- அண்ணாவியார் குமுழமுனை நாகலிங்கம் நெல்லிநாதன்-

பிறந்தகம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள குமுளமுனை என்பது அண்ணாவியார் நாகலிங்கம் நெல்லிநாதன் பிறந்து வளர்ந்து வாழ்ந்துவரும் ஊராகும். இக்கிராமம் வன்னியின் குறுநில மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்ட கிராமமாகும். சோழராட்சிக்காலத்தில் திருகோணமலையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிசெய்த வளந்தொட்டுக் குளம் பெருக்கிய மன்னான குளக்கோட்ட மன்னனின் ஆட்சிக்கும் இக்கிராமம் உட்பட்டிருந்தது. தண்ணிமுறிப்புக் குளம் இவன் காலத்தில் கட்டப்பட்டது என்பது வரலாற்றாய்வாளர்களின் துணிபு. இக்கிராமத்தில் ‘வன்னியன் வளவு’ ‘வன்னியன் கிணறு’ ‘யானை கட்டிய புளி’ என்னபன வன்னியர் இக்கிராமத்தில் குடியேறி வாழ்ந்து வந்துள்ளனர் என்பதற்கான சான்றுகளாகக் காணப்படுகின்றன. பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்துவரும் இக்கிராமத்தவர்கள் தங்கள் ஓய்வு நேரத்தை கோலாட்டம், கும்மி, கூத்துப் போன்ற கலைகளில் செலவு செய்துள்ளனர். வெளியிடங்களிலிருந்து அண்ணாவிமாரை அழைத்துவந்து கூத்துக்களைப் பழகி மேடையேற்றி ஆடி வருவது வழமையாக இருந்துவந்துள்ளது.

குடும்பப் பின்னணி

குமுளமுனை சின்னப்பிள்ளை நாகலிங்கம் மற்றும் ஆறும் இரத்தினம்மா தம்பதியினரின். நான்காவது மகவாகப் பிறந்தவர் நெல்லிநாதன். மூத்த சகோதரர் நடனசபாபதி நீர்பாபசனத் திணைக்களத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இரண்டாவது சகோதரர் ஈஸ்வரபாதம் கூத்துக்கலையில் இவரும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இளமையிலேயே மறைந்தவர். அடுத்ததாகப பிறந்த சகோதரி யோகேஸ்வரி திருமணமாகி வேறு பழம்பாசி என்னும் கிராமத்தில் குடியேறியுள்ளார். அடுத்தவர் குகன் என்னும் இளைய சகோதரர், அடுத்தவர் சந்திரகுமாரி திருமணமாகி ஊரிலேயே வாழ்நதவருகின்றார். லலிதகுமாரி ஆசிரியையாக குமுளமுனை ம.வி.யில் கற்பித்துவருகின்றார். திருமணமாகிப் பிள்ளைகளோடு குமுளமுனையில் வாழ்ந்து வருகினறார். நேசமலர் இளைய சகோதரி முள்ளியவளையில் திருமணம் செய்து அங்கேயே வாழந்து வருகின்றார்.

நெல்லிநாதன் சம்மளங்குளத்தைச் சேர்ந்த செல்வரத்தினம், அன்னலட்சுமி தம்பதியினரின் புதல்வி சூரியபவானியைத் தனது வாழ்க்கைத் துணவியாக்கி இரண்டு பிள்ளைகளுக்குத் தந்தையாகவும் உள்ளார்.

தனது ஆரம்பக் கல்வியை குமுளமுனை மகாவித்தியாலயத்தில் கற்றுவந்துள்ளார். அக்காலத்தில் குமுனமுனை ம.வி.யில் ஆசிரிய தம்பதிகளாக பொலிகண்டியைச் சேர்ந்த திரு, திருமதி பாலசிங்கம் தம்பதியனர் கடமையாற்றி வந்துள்ளனர். வே.பாலசிங்கம் ஆசிரியர் பொலிகண்டியைச் சேர்ந்தவர். துணைவியார் இமயாணன் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர். இருவரும் ஆசிரியர்கள். குமுளமுனையில் பாடசாலையிலேயே கலைத்துவம் மிளிர நாடங்களையும், கூத்துக்களையும் தனது ஓய்வுநேரங்களில் மாணவர்களுக்கு பயிற்றுவித்தும் போதித்தும் வந்தவர். இவரது அயராத பணியினால் குமுளமுனையில் பல இளைஞர்கள் கலைஞர்களாக மிளர ஊக்கமும் ஆக்கமும் தரப்ப்டு வளர்த்தெடுக்கப்பட்ட முத்துக்களில் ஒருவர் தான் நாகலிங்கம் நெல்லிநாதன். அத்தோடு குமுளமுனையில் வழமையாக மழையை வேண்டி ஆடப்பட்டு வரும் கூத்துக்களில் காத்தராயன் முக்கியமானது. குமுளமுளையில் உள்ள பட்டிதொட்டிகளில் காத்தவராயன் கூத்துப்பாடல்கள் ஒலித்துக் கொண்டிருப்பதற்கு அதுவே காரணம். கூத்துக்கலையில் ஈடுபாடு கொண்ட அவர் அடியெடுத்து வைத்த்ம் அந்தக் கூத்துக்கலையின் கவர்ச்சியும் ஒரு காரமாகும்.

