நீண்ட பாரம்பரியத்தைக் கொண்ட தெல்லிப்பளை யூனியன் கல்லூரியின் முன்னாள்அதிபர் கதிர்காமர் பாலசுந்தரம் கடந்த 2.06.2024 அன்று இயற்கையெய்தினார். ஆசிரியராக, அதிபராக, எழுத்தாளராக பல்வேறு திறன்களையும் ஆளுமையும் கொண்டவர். தன்னை முதனிலைப் படுத்தாமல் அமைதியாக இருந்து பல்வேறு செயற்திட்டங்ளை நிறைவேற்றியுள்ளதோடு, யூனியன் கல்லூரியின் பொற்காலம் இவரது பதவிக்காலமே எனத் துணிந்து கூறுமளவிற்கு அவரது சேவை உயர்பு பெற்றிருந்தது என்பதை அறியமுடிகின்றது. தனியாள் ஆய்வுகள், சிறுகதைகள், நாவல்கள் என்பன இவரது எழுத்தாற்றலுக்குக் கட்டியம் கூறுவதோடு ஆங்கிலம் கற்பதற்கான நான்கு நூல்களையும் ஆக்கியுள்ளார். இவரது ஆங்கில நூல்கள் சிங்கள மொழிப் பாடசாலைகளையும் விட்டுவைக்கவில்ல. எம்.டி. குணசேன நிறுவனத்தினர் இந்த நூல்களைத் தத்தெடுத்து இலங்கை முழுமையும் உள்ள பாடாசலைகளுக்குக் கிடைக்க வழிவகுத்தமை இவரது ஆங்கிலப் புலமைக்கு எடுத்துக்காட்டாகும்.

அவரோடு பழகும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது கனடாவில்தான். ஆழ்கடலான் பரமநாதனின் நூல்வெளீடு எனது தலைமையில் நடந்தவேளை அதில் பங்குகொண்டு ஒரு பாராட்டுக்கவிதையையும் தந்திருந்தார். அவரது நூல்களுள் ‘வன்னி’ நாவலைவெளியிட்டு வைக்கும் பொறுப்பை என்னிடம் துணிந்து ஒப்படைத்திருந்தார். அத்தோடு வேறுசில அவரது நூல்களுக்கு உரையாற்றவும் அழைத்திருந்தார். யூனியன் பொற்காலம் நூலுக்கு பேராசிரியர் நா.சுப்பிரமணியன், சட்டத்தரணி விக்னேஸ்வரன், முனைவர் பார்வதி கந்தசாமி உட்பட நானும் அந்த நூல்வெளியீட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் வாய்ப்பை தந்துள்ளமை என்மீது அவர் கொண்டுள்ள மதிப்பைக் காட்டி நின்றது.

ஆசிரியராக நியமனம் பெறுவதற்கு முன்னர் பிரித்தானிய விமானப் படை அலுவலகத்தில் தனது 12 வது வயதில் அலுவலக உதவியாளராகப் பணியாற்றியதோடு இரண்டே ஆண்டுகளில் நிருவாகப் பகுதியில் பணியில் பதவி உயர்வு பெற்றுப் பொறுப்போடு பதவியைத் தொடர்ந்தார். பிரித்தானிய அரசாங்கம் இலங்கைக்குச் சுதந்திரம் வழங்கியதைத் (1948)தொடர்ந்து தனது படைகளை மீளப்பெற்றுக்கொண்டமையால் பாலசுந்தரம் அதுவரை வகித்துவந்த அலுவலகப் பணியில் தொடர முடியாதநிலை ஏற்பட்டது. வேலையை இழந்தமையால் மீண்டும் அப்போதைய அதிபராக திரு.வீரசிங்கம் அவர்கள் புத்தூர் சோமஸ்கந்த கல்ருலூரியில் இருந்தவேளை இவரை அழைத்துச் சென்று அங்கு கல்வியைத் தொடரவைத்தார். அதிபரின் மகன் ஆனந்தசங்கரியும் இவரது வகுப்புத் தோழராக கல்வியை மேற்கொண்டனர். அங்கிருந்து பேராதனைப் பல்கலைக் கழகத்தில் தனது பட்டப்படிப்பை 1958களில் முடித்துக்கொண்டு வெளியேறினார். வேறு வேலைகளுக்கு விண்ணப்பித்து காத்திருந்தவேளை பத்திரிகையில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். போதிய ஊதியம் கிடைக்காமையால் அந்தப்பணியை விட்டுவிட்டு இந்துப் போர்ட் இராசரத்தினம் அவர்களை நாடி ஆசிரியர்தொழிலில் காலடிவைத்தார். அதன் காரணமாக வன்னியில் வவுனியா மாவட்டத்தில் உள்ள ‘ஆயிலடி’ என்னும் குக்கிராமத்தில் உள்ள இந்துப் பாடசாலையில் ஆங்கில ஆசிரியராக தனது கற்பித்தல் பணியை ஆரம்பித்தார். ஆசிரியர்த்தொழிலில் ஈடுபட்ட காரணத்தால் தனது தொழில்வாண்மையை உயர்த்திக்கொள்ள ஆசிரியர்ப் பயிற்சிக்காக மீண்டும் பேராதனைப் பல்கலைக்கழகத்திற்குச் சென்றார். அங்கு Dip.in.Ed. கல்விநெறியைத் தொடர்ந்தார். அதன்பின்னர் கண்டியில் உள்ள ‘யகலத்தன முஸ்லிம்’ மத்திய மகாவித்தியாலயத்தில் ஆசிரியராக 1966ல் பணியைத் தொடர்ந்தார். இக்காலமு அவரை ஆங்கிலம் கற்பிப்பதற்கான நுல்களை ஆக்கத் தூண்டிய காலம் எனலாம்.

