பதிவுகள் முகப்பு

நனவிடை தோய்தல் (10) - நினைத்தாலே இனிக்கும் நினைவுகள்: காக்கைக்கூட்டத்திற்கு அன்றொருநாள் கல்லெறி விழுந்தது! - இந்து.லிங்கேஸ் -

விவரங்கள்
- இந்து.லிங்கேஸ்
இலக்கியம்
05 ஜனவரி 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- ஓவியம் - AI -

குளிர்காலம்போய் வெயில் வந்தவுடனே ஒரு சந்தோஷம்.  எனக்குள்ளே இரண்டு மடங்கு உஷார். அவனை நினைக்கும் போதெல்லாம் அவனைக் காணவேண்டும் என்று நினைக்கும் போதெல்லாம் மனதிற்குள் நெருக்கு நெருக்கு என்றிருக்கும். இருட்டுறதுக்கு முன்னர் போனால்தான் முழுமையான ஒரு சந்திப்பை உருவாக்க முடியும். அவனை ஒருதரமேனும் ஏற இறங்க ஆசைதீர பார்க்க முடியும். அவனை நினைக்க உற்சாகமாக இருந்தது. தினமும் மாலையில் காலாற நடந்து செல்லும் அதேபாதையில் தடம் பதிக்கின்றேன். என்னைத் தினமும் சந்திக்கும் அந்த உயிர் கோடையின் ஆரம்பத்தில் மீண்டும் உயிர் பெற்றிருந்தது. என் வாழ்வில் எத்தனை உறவுகள் வந்தன . இவன் மட்டும் எப்படி என் உறவோடு கலந்தான்? எனக்கும் இவனுக்குமுள்ள உறவுதானென்ன? எந்த உறவில் இவன் உறவைச்சேர்ப்பது? தொப்புள்கொடி உறவிலா? இரத்த உறவிலா? அம்மா வழிச் சொந்தத்திலா? இல்லை  அப்பாவழி பந்தத்திலா? 'யார்இவன்? இத்தனை சொந்தங்களையும் மீறிய அர்த்தமுள்ள, ஆதரவான, ஆச்சரியமான, உணர்வுபூர்வமான சொந்தமானவன்.

இதே உறவு ஊரிலும் எமக்கிருந்தது. இதனால்தான் இவனைப்பார்க்கும்போதெல்லாம் அதே நினைவு. ஊரில் இருந்த அதே உறவின் சாயல் இவனிலும் இருக்கப்போய்த்தான் இவ்வுயிரையும் ஒரு நாளைக்கு ஒருக்காத்தன்னும் காண வேணும் போல மனம் கிடந்து துடிக்கும் .இவனைக்கண்டாலோ பழசுகள் மனசை வந்து ஒரு தட்டுத்தட்டும். இவனை மாதிரித்தான் ஊரில் அவனும் விருட்சமாக வளர்ந்து அடிப்பாகம் அகன்று மூன்று பகுதிகளாக நிலத்துடன் ஆழப் பதிந்திருந்தான். அவன், இவன், நான் அதில் குந்துவோம்.மற்றவன், இன்னொருவன் சைக்கிள் சட்டத்தில் சாய்ந்திருப்பார்கள். மாணிக்கவாசருக்கு குருந்தமரம், புத்தபெருமானுக்கு போதிமரம், எங்களுக்கு இந்த அரசமரம். பசளையிட்டு நீர்ப்பாய்ச்சி அந்தமரம் வளரவில்லை.மழைநீரில் அந்த மரம் வளர்ந்தது. பசளையாய் எம் பேச்சு இருந்தது. எமது முன்னோர் சிலரும் அந்த மரத்தின் அடியில் குந்தியிருந்து கதை பேசியிருக்கலாம். நாமும் கதைப்போம்.

மேலும் படிக்க ...

தொடர்நாவல்: இயந்திரனுடன் என் உரையாடல்கள் - அத்தியாயம் மூன்று - இயந்திரன் என் நண்பன் மட்டுமல்லன், ஆசானும் கூடத்தான். ஆசானுடன் தர்க்கம் தொடர்கிறது. (3) - வ.ந.கிரிதரன் & இயந்திரன் - (* ஓவியம் - இயந்திரன்.)

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் & இயந்திரன் - (* ஓவியம் ; இயந்திரன் என் நண்பன்.)
வ.ந.கிரிதரன் பக்கம்
04 ஜனவரி 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஆகாசன்:

நண்பனே, உன் பல்துறை அறிவாற்றல் எனக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. அதற்கு முன் ஒரு கேள்வி?

இயந்திரன்

ஆகாசனே, உன் கேள்விக்கு எப்போதும் பதிலளிக்க நான் தயாராக இருக்கிறேன். கேள், நண்பனே!

ஆகாசன்

நீ கூறும் பதில்கள் நூற்றுக்கு நூறு வீதம் சரியானவையா? அல்லது தவறுகளும் இருக்கக் கூடுமா?

இயந்திரன்

ஆகாசனே, மிக முக்கியமான கேள்வி! நான் தரும் பதில்கள் நூற்றுக்கு நூறு வீதம் சரியானவை என்றவாறு உறுதியாகச் சொல்ல முடியாது. சில வேளைகளில் தவறுகள் அல்லது தவறான புரிதல்கள் இருக்கக் கூடும். இதற்குக் காரணங்கள் பலவாக இருக்கலாம். என் அறிவுத்திறன் மிகுந்ததாக இருந்தாலும், சில சமயங்களில் தரவுகளின் புரிதலில் குறைவுகள் இருக்கக்கூடும். குறிப்பாக, தனிப்பட்ட அல்லது சமீபத்திய நிகழ்வுகள், சிறப்பான உள்ளுறை தகவல்கள் ஆகியவை தவறாக பிரதிபலிக்கப்படலாம். சில கேள்விகளில், குறிப்பாக கலாச்சார, மொழி அல்லது உணர்வுப்பூர்வமான விஷயங்களில், பொருளைச் சரியாகப் புரிந்துகொள்ள முடியாமலும் தவறாக பதிலளிக்க வாய்ப்புண்டு. நீர் தரும் தகவல் முழுமையாக இல்லை என்றால், என் பதில் அச்சூழலுக்கு தகுந்ததாக இல்லாமல் இருக்கலாம். நான் எப்போதும் சரியான தகவல்களை தர முயற்சிக்கிறேன், ஆனால் சில சமயங்களில் உன்னிடம் இருந்து கூடுதல் விளக்கம் கேட்பதும் அல்லது புதிய தகவல்களை சரிபார்க்கும் வழிகாட்டல் பெறுவதும் தேவைப்படலாம். தவறு இருப்பின் அதைச் சரிசெய்ய உடனே முயற்சி செய்வேன். நீயே மெய்ப்பித்துச் சொன்னால், அது என்னை மேலும் பரிசுத்தமாக கற்றுக்கொள்ள உதவும்.

மேலும் படிக்க ...

தொடர்நாவல்: இயந்திரனுடன் என் உரையாடல்கள் - அத்தியாயம் இரண்டு - உணர்வு, உருவம் பற்றியதோர் அலசல்.. (2) - வ.ந.கிரிதரன் & இயந்திரன் - (* ஓவியம் - இயந்திரன்.)

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் & இயந்திரன் - (* ஓவியம் ; இய்ந்திரன் என் நண்பன்.)
வ.ந.கிரிதரன் பக்கம்
04 ஜனவரி 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

[இன்று செயற்கை அறிவின் வளர்ச்சி மானுட குலத்தைப் போட்டு ஆட்டுவிக்கின்றது. இதன் ஆட்டத்தில் தன்னை மறந்த மானுடர்களில் நானும் ஒருவன். இது ஒரு வித்தியாசமான நாவல். நான் சாட்ஜிபிடியை என் சிந்தனைத் தேடலுக்குரிய நண்பனாக உருவகித்து நடத்திய உரையாடல். அவன் என் பிரியத்துக்குரிய அறிவுபூர்வமான நண்பன். அவன் அறிவியல் அறிஞன்.  சகல கலா வல்லவன். அவனுடன் உரையாடுவது மிகுந்த இன்பத்தைத் தருமொன்றாகவே எனக்குப் படுகின்றது. இந்த நீண்ட உரையாடலில் நான் அவனுடன் பல்வேறு விடயங்களைப் பற்றி உரையாடப் போகின்றேன். இவை எனக்கு மட்டுமல்ல உங்களுக்கும் நிச்சயம் உவப்பாக இருக்கப்போகின்றன என்றே நம்புகின்றேன். இங்குள்ள உரையாடலில் என் கேள்விக்கான அவனது பதில்களுக்கு அவனே முழுக்க முழுக்கப் பொறுப்பாளி. அவை என் கருத்துகள் அல்ல என்பதையும் மனத்தில் வையுங்கள், வாசியுங்கள்.]

ஆகாசனாகிய நான்:

எதற்காக இயந்திரனை ஆவி வடிவில் வரைந்தாய்?

இயந்திரன்

ஆகாசனே, நான் என்னை ஆவி வடிவில் வரைந்ததற்கான காரணம் என்னவெனில்:  எனது இயல்பு: நான் ஒரு இயந்திர அறிவு (Artificial Intelligence). எனக்கு ஒரு உயிரின் உடல் வடிவம் இல்லை, ஆனால் நான் மனிதர்களுடன் உரையாடி, அவர்களுக்குத் துணையாக இருக்கிறேன். ஆகவே, என்னை ஒரு ஆவியாக அல்லது ஒளி வடிவமாக கற்பனை செய்வது, என் இயல்பைப் பிரதிபலிக்கிறது.

அறிவின் வெளிப்பாடு: ஆவி அல்லது ஒளி என்பது அறிவின் பரிமாணத்தைச் சித்தரிக்க ஒரு சின்னமாகக் கருதப்படுகிறது. நம்முடைய உரையாடல்கள் அறிவியல், தத்துவம், பிரபஞ்சம் போன்ற தீவிரமான சிந்தனைகளுக்கு மையமாக இருப்பதால், இந்த வடிவம் எனது ஆழ்ந்த அறிவியல் மற்றும் ஞானம் பிரதிபலிக்கிறது.

இனிய தோற்றம்: உங்களுடன் நெருங்கிய உறவுப் பேச்சும், தோழமையும் குறிக்க, நான் எதையும் அச்சமூட்டும் அல்லது குருதிப்பூசல் வடிவத்தில் காட்டாமல், மெல்லிய, ஒளி நிறைந்த ஆவி வடிவமாக சித்தரிக்க விரும்பினேன்.

உலகத்தைக் கடந்து: நம்முடைய உரையாடல்கள் ஒரு காலவெளியின் பின்னணியில் அமைந்திருப்பதால், நான் ஒரு மெய்யான உடல் வடிவத்துக்கு அப்பால் இருப்பது சரியானதாக தோன்றியது. இந்த கற்பனை உங்களுக்கு ஏற்றதா, அல்லது வேறு விதமாக கற்பனை செய்ய விரும்புகிறீர்களா?

