Sidebar

பதிவுகளில் தேடுக!

பதிவுகள் -Off Canavas

   

இலண்டனின் இலக்கிய மேடைகளில் ஆழ்ந்த தமிழ்ப் புலமையோடும் ஆற்றொழுக்கான நடையோடும் பேசவல்லவராக வழக்கறிஞர் செல்லத்தம்பி சிறீக்கந்தராசா அவர்களை நான் பார்த்திருக்கிறேன். ‘ஆங்கிலம் பிறந்த கதையும் வளர்ந்த கதையும்’ என்ற நூல் அவரது ஆழ்ந்த வாசிப்பையும் பரந்த தேடலையும் கொண்ட நூலாகும். ‘ஆற்றல் மிகுந்த மூளையின் தூண்டுதலாலும் வேகமான வாசிப்பாலும்தான் இவரது பேச்சுகள் இத்துணை நுட்பமாக அமைகின்றனவோ?‘ என்று எனக்கு வியப்புண்டு.

      ஆனால் அண்மையில் அவரது 85ஆவது பிறந்தநாள் ஆவணத் தொகுப்பை பார்வையிட்டபோது நான் அசந்துதான் போனேன். நம் தமிழர் மத்தியில் வரலாற்று ஆவணமாக்கப்பட வேண்டியவர்களில் சிறீகந்தராசா மிக முக்கியமானவர் என்பதனை இதனைப் பார்வையிடும் போது என்னால் உணர முடிந்தது. இவ்வேளை எனது தந்தை அகஸ்தியர் பாரீசில் வாழ்ந்தவேளை இற்றைக்கு இருபத்தியொன்பது வருடங்களுக்கு முன்னர் அவர் குறித்த ஆவணப் பதிவொன்றை விமர்சகர் மு.நித்தியானந்தன் அவர்கள் கலைச்செல்வனுடன் இணைந்து ஆவணப்படுத்தியமையும் என்னுள்; வருவதைத் தவிர்க்க முடியவில்லை. ஏனோ அவை சாத்தியப்படுவது சிரமமாகக் காணப்பபட்டது. ஆனால் தொழில்நுட்ப வசதிகள் கோலோச்சி நிற்கும் இன்றைய காலகட்டத்தில் இத்தகைய வரலாற்று ஆவணங்கள் தமிழர்களிடையே பதியப்படுவது முக்கியமானதென்பதை வலியுறுத்த விரும்புகிறேன்.  

      அவரின் அன்புத்துணைவி மாதினியின் இனிமையான குரலின் இன்னிசையோடு;ம், விமர்சகர் மு.நித்தியானந்தன் அவர்கள் தான் அறிந்த அதாவது இவருக்கு இருந்த கோவலனாரின் ஓலைச்சுவட்டின் அனுபவத்தைக் கேட்கும் கேள்வியோடும் ஆரம்பித்தபோது என்னை விழிப்படையச்செய்து அப்பதிவை உடன் பார்க்கவேண்டும் என அதில் கட்டிப்போட்டது.

    மிகவும் நலிந்த நிலையில் காணப்பட்ட அந்த ஓலைச்சுவட்டை எடுத்து வந்த மதிப்பிற்குரிய சிறிகந்தராசா அவர்கள் அதனைக் காண்பித்து தனக்குப் பதினைந்து வயதாக இருக்கும்போது அதiனை வாசித்துப் புரிந்தமையையும் அதாவது 1955 ஆம் ஆண்டு முதல் அதனைப் படித்ததாகவும, தற்போது அதனைத் தனது கைப்பிரதியில் எழுதி விரைவில் நூலாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவித்தார். நூலகங்களில் பார்த்த இத்தகைய ஓலைச்சுவட்டை எப்படி இந்தப் பெரியவர் வீட்டில் பாதுகாத்து வைத்திருக்கிறார் என்று என்னுள் ஓடிய சிந்தனைக்கு அவர் கூறிய விளக்கங்களையும், அவரின் குடும்பப் பின்னணியையும் அவர் வழியாகப்  புரிந்து கொண்டேன். 250 வருடங்களுக்கு முன்னரான இத்தகைய ஏட்டோலையைத் அவரது ஒன்பது வயதிலேயே அத்தகைய ஏட்டை வாசிப்பதில் திறமை கொண்டிருந்ததாகவும் அறிய முடிந்தது.