ஆங்கிலப் புலமையும் கற்பிதமும்

ஆங்கில மொழி ஆசானாக தனது பணியை வன்னியில் உள்ள ஆயிலடியில் தொடங்கிய அவர் யூனியன் கல்லூலி அதிபராக இருந்து ஓய்வு பெறுகின்றார். ஆங்கில்க்கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதனை மேலதிக வகுப்புக்களை தனது வீட்டில் வைத்தே மாணாக்கருக்குப் புகட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது.ஆங்கில இலக்கணப் பாடநூல்கள் அச்சுப்பதிவாகின. இவரது நூல்களின் சிறப்பைக் கண்ணுற்ற எம்.டி.குணசேன பதிப்பகத்தார் இவரது நூல்களை அச்சுப்பதிவிட்டு வெளியிட்டு வந்தமை இலங்கைப் பாடசாலைகளுக்குக் கிடைத்த வரப்பிரசாதமாகக் கொள்ளப்பட்டது. ஆங்கிலம் கற்பதற்காகவே இவரை நாடிப்பெற்றோர் தமது பிள்ளைகளை இவரிடம் ஒப்படைத்தனர். ஆங்கிலத் தேர்ச்சி உலகெங்கும் பரந்துவாழும் யூனியன் மாணாக்கரது தொழில் வாய்ப்புக்களுக்கும் மேலாண்மைக்கும் கட்டியம் கூறி நிற்கின்றன.

யூனியனில் பொற்காலம்

இவர் யூனியன் கல்லூரியில் ஆசிரியராகவும் அதிபராகவும் பணியாற்றிய காலம் கல்லூரியின் வரலாற்றில் புனரமைப்புக் காலமாகப் பதிவாகியுள்ளது. கல்வியால் தன்னை வளர்த்துக்கொண்ட அவர். சிறந்த ஆசிரியராக பணியாற்றிதோடு அதிபராகவம் பதவி உயர்வுபெற்றார். தனது நிருவாகக் காலத்தில் யூனியன் கல்லூரியில் 80 விழுக்காட்டிற்கு மேற்பட்ட சைவசமயத்தவர்களைக் கொண்டபாடசாலையில் அவர்கள் வழிபடுவதற்கு ஒரு ஆலயம் இன்மையை உணர்ந்து அந்தக் குறையை நிவர்த்தி செய்ய ஒரு ஆலயத்தையும் நிறுவினார். இது யூனியன் கல்லூரியின் வரலாற்றில் முதன்முதலாக இந்து ஆலயம் அமைக்கப்பட்ட வரலாறு பதிவாகியுள்ளது. ஆங்கிலக் கல்வி, தமிழ் மொழியாகியவற்றில்மிகந்த தேர்ச்சி பெற்ற நல்லாசானாகத் திகழ்ந்தார். அதனைத் தொடர்ந்து எழுத்தாளராகவும் தன்னை நிலைப்படுத்திக்கொண்டார்.

பாடசாலை நிருவாகம் என்பது மாணவர்களுக்குத் தேவயான அனைத்து வளங்களையும் கிடைக்கச்செய்வதாக அமைதல் வேண்டும் என்பதன் அடிப்படையை நன்கு உணர்ந்துகொண்டர் கதிர் பாலசுந்தரம் அவர்கள். கல்லூரி பல பௌதீக வளவிருத்திகளைக் கண்டமை யாவருமறிந்ததே! இவர் அதிபராகும் போது மாணவர்கள் அனைவரும் நீரருந்தக்கூடிய அளவிற்கு நீர்க்குழாய்களோ தண்ணீர்த் தொட்டியோ இருக்காமையால் மாணவர்கள் அயல்வீடுகளிற்குச் செல்வதே வழக்கமாயிருந்தது. இவர் பதவியேற்றதும் முதற் கடமையாக 3000 கன அடி கொள்ளளவுடைய தண்ணீர்த்தாங்கி ஒன்றினைப் புதிதாக அமைத்து வேண்டியளவு நீர்க்குழாய்களையும் இணைத்து மாணவர்கள் தடையின்றிநீர் பெறுவதற்கு வழிவகுத்தார். கௌரவ அமைச்சர் பிறேமதாஸாவின் யாழ் வருகைக்கு ஒரு அரங்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அவர்களாலே கேட்கப்பட்ட போது அதனைச் சாதகமாகப் பயன்படுத்தி மைதானத்திற்கு வடமேற்கு மூலையிலே பெரியதொரு நிரந்தர மேடையினை உருவாக்கியிருந்தார்.

பாடசாலையின் கல்வி மேம்பாட்டிற்கும் விருத்திக்கும் ஆளணியினரோடு பௌதிக வளங்களின் முக்கியத்துவத்தை நன்கறிந்த அதிபராக பணியாற்றி கட்டிடத் தொகுதிகள், விளையாட்டு மைதானம், தண்ணீர் வசதி, சிற்றுண்டிச்சாலை, கிறஸ்தவப் பிள்ளகைளகு மட்டும் கிட்டிய வழிபாட்டு வாய்ப்பை 80 விழுக்காட்டிற்கு மேலான சைவ மாணவர்களுக்கும் கிடைக்கச் செய்யவேண்டும் என்பதை மனதிருத்தி துணிவோடும், மன உறுதியோடும் பாடசாலை வளவிற்குள் ஒரு சைவ ஆலயத்தையும் அமைத்துத் தந்தார்.