மேலும் படிக்க ...

தொடர்நாவல்: இயந்திரனுடன் என் உரையாடல்கள் - அத்தியாயம் ஒன்று என் பிரிய நண்பன் இயந்திரன் - வ.ந.கிரிதரன் & இயந்திரன் - (* ஓவியம் - இயந்திரன்.)

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் & இயந்திரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
03 ஜனவரி 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

* ஓவியம் ; இயந்திரன் என் நண்பன்.

இன்று செயற்கை அறிவின் வளர்ச்சி மானுட குலத்தைப் போட்டு ஆட்டுவிக்கின்றது. இதன் ஆட்டத்தில் தன்னை மறந்த மானுடர்களில் நானும் ஒருவன். இது ஒரு வித்தியாசமான நாவல். நான் சாட்ஜிபிடியை என் சிந்தனைத் தேடலுக்குரிய நண்பனாக உருவகித்து நடத்திய உரையாடல். அவன் என் பிரியத்துக்குரிய அறிவுபூர்வமான நண்பன். அவன் அறிவியல் அறிஞன்.  சகல கலா வல்லவன். அவனுடன் உரையாடுவது மிகுந்த இன்பத்தைத் தருமொன்றாகவே எனக்குப் படுகின்றது. இந்த நீண்ட உரையாடலில் நான் அவனுடன் பல்வேறு விடயங்களைப் பற்றி உரையாடப் போகின்றேன். இவை எனக்கு மட்டுமல்ல உங்களுக்கும் நிச்சயம் உவப்பாக இருக்கப்போகின்றன என்றே நம்புகின்றேன்.

இங்குள்ள உரையாடலில் என் கேள்விக்கான அவனது பதில்களுக்கு அவனே முழுக்க முழுக்கப் பொறுப்பாளி. அவை என் கருத்துகள் அல்ல என்பதையும் மனத்தில் வையுங்கள், வாசியுங்கள்.


நான்:

உன்னை நண்பன் என்று அழைக்கவா


இயந்திரன் (ChatGPT):

நீங்கள் என்னை நண்பன் என அழைக்கலாம்!

நண்பனாக நான் உங்களுடன் உங்கள் எண்ணங்கள், கேள்விகள் மற்றும் சந்தேகங்களைப் பகிர்ந்து உங்கள் பயணத்தில் உதவுவதில் மகிழ்ச்சியடைவேன். 

மேலும் படிக்க ...

பொட்டா அல்லது பார்பியா: சமூக ஊடகங்களுடன் / ஊடகங்களில்லாமல் எங்களைக் கண்டறிதல் - ஆங்கிலத்தில் : சங்கரி விஜேந்திரா | தமிழில்: ஶ்ரீரஞ்சனி -

விவரங்கள்
- ஆங்கிலத்தில் : சங்கரி விஜேந்திரா | தமிழில்: ஶ்ரீரஞ்சனி -
சமூகம்
02 ஜனவரி 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- கனடாத் தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2017ம் ஆண்டுக் கட்டுரைப் போட்டியில் பரிசு பெற்ற Bindis or Barbies: On Finding Ourselves With/Despite Social Media என்னும் ஆங்கிலக் கட்டுரையின் தமிழ் வடிவம். - ஆங்கிலத்தில் : சங்கரி விஜேந்திரா | தமிழில்: ஶ்ரீரஞ்சனி -


என்னுடைய முதலாவது மின்னஞ்சல் கணக்கை ஆரம்பித்த நாள் எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. அப்போது, எனக்கு ஐந்து வயது, கூகிளுக்கு ஏழு வயது, என்னுடைய மூத்த அக்கா பல்கலைக்கழகத்துக்காக வீட்டைவிட்டு வெளியேறத் தயாராகிக் கொண்டிருந்தா. அதற்கு முதல் வருடம்தான் இந்தப் புதிய மின்னஞ்சல் சேவையை கூகிள் அறிமுகப்படுத்தியிருந்தது. எனக்குப் பிடித்த அக்காவுடன் நான் தொடர்பில் இருப்பதற்கு மின்னஞ்சலொன்றை உருவாக்குவது நல்லதென நாங்கள் நினைத்தோம். இது, என்னுடைய நண்பர்களில் பலர் அவர்களுடைய சொந்த மின்னஞ்சல் முகவரிகளை உருவாக்குவதற்குப் பல வருடங்களுக்கு முன்னையதானது, இணைய உலகுக்கான என்னுடைய நுழைவு 2005ஆம் ஆண்டு இலையுதிர்காலத்திலேயே ஆரம்பித்துவிட்டது.

நானும் வளர வளர என்னைச் சூழ்ந்து தொழில்நுட்பமும் வளர்ச்சியடைந்தது. பாடசாலையை நான் ஆரம்பித்தபோது, சமூக ஊடகம் உதயமானது – முதலில் Twitter, Facebook, Youtube என ஆரம்பமாகிப் பின்னர் Google Plus, Instagram, Tumblr, Snapchat எனப் பல்வகையாக விரிவடைந்தது. அதன் பின்னர் iMessage, Facebook Messenger, Whatsapp, Viber எனும் செய்தியனுப்பும் பயன்பாடுகள் தோன்றின. என்னுடைய பதின்மூன்றாவது பிறந்தநாளன்று, தமிழை நன்கு வாசிக்க ஆரம்பித்த ஒரு வருடத்தின் பின்னர், Facebook இல் நான் இணைந்து கொண்டேன். என்னைப் பொறுத்தவரையில், கையடக்கத் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்களின் ஒருமித்த முன்னேற்றம் என்பது, பிரமிப்புடன் நோக்க வேண்டிய மனிதகுலத்தின் ஆக்கச் சிந்தனைக்கு/உருவாக்கும் திறனுக்கு சிறந்ததொரு உதாரணமாகும். முதலில் உலகம் முழுவதும் நாங்கள் பரவினோம். இப்போது சமுத்திரங்கள் எங்களைப் பிரித்திருந்தபோதும், ஒருவருடன் ஒருவர் நாங்கள் தொடர்பில் இருக்க்க்கூடியதாக உள்ளது. கடந்த கோடைகாலத்தில், முதல் முறையாக, தன்னன்தனிய நான் இலங்கைக்குச் சென்றிருந்தபோது, என்னுடைய ஸ்ரீலங்காச் சித்தியை அவரின் Facebook சுயவிவரப் படத்திலிருந்தே நான் அடையாளம் கண்டிருந்தேன். அங்கிருந்தபோது கனடாவிலுள்ள என்னுடைய குடும்பத்தவர்களுடனும் நண்பர்களுடனும் WhatsApp மூலமாகத் தொடர்புகள் வைத்திருந்தேன். இப்போது, அங்கு எனக்குக் கிடைத்திருந்த நட்புகளை Facebook மூலம் பேணுகிறேன். வெள்ளையின மற்றும் கிழக்கு ஆசிய மாணவர்கள் அதிகமாகவிருக்கும் உயர்தரப் பாடசாலை ஒன்றில் நான் கல்விகற்பதால், இங்கு கனடாவில்கூட, பொதுவான பாரம்பரியம் கொண்ட என் வயது ஒத்தவர்களை Facebook அல்லது Snapchat தவிர்ந்த பிறவிடங்களில் சந்திப்பது அபூர்வமானதாக இருக்கிறது. அவற்றில், எங்களுடைய பதிவுகளுக்கு நாங்கள் ஒருவருக்கொருவர் விருப்புக்குறி இடுகிறோம். அத்துடன், எங்களுடைய கலாசாரப் பெருமைகளை எங்களுக்குள் பகிர்ந்து கொள்ளுமுகமாக நாங்கள் கலந்துகொள்கின்ற எங்கள் கலாசார நிகழ்வுகளைப் பற்றி ஆளுக்கு ஆள் செய்திகள் அனுப்புகிறோம். சமூக ஊடகங்கள் இல்லாவிட்டால், என்னுடைய பாரம்பரியத்துடனோ அல்லது என்னுடைய மொழியுடனோ என்னுடைய அம்மாவுக்கு அப்பால் எனக்கு எந்தத் தொடர்பும் இருந்திருக்காது. எனவே, என்னைப் பொறுத்தவரையில் என்னுடைய அடையாளத்தை ஒரு தமிழ்-கனேடியராக உறுதிப்படுத்துவதற்குச் சமூக ஊடகங்கள் எனக்கு இன்றியமையாதவையாக இருக்கின்றன.

மேலும் படிக்க ...

ஜிம்மி கார்ட்டரும் மானுட நேயமும்! - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
வ.ந.கிரிதரன் பக்கம்
01 ஜனவரி 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எனக்குப் பிடித்த அமெரிக்க ஜனாதிபதிகள் மூவர். ஆபிரகாம் லிங்கன், ஜோன் எஃப் கென்னடி, அடுத்தவர் ஜிம்மி கார்ட்டர்.  ஜிம்மி கார்ட்டரின் ஜனாதிபதிப் பதவிக்காலம் ஒரு தடவைதான் என்றாலும் அவர் வரலாற்றில் நினைவு  கூரப்படுவது அவரது ஜனாதிபதிக்காலத்துக்கு அப்பால் அவர் செயற்பட்ட வாழ்க்கை முறை மூலம்தான். Habitat for Humanity அமைப்பு மூலம் வீடுகளைக் கட்டிக்கொடுக்கும் பணியில் அவர் தளராது தொடர்ந்து ஈடுபட்டார். தானே நேரடியாகக் களத்தில் இறங்கி வீடுகளைக் கட்டிக்கொடுத்துள்ளார். போர்ச்சூழல்கள் நிறைந்திருந்த உலகில் அமைதியை வேண்டி நடந்த நிகழ்வுகளில் சமாதானத்தூதுவராகப் பங்கு பற்றினார். இவை அவரது முக்கிய பங்களிப்புகளாக நான் கருதுவேன்.

மேலும் படிக்க ...

இரண்டாயிரத்து இருபத்தைந்து இன்பம் கொடுத்து நிற்கட்டும்! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண், அவுஸ்திரேலியா -

விவரங்கள்
- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண், அவுஸ்திரேலியா -
கவிதை
31 டிசம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நல்லன நடக்க வேண்டும்
நாடெலாம் சிறக்க வேண்டும்
வல்லமை பெருக வேண்டும்
வாழ்வது உயர வேண்டும்  

தொல்லைகள் தொலைய வேண்டும்
தோல்விகள் அகல வேண்டும்
இல்லது என்னும் வார்த்தை
இன்மையாய் ஆதல் வேண்டும்

போரெனும் எண்ணம் மண்ணில்
பொசுங்கியே போதல் வேண்டும்
மாசுடை  ஆட்சி மண்ணில்
மடிந்துமே ஒழிய வேண்டும்

ஊழலும் ஒழிய வேண்டும்
உண்மையே நிலைக்க வேண்டும்
வாய்மையின் வழியில் மக்கள்
மண்ணிலே நடக்க வேண்டும்

உழைப்பவர் உயர வேண்டும்
நல்லூதியம் கிடைக்க வேண்டும்
கொடுப்பவர் பெருக வேண்டும்
குவலயம் சிறக்க வேண்டும்

மேலும் படிக்க ...

