இலங்கை மாணவர் கல்வி நிதியம் ( 1988 – 2022) CSEF ஆண்டுப்பொதுக்கூட்டம்!

அவுஸ்திரேலியாவில் நீண்ட காலமாக இயங்கிவரும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் – இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் எதிர்வரும் 27 ஆம் திகதி ( 27-08-2022 ) சனிக்கிழமை மாலை 4-00 மணிக்கு மெல்பனில், வேர்மன் தெற்கு சமூக நிலையத்தில் ( Vermont South Learning Centre - 1 Karobran Drive, Vermont South VIC 3133.) நிதியத்தின் தலைவர் திரு. லெ. முருகபூபதியின் தலைமையில் நடைபெறும்.
இலங்கையில் முன்னர் நீடித்த போரில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கும், வறுமைக்கோட்டின் கீழிருக்கும் மாணவர்களுக்கும் கல்வி சார்ந்த தேவைகளுக்காக உதவி வரும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் கடந்த ஆண்டுப் பொதுக்கூட்டத்தின் குறிப்புகளையும் ஆண்டறிக்கையையும் நிதியத்தின் செயலாளர் திருமதி விதுஷினி அருளானந்தம் சமர்ப்பிப்பார். நிதிச்செயலாளர் செல்வி திவானா கிருஷ்ணமூர்த்தி நிதியறிக்கையை சமர்ப்பிப்பார். துணை நிதிச்செயலாளர் திரு. விமல் அரவிந்தன், நிதிய உறுப்பினர் திரு. ரவி – ரவீந்திரன் ஆகியோர், நிதியத்தின் ஊடாக பயனடையும் மாணவர்களின் நிதிக்கொடுப்பனவு மற்றும் அவை சார்ந்த நிருவாக நடைமுறைகள் குறித்த விளக்கங்களை உறுப்பினர்களுக்குத் தெரிவிப்பர்.


தம்பிமுத்துச் சம்மாட்டியின் இயந்திரப் படகுகள் ஆழ்கடலில் ஓடத் தொடங்கியபின் களங்களில் விரிக்கப்பட்ட தங்கள் படுப்பு வலைகளில் மீன் பிடிபாடு குறைந்துவிட்டதென்ற உண்மை, ஒரு சிலருக்கு அதிக நாட்களுக்குப் பின்பே தெரிய வந்தது.
முன்னுரை

செப்டம்பர் 7, 1936ம் ஆண்டு; ஆஸ்திரேலியாவின் தஸ்மேனிய மாநிலத்தில் இருந்த ஹோபார்ட் பேமொறிஸ் மிருகக்காட்சிச்சாலை அன்றும் என்று போல் விடிந்தது. ஆனால் அன்று ஒரு சோகநாள்! அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த உலகின் கடைசி .தஸ்மேனியன் புலி (Tasmanian Tiger) இனி இல்லை. முதுமை காரணமாக தன் இறுதி மூச்சைவிட்டது. உலகு ஒரு உயரினத்தை நிரந்தரமாக இழந்தது நின்றது!
“நல்ல கலை ‘ இயற்கையின் பிரபஞ்ச பேரியக்கத்தின் வாசலுக்கே’ வாசகனை கொண்டு சேர்த்துவிடும் என்று போதிப்பார் அவர். (பக்கம்:100:நவீனத்துவத்தின் முகங்கள்) மேலும் கூறுவார்: “நல்ல படைப்பு நாம் அறியாத பல நூறு ஆழ்மன சக்திகள் திரண்டு உருவான வடிவம்” என. (அதே) அதாவது, அவரது பார்வையில் ஒரு புறம் படைப்பாளி. மறுபுறம் வாசகன். அதாவது, வாசகனை, “பிரபஞ்ச பேரியக்க வாசலுக்கு” இட்டுச் செல்லும் படைப்புகள் உண்டு. இவற்றை உருவாக்குவது படைப்பாளியின் “ஆழ்மனசக்தி”. மேலும், இப்படி ‘பிரபஞ்ச பேரியக்கத்தின் வாசலுக்கு’ இட்டுச் செல்லும் ஆற்றலை உருவாக்கும், ‘ஆழ்மனசக்திகளின்’ குணாம்சம் குறித்தும் ஜெயமோகன் விளக்கம் கூறத் தவறவில்லை.
இலங்கையில் தேசிய இனப்பிரச்சினை கூர்மையடையத் தொடங்கி ஐம்பது ஆண்டுகள் நிறைவடைந்துள்ள காலப்பகுதியில் ( 1972 – 2022 ) தமிழ் ஈழவிடுதலைக்காக முதல் முதலில் களமிறங்கிய பெண்ணைப்பற்றிய இந்தப்பதிவை எழுதுகின்றேன். இலங்கையில் ஏற்கனவே 1915 இல் கண்டி கலவரமும், 1958 இல் தென்னிலங்கையில் மற்றும் ஒரு இனக்கலவரமும் வந்திருந்தாலும், 1965 இல் ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து தமிழரசும், தமிழ்க்காங்கிரஸும் அரசமைத்து தேன்நிலவு கொண்டாடினர். ஆனால், அந்த ஐக்கிய தேசியக்கட்சி 1970 இல் தோல்வி கண்டபோது, ஶ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் தலைமையில் சமசமாஜக்கட்சியும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து அரசை அமைத்தது. அதற்கு மக்கள் அரசாங்கம் என்று பெயரையும் சூட்டிக்கொண்டது.
தொல்பழங்காலந்தொட்டு தமிழ்நிலத்தில் சிறந்த பண்பாட்டு நெறிகள் வளர்ந்தோங்கியுள்ளன. தூய தமிழ் மரபுகள், வாழ்க்கை நெறிகள் காலந்தோறும் தமிழ் இலக்கியத்தில் பதிவு செய்யப் பெற்றுள்ளன. ‘பண்புடையார்ப் பட்டுண்டுண்டு உலகம்’ என்பது திருக்குறள் விதித்த விதியாகும். உலகின் மூத்த நாகரிகங்களில் முதன்மையானது தமிழ் நாகரிகமாகும். தமிழ் மக்களின் பண்பாட்டியற் கூறுகளில் ஒன்றான விருந்தோம்பல் பண்பாடுப் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.





