'தீர்த்தக்கரை' சாந்திகுமாரின் சமூக, அரசியற் செயற்பாடுகள் பற்றியதொரு பார்வை! (1-2) - ஜோதிகுமார் -

திரு.சாந்திகுமாரின் எழுத்துக்கள் இரு தளங்களில் உருவாகின. ஒன்று இலக்கியம். மற்றது சமூக-அரசியல்-வரலாற்று கட்டுரைகள். இலக்கியம் அவரது சிறுகதைகளையும், இலக்கிய விமர்சனங்களையும், உலக இலக்கியத்தின் மொழிபெயர்ப்புகளையும் உள்ளடக்கும். அவரது சமூக வரலாற்று அரசியல் கட்டுரைகள் மலையக வரலாறு, மலையக சமூக உருவாக்கம், தத்துவ அரசியல் விமர்சனங்கள் என்ற வகையில் வகைப்படும். இங்கு, அவரது அரசியல் சார்ந்த தத்துவார்த்த பார்வை பின்புலமாய் இருக்க இன – சாதீய அடிப்படைகளை கேள்விக்குட்படுத்திய கட்டுரை இது.
1
"ஒவ்வொரு முன்னெடுப்பும் மனிதனாலேயே மேற்கொள்ளப்படுகின்றன. அவை, ஒவ்வொன்றும் மனிதனாலேயே, மேலும், பிரமாண்டமடைகின்றன." -மக்ஸிம் கார்க்கி-
“மலையகம்”; என்ற குறியீடு, பல கேள்விகளையும், பதில்களையும் உள்ளடக்கிய ஒரு யதார்த்தம் என 1980களில் நந்தலாலா எழுத நேர்ந்தது. ஒரு 200 வருட கால நகர்வின் பின்னர் மலையகம் என்ற இவ்யதார்த்தம், வந்து சேர்ந்திருந்த, ஒரு வரலாற்று புள்ளியை, தன் வாழ்வின் மிக ஆரோக்கியமான காலப்பகுதியில், சரியாக எதிரொலித்த ஒரு சிலரில், சாந்திக்குமாரின் பெயர் மிக துலாம்பரமானது என்பதிலேயே அவரது முக்கியத்துவம் உள்ளடக்குகின்றது எனலாம். அது காலம் வரை, மலையகம் தொடர்பில் பனிமூடம் போன்ற ஓர் கற்பனை படர்ந்த கலங்கலான கருத்துப்படலமே எங்கும் பரவியிருந்ததாய் காணப்பட்டது. இது பொதுவானது. அதாவது, பனிமூடங்கள் என்பன உலகில் பொதுவானவைதான். ஏனெனில் கனவுகளிலும், பனி மூடங்களிலும் ஜீவிதம் நடத்துவதென்பது ஒருவகையில் வசதிகளையும், வாய்ப்புகளையும் உள்ளடக்குவதுதான் என ஆகிறது – யதார்த்தம் அதன் குரல்வலையை நசித்துப் போடும் வரை.
2
இவ்வகையில், இடதுசாரிகளின் கனவுகளிலும், மலையகம் என்ற இவ்யதார்த்தம், ஒரு பிரச்சினைகளும் இல்லாததாய் ஜீவிதம் கண்டது–புரட்சி வரட்டும் என்ற எதிர்ப்பார்ப்புடன். இருந்தும், 1930களில், இடதுசாரிகளின் கோட்டைகள் என வர்ணிக்கப்பட்ட இம்மலையகம், 50களில் தமது கட்சிகளின் தத்துவார்த்த புரள்வுகளினாலும், உள்ளிருந்து முகிழ்த்த புதிய யதார்த்தங்களினாலும், தன் இடதுசாரி சோபையை ஓரளவு களையத் தொடங்கியிருந்தது எனலாம்.



“இலங்கையில் வாழும் நான்கு இனக்குழுக்களுள் மலையகச் சமூகமும் ஒன்று. மலையகத்தில் மூன்று பல்கலைக்கழகங்கள் (பேராதனை, ஊவா வெல்லச, சப்பிரகமுவ ) உண்டு. ஆனால், இங்கு மலையக மக்கள் சமூகம், வாழ்வியல், கலை, கலாசாரம் தொடர்பான கற்கை நெறிகளோ, அடையாளமோ எதுவுமில்லை. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், கிழக்கிலங்கை பல்கலைக்கழகம் என்பன இலங்கைத் தமிழரின் அடையாளம் கொண்டவை. இராமநாதன் கலை அக்கடமி, விபுலாநந்தர் இசைக் கல்லூரி என்பன அத்தகையவை. அவ்வாறே தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் முஸ்லிம்களின் அடையாளம் உண்டு. சுருங்கக் கூறின், மலையக மக்களின் தனித்துவ அடையாளத்தை பிரதிபலிக்கும் வகையில் (சகல இன மாணவர்களும் பயிலும்) தேசியப் பாங்கான மலையகப் பல்கலைக்கழக கோரிக்கை முன்வைக்கப்படுகின்றது.