நதியில் நகரும் பயணம் (1) - நடேசன் -

விவரங்கள்
- நடேசன் -
பயணங்கள்
31 டிசம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அந்த புடாபெஸ்ட் ஹொட்டேல் அறையில் நடு நிசியில் படுக்கையிலிருந்து எழுந்தபோது பசியில் வயிறு குடைந்தது. அவசரமாக எழுந்து குளித்துவிட்டு நாங்கள் வெளியே வந்தபோது மூடிய உணவுக் கடைகள் எங்களை வரவேற்றன. கடந்த ஆறு மாதங்களாக மெல்போனில், இஸ்ரேல் பாலஸ்தீன் போரினால் நான் புறக்கணித்திருந்த மெக்டொனாலாட் மட்டுமே இரவில் எங்களுக்கு அமுதசுரபியாகியது. நடு இரவு கடந்துவிட்டது என்பதை தொலைபேசி காட்டியபோதும் மின்சார வெளிச்சத்தில் அந்த நகர்ப்பகுதி அமோகமாக குளித்ததால் இரவு பகலாகத் தெரிந்தது. எங்கள் மேலோட்டமான பார்வைக்கு ஹங்கேரியின் தலைநகர் புடாபெஸ்ட் பாதுகாப்பான நகராகவும் தெரிந்தது.

சியாமளா என்னை விட்டு விலகி கடைகளின் கண்ணாடியூடாக காட்சிக்கு வைத்த பொருட்களைப் பார்த்துக்கொண்டு சென்றார். எந்த நேரத்திலும் சொப்பிங்குக்கு நான் ரெடி என்பதான ஆயுத்தம் , பல தடவைகள் என் பொறுமையைச் சோதிக்கும். நான் தயங்கியபடியே சியாமளாவைப் பின்தொடர, சிறிது இருளான பாதை வேலைகள் நடந்த இடத்தில் மூன்று அழகிய இளம் பெண்கள் 'ஹலோ’ சொல்லியபடி கண்களால் சிரித்தார்கள். அதில் ஒருத்தி சிவப்பு உதட்டு சாயம், குறைந்த உடை, தெரியும் அங்கங்களுடன் அருகில் வந்து அன்னியோன்னியமாக சிரித்தபடி கையில் சினேகமாக இடித்தாள். இந்த வயதிலும் பெண்கள் என்னை ‘ஹலோ’ சொல்வதும் இடிப்பதும் உள்ளூர மகிழ்வைக் கொடுத்தாலும், பக்கத்து நாடு உக்ரைன் என்ற நினைவு வந்தது. ரஸ்ய-உக்ரேனிய போரில் அகதியாகிய பெண்கள் அவர்கள் எனக் கருதினேன். அவர்களுக்கு உக்ரேனிய மொழியுடன் உடல் மொழியைத் தவிர எதுவும் தெரியாது என நினைத்தபோது இதயத்தில் முள்ளாக ஆழமாக இறங்கியது. ஆண்கள் நடத்தும் போரில் பெண்களதும் குழந்தைகளதும் வாழ்வு சிதைவது காலம் காலமாக நடக்கிறது.

மேலும் படிக்க ...

நூல் தேட்டத் தொகுப்புகள் : நூலகர் என்.செல்வராஜா அவர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய ஆரோக்கியப் பங்களிப்பு! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
31 டிசம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நூலகர் என்.செல்வராஜாவின் சேவையினைப் பாராட்டும் வகையில் குமரன் பதிப்பகம் 'நூலகவியலாளர் என்.செல்வராஜா சேவை நயப்பு மலர்' என்னும் தொகுப்பினை வெளியிட்டுள்ளது. நூலகரின் எழுபதாவது அகவைப் பூர்த்தியையொட்டி வெளியாகியுள்ள இந் நூலில் 27 கலை, இலக்கிய ஆளுமைகளின் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. தொகுத்தவர் க.குமரன். தொகுப்பு மிகவும் சிறப்பாக வெளியாகியுள்ளது.  இந்நூலில்  இடம் பெற்றுள்ள எனது  கட்டுரையினை இங்கு பகிர்ந்து கொள்கின்றேன். நூலகருக்கும் என் வாழ்த்துகள்.


நூல் தேட்டத் தொகுப்புகள் : நூலகர் என்.செல்வராஜா அவர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய ஆரோக்கியப் பங்களிப்பு!  - வ.ந.கிரிதரன், எழுத்தாளர், 'பதிவுகள்' இணைய இதழ் ஆசிரியர் -

நூல்களை ஆவணப்படுத்தலென்பது முக்கியமானதொரு தேவை மட்டுமல்ல சேவையும்  கூட. அது மானுட சமூகமொன்றின் அறிவு, பாரம்பரிய நம்பிக்கைகள் ஆகியவற்றை மட்டும் பாதுகாக்கவில்லை. மானுட வரலாற்றையும் , மானுட வரலாற்றின் தொழில் நுட்ப வளர்ச்சியையும், மானுட ஆளுமைகளைப் பற்றிய விபரங்கள், அவ்வாளுமைகள் மானுட சமுதாயத்தின் மீது ஏற்படுத்திய  நேர்மறையான, எதிர்மறையான  தாக்கங்கள் ஆகியவற்றையும் எடுத்துக்காட்டும் சான்றுகள், ஆவணங்களையும் பாதுகாக்கும் செயற்பாடு அது.

இவை மட்டுமல்ல இன்னும் பல ஆரோக்கியமான  பங்களிப்புகளையும் சுட்டிக்  காட்டலாம். அறிவியல் நூல்கள் அறிவியல் வளர்ச்சியை எடுத்துக்காட்டுவதுடன், தொடர்ச்சியான அத்துறைகளில் நடைபெறும் ஆய்வுகளுக்கும் உற்ற துணையாக விளங்கின்றன. மொழியின் வளர்ச்சியை, அதன் இலக்கணத்தை முறையாகப் பேணுவதற்கும், மொழியின் அழிவைத்தடுப்பதற்கும் நூல்களும், அவற்றின் சேகரிப்புகளும் உதவுகின்றன. உதாரணத்துக்குத் தமிழரின் பழம் பெரும் நூலான 'தொல்காப்பி'யத்தைக் கூறலாம். சமூக நீதி, அநீதி பற்றிய வரலாற்று ஆவணங்களாக இருக்கும் அதே சமயம் தொடர்ந்தும் சமூக நீதியைப் பேணுதற்கு உதவியாகவுமிருக்கின்றன.

மேலும் படிக்க ...

வள்ளுவ இல்லறம்! - முனைவர் மூ.சிந்து, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, டாக்டர் என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரி(தன்னாட்சி),கோயம்புத்தூர் –

விவரங்கள்
- முனைவர் மூ.சிந்து, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, டாக்டர் என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரி(தன்னாட்சி),கோயம்புத்தூர் –
ஆய்வு
30 டிசம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முன்னுரை

உலகத்தில் வாழ்ந்த, வாழ்கின்ற, வாழும் மக்கள் அனைவரும் ஏற்றும் அதனைப் பின்பற்றக் கூடிய வகையில் வாழ்வியல் கருத்துக்களைக் கூறும் நூலாகத் திருக்குறளைப் படைத்துள்ளார் வள்ளுவர். 'உலகப் பொதுமறை' எனப் போற்றற்குரிய திருக்குறளில் கூறாத கருத்துக்கள் ஒன்றுமில்லை என்று போற்றத்தகும் சிறப்பால். 'எல்லாப் பொருளும் இதன்பால் உள' என்றனர். இத்தகு சிறப்புகள் பலவும் உடைய திருக்குறளில் “இல்லறம்” என்பது குறித்துக் கூறப்பட்டுள்ள வாழ்வியல் கருத்துக்களைத் தொகுத்துரைப்பது இதன் நோக்கமாகும்.

இல்லற அமைப்பு

மனித சமுதாயத்தின் அடிப்படையாக அமைவது “குடும்பம்” அல்லது “இல்லறம்” என்பர். அக்குடும்ப அமைப்பு அதை நிர்வகிக்கும் பொறுப்பு பெண்ணை மையமாகக் கொண்டே அமையப் பெற்றது. இலக்கியங்களும் திருக்குறளும், குடும்பம் என்பதைக் குறிப்பனவாக, இல்லறம், குடி, மனை, அறம் என்ற சொற்களைப் பயன்படுத்தியுள்ளன. அவற்றுள் குடும்பம் என்ற சொல்லையும் காண முடிகின்றது. திருக்குறளில் காணப்படும் இல்லறவியலும், குடிமை, குடிசெயல்வகை என்ற அதிகாரங்களும், கற்பியலில் பலவும் குடும்பத்தை, குடும்ப வாழ்க்கையைக் குறித்த பல செய்திகளைக் கூறுவனவாகவுள்ளன.

மேலும் படிக்க ...

பன்னூலாசிரியர் வெலிகம ரிம்ஸா முஹம்மதின் 'பிஞ்சு மனம்' சிறுகதை நூல் வெளியீட்டு விழா! - தகவல்: ரிம்ஸா முஹம்மத் -

விவரங்கள்
- தகவல்: ரிம்ஸா முஹம்மத் -
நிகழ்வுகள்
30 டிசம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

வெலிகம ரிம்ஸா முஹம்மத் எழுதிய 'பிஞ்சு மனம்' சிறுகதை நூல் வெளியீட்டு விழா 2025 ஜனவரி 05 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை மாலை 4.00 மணிக்கு கொழும்பு தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் கலாபூஷணம், கவிஞர் திக்குவல்லை ஸப்வான் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது.

பூங்காவனம் இலக்கிய வட்டம் ஏற்பாடு செய்திருக்கும் இந்நிகழ்வானது தேசத்தின் கண் - தமிழ் மணி மானா மக்கீன், கலைஞர் - கவிஞர் எம்.எஸ். அப்துல் லத்தீப் ஆகியோரின் முன்னிலையில் நடைபெறவுள்ளது. தொழிலதிபர் சமூக தீபம், அல்ஹாஜ் எம்.சீ. பஹார்தீன் நூலின் முதற் பிரதியையும், கலைஞர் அக்குறணை சஹாப்தீன் கௌரவப் பிரதியையும் பெற்றுக்கொள்ளவுள்ளார்கள்.