தமிழர் கல்வி கேள்விகளில் காலத்தால் முந்தி நிற்பவர்கள். உரோம, கிரேக்க இலக்கியங்களைப் போன்று தமிழுக்கும் பண்பாட்டு மரபு தொன்மை வாய்ந்தது. ஆனால் மற்றைய வரலாறுகள் போன்று தமிழின் வரலாற்றையோ அன்றித் தமிழரின் வரலாற்றையோ ஒரு ஒழுங்குமுறையில் பதிந்து வைத்திருக்கப் படவில்லை. அந்தக் குறையை நிவர்த்தி செய்யும் பணியில் அதிபர் கதிர் பாலசுந்தரம் அவர்கள் பேசப்படவேண்டியவர். அவர் எழுதிய நூல்கள் அவற்றிற்குக் கட்டியம் கூறி நிற்கின்றன.

‘சத்தியங்களின் சாட்சியம்’ அவரது கோபாவேசத்தை உள்ளக் குமுறலை எடுத்துக்காட்டும் ஒரு படைப்பு. அந்தத்துணிகரமான எழுத்து அவரின் ஆதங்கத்தின் ஆவேசத்தின் வெளிப்பாடு என்பதனை வாசகர்கள் யாரும் உணர்ந்துகொள்ளக்கூடியதே. தன்னால் மிகவும் நேசிக்கப்பட்ட மக்கள் சேவகனாகப் பணியாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கம் போன்றோரது படுகொலைகளை அவரால் ஜீரணிக்கமுடியவில்லை. அதன் தாக்கமாகவே சத்தியத்தின் சாட்சியங்கள் வெளிவந்தது.

அவரது நூல்கள் சிறுகதைகள், நாவல் இலக்கியங்களோடு வரலாற்று ஆவணங்களாகவும் பாட நூல்களாகவும் காலத்தின் தேவை கருதி எழுதப்பட்டவை என்பது வெளிப்படை. அவர சிந்தனா ஓட்டம், அவர் தான் வாழ்ந்த காலத்தின் நிகழ்வுகளின் ஆழ்ந்த நுண்மாண் நுழைபுல அவதானிப்புக்கள் என்பன இளையோடிக் கிடக்கின்றன.

1. அந்நிய விருந்தாளி, (சிறுகதைகள்)
2. பொற்காலம் -யூனியன் கல்லூரியின் நினைவுகள் பதிவுகள்
3. மறைவில் ஐந்து முகங்கள் (நாவல்)
4. அமர்தலிங்கம் சகாப்தம் - அரசியல் வாழ்வியல்
5. சாணக்கியன் அன்னியர்கள் 100 வது ஆண்டுகள்
6. சத்தியங்களின் சாட்சியம் (அரசியல்)
7. அவதாரம் - மேன்மை தங்கிய சிலம்புநரி
8. வன்னி - நாவல்
9. வாரிசுகள் நாவல்
10. Blood AND Terror Novel
11. His Roya Highness, The Tamil Tiger
12. A Militant’s Silence
13. Madol Doova – English Letteratuer G.C.E. Model Questions and Answers
14. English Letteratuer G.C.E. Model Questions and Answers –Drama Prose fictions
15. DRAMA FICTION PROSE- Literature
16. விமர்சனம்: மறைவில் ஐந்து முகங்கள் (இலக்கியம்)
17. A Model Approch to English Grammar (Grammar)
18. A Model Approch to English Grammar – Verb forms (Grammar)
19. A Novel Approch to English Grammar – Part of speech
20. சிவதலம் - ஆவரங்கால்
21. தங்கத் தாரகை

கல்வியையும், அதன்வழி மாணவர்களையும், பாடசாலையையும், வாழ்ந்த சமுதாயத்தையும் நன்கு நேசித்தவர். மண்ணையும் மைந்தர்களையும் ஆழமாக நேசித்த ஒருவரால்தான் அவற்றை உள்ளடக்;கிய படைப்புக்களை வெளிக்கொண்டுவரமுடியும். இதற்கு அவர் எழுதிய நூல்களே சாட்சியம். அமிர்தலிங்கம் ஒரு சகாப்தம், வன்னி நாவல் என்பன அவரது சமுதாய, அரசியல் பார்வையினை படம்பிடித்துக் காட்டுகின்றன. போராட்டக்கால வன்னி பற்றி எவ்வளவு துல்லியமாக அவதானித்து, கேட்டு அறிந்து வைத்தள்ளார் என்பதனை அவரது நாவல் எடுத்துக்காட்டுகின்றது.

ஆவரங்காலில் பிறந்த அவர் தனது ஊரிலுள்ள சிவன் ஆலயத்தைப் பற்றி பதிவு செய்திருப்பது காலத்தால் அழிக்கமுடியாத வரலாற்றுப் பதிவாகும். கல்வியால் வளச்சி பெற்ற அவர் தன்னை ஒரு வரலாற்று ஆய்வாளராக, சிறுகதை, புனைவு இலக்கியப் படைப்பாளியாக, சிறந்த ஆசானாக, பாடசாலை நிருவாகியாக, சமூகத் தொணடனாக மட்டுமன்றி சிறந்த கவிஞனாகவும் ஆக்கிக்கொண்டார். தெல்லிப்பளை யூனியனை மீட்டெடுத்த அதிபராக அதன் மாணவர்கள் இன்று அவரை போற்றுவது போன்று, அரசியல் விமர்சகராக, புனைவு இலக்கிய படைப்பாளியாக, கட்டுரையாளராக அவரைத் தமிழ்ச் சமுதாயம் பார்க்கின்றது என்றால் அவர் சமுதாயத்தோடு ஒட்டி உறவாடியமையே காரணமாகும்.

திரு. கதிர் பாலசுந்தரம் அவர்களின் நிருவாகக் கட்டமைப்பைப்பற்றி சண்டே ஸ்ரார் 1986ல் ஒரு கட்டுரையை எழுதியிருந்தது. யாழ்ப்பாண மாவட்டத்திலேயே தலைசிறந்த நிருவாகி எனத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதே அந்தச் செய்தியின் சுருக்கமாகும்.