கூத்துக்கலையில் நாட்டம்

கூத்துக்கைலைப் பரம்பரையில் வந்தவர் திரு. பாலசிங்கம் அவர்கள். தன்னிடம் கற்ற மாணாக்கருக்கு பண்டைய கூத்தக்கலைகளை கற்பித்ததோடு பயிற்றுவித்தும் வந்துள்ளார். “வள்ளி திருமணம்” “கண்ணன் தூது” “அரிச்சந்திரா மயானகாண்டம்’ ‘பாஞ்சாலி சபதம்” ‘ஏழுபிள்ளை நல்ல தங்காள்’ போன்ற கூத்துக்களையும் நாடகங்களையும் பழக்கி குமுளமுனையில் உள்ள தங்கராசா அவர்களின் மில் வளவு என்னும் காணிக்குள் மேடையமைத்து அரங்கேற்றியுள்ளார். அந்த நாடகங்களில் பல்வேறு வேடங்களை ஏற்று நடத்டித்தவர்கள் அனைவருமே குமுளமுனைக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால் இந்த நாடகங்களைப் பார்ப்ப தண்ணீரூற்று, முள்ளியவளை, முல்லைத்தீவு, வட்டுவாகல், சிலாவத்தை, அளம்பில், செம்மலை, கொக்குத்தொடுவாய், கொக்கிளாய் போன்ற கிராமங்களில் உள்ள மக்கள் வருகை தந்து பார்ப்பது வழக்கமாககும்.

கூத்துக்கலை தவரி வில்லுப்பட்டுக்கலலாயையும் அசிரியர் பாலசிங்கம் அவர்கள் கற்றுத்தந்துள்ளார் என்பதும் நெல்லிநாதன் அதில் பயிற்சியம் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இங்கே தரப்பட்ட வாழ்த்து மடலில் தனது தந்தையின் பெயரை மாற்றி எழுதிவிட்டார்கள் என்றும் ஆதங்கப்பட்டார். கொடுத்ததைத் திருத்திக்கொடுக்க தாமதமாகிவிட்டது. ஆறிய கஞ்சி பழங்கஞ்சிதான் எனச் சலித்துக்கொண்டார். நா. நெல்லிநாதன் என்பதை. நாகலிங்கத்திற்குப் பதிலாக நாகமுத்து என்று எழுதிவிட்டார்கள். என்ன செய்யலாம்.

கூத்துக்கலையில் ஈடுபாடுகொண்டிருந்த இளைஞர்கள் தென்னமரவடியைச் சேர்ந்த பேச்சுமுத்து அண்ணாவியாரை அழைத்துவந்து ‘காத்தவராயன்” அரிச்சந்திரா’, சத்தியவான் சாவித்திரி” போன்ற நாடகங்களை குமுளமுனையில் பழகி பிலாவடி வளவில் கூத்துக் கொட்டகை போட்டு அதில் மேடையேற்றுவது வழமையாக இருந்து வந்துள்ளது எனினும் அக்காணியின் உரிமையாளர்கள் அந்தக் காணியில் வீடு கட்டி வாழத்தொடங்கிவிட்டனர். இதனால் தங்கள் கூத்துக்கான இடத்தை ‘கொட்டுக்கிணற்று ஆலயத்திற்கு’ முன்பாக மேடையேற்றி வந்துள்ளனர்.

