ராசமணியும் பள்ளிக்கூடமும் - முனைவர் பெ.இசக்கிராஜா , உதவிப்பேராசிரியர் -
![]()
காலங்காலமாக ஆரம்பநிலை பள்ளியின் சுவர்கள் பாசிக் கரைபடிந்த சுவர்களோடு காட்சியளித்தன. மேற்கூரை ஒழுகும் வண்ணமாக உடைந்த ஓடுகளாய் சொருகியிருந்தன. பள்ளியின் வலது புறம் ஆசிரியர்களுக்கென்று.. ஒரே ஒரு கழிவறை மட்டும் அதுவும் நிரந்தப் பூசனம் பூத்ததாய் நிராகரிக்கப்பட்டிருந்தது. கழிவறையை ஒட்டி உயரமாக வளர்ந்து நின்ற ஒற்றை புளியமரம். புளியமரத்திற்கென்று தனி வரலாறும் உண்டு.. புளிய மரத்தின் கதையைக் கேட்கும் போதெல்லாம் ராசமணி தான் ஞாபகத்திற்கு வருவதுண்டு.
சக ஆசிரியர்களுக்கும் அவரிடம் படித்த மாணவர்களுக்கும் ஊர்காரர்களும் அவ்வப்போது இக்கதையை வாயில் போட்டு மெல்வதுண்டு. குப்பை மேடாகக் கிடந்த பள்ளியை சீரமைக்கத் தொடங்கிய காலம் என்பது, ராசமணி பள்ளிக்கு ஆசிரியராக பொறுப்பேற்று வந்த நாள் தான் பள்ளிக்கு விடிவுகாலம் ஆரம்பித்தன என்பது தான் அன்றைய அவ்வூரின் வரலாறு. கிழக்கு எப்போது விடியும் என்பதே உழைக்கும் வர்க்கத்தின் குறியீடு. ஆனால் மனிதப்பிணத்தைப் புதைக்கும் இடுகாட்டைத் தாண்டித்தான் அவ்வூரின் ஒரு நுழைவாயில். வழிநெடுக புன்னை மரங்கள் வரிசையாக நடப்பட்டிருக்கும் ராஜபாட்டை தான் அவ்வூரின் கிழக்கு எல்லை. மேற்கின் எல்லையாக சுந்தரநாச்சியம்மன் கோயில் இருக்கும். வடக்கேயும் தெற்கேயும் கழனிகளும் தோப்புகளுமே எல்லைகளாக விரிவடைந்திருக்கும்.
எங்கும் பச்சை வண்ணம் வாழ் சுழற்றியபடியே இருந்தது. தெற்கு தேயாமலும் வடக்கு வாடாமலும் பார்ப்பதற்கே குளிர்ச்சியாகவும் ரசிப்பதாகவும் இருந்தது. வயகாட்டுக்குச் செல்லவும் நாற்று நடவ, தண்ணீர் பாய்ச்ச என எல்லாவற்றிற்கும் நாச்சியாத்தாளை வழிபட்டு பிள்ளையார் சுழி யிட்டுச் செல்வது தான் வழக்கம். முப்போகமும் செழித்து வளர நாச்சியாத்தா எப்போதும் குறை வைத்ததில்லை அவ்வூருக்கு ஆகவே நாச்சியம்மாளை போற்றும் விதமாக பெண்பிள்ளைகளுக்கு பெரும்பாலும் சுந்தரநாச்சியார், வள்ளி, வீரநாச்சி, வீராத்தாள் என பெயர் சூட்டுவது வழக்கமாகவே தொன்று தொட்டு வருகின்றது.