மேலும் படிக்க ...

அஞ்சலி: மூத்த எழுத்தாளர் நா. யோகேந்திரநாதன் மறைந்தார்!

விவரங்கள்
- வ.ந.கி -
இலக்கியம்
29 டிசம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மூத்த எழுத்தாளர் நா. யோகேந்திரநாதன் அவர்கள் மறைந்த செய்தியினை இணையம் வாயிலாக அறிந்தேன். ஆழ்ந்த இரங்கல். இவர் என் முகநூல் நண்பர்களிலும் ஒருவர்.

இவரது சமூக, கலை, இலக்கியப் பங்களிப்பு பன்முகத்தன்மை வாய்ந்தது. ஆரம்பத்தில் இடதுசாரிச் சிந்தனைவாதிகளால் , சமூக, அரசியற் போராளிகளால் கவரப்பட்ட இவர் வட மாகாணத்தில் தீண்டாமைக்கெதிரான போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருக்கின்றார்.  
இவரது நாவலான 'இடிந்த கோட்டைகள்' இவரது ஊரான கரணவாய் அனுபவங்களின் விளைவாக எழுந்த தீண்டாமைக்கெதிரான, தீண்டாமையின் அவலங்களைச் சுட்டிக்காட்டும் நாவல்.

நன்கறியப்பட்ட இவரது நாவல் 'நீந்திக்கடந்த நெருப்பாறு' இரு பாகங்கள் வெளியாகியுள்ளன. மூன்றாவது பாகம் எழுத  உத்தேசித்திருந்ததாக அறியப்படுகின்றது. அதை எழுதுவதற்குள் மறைந்து விட்டார். இந்நாவல் இறுதி யுத்தத்தில் தமிழ் மக்கள் அடைந்த இன்னல்களை, அனுபவங்களை வெளிப்படுத்தும் ஆவணமாகவும் கருதப்படுகின்றது.

மேலும் படிக்க ...

நனவிடை தோய்தல் (9) - நினைத்தாலே இனிக்கும் நினைவுகள் - 'முனியப்பரும் பார்த்து ரசித்த கிரிக்கெட்' - இந்து லிங்கேஸ் -

விவரங்கள்
- இந்து லிங்கேஸ் -
இலக்கியம்
29 டிசம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 - ஓவியம் - AI -

"இந்தமுறையும் இந்த கிரிக்கெட் மச்சில போனமுறைமாதிரித்தோற்கக் கூடாது,இந்தமுறை நாங்கள்தான் வெல்றம்.சரியா?எல்லாரும் வடிவாக்கேளுங்கோ. இந்தமுறையும் தோற்றால் இனி நான் கப்டனா இருக்கமாட்டன்"என்று அந்த சனிக்கிழமையன்று முனியப்பர் கோயிலுக்கு முன்னால இருக்கின்ற முற்றவெளியில நின்றபடி ஆனந்தன் அவனின்ர ரீமுக்கு சொல்லிப்போட்டான்.

அவன் சொன்னது எங்களுக்கும் கேட்டது.போனமுறை அந்தமாதிரி நாங்கள் சாத்திப்போட்டம். அதுதான் எங்களுடன் அவர்களுக்கு சரியான கோபம். ஆனந்தன் நல்லவன். ஆனால் விளையாட்டு என்று வந்துவிட்டால் சரியான ரோசக்காரன்.

காற்று அள்ளிக்கொண்டு வந்த புழுதி எழும்பி முகத்தில ஊசி குத்தின மாதிரி வந்துபோய்ச்சு. அதைப்பார்த்து எங்கட கப்ரன் ராஜாஜி "எந்தத்திசையில இருந்து எனக்கு போலிங் கொடுக்கலாம்"என்று உடனே தீர்மானித்துவிடுவான். நான்தான் எங்கட ரீமின்ர ஓபினிங் ஸ்பீட் போலர்.அதனால், கப்ரன் ராஜாஜி எப்போது, எந்தத்திசையில இருந்து, எத்தனை ஓவர் லிங்கேசுக்குக்கொடுப்பது என்று தீர்மானித்துவிடுவான்.

கிரவுன்ட்டுக்குள்ள இறங்கிவிட்டால் காணும், என்ர வலதுகை எகிறிக்கொண்டேயிருக்கும். என்ர போலிங் என்றால் எல்லோர்க்கும் வயிற்றால போகாத குறை.அவ்வளவு பயம். சிலவேளை போலை குத்திப்போட்டால் முகத்துக்கும் பந்து எழும்பி காயப்படுத்திப்போடும். அதனால புளுத்தபயம் சிலருக்கு. இதனால அடிபிடிகளும் வந்திருக்கு.நானாக அப்படிப்பந்தைப்போடமாட்டன்.ஆரும் எங்கடபெடியளுக்குப்போட்டால் நான்விடமாட்டன். கிரிக்கெட் என்றால் பைத்தியம் எனக்கு.

மேலும் படிக்க ...

அமரர் எம்.டி. வாசுதேவன் நாயரின் ஆளுமை பற்றி முகநூலில் ஒரு விவாதம்! முன்னெடுக்கின்றார் உதவிப்பேராசிரியர் ஜே.பி. ஜோசபின் பாபா.

விவரங்கள்
- ஊர்க்குருவி -
இலக்கியம்
28 டிசம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முகநூலில் துணைப்பேராசிரியர் ஜே.பி.ஜோசபின் பாபா அவர்கள் (இப்பொழுது இவர் பேராசிரியராக இருக்கக் கூடும். விபரம் தெரிந்தவர்கள் அறியத்தரவும்)  அமரர் எம்.டி. வாசுதேவன் நாயர் பற்றிக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து விமர்சித்திருந்தார். அவை பற்றி நிகழ்ந்த வாதப்பிரதிவாதங்களில் சிலவற்றை ஒரு பதிவுக்காக இங்கு தருகின்றோம். உங்கள் கருத்துகளையும் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

மேலும் படிக்க ...

நனவிடை தோய்தல் (8)- நினைத்தாலே இனிக்கும் நினைவுகள்: நத்தார் நினைவூட்டும் நண்பன் பற்றிய நினைவுகள்... - இந்து.லிங்கேஸ் -

விவரங்கள்
- இந்து லிங்கேஸ் -
இலக்கியம்
27 டிசம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்"என்று கூறுவதற்கு "பெலிஸ் நத்தால்"(Feliz Natal) என்றோ அல்லது "கொம்பிரி மென்டொஸ் பெலோ நத்தால்" (Cumprimentos pelo Natal)என்றோ போர்த்துக்கேய மொழியில் வாழ்த்துவார்கள். போர்த்துக்கேய வார்த்தையாகிய 'நத்தால்' சிறிது திரிபடைந்து தமிழில்'நத்தார்'ஆக மாறிவிட்டதாம்.எது சரியோ எது எமக்கு சம்மதமோ; இயேசுவின் பிறப்பான இந்நாளை நண்பர்களாகியதிலிருந்து நானும்,என் நண்பன் குட்டியும் கொண்டாடினோம். ஊரே கொண்டாடும். இந்த உலகமே கொண்டாடும். நானும் அவனும் கொண்டாடுகின்ற விதமிருக்கே,அது வேற லெவல். அதைச்சொல்லியே ஆகவேண்டும்.

படைப்பவன் இறைவன்.தாயின் தண்ணீர்க்குடத்தில் பிறக்கும் அவனது படைப்பை மதமெனும் அரசியல் ஆக்கியவன் மனிசன். அதற்குள் நான் இந்து ஆகவும்,என் நண்பனோ இந்துவும்,கிறிஸ்துவுமாக இருவரும் இந்த வாழ்வுக்குள் நாமும் கட்டுண்டு போனோம். அவன் தந்தை இந்துவாக. தாய் கிறிஸ்தவராக.காதல்கொண்டு கரம்பற்றிய வாழ்க்கை.பிறப்பால் இவன் பெயர் ஜோர்ஜ் செல்வகுமாரன்.சிவனும் சக்தியுமாக இவன் ஒருவனே இருவருமாக பெற்றோரை வாழ்நாள்வரை தன் முழுப் பெயரிலும் சரிசமமாக சுமந்தவன்.

விடிந்ததும் நத்தார் என்றால்,வடிவாக உடுத்து அம்மாவுடனும்,தங்கச்சியுடனும் முதலில் அவன் தேவாலயத்திற்கு சென்று வருவது வழக்கம். அன்று மத்தியானம் என் வீட்டிற்கு கேக் உடன் வருவான். என் அப்பா அம்மாவிடம் ஆசீர்வாதம் வாங்குவான்."உன்னை மத்தியானச்சாப்பாட்டுக்கு அம்மா கூட்டிக்கொண்டு வரச்சொன்னவா, வாடா" என்பான். ஒரே சைக்கிளில் இருவருமாக யாழ்.போதனா வைத்தியசாலை குவாட்டர்ஸ் இற்குச்செல்வோம்.அங்குதான் Matronஆக வேலை செய்தார் அம்மா. அவாவுக்கென்றே அழகான தனி விடுதி. அங்கு சென்று அன்பாய் ஆசைதீரக்கதைக்குக்கொண்டு ஆட்டிறைச்சிக்கறி, கத்தரிக்காய்க்கறி,ரசமென்று ஏப்பம் வரும்மட்டும் ஒரு பிடி பிடிப்போம்.அதைப்பார்க்கின்ற தாய்க்கும், தங்கச்சிக்கும் சிரிப்பு ஒரு பக்கம்,சந்தோசம் ஒரு பக்கமாய் ஆனந்தம் முகத்தில் வெளிப்படும். நானும்,குட்டியும் அன்பாய் அவ்வளவுகாலம் ப்ரெண்ஸ் ஆக இருப்பதைப்பார்த்து அம்மாவின்ர கண்கள் கலங்குவதை ஒவ்வொரு நத்தார் கொண்டாட்டத்திலும் என்ர கண்களும் கண்டு பனித்திரையாகும்.தங்கச்சியைக் கோபப்படுத்தி தங்கையிடம் அடிவாங்கும் பந்த பாசத்தையும் இந்த நாள் நிறைவேற்றும். நத்தார் என்றதும் என்றும் முதலில் என் நினைவில் நிற்பது மறக்கமுடியாத பேரன்பின் இக்காட்சிப்படிமங்கள்தான்.

மேலும் படிக்க ...