ஆரம்ப காலத்திலிருந்து வெளியாகும் தமிழ் இணைய இதழ்களான திண்ணை , பதிவுகளின் ஆரோக்கியமான இலக்கியப் பங்களிப்பு பற்றி நான் நிச்சயம் பெருமைப்படுகின்றேன். திருப்திப்படுகின்றேன். பதிவுகள் இணைய இதழைத் தொடங்கியபோது முக்கியமான நோக்கங்களாக இருந்தவை: என் படைப்புகளை இணைய மூலம் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும். அதே சமயம் இணையத்தில் தமிழ் எழுத்துகளை எழுதுவதற்குத் தூண்டுகோலாகவிருக்க வேண்டும். இவ்விதமான எண்ணங்களோடு பதிவுகள் இணைய இதழை ஆரம்பித்தேன். அப்போது வலைப்பதிவுகள் ஏதுமில்லை. இவ்விதமானதொரு சூழலில் முரசு அஞ்சல் எழுத்துரு எனக்குப் பெரிதும் கை கொடுத்தது. ஏனென்றால் எனக்குத் தமிழ்த் தட்டச்சு செய்வதில் பெரிதும் ஆற்றலில்லை. ஆனால் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்வது அதனுடன் ஒப்பிடும்போது இலகுவாகவிருந்தது. இவ்விதம் பதிவுகள் இணைய இதழை ஆரம்பித்து படைப்புகளைத் தமிழில் பிரசுரித்தபோது அது இணையத்தில் தமிழ் வாசகர்களைக் கவர ஆரம்பித்தது. பலர் தம் படைப்புகளை அனுப்ப ஆரம்பித்தார்கள். அப்பொழுது அவ்விதம் படைப்புகளை அனுப்புபவர்களுக்கு நான் கூறியது: பதிவுகளுக்கு படைப்புகள் அனுப்புபவர்கள் படைப்புகளை பதிவுகளுக்கு உரிய எழுத்துரு பாவித்துத் தட்டச்சு செய்து அனுப்ப வேண்டுமென்பதுதான். இதற்கு முக்கிய காரணங்கள்: ஒன்று மீண்டும் தட்டச்சு செய்யும் சிரமம் இல்லை. அடுத்தது தமிழில் தட்டச்சு செய்வதன் மூலம் எழுத்தாளர்களை இணையத்தமிழுக்கு அறிமுகப்படுத்துவது. இவ்விதம் தமிழில் தட்டச்சு செய்து அனுப்பப்படும் படைப்புகளையே பதிவுகள் ஏற்றுக்கொண்டு பிரசுரிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளது.



பழந்தமிழ் இலக்கியச் செல்வங்களுள் இன்று குறை நூலாய்க் கிடைத்துள்ளவற்றுள் முத்தொள்ளாயிரமும் ஒன்றாகும். புறத்திரட்டு நூலிலிருந்து தொகுக்கப்பட்ட நூற்றெட்டுப் பாடலோடு பழைய உரைகளிலிருந்து தொகுக்கப்பட்ட இருபத்திரண்டு பாடல்களும் சேர்ந்து தற்பொழுது வழக்கில் இருப்பது நூற்று முப்பது பாடல்களாகும். மூன்று, தொள்ளாயிரம் ஆகிய இரு சொற்களும் சேர்ந்து முத்தொள்ளாயிரம் எனப் பெயர் பெற்றது. இந்நூற்பாடல்கள் சேர, சோழ, பாண்டியர் ஆகிய மூவர் வரலாற்றையும் சுட்டுகின்றன. ஒவ்வொருவருக்கும் தொள்ளாயிரம் பாடல்கள் வீதம் இரண்டாயிரத்து எழுநூறு பாடல்களைக் கொண்ட இந்நூல் கனலாலும், புனலாலும், காற்றாலும், காழ்ப்பாலும் அழிந்தன போக எஞ்சிய நூற்று முப்பது பாடல்களைக் கொண்டுள்ளது.



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் 