1979ல் பேச்சுமுத்து அண்ணாவியாரால் பழக்கப்பட்டு மேடையேற்றப்பட்டள்ளது ‘அரிச்சந்திரா’ அந்தக் கூத்தில் அரிச்சந்திரனாக முக்கிய பாத்திரத்தில் நடித்ததோடு தனது கம்பீரமான குரலில் அரிச்சந்திரனாகத் தோன்றி பாடி நடித்திருக்கின்றார் நெல்லிநாதன். வில்லுப்பாட்டு, கூத்து நாடகம் என்பனவற்றோடு அவர் காத்தவரலாயன் கூத்தில் பல முறை நடித்துள்ளார். காத்தானாக, முத்துமாரியாக, நடித்துள்ளதோடு பின்னர் அதனை தானே தயாரித்து பழக்கியும் வந்துள்ளார். வேளம்படுத்த வீராங்கனை” என்னும் நாடகத்தை எழுதி நடித்தும் பழக்கியும் வந்தவர். அவரின் பரிட்சயம் இவருக்குக் கிடைத்தமைக்கு அவர் தபாற்காரராக பணியாற்றி குமுளமுனையில் உள்ளவர்கள் அனைவரையும் நன்றாகத் தெரிந்தவர்.

1980ல் “சத்தியவான் சாவித்திரி” கூத்தைப் பழகி அதில் சத்தியவானாக நடித்து பலபேரது பாராட்டுக்களைத் தனதாக்கிக்கொண்டவர். பேச்சுமுத்து அண்ணாவியாரின் வழிகாட்டலும், ஆற்றலும் இவரை ஆண்கொண்டது போலவே முள்ளியவளையைச் சேர்ந்து புலவரும் அண்ணாவியாருமான அரியான் பொய்கை செல்லத்துரை அவர்களின் ஆளுமையும் இவரைப் பின்பற்ற வைத்தன. முல்லைமோடியில் அமைந்த “கோவலன் கூத்தைப் பழகி” ஆண்டாண்டாய் வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தில் வட்டக்களறி அமைத்து ஆடிவந்தவர்.

நடித்த கூத்துகளும் நாடகங்களும்

குமுளமுனையின் பிரபலமான “அரியாத்தை’ என்னும் நாடகம் பலமுறை பல கிராமங்களில் மேடையேற்றியுள்ளார்கள். இவற்றைவிட முல்லைமணி வே. சுப்பிரமணியம் அவர்களால் எழுதப்பட்ட “பண்டார வன்னியன்’ நாடகத்தையும் பல தடவைகள் மேடையேற்றிய போது அவற்றில் நடித்துத்தனது நடிப்பாற்றலை வெளிக்காட்டியிருக்கின்றார். நெல்லிநாதன் அண்ணாவியார்.

கொட்டுக்கிணற்றுப் பிள்ளையாரின் கழுத்துவெட்டிய வரலாறு மற்றும் ‘பிரகலாதன்’ வில்லுப்பாட்டாக வெளிவருவதற்கு முக்கியமானவராக செயற்பட்டவர் நெல்லிநாதன்., கோலாட்டமாகவும் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன. வேலப்பணிக்கன் ஒப்பாரி, வேளம்படுத்த வீராங்கனை என்ற பெயர்களிலும் அரியாத்தை என்னும் யானையை அடக்கிக்கட்டிய வீராங்கனையின் கதையை வில்லுப்பாட்டிலும், நாடகத்திலும், கூத்திலும் மக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இவற்றில் பலவற்றில் அவரது ஆளுமைமிக்க நடிப்பாற்றலும் நெறியாளுகையும் வௌிக்கொண்டு வரப்பட்டுள்ளது.

நெல்லிநாதனின் சித்தப்பா சின்னப்பிள்ளை சிதம்பரப்பிள்ளை அவரின் இரண்டாவது புதல்வர் தெய்வேந்திரம்பிள்ளை அவர்கள் நாடகத்தில் மிகவும் ஈடுபாடுகொண்டவர். அரியாத்தையின் வரலாற்றை நாடக வடிவில் எழுதிப் பழக்கி பல ஊர் அரங்குகளில் மேடையேற்றியவர். இந்த நாடகங்களில் நெல்லிநாதனின் கலைவண்ணம் மிளர்ந்துள்ளது. இவர்களது குடும்ப்பின்னணி மிகவும் பழமையான மரபுவழியான குடும்பத்தைச் சார்ந்தவர்கள். குடும்பங்களுக்கிடையே மிக இறுக்கமான பிணைப்பைக் கட்டி வளர்த்தவர்கள். ஆண்டான் குளம் ஐயன் கோவில் பூசாரியாக இருந்தவர் அண்ணாவியார் நெல்லிநாதனால் சின்னண்ணன் என்று அழைக்கப்பட்ட ஒன்றவிட்ட சகோதரர் சிதம்பரப்பிள்ளை தெய்வேந்திரம்பிள்ளை. நெல்லிநாதனின் மூத்த சகோதரன் நடனசபாபதி தண்ணீரூற்றில் திருமணம் செய்து அங்கேயே வாழ்ந்துவருகின்றார்.

