் நெஞ்சத்தை விட்டகலாது இடம்பிடித்ருக்கின்றது. நான் கொழும்புக்குச் சென்றவேளை என்னை அழைத்து தனதுவீட்டில் விருந்து படைத்தோடு கொழும்ப தமிழ்ச்சங்கத்தில் கனடா எழுத்தாளர்களும் கனடியத் தமிழர்களும் என்னும் கலைப்பில் உரையாற்ற வைத்தார். இதில் பேராசிரியர்கள் சோ.சந்திரசேகரன், தில்லைநாதன் போன்றோர் கலந்துகொண்டமை நினைவில் கொள்ளத்தக்கது. 16.07.2020ல் இப் புவி வாழ்வை நீத்தார் என்ற செய்தி வாசகர்களையும் எழுத்தாளர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

ஈழத்துச் சோமுவின் படைப்புலகம்:

களனி நதி தீரத்திலே (குறு நாவல்)
நிலவோ நெருப்போ (சிறுகதைத் தொகுதி)
விடிவெள்ளி பூத்தது (நாவல்இ வரதர் வெளியீடு)
ஈழத்து இலக்கிய வரலாறு - பல்துறை நோக்கு (ஆய்வு)
பொய்கை மலர் (நாவல்)
நிகழ்வுகளும் நினைவுகளும் - காந்தன் கண்ணோட்டம்
தத்துவச் சித்திரங்கள் (வானொலி உரைகள்)
ஆகுதி (சிறுகதைத் தொகுதி)
ஈழத்தமிழருக்கு ஏன் இந்த வேட்கை?
Lanka and Ramayanam
Ancient Temples of Shiva in Sri Lanka

பத்மா சோமகாந்தனின் படைப்புக்கள்

ஈழத்து மாண்புறு மகளிர்
ஈழத்துத் தமிழ்ப் பெண் ஆளுமைகள்
நெஞ்சுக்கு நிம்மதி
பக்த அனுமன் கதை
புதிய வார்ப்புகள்
கடவுளின் பூக்கள்
வேள்வி மலர்கள்
இற்றைத் திங்கள்
பாரமுகங்கள் சில பார்வைகள்
Stories from Hindu Mythology

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.
வீடு வாங்க & விற்க!

'
சாந்தி சந்திரன்
Shanthi Chandran

HomeLife/GTA Realty Inc.
647-410-1643  / 416-321-6969
5215 FINCH AVE E UNIT 203
TORONTO, Ontario M1S0C2

விளம்பரம் செய்ய

வ.ந.கிரிதரனின் பாடல்கள்
பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க

அ.ந.கந்தசாமியின் நாவல் 'மனக்கண்' மின்னூல்!
வாங்க
வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' மின்னூல்!
பதிவுகளில் வெளியான சிறு நாவலான எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' தற்போது அமேசன் & கிண்டில் மின்னூற் பதிப்பாக, பதிவுகள்.காம் வெளியீடாக வெளியாகியுள்ளது. தமிழ் அகதி இளைஞன் ஒருவனின் முதற்காதல் அனுபவங்களை விபரிக்கும் புனைகதை.  மின்னூலினை வாங்க

                                         

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
 

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். மின்னூலினை வாங்க


எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம்

 


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி. இதனை வாங்க இங்கு அழுத்தவும்.


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி. நூலை வாங்க


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan. To buy


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp. Buy here