ஒலி எந்த உயிரினத்தையும் ஒரு கணம் திசைதிரும்ப வைக்கும். தொட்டிலில் அழும் குழந்தை, திடீரென ஒரு வேற்று ஒலியைக் கேட்டதும், தன் அழுகையைச் சட்டென நிறுத்திவிடுகிறது. எங்கோ ஒரு மூலையில் தானியங்களைக் கொறித்துக்கொண்டிருக்கும் ஒரு முயல்க்குட்டி சற்றே தொலைவில் ஏதோ ஒரு சத்தம் கேட்டதும் அது கொறிப்பதை நிறுத்தித் தன் காதுகளை மேலே உயர்த்திச் சு10ழ்நிலையை அவதானிக்கிறது. உலகிலுள்ள உயிர் வர்க்கங்கள் யாவுமே ஒலி அலைகளையும் ஒலிக் குறிப்புகளையும் வைத்தே தம்மையும் தம் இனத்தையும் எதிரிகளிடம் இருந்து பாதுகாத்துக் கொள்கின்றன.

எனது படைப்புகள் பற்றி வெளியான ஆய்வுகள் பற்றி நானறிந்த தகவல்கள் இவை. தமிழகம் , இலங்கையில பட்டப்படிப்பு மாணவர்களால், பேராசிரியர்களால் ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அவை பற்றிய விபரங்கள் கீழேயுள்ளன. இவர்கள் அனைவருமே என் படைப்புகளூடு என்னைக் கண்டடைந்தவர்கள். நான் நேரில் அறிந்தவர்கள் அல்லர். படைப்புகள் தம் வாசகர்களைக் கண்டடையும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை மிக்கவன் நான். அவ்விதமான படைப்புகளே நின்று பிடிக்கும் என்பதிலும் நம்பிக்கை மிக்கவன் நான். 
வறுமைத் தடாகத்தில் மலர்ந்திட்ட மாமலர். புதுமைக்கு வித்திட்ட புரட்சிக்கவி.விடுதலைக்குக் கீதம் இசைத் திட்ட வீரக்கவி.இருப்பதில் இன்பத்தைப் பெருக்கிப் பார்த்திட்ட ஏற்றமிகு கவி.பழமைக்கும் புதுமைக்கும் பாலமாய் அமைந்திட்ட பாரத்தின் பண் பாடும் கவி. அஞ்சாத சிங்கமாய் ஆர்ப்பரித்து நின்ற அழகு தமிழ்க் கவி. அந்தக் கவிதான் எங்கள் முண்டாசு கட்டி முறுக்கு மீசையுடன் எடுப்பாய் திகழ்ந்து - பாரதி என்று பட்டொளி வீசி நின்ற கவிக் குயிலாகும். பாரதி என்றதுமே அதில் ஓர் அதிர்வு உருவாகிறதல்லவா ! பாரதி என்றதுமே அதில் ஒரு புது உற்சாகம் பீறிட்டு வருகிறதல்லவா ! பாரதி என்றதும் தளர்வு அகன்று நிமிர்வு எழுகிறதல்லவா ! அந்தளவுக்கு " பாரதி " என்பது ஒரு மந்திரமாய் தமிழுலகில் நிலைத்து நிற்கிறது என்பதை மனத்திருத்துவது அவசியமாகும்.
சென்ற ஞாயிற்றுக்கிழமை 03-12-2023 அன்று மாலை நான்கு மணியளவில் அகில் சாம்பசிவம் அவர்களைப் பிரதம ஆசிரியராகக் கொண்ட இலக்கியவெளி இதழ் குழுவினர் வெளியிட்ட ‘மொழிபெயர்ப்புச் சிறப்பிதழ்’ வெளியீட்டு விழா ரொறன்ரோவில் உள்ள தமிழ் இசைக் கலாமன்றத்தில் சிறப்பாக நடைபெற்றது. சிந்தனைப்பூக்கள் பத்மநாதன், எழுத்தாளர் குரு அரவிந்தன், கவிஞர் மீரா கனி விமலநாதன், தமிழக எழுத்தாளர் முனைவர் கரு முத்தய்யா, எழுத்தாளர் திரு. த. சிவபாலு ஆகியோர் மங்கள விளக்கேற்றி வைத்ததைத் தொடர்ந்து திரு.த. சிவபாலு அவர்களின் வரவேற்புரை இடம் பெற்றது.


இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர் 1971 ஆம் ஆண்டு தென்னிலங்கையில் நடந்த சிங்கள இளைஞர்களின் ஆயுதக்கிளர்ச்சியை மறந்திருக்கமாட்டீர்கள். பல்கலைக்கழக மாணவர்களும், படித்துவிட்டு வேலை வாய்ப்பில்லாமல் அவதியுற்ற ஏழை – மத்தியதர இளைஞர்களும் தென்பகுதியில் முன்னெடுத்த அந்தப் போராட்டம் குறுகிய காலத்தில் அரசின் தீவிர அடக்குமுறையினால் முறியடிக்கப்பட்டது. அப்போது கைதானவர்கள்தான் ரோகண விஜேவீரா, லயனல் போப்பகே, டி. ஐ. ஜி. தர்மசேகர, விக்டர் ஐவன், உபதிஸ்ஸ கமநாயக்க முதலான இளைஞர்கள். இவர்களில் ரோகண விஜேவீரா, ரஷ்யாவில் லுமும்பா பல்கலைக்கழகத்தில் படித்துவிட்டு திரும்பியிருந்தவர். லயனல் போப்பகே பேராதனை பல்கலைக் கழகத்தில் பொறியியல் பீடத்தில் படித்தவர்.


கொழும்பில் என்னை ஓர் இளைஞர் தேடி வந்தார். “கலாநிதி சபா" ஜெயராசா உங்களிடம் அனுப்பினார். இலக்கிய முன்னோடி அ.ந. கந்தசாமியைப் பற்றிய குறிப்புகளைத் தந்துதவ வேண்டும், அ.ந. கந்தசாமியைப் பற்றிய பல்கலைக்கழக ஆய்வுக்கு குறிப்புகள் தேவை என்றார். அந்தப் பல்கலைக் கழக மாணவருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தினகரன் வார மஞ்சரியில் சில வாரங்கள் தொடராக எழுதிய அறிஞர் அ.ந. கந்தசாமியைப் பற்றிய 'சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்' என்ற கட்டுரையையும், மற்றும் அ.ந.க.வை பற்றி எழுதிய மற்றும் குறிப்புகளையும் கொடுத்து அனுப்பினேன்.

நான்கு நாட்களுக்கு முன் அதிரடியாக ஒரு செய்தி மின்னஞ்சல் பெட்டிக்குள் விழுந்திருந்தது. வாசிப்பதற்கு முன்னரே படங்கள் உள்ளடக்கத்தின் பெரும்பாகத்தை வெளிப்படுத்தி விட்டன. தலைப்பு அசத்தலாக இருந்தாலும் தலைக் கதிரையில் இருந்தவரைக் கண்டதும் சப்பென்று போய்விட்டது. ஆனாலும் முயற்சிகளின் நோக்கம் நல்லதாயின் அவை ஆராயப்பட வேண்டும் என்பதில் சம்மதம் உண்டென்ற படியால் உள்ளே சென்றேன்.
பத்து மாதம் சுமந்தேன் - உன்;


நான் இலக்கியம் வாசிப்பது குறைவு. கிரிதரனின் புத்தக வெளியீட்டில் வாங்கிய புத்தகங்களின் பகுதிகளை சென்ற இரவுதான் வாசிக்க முடிந்தது. எனது மனதில் எழுந்ததைப் பகிர்ந்து கொள்கிறேன்.
யோகரட்னம் அவர்களுக்கு நன்றி. - பதிவுகள்.காம் -


கருணை யோகன் என அழைக்கப்படும் பேராசிரியர் செ.யோகராஜா இன்று மதியம் காலமானார். கேன்சர் நோய் என அறிய ப்பட்டு அவர் மகரம ஆஸ்பத் திரியில் அனுமதிக்கப் பட்டார். சென்ற மாதம் நான் மட்டக் களப்பு சென்றபோது வீடு தேடி வந்து பல மணி நேரம் உரையாடிச் சென்றார். நோயாளியைப் போல தோற்றமளித்த. அவரைப் பார்த்து 'உடனடியாக வைத்தியரிடம் செல்லுங்கள்" என்று கூறினேன்.
பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









