(பதிவுகளில் அன்று) மன அழுத்த மேலாண்மை – 1 - டாக்டர். B. செல்வராஜ் Ph.D. (முதுநிலை உளவியல் விரிவுரையாளர், அரசு கலைக்கல்லூரி,கோவை) -
- பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். - ஆசிரியர் -
பிரச்சினையை எதிர் கொண்டு அதை உண்டு இல்லை என்றாக்கி விடுவோம். கோடி கோடியார் பணத்தைக் கொட்டி வியாபாரம் செய்யும் பெரும் வியாபாரியோ, அல்லது மரம் ஏறிப் பிழைக்கும் மிகச் சாதாரண தொழிலாளியோ அல்லது இவ்விருவருக்கும் இடைப்பட்ட நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த ஒருவரோ, யாராக இருந்தாலும் செல்போன் இல்லாமல் இனி அன்றாட வாழ்க்கையை வாழ முடியுமா? கிரைண்டர், மிக்ஸி, வாஷிங்மெசின் போன்ற வீட்டு உபகரணங்கள் இல்லாமல் ஓர் குடும்பத்தலைவியால் இனி குடித்தனம் நடத்த முடியுமா? கவலைகள் இல்லாமல் இக்காலத்தில் குடும்பத்தலைவர் ஒருவரால் காலந்தள்ள முடியுமா? இவையாவும் இனி முடியாது. அப்படியே முடிந்தாலும் அடுத்தவர் உங்களை விடமாட்டார். இவைகளைப் போல, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியும் தகவல் தொடர்பு வளர்ச்சியும், மக்களிடம் பரஸ்பர உறவை பராமரிக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ள இக்காலத்தில் மன அழுத்தம் இல்லாமல் மனிதர்களால் இனி வாழ முடியாது. மனிதர்கள் ஒவ்வொரு நிமிடமும் மன அழுத்தம் ஏற்படுத்தும் விஷயங்களைத் தேடிப் போய் கொண்டு இருக்கிறார்கள். இல்லையேல் உங்களுக்கு மன அழுத்தம் தரும் ஏராளமான விஷயங்களோடு உங்கள் உறவினர்களும் நண்பர்களும் உங்களை தேடி வந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த உலகத்தில் உற்றார், உறவினர் மற்றும் நண்பர்களோடு நீங்கள் வாழ வேண்டும் என்றால், அறிவியல் வளர்ச்சியினாலும் தொழில் நுட்ப வளர்ச்சியினாலும் ஏற்பட்டுள்ள வாழ்க்கை வசதிகளை நீங்கள் அனுபவிக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரு விலை கொடுத்தே ஆக வேண்டும். அந்த விலையே மன அழுத்தம்.
பிரச்சனையை எதிர் கொண்டு அதை உண்டு இல்லை என்றாக்கி விடுவோம்.கவலைகள் இல்லாமல் வாழ்வதெப்படி என்ற தலைப்பில் ஒரு பயிற்சி நடத்தப்பட்டது. நிறைய பேர் அதில் கலந்து கொண்டார்கள். அப்பயிற்சியை நடத்திய உளவியல் அறிஞர் “கவலை இல்லாமல் வாழ்வதெப்படி என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தோடு நிறையப் பேர் இங்கே கூடியிருக்கிறீர்கள். உண்மையில் கவலை இல்லாமல் வாழ்வது சாத்தியமில்லாதது. எனவே கவலையோடு சந்தோஷமாக வாழ்வதெப்படி என்றே நான் கற்றுக் கொடுக்கப் போகிறேன்” என்று கூறி பயிற்சியை நடத்தினார். அதுபோல மன அழுத்தம் இல்லாமல் வாழ முயற்சி செய்வதை விட, மன அழுத்தத்துடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி என்று கற்றுக்கொள்வதே புத்திசாலித்தனம் ஆகும்.





(நிசான் கார் தொழிற்சாலையில் (Renault nissan automotive india Pvt ltd) பணிபுரியும் தோழர்கள் மத்தியில்“சூம்” (zoom) இணைய வழியில் வகுப்பெடுத்தேன், கலந்துரையாடினேன். அதன் எழுத்து வடிவத்தை இங்கே காணலாம். அந்த காணொளியைக் கீழே காணலாம்.)
அவள் ஒன்றும் அழகில்லை. ஆனால் அறிவானவள், தன் அறிவைப் பயன்படுத்தி ஒரு குடும்பம் என்கின்ற அழகான கூட்டினை உருவாக்கினாள். நாளெல்லாம் உழைப்பை மட்டுமே நம்பி வாழ்க்கை ஓடத்தில் பயணித்துக் கொண்டிருந்தாள். தனக்கென வாழாமல் தன் குடும்பதிற்காகவும், தன் பிள்ளைகளே வாழ்க்கை என்ற முனைப்பில் இரவும் பகலும் அவா்களின் நினைப்பில் வாழ்ந்துகொண்டிருந்தாள். அவளின் அறிவையும் ஆளுமையும் கண்ட அவ்வூா் மக்களுக்கு சிறந்த முன் மாதிரி பெண்ணாகவும் விளங்கினாள். இதனைக் கண்டு அவளின் உற்றார், உறவினர்கள் மிகுந்த பொறாமை உணா்வை வெளிப்படுத்தினார்கள். இதனால் அவளுக்கு அடிக்கடி தொந்தரவு தந்துகொண்டே இருந்தனா்.
எழுத்தாளர் அ.ந.கந்தசாமி (கவீந்திரன்) அவர்களின் 'கடவுள் என் சோரநாயகன்' என்னும் கவிதையினை நீண்ட காலமாகத் தேடிக்கொண்டிருந்தேன். அந்தக் கவிதை இலங்கை சாகித்திய மண்டலக் கவியரங்கில் அ.ந.க ஓதிய கவிதை. அதனைப்பற்றி எழுத்தாளர் அ.ந.க பற்றி எழுதி தினகரன் பத்திரிகையில் தொடராக வெளிவந்த 'சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்' தொடரில் பின்வருமாறு குறிப்பிட்டிருப்பார்:

ஊசிமுதல் உணவுவரை உழைப்பாலே வருகிறது
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நூலகத்தை வளர்த்தெடுத்த நூலகர்களின் வரிசையில் ஆர்.எஸ். தம்பையா, சிற்றம்பலம் முருகவேள், வரிசையில் திருமதி ரோகிணி பரராஜசிங்கம் மூன்றாமவராவார். யாழ்ப்பாணத்தில், ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனத்தின் நூலகராகப் பணியாற்றிவந்த வேளையில், திருமதி ரோ.பரராஜசிங்கம் அவர்களின் தொடர்பு எனக்கு ஏற்பட்டிருந்தது. அவ்வேளையில் அவர் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட உதவி நூலகராகப் பணியாற்றிவந்தார். நூலகவியல் சஞ்சிகையை நான் வெளியிட்டு வந்த வேளையில் அதன் ஆசிரியர் குழுவில் திரு சி.முருகவேள் அவர்களுடன் திருமதி பரராஜசிங்கமும் இடம்பெற்றிருந்தார்.

“கிளிம்மின் 40 வருட கால வாழ்வு” என்னும் பிரமாண்ட நாவல் பற்றி மாக்சிம் கார்க்கி ” இது எனது வாழ்நாளின் உச்ச சவால் (Ultimate Test)என் மொத்த வாழ்வின் சாரம்” எனக் குறிப்பிடுவார். கிளிம் நாவலின் மூன்றாம் தொகுதி வாசிப்பு தவிர்க்க முடியாமல் எமது இன்றைய தமிழ் இலக்கிய உலகை ஒரு தரம் ஒப்பிட்டுப் பார்க்க வைக்கிறது.

தெய்வீகன் எழுதிய `உன் கடவுளிடம் போ’ / தமிழினி பதிப்பகம் வாசிப்புக்குக் கிட்டியது. புத்தகத்தின் தலைப்பில் உள்ளே எந்தக் கதையும் இல்லை. புதிய களம் / தளத்தில் பயணிக்கும் கதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான வாசிப்பு அனுபவத்தைத் தந்தது. சில கதைகள் இதற்கு முன் அறிந்திராத பல சங்கதிகளைச் சொல்கின்றது. தொகுப்பின் முதல் கதையான `அவனை எனக்குத் தெரியாது’ -, ஆயுதங்களிடமிருந்து விலகி ஓடுவதை விரும்பியிருந்தும், அதுவாகவே மீண்டும் ஒருவனிடம் சேருவதைச் சொல்கின்றது. ஒரு இடத்தில் ஆரம்பித்து, இன்னோர் இடத்தில் பயணித்து, இரண்டையும் இணைக்கும் கதை. `இருள்களி’ கதை எமது போராட்ட நிகழ்வுகளை, முதலாம் உலகமகா யுத்தத்தின் போது துருக்கியின் கலிப்பொலியில் போரிட்ட அவுஸ்திரேலிய - நியூசிலாந்து வீரர்களின் நினைவுகளுடன் இணைகின்றது. இலங்கையில் கோயிலில் இருந்த பிள்ளையார் சிலை ஒன்று, எங்கெல்லாமோ சுற்றி, இந்தியா சென்று, அவுஸ்திரேலியா மெல்பேர்ணில் உள்ள அருங்காட்சியகத்தில் இருப்பதைச் சுவைபடச் சொல்லும் கதை `உறக்கமில்லாக் குருதி’.`தராசு’ என்ற சிறுகதையை நான் ஒரு குறுநாவலாகவே பார்க்கின்றேன். மேலும் இந்தக் கதையைச் சொல்வதற்கு ஆசிரியர் தேர்ந்தெடுத்த நடை தோதாக அமையவில்லையோ என்று எண்ணத் தோன்றுகின்றது.

முன்னுரை
” என்னமோ சீரியசா ஏதோ போயிட்டிருந்தது போல. நான் வந்து வாசல்லெ நின்னு கொஞ்ச நேரம் கழிச்சுதா திரும்பிப் பாத்தீங்க .. ”
இன்று, ஏப்ரில் 27, எழுத்தாளர் பிரபஞ்சனின் பிறந்தநாள். எழுத்தால் வாழ்ந்தவர் இவரென்று கூறலாம். அதன் காரணமாக இவர் அடைந்த வாழ்க்கை அனுபவங்களையெல்லாம், உணர்வுகளையெல்லாம் தன் எழுத்துகளில் பதிவு செய்திருக்கின்றார். குறிப்பாகச் சென்னை நகரத்து வாழ்க்கையைப்பற்றிய இவரது குறிப்புகள் முக்கியமானவை. தமிழ் நாவல்களில் இவரது 'வானம் வசப்படும்' மற்றும் 'மானுடம் வெல்லும்' ஆகியவை முக்கியமானவை. பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் இருந்த பாண்டிச்சேரி மக்கள்தம் வரலாற்றை, சமூக அமைப்பினை, அங்கு நிலவிய முரண்களை இவரது இந்நாவல்களூடு கண்டு கொள்ளலாம்.
எழுத்தாளர் நீலபத்மநாபனின் பிறந்தநாள் ஏப்ரில் 26. அதனையொட்டி எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் இக்கட்டுரை மீள்பிரசுரமாகின்றது. - பதிவுகள். -


பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