இவர்களின் பெற்றோர் பாரம்பரியமான குடும்பப் பின்னணியைக் கொண்டவர்கள். கட்டாடி உடையார் பரம்பரையில் வந்தவர்கள். அதனால் அப்பிரதேசத்தில் நன்செய், புன்செய் நிலத்திற்கு உரிமையாளர்கள். அதனால் நீண்டகாலமாகப் பயிரடப்பட்ட வளமிழந்த எல்லைநிலமாக இருந்த போதிலும் புதிதாக அமைக்கப்பட்ட நீர்ப்பாசனத் திட்டத்திற்கு கீழ் ஊரவர்களுக்குக் கிடைத்த காணிகள் இவர்களுக்குக் கிடைக்காதமை அவர்கள் நீர்ப்பாசனமற்ற விவசாயத்தோடு வாழவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளவர்களில் அண்ணாவியார் நல்லைநாதனும் ஒருவர். அத்தோடு கூத்துக்கலையில் ஈடுபடுவதனால் அவரது குடும்பமும் பொருளாதாரத்தில் முன்னேற்றமடையவில்லை என்றாலும் கூத்தக்கலையில் அப்பிரதேசத்தில் மிகப் பிரபலமான ஒரு நாட்டுக்கூத்துக் கலைஞர் என்பது அவர் பெற்றுக்கொண்ட மதிப்பளிப்புக்கள், விருதுகள் என்பன சாட்சியம் பகர்கின்றன. முழுநேர விவசாயியான இவரால் முழுமையாக விவசாயத்தில் ஈடுபடமுடியாத நிலையும் முழுமையாக கூத்துக்கலையில் ஈடுபடமுடியாத நிலையும் உண்டு.

விவசாயம்தான் குடும்பத்தை வழிநடத்தும் வருமான மூலமாக உள்ளது. நெற்பயிற்செய்கையோடு நிலக்கடலை, உழுந்து மிளகாய்ப் பயிர்களையும்சிறுதானியப்பயிர்களாகப பயிரிட்டு வாழ்க்கையை ஓட்டும் நெல்லிநாதனின் குடும்பம் வருமானம்குறைந்த சாதரண நிலையிலும் தனதுமகனை பொறியில் படிக்கவைத்து வேலைக்காக காத்திருப்பதிலும் பார்க்க வெளிநாடு செல்லவேண்டும் என்னும் கனவோடு வாழ்ந்து வருகின்றார்கள் என்பதை நான் 2022ல் அவரது வீட்டிற்கு நேரடியாகச் சென்று பார்வையிட்டேன். வாழ்க்கை மிகவும் கடினமானது என்பதை உணர முடிந்ததது. கலைஞர்களின் வாழ்வு கடினமானதான அமைவதற்கு தங்கள் உழைப்பை ஊதியமின்றி செய்வதே என்பது வெளிப்படை. அதற்கு அண்ணாவியார் நெல்லிநாதனும் விதிவிலக்கல்ல என்பதை உணரமுடிந்தது. அண்ணாவியாரின் கலைத்துவம் தொடரவும் மிளிரவும் யாராவது உதவ முன்வரவேண்டும் என்பது எனது ஆதங்கம்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.
வீடு வாங்க & விற்க!

'
சாந்தி சந்திரன்
Shanthi Chandran

HomeLife/GTA Realty Inc.
647-410-1643  / 416-321-6969
5215 FINCH AVE E UNIT 203
TORONTO, Ontario M1S0C2

விளம்பரம் செய்ய

வ.ந.கிரிதரனின் பாடல்கள்
பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க

அ.ந.கந்தசாமியின் நாவல் 'மனக்கண்' மின்னூல்!
வாங்க
வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' மின்னூல்!
பதிவுகளில் வெளியான சிறு நாவலான எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' தற்போது அமேசன் & கிண்டில் மின்னூற் பதிப்பாக, பதிவுகள்.காம் வெளியீடாக வெளியாகியுள்ளது. தமிழ் அகதி இளைஞன் ஒருவனின் முதற்காதல் அனுபவங்களை விபரிக்கும் புனைகதை.  மின்னூலினை வாங்க

                                         

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
 

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். மின்னூலினை வாங்க


எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம்

 


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி. இதனை வாங்க இங்கு அழுத்தவும்.


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி. நூலை வாங்க


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan. To buy


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp. Buy here