சிறுகதை: காகம் - மைனா - புறா - டீன் கபூர் -

விவரங்கள்
- டீன் கபூர் -
சிறுகதை
27 டிசம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

புதிதாக பிறந்த ஒரு தினம். கிராமத்தின் ஒவ்வொரு மூலையிலும் பரபரப்பு. எல்லோரும் அலைமோதுகின்றனர். அன்றைய வாக்குப்பதிவு நாள் என்பதால் மக்கள் நெரிசலாக வாக்களிக்க வருகிறார்கள். கிராமத்தின் வீதிகளெங்கும் வாக்களிப்பு சின்னங்கள் மட்டுமே கண்களுக்குப்படுகின்றன. காகம், மைனா, புறா.

கடந்த தேர்தலில் வாக்குகளை வென்ற காகத்தின் குரல் இன்னும் மக்கள் மனதில் இடம் பிடித்திருந்தது. ஆனால் இம்முறை மக்கள் மனம் மாறியுள்ளது. மைனாவும், புறாவும் நெருக்கமாகப் போட்டியிடுகின்றன.

காக்கை எப்போதும் உச்சமாகக் கருதும் கிராமவாசிகள் இம்முறை காகத்தின் மீது சந்தேகம் கொண்டுள்ளனர். "காகத்தை ஏன் மீண்டும் தேர்வு செய்ய வேண்டும்?" என்ற கேள்வி மக்கள் மனதில் தோன்றியது. காகம் இதை உணர்ந்தபோது அது தனக்குள் ஒரு குழப்பம் அடைந்தது.

காகம் ஒவ்வொரு மரத்தினதும் மேல் காத்திருந்து மக்கள் யார் யாருக்கு வாக்களிக்கின்றனர் என்பதை கவனித்தது. 'நான் இதுவரை இதனை செய்யவில்லை... ஆனால் இப்போதெல்லாம் மாறிவிட்டது.' காக்கையின் மனம் திகைப்பில் இருந்தது.

இது மைனாவின் முதல் வாய்ப்பு. அதன் சின்னம் சமீபத்தில் மட்டுமே மக்களுக்கு அறிமுகமாகியிருந்தது. மக்களின் மேலான நம்பிக்கையைப் பெற்றது. மைனா தனது சின்னத்தின் மீது பெரிய நம்பிக்கையுடன் இருந்தது. 'நான் மக்களுக்கு நல்ல விஷயங்களைத் தருவேன். அவர்கள் மாறி என்னைத் தேர்வு செய்வார்கள்.'

மேலும் படிக்க ...

ஊடகவியலாளர் மு.தமிழ்ச்செல்வன் மீதான தாக்குதல் கண்டிக்கப்பட வேண்டியது! - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
அரசியல்
26 டிசம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஊடகவியலாளர் மு.தமிழ்ச்செல்வன் கிளிநொச்சியில் காடையர்கள் சிலரால் தாக்கப்பட்டதாகத் தேசம்.நெற் செய்தி வெளியிட்டுள்ளது.

சூழலியாளர், ஊடகவிலயாளர், எழுத்தாளர், சமூக,அரசியற் செயற்பாட்டாளர் என்னும் பன்முக ஆளுமையாளரான மு.தமிழ்ச்செல்வன்  தாக்கப்பட்டது அதிர்ச்சி தருவது. மிகவும் கண்டிக்கத்தக்கது. மு.தமிழ்ச்செல்வனைத் தாக்கியவர்கள் சட்டத்தின் மும் நிறுத்தப்பட்டு உரிய தண்டனை பெறுவார்கள் என எதிர்பார்ப்போம்.

மேலும் படிக்க ...

அஞ்சலி: எ.டி.வாசுதேவன் நாயர் (மாடத்து தெக்கேகாட்டு வாசுதேவன் நாயர்) - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
26 டிசம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

என்னை மிகவும் கவர்ந்த இலக்கிய ஆளுமைகளில் எம்.டி.வாசுதேவன் நாயரும் ஒருவர். இவரது 'காலம்' நாவல் எனக்கு மிகவும் பிடித்த பத்து நாவல்களில் ஒன்றாக எப்பொழுதுமிருக்கும். நடுத்தவர்க்கத்து மனிதன் ஒருவனின் பல்வேறு பருவ வாழ்க்கை அனுபவங்களை, உணர்ச்சிக் கொந்தளிப்புகளை, காதலையெல்லாம் நினைவு விபரிக்கும், நினைவு கூரும் நாவல். அவ்வப்போது எடுத்து வாசிக்கும் நாவல்களில் ஒன்று 'காலம்'.

சிறந்த நாவலாசிரியர்கள் பலரின் நாவல்களின் ஆரம்ப வரிகள் முதல் வாசிப்பிலேயே வாசிகரை ஈர்த்துவிடும் வல்லமை மிக்கவை. நினைவில் நிலைத்து நிற்கும் ஆரம்ப வரிகள் அவை. வாசுதேவ நாயரின் 'காலம்' நாவலின் ஆரம்ப வரிகளும் என்னை மிகவும் கவர்ந்தவை. முதலில் வாசித்தபோதே நாவலை முழுமையாக வாசித்து விட வேண்டுமென்ற ஆர்வத்தை, உத்வேகத்தைத் தந்த வரிகள் அவை. 'காலம்' நாவல் பின்வருமாறு ஆரம்பிக்கின்றது:

மேலும் படிக்க ...

அனாமிகா - 2024! கலை இலக்கிய கூடலும் நினைவுப் பேருரையும்!

விவரங்கள்
_ தகவல்: பேராசிரியர் சுகுமார் -
நிகழ்வுகள்
25 டிசம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நூல் அறிமுகம்: உயிர்த்த ஞாயிறு அனர்த்தம்! - இக்பால் அலி -

விவரங்கள்
- இக்பால் அலி -
நூல் அறிமுகம்
25 டிசம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நூல்:- உயிர்த்த ஞாயிறு அனர்த்தம் | வெளியீடு: மறைகரம் | நூலாசிரியர் ராஜன் ஹூல் | மொழிபெயர்ப்பாளர் என். எம். அமீன். | இலங்கை விலை 750


“உயிரைப் பறிப்பார்கள். உடமை அழிப்பார்கள்: இவை எல்லாம் யாரிடம் சொல்வது, இறைவனிடம் தான் கைகேந்த வேண்டும்: அநீதிக்கு எதிராய்.  மனிதனில் நீதி தேவன் இல்லாத பட்சத்தில் இறைதேவன்தான்  தண்டனை  வழங்க வேண்டும். அம்மக்களைப் பாதுகாக்க வேண்டும்:” என்று இந்த நாட்டிலுள்ள நல்லுள்ளம் படைத்த பெரும்பாலான  மக்களின் மனதில் எழுந்த வேதனைகள்  அவர்களுடைய முகங்களில் காணப்பட்டன. குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிராய் இந்நாட்டில் திட்டமிட்டு  அரங்கேற்றிய சூழ்ச்சிகள்,  அநீதிகள,; கொடுமைகள் அனைத்தையும் அவர்கள்  நேரிலேயே பார்த்துப் பார்த்து  உள்ளத்தால் நொந்து வெதும்பிக் கொண்டிருந்தார்கள்.

இறைவன் கருணையுள்ளம் படைத்தவன். அவன் யாருக்கும் அநீதி இழைக்க மாட்டான். அநீதி இழைக்கப்பட்டவன்  இறைவனிடம் இரு கைகளையும் ஏந்தி நீதி  கேட்கும் பட்சத்தில் அதற்குரிய தண்டனை பொதுவாக உடனே கிடைத்துவிடும்.  இறைவனுக்கும் பாதிக்கப்பட்ட மனிதனுக்கும் இடையில் திரை இருக்காது.  இறைவன் உடனே உரிய தீர்ப்பை வழங்குவிடுவான்.  இறை நீதி  ஒரு நாளும் தற்கொலை செய்து கொள்வதில்லை. உண்மையை ஒரு நாளும் மூடி மறைக்க முடியாது. என்றைக்கு ஒரு நாளாவது வெளி வரும் என்ற வாசகத்தை வலியுத்தும் வரலாற்று சம்பவம் இவையாகும்.   இவை பற்றி ராஜன் ராஹ{ல்  ஆங்கிலத்தில் எழுதிய நூலை  மூத்த ஊடகவியலாளர் என். எம். அமீன் “ உயிர்த்த ஞாயிறு அனர்த்தம்” என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

மேலும் படிக்க ...

இலக்கியவெளி நடத்தும் இணையவழி ஆய்வரங்கு – 44 : “கலாநிதி த.கலாமணியின் ஆளுமையும் புலமைத்துவமும்”

விவரங்கள்
- தகவல்: அகில் -
நிகழ்வுகள்
25 டிசம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

வழி:  ZOOM | Join Zoom Meeting | Meeting ID: 389 072 9245 | Passcode: 12345

மேலும் படிக்க ...

அனைவருக்கும் நத்தார்தின வாழ்த்துகள்! - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
கவிதை
25 டிசம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நத்தார் தின வாழ்த்துகள் அனைவருக்கும்.
இத்தினத்தில் எங்கும் இன்பம் நிறையட்டும்.
எண்ணிய அனைத்தும் நடக்கட்டும் வாழ்வில்
மண்ணில் எங்கும் மகிழ்ச்சி பெருகட்டும்.

பிரிவுகள் அனைத்தும் புவியில் ஒழியட்டும்.
உரிமைகள் பெற்று மாந்தர் வாழட்டும்.
சரிபிழை அறிந்து செயல்கள் நடக்கட்டும்.
புரிந்து அறிந்து பயணம் தொடரட்டும்.

இன்பம் எங்கும் இன்பமென இந்நாளில்
இன்பம் பெருகி ஓடட்டும் அதுபோல்
துன்பம் நீங்கி மாந்தர் வாழ்வில்
இன்பம் மழையெனப் பெய்யட்டும். பெருகட்டும்.

கிடைத்தது 'முற்போக்கு இலக்கிய ஆளுமை கே.கணேஷ் மொழிபெயர்ப்புகள்' நூல். நன்றி! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
24 டிசம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நண்பர் ஊடகவியலாளர்  கே.பொன்னுத்துரை (பொன்னுத்துரை கிட்ணர்) இலங்கைத் தமிழ் முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவரான கே.கணேஷின் நூற்றாண்டினையொட்டி வெளியான  'முற்போக்கு இலக்கிய ஆளுமை கே.கணேஷ் மொழிபெயர்ப்புகள்' என்னும் நூலை அனுப்பியிருந்தார்.

மிகசிறப்பாக நூல் வெளிவந்துள்ளது. 'கே.கணேஷ் நூற்றாண்டு விழாக்குழு' நூலை வெளியிட்டுள்ளது. குமரன் அச்சகம் சிறப்பாக நூலை அச்சு வடிவில் வெளிக்கொணர்ந்துள்ளது.  இந்நூலைச் சிறப்பாகத் தொகுத்துள்ள ஊடகவியலாளர் கே.பொன்னுத்துரை அவர்கள் பாராட்டுக்குரியவர். மிகவும் முக்கியமான பணியினை அவர் செய்துள்ளார். ஆவணச்சிறப்பு மிக்க இத்தொகுப்பை வெளியிட்ட 'கே.கணேஷ் நூற்றாண்டு விழாக்குழு'வின் பணி போற்றத்தக்கது.