மானிடப் பண்புகள் நிறைந்த மேலாளர்

அவரிடம் நான் அவதானித்த பண்பியல்புகளில் அவரிடம் குடிகொண்டுள்ள துணிவு, விவேகம், ஆளுமை என்பன அசாதாரணமானவை என்பதே! எதற்கும் பின்வாங்காத, துணிந்து சுபாவம் கொண்டவர் அவர் என்பனை அவர் எழுதிய நூல்கள் எடுத்துக்காட்டுகின்றன. உண்மையை அப்படியே பதிவு செய்யவேண்டும் என்பது அவரது உள்ளக்கிடக்கை. அவர் ஒரு சில நூல்களைக் கனடாவில் பதிப்பித்த பதிப்பகத்திற்கு நான் அடிக்கடி செல்வேன். அந்தப் பதிப்பாசிரியர் முன்னைநாள் பாடாலை அதிபர், இலங்கை கல்விச்சேவைப் பரீட்சையில் தேறி கல்வி நிருவாகியாகப் பதவிவகுத்தவர். அவர் கதிர் பாலசுந்தரத்தின் துணிகரமான எழுத்தாற்றலையும் எழுத்து நடையையும் குணவியல்புகளையும் போற்றிப் புகழுவதை நான் செவிமடுத்துள்ளேன். “இந்த மனிதன் ஒன்றுக்கும் பயப்படாதவர் போல இருக்கின்றார். அரசியலில் துணிவோடு கருத்துக்களை உள்ளவற்றை உள்ளபடி எழுதுகிறார் இது இவருக்கு பிரச்சினையைக் கொடுக்கப்பபோகின்றதே” என்றும் ஆதங்கப்பட்டதை நான் கேட்டுள்ளேன்.

'வரலாற்றை உருவாக்குபவன் ஒடுக்குமுறையாளன்தான். அவன் எழுதுகின்ற வரலாறு அவனால் ஒடுக்கப்படவர்களின் வரலாறாக இருப்பதில்லை. அது சூறையாடுகின்ற, வன்புணர்ச்சி செய்கின்ற, வறுமையை உருவாக்குகின்ற அவனது சொந்த வரலாறே. இதற்கு மாறாக ஒடுக்கப்பட்டவர்களால் வேறொரு வரலாறு உருவாக்கப்படுகிறது. ஆனால் இந்த வரலாற்றை உருவாக்குபவர்கள் நாவலாசிரியர்களும் கவிஞர்களும்தானே தவிர தொழில்ரீதியான அல்லது கல்வித்துறை சார்ந்த வரலாற்றாளர்களல்ல' என்று (Frances Furnen) ஃபிரான்ஸ் ஃபனான் குறிப்பிடுவார். சமூகத்தின் நெருக்கடியை முதலில் உணர்ந்து கொள்வது சிறுகதை மற்றும் புனைவிலக்கயிமாகத்தான் இருக்கின்றது. இலக்கியம் என்பது ஆதிக்கமயமாக்கலுக்கும், சட்டங்களுக்கும் தணிக்கைகளுக்கும் வெளியே சதா தன்னிலையைப் பேசி மிச்சமிருக்கும் நம்பிக்கைகளைத் திரட்டிக் கொண்டேயிருக்கிறது. என்பதற்குத் தகைசான்ற ஒரு படைப்பாளியாக நான் எனது பெருமதிப்பிற்குரிய அதிபர் கதிர் பாலசுந்தரம் அவர்களைக் காண்கின்றேன்.

தங்கத்தாரகை யூனியன் கல்லூரியின் அவரது வெறும் கற்பனைப் படைப்பல்ல பார்த்து, கேட்டு, கண்டு, கற்று அறிந்தவற்றை மட்டுமன்றி யூனியனில் பணியாற்றியவர்கள், கற்றவர்களின் அனுபவங்களை ஆதாரமாகப் பதிவாக்கியுள்ளமை அவரது சாதனையும் சாதுரியம் என்றே கொள்ளலாம். இந்தநூல்வெளியீட்டின்போது பாடசாலை ஆரம்ப காலந்தொட்டுஅதிபர்களாக இருந்தவர்களின் 30 அதிபர்களின் நிழல்பட பிரதிகளை மிக நீண்டகாலமாக தேடி அவர்கள் பற்றி ஆராய்ந்தநூலுருவாக்கியது மட்டுமன்றிவெளியீட்டு விழாவில் அத்தனை அதிபர்களின் படங்களும் மண்டப வாயிலில் காட்சிப்படுத்தியிருந்தமை பெரும் சாதனையாகும்.

அவர் 1816ல் பாடசாலையை ஆரம்பித்த சாமுவேல் நீவெல் அதனைத் தொடர்ந்து டானியல் பூவர், மற்றும் வர்ணர் பாடசாலையை ஆரம்பித்தது தொடக்கம் அங்கு பணியாற்றிய அனைத்து அதிபர்கள் உப அதிபர்கள் மட்டுமன்றி முக்கியமான ஆசிரியர்களின் பணிகளையும் அவர் பதிவாக்கியுள்ளார். இப்பாடசாலையில் 1939ம் ஆண்டிற்கு முன்னர் பணியாற்றியவர்கள் அதற்குப்பின்னர் பணியாற்றிய அதிபர்களின் பெயர்கள் சேகரிக்கப்பட்டு மிக சிறப்பாகப் பதிவாக்கியுள்ளார்.

