நான் நினைவில் வைத்துக்கொள்கிறேன் கோமகன்! - நெற்கொழுதாசன் -

- எழுத்தாளரும் , 'நடு' இணைய இதழ் ஆசிரியருமான கோமகன் (தியாகராஜா ராஜராஜன்) மறைந்து ஒரு வருடமாகின்றது. அவரது நினைவாக எழுத்தாளர் நெற்கொழுதாசன் எழுதிய அஞ்சலிக் குறிப்பிது. கோமகனின் சகோதரரான எழுத்தாளர் வடகோவை வரதராஜன் தன் முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதனைக் கோமகனின் நினைவாக பதிவுகள் இணைய இதழும் இங்கு பகிர்ந்துகொள்கின்றது. மின்னலைப் போல் ஒளி வீசி மறைந்த கோமகனை வரலாறு அவரது இலக்கியப் பங்களிப்புகளூடு நினைவில் வைத்திருக்கும். - பதிவுகள்.காம் -
கோமகன் மறைந்து ஆண்டு ஒன்றாயிற்று. பாரிஸின் ஆரம்பகாலங்களிலேயே உருவாகிய உறவு அவரது. எப்போது கோமகனை சந்தித்தாலும் ஒருவகையறியாத மகிழ்வு உண்டாகும். அவரது குரலில் இழையும் சொற்கள் மிதப்பான வெள்ளந்தித்தனத்தை உருவாக்கும். அது அவரது உரையாடல் பாணி. அல்லது தனிக்கதை. ஓராண்டாக ஒலிக்காத, பிசுறு தட்டாத அவரது குரலைக் கொண்டுவந்து மனத்தில் நிகழ்த்திப் பார்க்கிறேன். வெறுமை. அந்த இடம் கோமகனுக்கானது. யாராலும் நிரப்ப முடியாதது.
யாழ் இணையத்தில் நானும் எழுத்தாளன்தான் என்ற கோதாவில் எழுதிக்கொண்டிருந்த நாள்களில், பாராட்டும் சின்ன சின்ன சீண்டல்களுமென கருத்துக்களை எழுதுவார். ஒருநாள் உங்களோடு கதைக்கவேண்டும் என்று தொலைபேசி இலக்கத்தை அனுப்பியிருந்தார். அழைத்தேன். பேசினோம். சந்தித்தோம். பாரிஸில் நான் அமைத்து வைத்திருந்த நட்பு, உறவு வட்டத்திற்கு வெளியேயான இன்னொரு தளத்தில் உருவாகிய நெருக்கம் அது. இறுதிவரை விலக்கமும் நெருக்கமுமாக தொடர்ந்துகொண்டு தானிருந்தது.


சார்லிக்கு இன்று என் மீது கோபம். அவன் தட்டில் வைத்த எதையும் இன்று சாப்பிடவில்லை. தினமும் நான் கொடுக்கும் அந்த உலர்ந்த கொடிமுந்திரியைக்கூட தொடவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். அதுதான் அவன் 'பேஃவரிட்'.....அதைக்கூட..... காலையில் இருந்து "உர்ர்ர்.....உர்ர்ர்" என்று ஏதோ விசித்திர சத்தம் வேறு எழுப்பிக்கொண்டேயிருந்தான். 





ஒருமுறை நாரதர், 'கடவுள்' கிருஷ்ணரைப் பார்த்து, "நீங்கள் அறுபதினாயிரம் கோபிகைகளுடன் கூடி இருக்கின்றீரே, எனக்கு ஒரு பெண்ணையாவது தரக்கூடாதா?" என்று கேட்டாராம். அதற்குக் கிருஷ்ணர், "நான் உடன் இல்லாமல், வீட்டில் தனியாய் இருக்கும் பெண்ணை நீ எடுத்துக்கொள் என்றாராம். இதற்கு நாரதர் உடன்பட்டு அறுபதாயிரம் வீடுகளிலும் சென்று பார்த்தாராம். ஆனால் எங்கும் கிருஷ்ணன் இல்லாத பெண்களைக் காண முடியாததால், நாரதர் மீண்டும் கிருஷ்ணனிடமே வந்து அவர் திருமேனியில் மோகம் கொண்டு அவரை நோக்கி "நான் உங்களிடமே பெண்ணாக இருந்து உடலுறவு கொள்ள விரும்புகிறேன்" என்றாராம்.


முன்பனி பின்பனி மாறிய பின்னே



நீங்கள் அதிசயமானவர்கள்

இன்று ( 12 ஆம் திகதி ) முற்பகல் நடைப்பயிற்சிக்கு சென்றுகொண்டிருந்தபோது, கனடாவில் வதியும் எழுத்தாளர், இலக்கிய நண்பர் ஜெகதீசனிடமிருந்து, எமது மூத்த ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகம் நேற்று நள்ளிரவு வவுனியாவில் மறைந்து விட்டார் என்ற துயரமான செய்தி எனது மின்னஞ்சலுக்கு வந்தது. அதனைப்படித்ததும் அதிர்ச்சியில் மனம் நிலைகுத்தியது. தாமதிக்காமல் “ என்ன நடந்தது..? “ எனக்கேட்டு எழுதினேன். சில நிமிடங்களில் பின்வரும் குறிப்பு வந்தது: 
இன்று, ஏப்ரில் 10, சர்வதேச சகோதரர் நாள் ஆகும். எங்களுடைய வாழ்க்கையின் பெரும்பகுதியைச் சகோதரர்கள்தான் பங்கிட்டுக் கொள்கிறார்கள். நண்பர்களையோ, வேறெந்த உறவுகளையோ அறிவதற்கு முன் பெற்றோருக்கு அடுத்ததாக நாங்கள் பழகும் உறவும் அதுதான். எங்களின் ஆரம்பகால வருடங்களின் பெரும்நேரத்தைக் குடும்பமாக அவர்களுடன்தான் செலவிடுகிறோம். அவர்களுடன் சேர்ந்து நாங்களும் வளர்கிறோம். அந்தவகையில் சகோதரங்களுடான உறவு ஆரோக்கியமானதாக அமையவேண்டியது அத்தியாவசியமான தேவைகளில் ஒன்றெனலாம்.



இதுவே, இக்கட்டுரை தொடரில், சென்ற இருமுறையும் வாதிக்கப்பட்ட விடயங்களின் சாரமாகும். அதாவது, ஒருபுறம் மத்திய கிழக்கின் சவுதி முதல் சிரியா வரையிலான நாடுகள். மறுபுறம் ஆசியாவின் சீனா முதல் இந்தியா வரையிலான நாடுகள், மேலும் ஆப்ரிக்கா கண்டத்தின் அனேக நாடுகள், பின் பிறேசில் முதல் இந்தோனேசியா வரையிலான நாடுகள் - இவை அனைத்தினது முகங்களும் தீவிர மாறுகைக்கு உட்படும் போது, G-7 ன்ற அமைப்புக்கு நேரெதிராக, G-20 அல்லது ஒரு BRICS அல்லது SCO போன்ற அமைப்புக்கள் திரள்வதும், அவை ஓர் சவால் நிலையை கட்டவிழ்க்க நேர்வதும், தவிர்க்கமுடியாததாகின்றது. அதாவது G-7 என்ற நாடுகள்-உலகை வழி நடாத்திய காலம் முடிந்து, அது ஒரு கடந்த காலமாகி, அதற்குப் பதிலாக புதியதோர் ஒழுங்குமுறை கட்டவிழப் பார்க்கிறது.


பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