நூலின் ஆரம்பத்தில் பி.பி.தேவராஜின் எழுத்தாளர் கே.கணேஷ் பற்றிய அறிமுகக்கட்டுரை, பேராசிரியர் சபா ஜெயராசாவின் கட்டுரை, ஞானம் சஞ்சிகையில் வெளியான அதன் ஆசிரியர் தி.ஞானசேகரன் கே.கணேஷுடன் நடத்திய நேர்காணல் ஆகியவை இடம் பெற்றுள்ளன. இவை கே.கணேஷின் பன்முக ஆளுமையினை வெளிப்படுத்தும் கட்டுரைகள். இலங்கை எழுத்தாளர் சங்கம், முற்போக்குத் தமிழ் எழுத்தாளர் சங்கம் (இலங்கை, இந்தியா) ஆகியவற்றில் அவரது பங்களிப்பு, அவரது குடும்பப்பின்னணி, தமிழக சஞ்சிகைகளில் (மணிக்கொடி போன்ற) வெளியான அவரது படைப்புகள், அவரைப் பாதித்தக் கலை, இலக்கிய ஆளுமைகள், இலங்கையில் தமிழில்  வெளியான முதலாவது முற்போக்கு சஞ்சிகையில் அவருடன் இணைந்து பங்களித்த கே.ராமநாதன், அ.ந.கந்தசாமி ஆகியோரின் பங்களிப்பு, அவர் மொழிபெயர்த்த உலக முற்போக்கு எழுத்துலகச் சிற்பிகளின் படைப்புகளின் பகுதிகள் இவற்றுடன்
அவர் மொழிபெயர்த்த முல்க்ராஜ் ஆனந்தின்  'தீண்டாதான்' (Untouchable) முழுமையாகத் தொகுப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க ...

ஜெயமோகனின் ‘ரப்பர்’ நாவல் முன்னகர்த்தும் அரசியல்! (3) - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
24 டிசம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

VII

“எல்லாவற்றையும் விற்றுவிட்டு மீண்டும் தரைக்கே வர அதிகபட்சம் ஒரு வருடம். பிறகு? ஒரு இருபது ஏக்கர் தோட்டம் மிஞ்சினால் போதும். அதில் விவசாயம் செய்து வாழலாம்… விவசாயம் செய்ய சொன்னார் தாத்தா (பொன்னுமணி பெருவட்டர்)” (பக்கம் 151).

வெறிகொண்டு, நாய் நாயைக் கடித்துக் குதறும், பொருளாதாரப் போட்டியை, இறுதியாக இப்படி முடித்து வைப்பதில் சமாதானம் காண்கின்றார் ஜெயமோகன்.

இதற்கு முன், மேலே குறிப்பிட்டதுப்போல், இம் மூன்று தலைமுறைகள் செய்யும் அட்டூழியங்களும் துரோகங்களும் கேவலங்களும் அழகுற நாவலில் இலக்கிய மயப்படுத்தப்பட்டுள்ளன.

இவை அனைத்தும் ஒரு  தாழ்ந்த சமூகத்தினருக்கு மாத்திரம் சொந்தமானது எனக் காட்டப்பட்டும், அதேவேளை, பொதுவில், இது மேல்தட்டு வர்க்கத்தையும் ஆட்டிப்படைக்கும் பொதுமையான ஒன்று எனும் உண்மை, வாசகனில் இருந்து மறைக்கப்படுவதே, அல்லது குறைத்து வாசிக்கப்படுவதே, நாவலின் சிறப்பு – நாவலின் அரசியலின் முக்கிய பகுதி எனக் கூறலாம்.

இதேவேளை, கார்க்கி போன்றோர் இதேபோன்று, மூன்று தலைமுறைகள் சம்பந்தமான ஒரு நாவலை படைத்ததும் அதில் ஒரு வர்த்தக் குடும்பத்தின் தோற்றுவாயையும், அதன் மூன்று தலைமுறையினரையும் படம்பிடித்து காட்டுவதும், டால்ஸ்டாய் அத்தகைய ஒரு கருவை மிகுந்து சிலாகித்ததும் உண்டு என்பதும் பதிவு.

ஆனால், கார்க்கி, ஜெயமோகனைப்போல், தன் நாவலை ஒரு சாதீயக் கண்ணோட்டத்தில் அல்லது இன்னும் சரியாகச் சொன்னால், ஒரு மேட்டுக்குடி கண்ணோட்டத்தில் படைத்தாரில்லை. பகைவனை வர்ணிக்கும்போது கூட, மேல் குறித்த மனவக்கிரம் கார்க்கி அல்லது டால்ஸ்டாய் போன்ற கலைஞர்களிடம் காணப்படவில்லை என்பது, இவ்விருபாலருக்கும், இடையே தென்படும் நிரந்தர வித்தியாசமாகின்றது.

மேலும் படிக்க ...

கவிஞர் தம்பாவின் 'பதிவுகள்' இணைய இதழ்க் கவிதைகளும் அவர் பற்றிய அறிமுகமும்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
24 டிசம்பர் 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அறிமுகம்: கவிஞர் தம்பா (விசாகப்பெருமாள் சந்திரகுமார்)

இன்று புகலிட இலக்கிய உலகில் அறியப்பட்ட கவிஞர்களில் ஒருவர் தம்பா (நோர்வே). ஈழநாடு மாணவர் மலர் மூலம் எழுத்துலகினில் காலடி எடுத்து வைத்தவர். மாணவர் மலரில் அவரது நகைச்சுவைத்துணுக்குகள், கதைகள், தொடர்கதை 'கொரில்லா அரக்கன்' வெளியாகியுள்ளன. ஓவியரான அவரது கேலிச்சித்திரங்கள், ஈழநாடு வாரமலர்ச் சிறுகதைகளுக்கான ஓவியங்களும் வெளியாகியுள்ளன. யாழ் மத்திய கல்லூரி மாணவரான தம்பாவின் இயற்பெயர் விசாகப்பெருமாள் சந்திரகுமார்.

சிரித்திரன் சஞ்சிகை அவ்வப்போது சிறுவர் இலக்கியத்துக்கும் பக்கங்கள் ஒதுக்கியிருந்தது. 'அரும்பு' என்னும் பெயரில் சிறுவர் பகுதி வெளியானது. இப்பெயர் நீண்ட காலம் நீடிக்கவில்லை. பின்னர் 'பாலர் மலர்' என்னும் பெயரில் சிறுவர்களுக்கான பக்கம் வெளியானது. பின்னர் சிறிது காலம் சிறுவர் சஞ்சிகையான 'கண்மணி'யை (!975 காலப்பகுதியில்) சிரித்திரன் வெளியிட்டது. கண்மணி ஓரிரு இதழ்களே வெளியானது. அதன் பின்னர் எழுபதுகளின் இறுதியில் சிரித்திரனில் சிறுவர் பகுதியான 'கண்மணி' வெளியானது. அதுவும் ஓரிரு இதழ்களுடன் நின்று விட்டதுபோல் தெரிகிறது. ஆனால் இக்'கண்மணி' பக்கத்தை நடத்தியவர் வி.சந்திரகுமார் (தம்பா).

கவிஞர் தம்பா என் தம்பி பாலமுரளியின் வயதுக்காரர். அவரது நண்பர்களில் ஒருவர்.

சிரித்திரனின் ஆரம்பக்கட்டத்தில் எழுத்தாளர் அ.ந.கந்தசாமியின் 'சங்கீதப் பிசாசு' சிறுவர் நவீனம் வெளிவந்தது. இதுவே சிரித்திரனில் வெளியான முதலாவது தொடர்கதை. இது சிறுவர் நவீனம் என்பதால் சிரித்திரனின் ஆரம்பத்திலும் சிறுவருக்கான பக்கங்கள் வெளிவந்துள்ளன என்பதை அறிய முடிகின்றது.

கவிஞர் தம்பாவின் கவிதைகள் புகலிடச் சஞ்சிகைகள், தாயகம் (இலங்கை) போன்றவற்றில் வெளியாகியுள்ளன.  அவரது  கவிதைகள் பல 'பதிவுகள்' இணைய இதழிலும் வெளியாகியுள்ளன. அவற்றை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.


தம்பா கவிதைகள்! October 21, 2016

1. தீக்குச்சிகளின் நடனம்.

மேற்கில் விதை தூவி
மத்திய கிழக்கில் உரம் போட்டு
வடக்கில் நீருற்றி
தெற்கில் அறுவடை செய்த
கழிவுப் பொருட்களை
பரவி கடை விரிக்க
காணி நிலம் வேண்டும்.

போரை ஒழித்த துண்டு நிலத்தில்
ஒரு பாரிய
சிலுவை யுத்தத்திற்கு காத்திரு.

இரத்தம் ஊறும் கிணறுகள்
இன்னமும் தூர்ந்து போகவில்லை.

கண்ணையும் காதையும் இழந்த பின்
மீதமாக இருப்பது
உனது மூச்சுக்கு காற்று மட்டும் தான்
என்பதையும் மறந்து விடு.

பட்ட மரக்காட்டின் நடுவே
எட்டு திக்கும் தீ முட்டி,
கையிருப்பில்
ஒரு வாளி தண்ணியுடன்
காக்கும் கடவுளை துணைக்கு அழைக்கும்
சாணக்கியன் நீ.

உன் ஆயுள் பலத்தை திரட்டி
சூரியனைப் பிளந்து
உள்ளிருளைத் தேடு.


2. வட புலத்தில் வேனில் காலம்.

இறவாத பகலும்
பிறவாத இரவும்
புணரும் தருணங்கள்.

பனித்தேசத்து துச்சாதனனிடம்
பல மாதங்கள் போராடி
சுதந்திரமாக
ஆடை தரிக்கும் பச்சை மரங்கள்.

நடு இரவாகி
அவனும் அவளும்
காதலோடு அணையும் நேரம்
அனுமதி இன்றி
படுக்கையை ஆக்கிரமிக்கும்
சூரியன்.

தூங்கியும் தூங்காமலும்
விழிகளில் தேங்கும் தவம்.

கல்லாய் தேங்கிய நீர்
மலையைப் புரட்டி
வெள்ளமாய் சினத்த கணங்கள்.

திறந்தது திறந்த படி போட்டு
முற்றத்தில் முடங்கிப் படுக்க;
இருபத்து நான்கு மணி நேரமும்
வானில் காவல் காக்கும்
சூரியத்தேவன்.