Before 1939: RevB.U.Rice, Rev.S. Veerakathy, Mr.S.M. Kandaiapillai Mr. Taylor Mr. Taylor Thuraiappapillai, Mr.J.V Chellappah, Mr. S. M. Veluppillai, Mr. G.A. Ratnavararathar, Mr. C.C.Kanapathippillai Mr.C.C. Kanapathippillai, Mr.S. K.Rasiah [10]

After1939: I.P.Thurairatnam, K.Krishnapillai, T. Nadarajah, Kathir Balasundaram, N.Kamalanathan, S.Punniyseelan, and V.K.Radnakumar and V.K.Radnakumar என்பவர்களின் காலத்துப் பணிகள் பதிவாக்கப்பட்டுள்ளன.

இவர்களுள் ஐ.பி. துரைரட்ணம் மிகவும் முக்கியமான பணிகளை ஆற்றிய அதிபராக புகழ்ந்துரைக்கப் பட்டுள்ளார். அவர்காலத்தில் சிரேஷ்ட பாடசாலைச் சான்றிதழ் வகுப்பு, லண்டன் மற்றிக்குலேசன் பரீட்சைக்கான வகுப்பு, பல்கலைக்கழகப் புகுமுகத்திற்கான உயர்கல்விச் சான்றிதழ் கற்கை நெறி, இல்ல போட்டி முறைகள், மாணவர்களின் கறிஸ்தவ அமைப்பு, பழைய மாணவர் ஒருங்கமைப்பு, பரிசளித்தல், சாரணர் இயக்கம், துடுப்பாட்டம், உதைபந்தாட்டம், என்பனவற்றோடு மலேசிய கட்டிடத் தொகுதி, குழாய்நீர் விநியோகம், இரண்டாவது விளையாட்டு மைதானம், உயிரியல்,பௌதிகவியல் ஆய்வு கூடங்கள் என்பனவற்றோடு ஐக்கிய காணிவெல் களியாட்ட விழா, பொருட்காட்சி, யூனியனின் செயற்பாட்டுப் படங்கள் என்பன ஆரம்பிக்கப்பட்டன. இதனால் 1947ல் இது 1ம் தரப்பாடசாலைலயாக தரமுயற்தப்பட்டது. திரு. ரி. நடராசா அவர்களின் காலத்தில் 1961ல் பாடசாலை அரசாங்க மயமாக்கப்பட்டது. சரிவு நிலையில் இருந்த பாடசாலையை மீளவும் கட்டியெழுப்ப அரும்பாடுபட்டு உழைத்தவர் என்பதனையும் பதிவாக்கியுள்ளார்.

கதிர் பாலசுந்தரம் அவர்கள் பணிகளுக்காக இன்றும் யூனியன் கல்லூரி பழைய மாணவர்களாலும் பெற்றோராலும் நினைவு கூரப்படுகின்றார். அவர் நீர்த்தொட்டி ஒன்றை அமைத்ததோடு புதிதாகக் காணியைப் பெற்று அதில் ஒரு திறந்த வெளி அரங்கத்தை நிறுவியதோடு க.பொ.த. சா.தா மற்றும் உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைத் பெற்றுத்தந்த அதிபராகக் கருதப்படுகின்றார். புதிய வகுப்பறைக் கட்டிடங்களையும் அன்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அமிர்தலிங்கம் அவர்களின் உதவியோடு செய்துள்ளார். பாடாலை ஆரம்ப காலத்திலேயே இங்கு கிறித்தவ மிசனறிமாரால் தாபிப்பப்பட்ட கிறித்தவ ஆலயம் பாடாசலை வழிபாட்டிற்காக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது எனினம் 80 விழுக்காட்டிற்கு மேலாக கல்வி பயிலும் சைவ மாணர்வளுக்கான ஆலயம் ஒன்று இல்லாத நிலையைக் கண்ணுற்று அதனை பெற்றோர் ஆசிரியர் சங்கத்தில் முன்வைத்ததோடு ஆலயம் ஒன்றை அமைக்கும் பணியையும் தானே முன்னின்று நிறுவினார். அதற்கான அத்திவாரத்தை தொடக்கிவைத்ததோடு ஆலயத்தின் ‘கலசம்’ ஏற்றும் வைபவத்தையும் தானே பொறுப்பேற்றுச் செயற்படுத்திய கரும வீரனாக பெற்றோர் மத்தியில் புகழ்பெற்று உயர்ந்துள்ளார்.

இவருக்குப் பின்னரான போர்க்காலத்திபின்னர் வந்த அதிபர்களான திரு. கந்தசாமி மற்றும் திரு. புண்ணியசீலன் ஆகியோர் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டனர். அவர்கள் எதிர்கொண்ட சிரமங்கள் சிக்கல்கள் பற்றிய கருத்தேற்றமும் அவரது உள்ளத்தில் பதிந்திருந்தைமையை நூல் வெளிக்கொண்டு வந்துள்ளது.

இந்த நூலானது மிகவும் நுணுக்கமாக ஆராயப்பட்ட பின்னர் வெளியிடப்படுகின்றது. கிட்டத்தட்ட ஒராண்டுகளாக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு முழுமை பெற்றுள்ளது. நூலாக்கம் செய்வதில் உள்ள சிரமத்தை உணர்ந்து கொள்ள ஒரு சந்தர்ப்பமாகவும் இந்நூலாக்கம் உள்ளது.