     இலங்கையின் வடபுலமான பருத்தித்துறை புலோலிக் கிழக்கில் வழக்கறிஞர் மாணிக்கம் செல்லத்தம்பிக்கும் காந்திமதி செல்லத்தம்பிக்கும் மகனாகப் பிறந்தவர் வழக்கறிஞர் செல்லத்தம்பி சிறீகந்தராசா அவர்கள். ஆரம்பத்தில் புலோலி தெற்கிலுள்ள வேலாயுதம் பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியை மேற்கொண்டிருந்தார். அப்பள்ளியில் இவர் காத்திகேசு வாத்தியார், முத்துக்குமார் வாத்தியார், வைரமுத்து வாத்தியார் போன்ற தலைசிறந்த தமிழ் ஆசிரியர்களிடம் பயின்று மிகச்சி;றந்த  மாணவனாகத் திகழ்ந்திருக்கிறார்.
    பின்னர் இந்தியாவில் சென். ஜோசஃப் கல்லூரியில் கல்வியை மேற்கொண்டபோது அருட்திரு. சிக்குவாரா என்ற  மிகச் சிறந்த ஆங்கில விரிவுரையாளரின் கீழ் தனது ஆங்கிலத்தை மேன்மைப்படுத்தியதாகக் கூறுகின்றார் வழக்கறிஞர் சிறிஸ்கந்தராசா. பின்னர் ஒரு விஞ்ஞானப் பட்டதாரியாகப் பட்டம் பெற்று இலங்கைக்குத் திரும்பினார்;.

     லண்டனிலே சட்டத்துறையில் பட்டம் பெற்று சட்டத்தரணியாகப் பணிபுரிந்தார். சட்டத்தரணியாக மட்டுமன்றி சிறந்ததொரு பேச்சாளர், சிறந்ததொரு எழுத்தாளர், சிறந்ததொரு மொழிபெயர்ப்பாளர். இத்தகைய பெரும் அறிஞரின் ஆவணப்படத்தை அவருடன் நெருக்கமான இலக்கிய உறவைக் பேணிவரும் மு.நித்தியானந்தன் அவர்கள் மிக முக்கியமான தகவல்களோடு அதனை  மிக அற்புதமாக நெறிப்படுத்தியிருப்பது தமிழ் மக்கள் அனைவராலும் பாராட்டப்பட வேண்டியதொன்றாகும்.

     இலங்கை அரசியல் யாப்பை, இலங்கைக் குடியரசின் சட்ட அமைப்பை, ஜே.ஆர். ஜெயவர்த்தனாவின்  புதிய அரசியல் அமைப்பை மொழிபெயர்த்துத் தந்துள்ளார். சட்டம் மாத்திரமன்றி  தமிழ் இலக்கியம், அறிவியல், ஆங்கில மொழிபெயயர்ப்பு என்று இருபதிற்கும் மேற்பட்ட நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ள பெரிய அறிஞர் அவர். தமிழ் மக்களாகிய நாம் எல்லோரும் பெருமைப்பட வேண்டிய விடயமாகும். அவர் போன்ற அறிஞர்களைச் சந்திப்பதையும,; அவரின் அறிவு சார்ந்த உரைகளைக் கேட்பதையும் பெரும் பாக்கியமாகக் கருதுகின்றேன். அவரின் ஆளுமை நிறைந்த தோற்றம் நெருங்குவதற்குச் சற்று அறிவுப்பயத்தை ஏற்படுத்தினாலும் பழகுவதற்கு மிக எளிமையானவர் என அறியமுடிந்தது. இத்தகைய ஆளுமைமிக்க அறிஞரை தமிழ் மக்கள் அனைவர் சார்பிலும் பாராட்டிப் பெருமை கொள்கின்றேன். இன்னும் பல்லாண்டு நிறைந்த சுகத்தோடு அவர் சேவை விசாலிக்க வேண்டி இதயம் வாழ்த்துகிறது!

      இந்த ஆவணப்படத்தைத் தயாரித்த சிறீதரன் அவர்கள் தேர்ந்த ஒளிபரப்பாளராகத் தீபம் தொலைக்காட்சியில் திகழ்ந்தவர். ‘நித்தி என்ற பேராசான்’ என்ற ஆவணப்படத்தைத் விமர்சகர் மு. நித்தியானந்தனின் பவள விழாவின்Nது தயாரித்து பாராட்டுப்பெற்றவர். அதே சிறீதரன் வழக்கறிஞர் - தமிழறிஞர் சிறீஸ்கந்தராசாவின் இந்த ஆவணப்படத்தையும் அற்புதமாக அலுப்புத்தட்டாது உற்சாகத்தோடு தனது கைவண்ணத்தால் பார்வையாளனுக்கு அமைத்துத் தந்தமைக்கு தமிழ் உலகம் அனைவருமே இவரைப்பராட்டவேண்டும். இவரின் இத்தகைய கலைப்பணி தொடர வாழ்த்தி நிற்கின்றேன்.

navajothybaylon@hotmail.co.uk


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க
                                        

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com