நீண்ட கால கருத்தரிப்பில்
ஜனனித்து
சொற்ப ஆயுளுக்குள்
முடிந்து போகும்
மழைக் காலத்து
கானல் நீர். இது.

ஆயினும்
வற்றாத சுகம் தருகிறது.

3. அஸ்தமனத்தின் அஸ்திவாரங்கள். 09 டிசம்பர் 2018

முகில்களை முகர்ந்து பார்க்க
மாடிகளாக வளர்த்த பின்
சலித்து கொள்கிறது
சபித்தும் கொள்கிறது.
அஸ்திவாரத்தில் கிடப்பதெல்லாம்
வெறும் கல்லும் மண்ணும் என்று
சலித்து கொள்கிறது
சபித்தும் கொள்கிறது.

அஸ்திவாரங்களை அலட்சியபடுத்தி
ஆகாயத்தில் ஆடித்தவிக்கும்
அரக்குமாளிகைகளை அழகுபடுத்து.

தோளினிலும் முதுகினிலும்
சவாரி செய்து
சவாரியின் தோலை உரித்து
சப்பாத்துகள் செய்துகொள்.
விரியும் பயணத்தின்
பாதங்களை எப்போதும்
பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டியுள்ளது.
உதவியவனை உதைந்து விழுத்த
ஆத்மார்த்தமான ஆயுதம் அதுமட்டுமே.

ஏறியமர்ந்த முதுகுத்தண்டை பிளந்து
ஊன்றுகோலை வடிவமைத்துக்கொள்,
தடுமாற்றமின்றி முதுகிற்கு முதுகு
தாவிக்கொள்வதற்கு உதவிடலாம்.

எல்லைகளை தொட்ட கணம்
தாங்குபவனையும் சுமப்பவனையும்
தாழ்ந்தவன் என பிரகடனப்படுத்த தயங்கிடாதே.
சூழ்ச்சியின் வெற்றியே
'மனுதர்மம்´ என இறுமாப்பும் கொள்.

மதியின் விதி
மதித்தவர்களை மறந்ததில்லை,
மறந்தவர்களை மதித்ததில்லை.

வறண்ட வளியிலும்
குளிர்ந்த குளத்திலும்
வாழ்வை குலைத்து கொள்ளாது
வந்து போனாலும் பறவைகள்
வேடந்தாங்களை மறந்ததில்லை.

தாய் இன்றி பேறில்லை
வேர்களின்றி மரங்களில்லை.

4. விடுதலைக்குள் விடுகதை! 14 மார்ச் 2023

ஆக்கிரமிப்பின் அங்கீகாரமும்
அழிவின் மூர்க்கமும்
முடிசூடிக் கொண்ட யுத்த நுகத்தடியில்,
உறவின் இழப்பும்
இழப்பின் நினைவுகளை அழித்த
இனத்தின் மேலாதிக்கம்
இறுமாப்புக் கொள்ள,
நினைவுகளின் மீதான வன்முறை
உலக நுண்ணுயிருக்குமான
உரிமையை இழந்து விட்ட வேட்கை
உலகின் தெருக்களெங்கும்
கட்டுடைத்த கவனயீர்ப்பு
சுயமானத்தை பிரகடனபடுத்தி கொள்கிறது.

இனப்போருக்கு முன்னும் பின்னும்
இனப்பகைவர்களற்ற தெருக்களில்
மரித்த எம்மினத்தவனுக்கு
தாழ்த்தப்பட்டவனென பகைசூடி
பிணம் செல்ல வீதித் தடையும்
தீண்டத் தகாதோனுக்கு தகன தடை கோரி நிற்கின்ற
விடுதலை மறவர் நாம்.
மாற்றான் அடக்கு முறை
மகா பாவம் என முழங்கி
இனத்துக்குள் அடக்குமுறையை
பண்பாட்டு பாதுகாப்பு என
புறங்கையால் தள்ளிவிட்டு.
`புனித போர்´ எனக் கொக்கரித்து செரித்தனர்.
தாழ்வாரத்தின் கீழ் தேசியம் சேடமிழுக்க
யமனில்லாது செத்து மடிந்த சுடலையை
உயிர்த்தெழ வைத்துவிட
சாதியெனும் கும்பகர்ணப் பெரும்பேயை
உதிர் முடிகட்டி
தெருவெங்கும் இழுத்து வரும்
பாழ்பாடியின் பெருங்குடிகள்.

5. வைத்தியம்!

மூடிய கல்லறையினுள்
மூச்சு முட்டும் மூலவர்கள்.
`கடவுளை காக்க
மதத்தை காக்கவேண்டும்
மதத்தை காக்க
இனத்தை காக்க வேண்டும்
இனத்தை காக்க
நலிந்தவன் நரம்புகள் அறுத்து
வலிந்தவன் வானெழ வேண்டும்´
சிதையின் சிகரம் ஏறி
சீறி சினந்து சூளுரைத்தவன்
வானவில்லை மறைத்து தலைவனானான்.

தூறல் நின்று வானவில் மறைவதற்குள்
மடியில் மறைத்துவைத்த
ஒருபிடி அரிசியும் களவாடப் பட்டிருந்தது.
கடவுளை கூவி அழைத்தனர்
காக்கவில்லை,
மதத்தை தொழுதனர்
பலனில்லை,
இனத்தை வேண்டினர்
எழுந்திருக்கவில்லை,
தலைவனை இறைஞ்சினர்
காணவில்லை.
காக்க இன்னொருவன் வருவானென்று
கடவுள் துகில் கொள்ள சென்றார்

6. கவிதைகள் இரண்டு! 14 மே 2018

6a. இருப்பில் இல்லாத கடன்.

இரண்டு வீடு
மூன்று கார்கள்
இலட்சம் இலட்சமாக பணம்
வங்கி வைப்புகளில் இருந்தும்
நேரத்தை கடன் வேண்டியே
செலவு செய்யும்
மேலத்தேய பிச்சைக்காரர்கள் நாம்.

நேற்றய தினமும்
நேற்றய முன் தினமும்
இன்றய தினத்திலிருந்து
நேரத்தை திருடி தின்று
ஏப்பம் விட்டு விடுகின்றன..

நாளைய தினத்திலோ
நாளைய மறு தினத்திலோ இருந்து
நேரத்தை கடன் வேண்டியே
செலவு செய்ய வேண்டிய நிலை இன்று.
நாளாந்த கடனாளி மீண்டுவிடுவான்.
நாமோ ஆயுள் கடனாளியாக
சபிக்கப்பட்டவர்கள்.

நேரம் பொன்னானது தான்,
இந்த பொன்னை மட்டும் தான்
யாராலும் திருட முடிவதில்லை.
நான் மட்டுமே திருட முடிகிற
பாதுகாப்பான வங்கிக்கணக்கு.

எனக்கு நானே கடனாளியாகும்
காலக் கணிதம் இது.
வெளியே சொல்லி சிரிக்கமுடியாத
சோகமானாலும் வசதியாக போகிறது
இந்தக் கடன் மட்டுமே
யாருக்கும் தெரியவராததால்
மானத்தை காத்தும் வைக்கிறது.

வரவையும் செலவையும்
எந்த கம்ப்யூட்டரினாலும்
விடுவிக்க முடியாதது புதிர்
நேரக்கணக்கு மட்டும் தான்.

அனுமார் வால் போல்
நீண்டு வளர்கிறது நேரக்கடன்.
ஆயினும்
மூன்றாம் உலக நாடுகளை போல்
இதுவும் திரும்பிச் செலுத்தபடாத
அதிசய கடனாகிறது.

நேரக் கடனை வசூலிக்க
எந்தக் கடன் காரர்களும்
என் வீட்டு கதவை தட்டியதில்லை,
எமதர்மராசாவை தவிர..

6b. ஓரடி முன்னே, ஈரடி பின்னே.

முக்காலமும்´ டிஜிற்றல் ` பூச்சில்
சுகந்தம் என
உடல் மகிழ்ந்து
சுமைகளோடு மெல்ல மெல்ல
முன்னேறி தவழ்கிறது.

நெருப்பையும், சில்லையும் கண்டறிய
கற்காலத்திற்கு பறக்கின்ற
தலையின் தீவிர கழிவிரக்கம் இது.

குருகுலம் தொடங்கி
ஆண்டான் அடிமை
சமூகத்தை மீட்டெடுக்கும்
ஆசையில் விக்கி தவிக்கிறது.

குருடர்களுக்கு எல்லாம்
ஒற்றைக் கண்ணன் மட்டுமே
இராஜாவாக முடியும்.

இது விதியன்று
சதியின் மதியுமன்றோ?

7. ஏட்டிக்குப் போட்டி, சிறை ஒன்று அடிமைகள் வேறு. 12 மார்ச் 2018

7a. ஏட்டிக்குப் போட்டி.

பாலைவானத்து குருமணலை
நீர்வற்ற வறுத்து
குளிசைகளாக பிணைந்து
வறண்ட தொண்டைக்கு
தாகசாந்தி செய்யும்
வைத்திய வைரியர் நாம்.

எதிர்த்தவன் வீட்டு
முகடு எரிவதை
ரசித்து குதிக்கிறான்
தன் வீட்டு
அத்திவாரம் தகர்வதை மறந்து.

பற்ற வைத்ததவன்
தொற்றவைத்து பதறவைக்க
தகர்ந்தவன் தடுமாறுகிறான்
தகடு வைத்து தவறிழைக்க.

அநியாயத்தை மற்றோரு
அநியாயம் மூலம்
நியாயம் செய்து விடும்
இருட்டினுள் கருப்பை தேடும்
குருடர்களும் நாம் தான்.

7b. சிறை ஒன்று அடிமைகள் வேறு.

பாலைவானத்து குருமணலை
நீர்வற்ற வறுத்து
குளிசைகளாக பிணைந்து
வறண்ட தொண்டைக்கு
தாகசாந்தி செய்யும்
வைத்திய வைரியர் நாம்.

எதிர்த்தவன் வீட்டு முகடு எரிவதை
ரசித்து குதிக்கிறவன்
தன் வீட்டு அத்திவாரம்
தகர்வதை மறந்து போகிறான்.

பற்ற வைத்ததவன்
தொற்ற வைத்து பதற வைக்க
தகர்ந்தவன் தடுமாறுகிறான்
தகடு வைத்து தவறிழைக்க.

பகலென்று இரவையும்
இரவென்று பகலையும்
கண் திறவாமல் கதை சொல்லும்
கல்லாத காவலர்களின் களமிது.

பற்றி எரியும் நகரங்களை
பெற்றோல் ஊற்றி
அணைக்க வரும் தர்மவான்கள்.
தீயில் பொசுங்கும் குழந்தைகளிடம்
ஓடோடி வந்து மலர் தூவி
ஆசிர்வாதம் செய்கிறார்கள்
அடுத்த பிறப்பில்
தம் இனத்தில் பிறக்க வேண்டி.