‘விழுமியது பயத்தல், விளங்குதா ரணத்தாலாகுதல்’ என்னும் தொல்காப்பிய சூத்திரத்திற்கமைவாக இந்த நூல் யாக்கப்பெற்றுள்ளது யூனியன் கல்லூரியால் மிகவும் ஆகர்சிக்கபப்ட்ட அதிபர்களுள் ஒருவரான திரு. கதிர்பாலசுந்தரம் அவர்கள் அக்கல்லூரியின் வரலாறு பதியப்பட்டுப்பேணப்படாதமை கண்டு மனம் நெகிழ்ந்தவர் தனது வாழ்நாளில் பெரும் பொழுதை இக்கல்லூரியின் வரலாற்றாதாரங்களைத் தேடிப் பெற்றுக்கொள்ளுவதில் செலவிட்டுள்ளார். அவர் எழுதிய பொற்காலம் என்னும் நினைவுப் பதிவுகளில் அவர் ஆரம்பத்திலேயே வாழ்த்தி வரவேற்கின்றேன் என அவர் எழுதிய ‘கருவோடு வந்த திருப்பணி’ என்னும் கட்டுரையில் பதிந்துள்ளமை கருத்தைக் கவர்கின்றது. இன்று 1AB தரத்தில் உள்ள பாடசாலையாக திகழ்கின்றது.

யூனியன் உதயத்திற்கு வழிதிறந்த சாமுவேல் நீவெல் என்னும் கட்டுரையில் யூனியனின் வராற்றின் பின்புலம் பதிவாகியுள்ளது. அமெரிக்க சிலோன் மிசனின் பணிகள் பற்றிய பதிவுகளும் உள்ளடக்கப்படுகின்றன. 1816ல் அங்கு நடைபெற்றுக்கொண்டிருந்த தமிழ்ப் பாடசாலையைத் தமது அதிகாரத்தால் ஆக்கிரமித்து தேவாலயத்தைக் கட்டிக்கொண்ட வரலாறும் வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்படுகின்றது. இவை வரலாற்றில் உலக நாடுகள் அனைத்திலும் பல்வேறு காலகட்டங்களில் இடம்பெற்றுள்ளன. இராமர் மசூதி இடித்ததாக இன்று குரல் எழுப்பபடும் பின்னணியை நாம் ஒப்பிட்டு நோக்கமுடியும்.

தங்கத் தாரகை 45 விடயங்களைப் பதிவாக்கியுள்ளது. எடுத்த எடுப்பிலேயே தேயிலைத் தோட்டத்தில் ஆடிப்பாடி வேலை செய்யும் இளம் யுவதிகளின் படம் நுளைவாயிலாக ஆவலைத்தூண்டும் பாணியில் அமைந்துள்ளது கட்டியம் என்னும் நுழைமுகம். மலையக மாணவர் ஒருவரின் அனுபவத்தைப் பதிந்துள்ளமை அக்காலத்துப் பல்வேறு நிலைமைகளை அறிய வைக்கின்றது. 1816 தொடக்கம் 1910 வரை அதிபர்களாகப் பணியாற்றியவர்களின் பட்டியல் தொடர்ந்து ‘உதயதாரகை’ பற்றிப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இதில் யூனியன் கல்லூரியின் பழைய மாணவரான சி.வை. தாமோதரம்பிள்ளை அவர்களின் பத்திரிகைப் பணியும் பதிவாக்கப்பட்டுள்ளது. உதயதாரகை ஹென்றி மாட்டின், மற்றும் செத் பேயிசன் ஆகியோர் பதிப்பாசிரியர்களாகத் தொடங்கியமையும் அவர்கள் தமிழ் மொழியில் பாண்டித்தியம் பெற்றிருந் தமையும் பதிவாக்கியுள்ளார். Morning Stare என்ற ஆங்கிலப் பதத்திற்கு அவர்கள் ‘உதய தாரகை’ (1841-1943) எனக் கொடுக்கப்பட்ட தலைப்பே இன்று நாம் பேசும் நூலுக்கு அத்திவாரம் இட்டுள்ளது என ஊகிக்க முடிகின்றது. உதய தாரகை என்பதே உலகில் வெளிவந்த முதலாவது தமிழ்ப் பத்திரிகை எனக்கொள்ளப்படுகின்றது.

வாசகர்களை ஈர்த்துக் கொளத்தக்க எழுத்து நடையினை அவரது நூல்களில் காணமுடிகின்றது. சாதாரணமாக ஒருவர் பிறந்தார் என்பதுதான் வழக்கம். ஆனால் கதிர் பாலசுந்தரம் அவர்களின் பேனாவே சற்று வித்தியாசமாக வர்ணிப்பதில் முன்னணி வகிக்கின்றது. உதாரணமாக பக்கம் 8ல் ஹென்றி மாட்டின்பற்றி பின்வருமாறு குறிப்பிடுகின்றார்: “1784ம் ஆண்டு ஒன்பது பிள்ளைகளின் இறுதிப்பிளையாக பூமிப்பந்தில் கால்பதித்தார். நீண்ட காலம் செல்ல முன்னரே இரண்டரை வயதாக இருக்கும் போதே அன்னையை இழந்தார். பதினான்கு அகவையில் அப்பனையும் எமனுக்குப் பறிகொடுத்து அநாதையானார். இருபத்தாறு மைல்கள் கால்நடையாகச் செனறு போட்லண்ட் துறைமுகத்தை அடைந்து, அங்கு வந்த கல்பலில் தொத்திக்கொண்டு வட அமெரிக்காவின் மசாசூசெட் மாகாணத்தில் அமைந்தபிரதான நகரான பொஸ்டனை அடைந்தார். எஜமான்களுக்குப் பணிவிடை செய்து தனது கல்வியை வளர்த்து, உலகப் புகழ் பெற்ற ஹாவாட் கல்கலைக்கழகத்தில் பயின்று, 1807ஆம் ஆண்டு பட்டம் பெற்றார்”. என்பது அவரது ஆற்றொழுக்குப் போன்ற எழுத்து நடையை எடுத்துக்காட்டுவதற்கு உதாரணமாகக் கொள்ளலாம். அது மட்டுமன்றி அவரது வாழ்வியலோடும் ஒத்துப்போவதைக் காணலாம். அவ்விதமே ஆங்கிலத்தில் புலமை பெற்றவர் அவர். அவர் எழுதிய வன்னி நாவல் தான் முதன்முதலில் ஆசிரிய நியமனம் பெற்ற குக்கிராமமான ஆயிலடியைச் சுற்றிச் சுற்றி வருவதைக் காணமுடிகின்றது. போர்க்கால நாவலாக இராணுவத்தின் அட்டூழியங்கள் போர்க்காலத்தில் கைதுசெய்யப்பட்ட போராளிகள் பற்றி கதைகளை விபரிக்கும் நாவலாகவும் வன்னிப் பிரதேசத்தின் நிலைமையும் எடுத்துக்காட்டுவதாகப் பதிந்துள்ளார். ஆங்கிலத்தை கற்பிப்பதற்காகவும் மாணவர்கள்இலகுவாக புரிந்துகொள்ளவும் ஆங்கில இலக்கண நூல்களை ஆக்கித்தந்தார். இலக்கண நூல்களின் தரத்தை அறிந்த எம்.டி.குணசேன பதிப்பகத்தார்அவரை நாடி பதிப்புரிமைபெற்று சிங்களப் பாடசாலைகளிலும் அந்த நூல்களைப் பயன்படுத்த வழி வகுத்தனர் என்றால் அவரது ஆற்றல் பற்றிக்குறிப்பிடவேண்டியதில்லை.

