வெற்றிச் சிகரத்தை நோக்கி: ஆளுமை ஆற்றலில் மனோபாவத்தின் பங்கு! (2) - கி. ஷங்கர் (பெங்களூர்) , Chartered Mechanical Engineer, MBA(Marketing) -
- பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். - ஆசிரியர்
செப்டம்பர் 2003 இதழ் 45
[ இந்தியாவில் தற்போது வசித்து வரும் திரு .கே.சங்கர் ஒரு இயந்திரவியற் பொறியியலாளர். சந்தைப் படுத்தலில் MBA பட்டம் பெற்றவர். இருபத்து மூன்று வருடங்களுக்கும் அதிகமான கூட்டுஸ்தாபன அனுபவம் பெற்றவர். தற்போது தொழில்நுட்பம், நிர்வாகம், மனித வள அபிவிருத்தி ஆகியவற்ற்¢ல் நிபுணராகப் பணியாற்றி வருபவர். அத்துடன் ஊடக எழுத்தாளராகவும் , பேச்சாளராகவும் வானொலி மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களில் பணியாற்றுபவர். அவர் வாழ்வின் வெற்றிக்கு அவசியமான ஆளுமை அபிவிருத்தி பற்றிய ஆக்கங்களைப் பதிவுகளில் தொடர்ந்து எழுதவிருக்கின்றார். - பதிவுகள் - ]
கல்வியில், வேலையில், வாழ்க்கையில் வெற்றி பெற ஒவ்வொரு மனிதனும் ஆளுமை பெற வேண்டும். ஆளுமை பெற வேண்டுமென்றால் பல ஆற்றல்களை வளர்த்துக் கொள்ள வேண்டுமென்று எனது துவக்க படைப்பில் கூறியிருந்தேன். அதன் தொடர்ச்சியாக இந்த இதழில் மனோபாவம் பற்றியும், சரியான மனோபாவத்தை வளர்த்துக் கொள்வதன் அவசியம் பற்றியும் கூறுகிறேன். சரியான மனோபாவம் (attitude) ஒருவருக்கு எவ்வளவு அவசியம் என்பதை பற்றி விளக்க அமெரிக்காவிலுள்ள புகழ் பெற்ற ஹார்வேர்ட்(Harvard) பல்கலைகழகம் நடத்திய ஒரு ஆராய்ச்சி பற்றி இந்த சந்தர்ப்பத்தில் நிச்சயமாக குறிப்பிட வேண்டும். ஒரு மனிதன் தன் கல்வியில், வேலையில், வாழ்க்கையில் வெற்றி பெற மிகவும் முக்கியமானது எது என்பதை பற்றி ஒரு ஆராய்ச்சியை மேற்கொண்ட ஹார்வேர்ட் பல்கலைகழகம், முடிவில் சரியான மனோபாவம்( Right Attitude) 85% பங்கு வகிக்கிறது என்றும், புத்திசாலித்தனம் மற்றும் இதர விஷயங்கள் வெறும் 15% தான் என்றும் எடுத்துரைத்தது.