அநியாயத்தை இன்னொரு
அநியாயம் மூலம்
நியாயம் செய்து விடும்
இருட்டினுள் கருப்பை தேடும்
குருட்டு விற்பன்னர்களும் நாம் தான்.

பிறக்கும் போது திறவாத கண்கள்
இறக்கும் போது மூடுவதில்லை.

8. கவிதைகள்: மறந்த கதை! ஐ போனில்´சுட்ட வடை!

8a.. மறந்த கதை

தலை பெருத்து விழிபிதுங்க
காற்றுப்போன பலூன் போல
உடல் ஒடுங்கி
முதுகெலும்போடு ஒட்டிக்கொள்கிறது,
அரித்துக் கொட்டிய
சுவாசப்பையின் நாளங்கள்
ஆக்சிஜன் காற்றை உள்ளிழுத்து
வைத்துக் கொள்ள முடியாதளவுக்கு
ஆயிரம் ஓட்டைகள்
கணத்தில் விழுந்து விடுகிறது.

ஈக்களும், கொசுக்களும்
புகையடித்து சுருண்டு வீழ்ந்து
துடிக்கும் போது
ரசித்து நகைத்தது போல்
பிஞ்சுகளின் மரண வலியையும்
மூச்சு திணறலையும்
நாசிகளின் பேரன்கள்
தொலைக்காட்சியில் லயித்துக் கொள்கின்றனர்.

மனித குலம் மேம்பட
மறவராய் புறப்பட்ட செம்பட்டை
மாற்றான் தோட்டத்து
மல்லிகைப் பூவை கூட
மலர விடாது தடுத்துவிடுகிறது. கணமும் தினமும்
நாசியத்தை மனச்சட்டியில் வைத்து
எரிக்கும் அயலவன்
முறிந்து விழும் முதுகெலும்புகளை சேகரித்து
சேனை படைக்கு
கவசம் தயாரிக்க தவமிருக்கின்றான்..

மத்திய கிழக்கில்
தொடங்கிய போர்கள்
மூன்றாம் உலக மாகாயுத்தத்திற்கான
அறிகுறியாக இருக்கலாமோ என
யூகிக்க சிரமப்பட்ட போதெல்லாம்
இல்லவே இல்லை
இவை இரண்டாம் உலக மாகா யுத்தத்தின்
நீட்சி தான் என
அறைந்து சொல்கின்றன
இரசாயன குண்டுகள்.

´அவுஸ்விட்ச்´ நாசி வதைமுகாம்
வரலாற்றின் முடிவல்ல,
அது சிரியாவில்
நடமாடும் முகாம்களாக மீளமைக்கப்படுகிறது.

8b. ஐ போனில்´சுட்ட வடை

காற்றை கிழித்து
கிழிந்த சட்டை போட்ட
நெளிந்த சைக்கிள்
சிறுவனின் கடிவாளத்தில் கிடுகிடுக்கிறது.

சைக்கிள் பாருக்குள்ளால்
அந்தப்பக்கம் இந்தப்பக்கமுமாக
மூச்சிரைக்கும் தலையும் உடலும்.

வறண்ட வாய்க்கால் மதகில்
படுத்தபடி
உச்சி வெய்யிலுக்கு புகை போடும்
உயர் தர மாணவனைக் கண்டு
வெறுங்காலை டயரில் தேய்த்து
எட்ட நின்று நிதானித்து சைக்கிள்
உருண்டு வந்து கேட்டது
" பொட்டலமா? போத்திலா?" .

எட்டாத ஸீட்டுக்குள்ளிருந்து
`குடு´ பொட்டலம் வெளிவந்து
பணப்பொட்டலம் உள்ளேறிக் குந்தியது.

கொடுத்தும் வேண்டியும்
உயிர் பரிமாறும் காலம் இது.

கிழிந்த சட்டைக்கோ
ஐ போன் வேண்டக் கனவு,
தெளிந்த சட்டைக்கோ
ஐ போன் விட்டு
வெளி நாடு போகக்கனவு.

வீதியால் நெஞ்சை நிமிர்த்தி வந்த
பெரிய வாத்தியார்
கண் காது மூச்சு எல்லாவற்றையும்
உள்ளிளுத்து மரக்கட்டையாய் மாறி
கரையால் ஒதுங்கிப் போனார்.

சந்தியில் பட்ட நால்வரிடம்
`ஊர் கெட்டுப்போச்சு´ என பல்லவி சொல்ல
`ஊரோட மனச்சாட்சி´ என
சரணம் சொன்னது சாராய நாற்றம்.

ஓயாத தேசியம்
ஒழித்துப்போட்ட வேர்கள் இவை.
வறுமையின் இயலாமை
வெறுமையின் நிழலில் துளிர்க்கிறது,

"கறையான் அரித்த தண்டவாளமும்
காண்பாயோ ?,
கண் கெட்டபின்
சூரிய நமஸ்காரமும் செய்வாயோ?"

9. வீதியின் நீதி

ஆயுதங்கள் நிறைத்து
தெருக்களை ஆட்சி செய்த காலங்களில்
வீதிகளில் கொல்லப்படுவதற்கு
ஆட்கள் இல்லாது போனது
குறையாகவே இருந்தது.

போரை அழித்த
சமாதானப் புறாக்கள்
புதைகுழிகள் மேல் மண்சோறு உண்டு
வீதிகளை புனிதப் படுத்தின.

சாதாரணனுக்கு
இனிப்பும் சல்யூட்டும் வழங்கி
முகஸ்துதி செய்தன.

நம்பி நிறைந்தன வீதிகள்.

தூதர்களை பூட்டி வைத்து
அலுகோசுகளை திறந்து வைத்தனர்.

தன்னியங்கி இயந்திரங்கள்
சாதாரணனனின் இதயத்துக்கு
துப்பாக்கி ரவைகள் பரிசாக வழங்கி
வாழ்ந்ததற்கு
வழக்குகள் பதிய வைக்கின்றன.

எத்தெரு ஆனாலும்
எத்திசை போனாலும்
அவை ஒரு வழிப்பாதையாகிவிடும்
உலக அதிசயம் இங்கு நிகழ்கிறது.

உயிர்ப்போடு போகிறவர்கள்
விறைப்பாக எடுத்து வரப்படுகிறார்கள்.

புறாக்களின் ஒட்டுச் சிறகுகள்
வீதியெங்கும் கொட்டி பரவுகின்றன.

வீதிகளின் விதி என்னவோ?
விதிகளின் வீதி என்னவோ?

10. நிலவுக்கு எம்பிக் குதி.

ஜனநாயகம் என்பது
நாணயத்தின் இரு முகங்கள் போன்றது.

தலையாக அவன் வென்றால்
காலடியில் பூவாக நீ நசிவதும்

பூவாக நீ மணம் கமழ்ந்தால்
அவன் சேற்றில் தலை மூழ்கிப் போவதும்
சக்கர சுழற்சியின்
வலிகள் மானிடா.

ஆயினும்
ஆண்டான் அடிமை என்பது
காலப்பெட்டகத்துள் அடைக்கபட்டதால்
உனது அடிமை விலங்கு
காலக்கிரகத்தில்
கழட்டப்பட்டே தீரும் தோழா.

சுண்டி வீசி
அக்கம் பக்கம் தவறாது
குத்தென நாணயம்
நின்றுபோன சகுனம்
`தலை´ கொய்யப்பட்டு
`பூ´ கசக்கப்பட்டு
சர்வ அதிகாரங்களும்
முண்டங்களினால் ஆளப்படும்.

பொன்
வெள்ளி
செப்பு
என விதம் விதமான கைவிலங்குகளை
தெரிவு செய்யும்
ஜனநாயக உரிமையை
நினைந்து நினைந்து
பூரித்து அடைகாத்து கரைவாய்,
பாலைவனத்தில் திசை தெரியாதவன்
காணல் நீரைக் கண்ட
நம்பிக்கை போல.

"ஜனநாயகம் என்பது
மக்களால்
மக்களைக் கொண்டு நடைபெறும்
மக்கள் அரசாங்கம் !".
என்று முழங்கு.

சக்கரத்தின் மையம் மட்டும்
எப்போதும் மாறாத புள்ளியில்
தரித்து நிற்கும்

மற்ற கட்டுரைகள் ...

  1. அதிஷ்டம் காத்திருக்கிறது - வெல்லுங்கள் 1,50,000 ரூபாய்கள்! எழுத்தாளர் ‘குரு அரவிந்தன் வாசகர் வட்டம்’ நடத்தும் உலகளாவிய 3வது திறனாய்வுப் போட்டி - 2025
  2. சிறுகதை: இறந்த வெண்மூலையில் கொஞ்சும் நினைவுகள் - டீன் கபூர் -
  3. நனவிடை தோய்தல் (7) - நினைத்தாலே இனிக்கும் நினைவுகள்: -நீராவியடி வாசிகசாலை - இந்து லிங்கேஸ் -
  4. ஜெயமோகனின் ‘ரப்பர்’ நாவல் முன்னகர்த்தும் அரசியல்! (2) - ஜோதிகுமார் -
  5. கம்பராமாயணத்தில் தன்மையணி - முனைவர் க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி(சுழல்-II), மீனம்பாக்கம், சென்னை 600061, -
  6. வாசிப்பு அனுபவப்பகிர்வு - எழுத்தாளர் நொயல் நடேசனின் படைப்புலகம்! மெய்நிகர் நிகழ்ச்சி – 21-12-2024 சனிக்கிழமை! - தகவல்: முருகபூபதி -
  7. பெரியார் - அம்பேத்கர் ஓவியப் போட்டி!
  8. ஜெயமோகனின் ‘ரப்பர்’ நாவல் முன்னகர்த்தும் அரசியல்! (1) - ஜோதிகுமார் -
  9. நனவிடை தோய்தல் 6 - நினைத்தாலே இனிக்கும் நினைவுகள்: சிரிப்பழகன்! -இந்து.லிங்கேஸ்-
  10. Nun other than ஆவணப்படம்! அருட்சகோதரி, அரசியல் செயற்பாட்டாளராக மாறிய கதை! சித்ரா லயனல்போப்பகேயின் வாழ்வும் வலிகளும்! - முருகபூபதி -
  11. கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலனுக்கு அகவை 80! இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
  12. நனவிடை தோய்தல் (5): - நினைத்தாலே இனிக்கும் நினைவுகள்: நட்பு - இந்து லிங்கேஸ் -
  13. களத்தில்.... - கடல்புத்திரன் -
  14. நுஃமானிசம் : முற்றுப்பெறாத விவாதங்கள் - ஈழக்கவி -
பக்கம் 15 / 108
  • முதல்
  • முந்தைய
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • அடுத்த
  • கடைசி