குறு நாவல் : கிராம விஜயம் - கடல்புத்திரன் -
அத்தியாயம் இரண்டு: அன்னரின் தீர்மானம்!
"பொதுவாக மாலைநேரம் ஜாரி பிரித்து கால்பந்து விளையாடுகிறோம்" என்று சுந்தரம் கூறியதை சங்கர் சேர் சொல்லவும் அவர் கேட்டிருந்தார். சங்கர் "இப்ப , இந்த உடம்பை தூக்கிக் கொண்டு விளையாட முடியிறதில்லை . இருந்தாலும் சில நேரம் விளையாடுகிறேனஂ" எனஂறிருக்கிறார் . தற்போது அவர் இவர்கள் கூறுகிற ' வெள்ளி ' விளையாட்டுக் கழகத்தினஂ தலைவராக இருக்கிறார் ." ஒருநாள் கடலுக்கும் போவோம்... " என்று கருணா கூற அவருக்கு விளங்கத் தானஂ இல்லை . ஆனால் , சங்க காலத்தில் காட்டுக்கு போவது போல இதுவும் ஒன்றாக இருக்கலாம் எனத் தோன்றியது. வவுனியாவில் நாய்களை பழக்கிக் கொண்டு வேட்டைக்குப் போகிறார்கள் . தமிழர் மத்தியில் நிலவி இருக்கிற அவ்வித பழக்க வழக்கங்கள் கிராமங்களில் தொடர்கின்றன .
கருணாவிடம் "டேய் ,நான் தான் உங்களைக் குழப்புறவன் . நீ என்னைக் குழப்பித் தள்ளுறாயே , பெளர்ணமியிலே கடல் பொங்கிறது . தொழில் செய்ய போறதில்லையே நீ எப்படி ?" என புரியாமல் கேட்கிறார் .
"அப்படி....போகாதபடியால் தான் வள்ளங்கள் கரையிலே இருக்கின்றன சேர் . அவிழ்த்தால் , வள்ளம் கவனம் என்று மட்டும் சொல்வார்கள்"
அப்பாவியாக "கரையிலே இருந்து நூறு மீற்றர் தூரத்திற்குள்ளே தானே போகிறோம் . எங்களை கடல் ஒன்றும் செய்யாது" என்கிறான் .
இளங்கன்று பயம் அறியவில்லை . விஞ்ஞானமும் அறியாது . ஜனநாயகத்தைத் தெரிந்து கொண்ட அரசாங்கங்கள் என்ன ? , புத்திசாலிகளாகவா இருக்கினஂறன. மக்களுக்கு கைவிலங்கைப் போட்டு வருத்திக் கொண்டு தானே இருக்கின்றன ? . அமெரிக்கா இந்திய புராணக் கதைகளைக் கொப்பி அடிதஂது 'சுப்பர்மனிதர் , அந்த மனிதர் இந்த மனிதர்..என விஞஂஞான திரைப்படங்கள் என ரீல் விட்டு எடுத்து பணத்தைக் குவித்துக் கொண்டு இருக்கிறது.