" இதை கொஞ்சம் பாருங்க..... எப்படி இருக்கு?"
அதிர்வுகளையும் திடீர் பாய்ச்சல்களையும் அதிகம் தராத, ஆனால் உணர்வுகளை ஊடுருவும் வார்த்தைகளைக் கொண்டு, புலம் பெயர்ந்த மனிதர்களின் மனப் போராட்டங்களைக் கூறும் செம்மையான படைப்பாக, வ.ந.கிரிதரனின் கட்டடக் கா(கூ)ட்டு முயல்கள் என்னும் சிறுகதைத் தொகுப்பினை இனம் காணலாம்.
இத்தொகுப்பில் உள்ள பல கதைகளை (ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை, மான்ஹோல், பொந்துப்பறவைகள், கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள், சாவித்திரி ஒரு ஸ்ரீலங்கன் அகதியின் குழந்தை!, சுமணதாஸ் பாஸ்….) ஏற்கனவே வாசித்துவிட்டேன். இருப்பினும் தொகுப்பாக ஒருங்கு சேர்ந்து பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி.
துடுப்பாட்டத்தில் ஓட்டங்களை எண்ணுவது போல, ரஸ்ய – உக்ரைன் யுத்தத்தில் நாட்களை எண்ண வேண்டிய துர்ப்பாக்கிய நிலை எமக்கு ஏற்பட்டிருக்கின்றது. சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் போது, கனடாவில் அந்தந்த நாட்டு ரசிகர்கள் தங்கள் நாட்டுக் கொடிகளைத் தங்கள் வண்டிகளில் பறக்கவிடுவது சாதாரண நிகழ்வாக இருக்கும். ஆனால் இம்முறை உக்ரைன் கொடிகளைப் பறக்க விட்டபடி செல்லும் பல வண்டிகளை வீதிகளில் காணமுடிகின்றது. இன்றுடன் யுத்தம் ஆரம்பித்து 27 நாட்களாகிவிட்டன. ரஸ்யா தனது ஆயுதப் பலத்தை மேற்கு நாடுகளுக்குக் காட்டுவதற்காக 18 ஆம் திகதி பரிட்சார்த்தமாக உக்ரைனில் மேற்கே உள்ள டெல்யாரின் என்ற கிராமத்தில் இருந்த இராணுவ ஆயுதக் களஞ்சியத்தை ‘கைப்பர்சோனிக் ஏவுகணை’ மூலம் தாக்கி அழித்திருக்கின்றது. இந்த ஏவுகணை ஒலியைவிட 5 மடங்கு வேகம் கொண்டதால், இந்த ஏவுகணையைத் தாக்கி அழிப்பது கடினமானது. அமெரிக்காவிடம் தற்போது இருக்கும் பாதுகாப்பு ராடர்களால் இதைக் கண்டுபிடிப்பது கடினமாக இருக்கலாம் என்று ஆய்வாளர் கருதுகின்றனர். இது போன்ற ஏவுகணைத் தாக்குதலில் இருந்து பாதுகாக்கக்கூடிய இரும்புக் கவசங்கள் கொண்ட 3 கப்பல்கள் அமெரிக்காவிடம் இருந்தாலும், இன்னும் அவை வெள்ளோட்டம் விடப்படவில்லை.
-






'அறிஞர் அ.ந.கந்தசாமி' என்று அவரது புலமையின் காரணமாக அழைக்கப்பட்டவர் எழுத்தாளர் அ.ந.கந்தசாமி. கலாநிதி க.கைலாசபதி அவர்களே தனது 'ஒப்பியல் இலக்கியம்'நூலை இவருக்குச் சமர்ப்பித்திருக்கின்றார். அச்சமர்ப்பணத்தின் பின்வருமாறு கூறியிருப்பார்:



நீண்ட நெடுநாளாக சங்க இலக்கியங்களை படிக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்குள் இருந்து வந்தது. அமெரிக்காவிலுள்ள ஹூஸ்டன் பாரதி கலை மன்றம் வழியாக எனக்கு ஓர் அரும்பெரும் வாய்ப்பு கிட்டியது. ஆம் பாரதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அமெரிக்காவின் ஹூஸ்டன் பாரதி கலை மன்றம் நிகழ்த்திய ஞானபாரதி விருதுக்கான நான்கு கட்ட பேச்சுப் போட்டி நடைபெற்றது. அதில் அரையிறுதிச் சுற்றில் சங்க இலக்கியங்களுள் ஒன்றான பட்டினப்பாலையையும் , நெடுநல்வாடையையும் அறியும் வாய்ப்பு கிடைத்தற்கரிய வரமாக கிடைத்தது.தமிழை வாழ்த்துவதற்கும் , வளர்ப்பதற்கும் கடின உழைப்பை உரமாக இட்டு தமிழ்த்தொண்டு ஆற்றி வரும் அமரிக்காவின் ஹூஸ்டன் பாரதி கலை மன்றத்திற்கு நிச்சயம் தமிழ் கூறும் நல்லுலகம் சார்பாக கோடி நன்றிகள்.



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