யூனியன் தந்த பேராளர்கள்

யூனியன் கல்லூரியில் கல்வி கற்று பெருமை தந்தவர்கள் வரிசையில் சட்டத்தரணியும் இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவராகவும் இருந்த எஸ்.ஜே.வி. செல்வநாயகம் அவர்கள், தமிழே வாழ்வென ஏட்ச்சுவடிகளைப் பதிப்பித்த சி.வை.தாமோதரம்பிள்ளை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக துணைவேந்தராகப் பணியாற்றிய சு.வித்தியானந்தன், கே. குணரத்தினம், கல்வியியலாளரும் விஞ்ஞானியுமான அலன் ஆபிரகாம், கணினித் துறையில் விற்பன்னராகவும் மலேசிய நான்யாங் பல்கலைகழகத்தில் பொறியியல் பேராசிரியராக திகழும் பி.என். சுகந்தன், முன்னைநாள் பாராளுமன்ற உறுப்பினரான சிவமகாராஜா, அவுஸ்ரேலியாவில் வாழ்ந்து வரும் இந்நூலில் இடம்பெற்றுள்ள எழுத்தாளர் கே. எஸ். சுதாகர், முன்னைநாள் பாராளமன்ற உறுப்பினரும் உயர்நீதி மன்ற நீதிபதியுமான தெல்லிப்பளை இராஜரட்ணம் போன்றோர் யூனியன் பெற்றெடுத்தவர்கள் என்பது கதிர் பாலசுந்தரம் அவர்களின் பெரு முயற்சியால் வரலாற்றுப்பதிவாக்கப்பட்டமை பெரும் வரவேற்பைப்பெற்றுள்ளது.

சிறுகதைகள்

அவர் எழுதிய சிறுகதைகள் சமூக நலம் சார்ந்தமைவ என ‘அந்நிய விருந்தாளி’ என்னும் நூலுக்கு எழுதிய முன்னுமைரையில் பேராசிரியர் சு.வித்தியானந்தன் குறிப்பிட்டுள்ளமை கருத்திற்கொள்ளத்தக்கது. மறைவில் ஐந்துமுகங்கள் என்னும் நூலுக்கு முன்னுரை வழங்கிய பேராசிரியர் க.பஞ்சாங்கம் “நம்பிக்கைத் துரோகங்களும், காட்டிக் கொடுத்தல்களும், அவநம்பிக்கைகளும் சூழ்ச்சிகளும், வஞ்சகங்களும், பொறாமைகளும், கூட இருந்தே குழிதோண்டல்களும், காரணமுடியாத சாவுகளும், (அதாவது யாரால், எந்தக் குழுவினரால், எதற்காகச் சுடப்பட்டோம் என்பதை யூகித்துக்கூட அறியமுடியாதபடியான சூழலில் செத்து விடுவது) தப்பிப்பிழைத்து ஓடிவிடுவதற்காகப் பின்பற்றப்படும் எல்லாவிதமான தகுடுதத்தங்களும், பொய்களும், பொறாமைகளும் எந்த அளவிற்கு ஒரு இனத்தை நாசப்படுத்திக்கொண்டிருக்கின்றன என்பதை உருவக மொழியில் பலாறு பல கோணத்தில் சொல்லிக் கொண்டு போகிறது நாவல்” எனக் குறிப்பிட்டுள்ளது அவரது நாவல் எழுத்துக்கு கட்டியம் கூறி நிற்பதைக்காணலாம்.

இலங்கை தமிழரசுக்கட்சியில் அதீத ஈடுபாடும் அமிர்தலிங்கம் மீது மிகுந்து பற்றும் கொண்டவர் கதிர்பாலசுந்தரம். அவரது மூத்த சகோதரர் ஆவரங்கால் சின்னத்துரை தமிழரசுக்கட்சியின் மத்திய குழு உறுப்பினராகவும் உயர்பதவிகளை வகித்தவரும் ஆவார். அமிர்தலிங்கம் போன்றே தமிழ் செயற்பாட்டாளர்களும் அரசியல்வாதிகளும் ஆயுதக் குழுவினரால் சுடப்பட்டதை ஏற்றுக்கொள்ளாதவராக கதர்பாலசுந்தரம் இருந்துள்ளார்.அவர் எழுதிய ‘சத்தியங்களின் சாட்சியம்’ ‘அமிர்தலிங்கம் சகாப்தம்’ என்னும் நூல்களில் சாடியுள்ளமையைக் காணமுடிகின்றது.

