ஒலியும் மொழியும் குழந்தைகள் இசையும்..! - பத்மா இளங்கோவன் (பத்மபாரதி – பிரான்ஸ்) -
ஒலி எந்த உயிரினத்தையும் ஒரு கணம் திசைதிரும்ப வைக்கும். தொட்டிலில் அழும் குழந்தை, திடீரென ஒரு வேற்று ஒலியைக் கேட்டதும், தன் அழுகையைச் சட்டென நிறுத்திவிடுகிறது. எங்கோ ஒரு மூலையில் தானியங்களைக் கொறித்துக்கொண்டிருக்கும் ஒரு முயல்க்குட்டி சற்றே தொலைவில் ஏதோ ஒரு சத்தம் கேட்டதும் அது கொறிப்பதை நிறுத்தித் தன் காதுகளை மேலே உயர்த்திச் சு10ழ்நிலையை அவதானிக்கிறது. உலகிலுள்ள உயிர் வர்க்கங்கள் யாவுமே ஒலி அலைகளையும் ஒலிக் குறிப்புகளையும் வைத்தே தம்மையும் தம் இனத்தையும் எதிரிகளிடம் இருந்து பாதுகாத்துக் கொள்கின்றன.
மனிதன் தன் நாவினால் எழுப்பும் ஒலியின் சிறு சிறு அசைவுகளே வெவ்வேறு வடிவெடுப்பதைக் காண்கிறோம். இந்த ஒலி அசைவுகளே நாளடைவில் ஒலிக்குறிப்புகளாக மாறி மொழிகளாக உருவெடுத்திருக்கலாம். உதாரணமாக - அ.. ஆ.., உ.. ஊ.., ஒ.. ஓ.., தா.. தீ.., போ.. வா.., சி.. சு10.., அம்.. ஆம்.., ஓடு.., பாடு... என ஓர் எழுத்து ஈரெழுத்துச் சொற்களாக மொழி மெல்ல மெல்லப் பரிணமித்திருக்கலாம்.
இவ்வாறு மொழி தோன்றி வளரும்போது மனிதன் தன் உணர்வுப் பரிமாற்றங்களை உள்ளக்கிடக்கைகளை வெளிப்படுத்தி தனதுதேவைகளைப் பூர்த்திசெய்யக் கற்றுக்கொண்டான். காலப்போக்கில் தன் உணர்வுகளை இசையாகப் பாடியும் ஆடியும் மகிழ்ந்தான். சரி கம பத நி என்னும் ஏழு சுரங்களுக்குள் எத்தனை இராகம் என்பதுபோல எழுத்துக்களின் ஒலியளவு கூடிக் குறையும்போது வௌ;வேறு இசை வடிவங்கள் அழகிய இராகங்கள் பிறக்கின்றன என்பது பேரதிசயமே.