ஓய்வுபெற்றபின் பிறந்தகத்தில் இருக்கமுடியாத போர்காலச் சூழ்நிலை காரணமாக புறூணை நாட்டில் பணியாற்றிவரும் மருத்துவக் கலாநிதி கயல்விழியிடம் தனது துணைவியாரோடு 1992 சென்று இரண்டு ஆண்டுகள் தங்கியிருந்தவர். மகனோடு இருக்கவிரும்பி பின்னர் இலண்டன்ககுப் புறப்பட்டு அங்கு 1994ல் சென்று வாழ்ந்து வந்தவேளை அன்புப் புதல்வன் யாழ்கோவன் கனடாவிற்கு வந்தமையால் அவர்களோடு இணைவதற்காக கனடாவிற்குப் புலம்பெயர்ந்தார். கனடாவில் அவர் தனது இறுதி மூச்சுவரை எழுதிக்கொண்டே இருந்தார். அவரது வரலாற்றுப் பதிவு ஈழத்து வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

பல்வேறு துறைகள் சார்ந்து எழுதிவந்த கதிர் பாலசுந்தரம் தனது 96வதுவயதில் (2024) கனடாவில் காலமானார். அவருக்கு Dr.கயல்விழி மற்றும் யாழ்கோவன் என்னும் இரு பிள்ளைகள் உள்ளனர். யாழ்கோவன் கனடாவிலும் கயல்விழி அவுஸ்திரேலியாவிலும் வாழ்ந்துவருகின்றனர். பிள்ளைகளின் திருமணத்தில் அவர் பெற்ற இன்பம் சொல்லில் மாழாது. அத்துணை ஆனந்தப் பரசவசம் அடைந்தமையை யாழ்கோவன்- சந்திமா திருமணத்தில் அருகிருந்து பார்த்தவன் நான். மிகுந்த உற்சாகத்தோடும் மனமகிழ்ச்சியோடும் காணப்பட்டார். எழுத்தால் தனக்கென ஒரு இடத்தை தமிழ் மக்கள் மத்தியிலும் பிற மொழியாளர்களிடத்தும் இடம்பிடித்துள்ள அவர் யாழ் யூனியன் கல்லூரியின் மறுசீரமைப்பாளராக, பொற்கால அதிபராக இன்றும் நினைவுகூரப்படுவது கருத்திற்கொள்ளத்தக்கது.

கிறாபிக் லாண்ட் உரிமையாளர் கிருஷ்ணகுமாரின் மீது மிகுந்த அன்பும் பற்றும் கொண்டிருந்தார். ஸ்ரோவீல் மருத்துவனையில் இருந்தவேளை அவரும் நானும் அங்கு சென்று பார்த்தபோது அவர் மிக மகிழ்சியடைந்தமையும் காணமுடிந்தது. அத்தோடு எங்கள் இருவருக்கம் “நீங்கள் நன்றாக இருக்கவேண்டும், எனது ஆசிகள்” என்று கையை உயர்த்தி ஆசீர்வதித்தது நாமிருவரும் பெற்றுக்கொண்ட பெரும் பேறாகவே கருதிக்கொண்டு விடைபெற்றோம். நல்ல மனது கொண்ட தமிழ் மீதும், தமிழர் தாயகத்தின் மீதும் மிகுந்த பற்றுக்கொண்ட ஒருவரை நாம் இழந்துவிட்டோம் என்னும் உள்ளத்தை விட்டகலாது இருப்பது அவர்மீது கொண்ட பற்றும் பெருமதிப்புமே காரணமாகும்.

மகன் தந்தைக் காற்றும் நன்றியை யாழ்கோவன் செவ்வனே ஆற்றி நின்றார் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை அடிக்கடி தொடர்பு கொள்ளும் வேளைகளில் அப்பாவோடு அவரின் நலன்பற்றியே கவலை கொள்ளும் அருமை மைந்தன் அவருக்குக் கிடைத்த பொக்கிசமாகவே கருதலாம். மருமகளாக வாய்ந்த சந்திமாவும் போற்றத்தக்க நிலையில் அவர் நலமோம்பியதை மறக்கமுடியாது.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.
வீடு வாங்க & விற்க!

'
சாந்தி சந்திரன்
Shanthi Chandran

HomeLife/GTA Realty Inc.
647-410-1643  / 416-321-6969
5215 FINCH AVE E UNIT 203
TORONTO, Ontario M1S0C2

விளம்பரம் செய்ய

வ.ந.கிரிதரனின் பாடல்கள்
பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க

அ.ந.கந்தசாமியின் நாவல் 'மனக்கண்' மின்னூல்!
வாங்க
வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' மின்னூல்!
பதிவுகளில் வெளியான சிறு நாவலான எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' தற்போது அமேசன் & கிண்டில் மின்னூற் பதிப்பாக, பதிவுகள்.காம் வெளியீடாக வெளியாகியுள்ளது. தமிழ் அகதி இளைஞன் ஒருவனின் முதற்காதல் அனுபவங்களை விபரிக்கும் புனைகதை.  மின்னூலினை வாங்க

                                         

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
 

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். மின்னூலினை வாங்க


எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம்

 


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி. இதனை வாங்க இங்கு அழுத்தவும்.


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி. நூலை வாங்க


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan. To buy


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp. Buy here