கவிஞர் பூராமின் கவித்துளிகள்!!

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) கவிதைகள்!

1. ஆறாத்துயர்
ஒரு நம்பிக்கையில் வெளியே வருபவளிடம்
’இருட்டிய பின் ஏன் வருகிறாய்’ என்ற கேள்வி
பகலிலும் அவள் தனது நம்பிக்கையைப் பறிகொடுக்கும்படி
செய்துவிடுகிறது.
பயத்தில் பதுங்கிக்கொள்ள குகை அல்லது பதுங்குகுழி
தார்ச்சாலையில் இருப்பதில்லை.
இருந்தாலும் அங்கிருந்து கைபேசியில் யாரிடமேனும்
உதவிகோர ‘சிக்னல் கிடைக்காது.
’பலாத்காரம் தவிர்க்கப்படமுடியாதபோது
படுத்து அனுபவி’ என்று ‘quotable quote’
பகன்றவனை
நெருப்பில் புரட்டியெடுக்கவேண்டும்.
ஓயாமல் எரிகிறது.....

"இரவு முழுக்க
வீட்டின்
முன்னறையில்
விளக்கெரிய
குறுக்கும்
நெடுக்குமாக
உலாத்திக்
கொண்டிருந்த
அப்பாவின்
கோபம்
குளிர்ந்திருந்தது.....
அதே அறையில்
கிடத்தி
வைக்கப்பட்டிருந்த
அப்பாவின்
உடலும்
குளர்ந்திருக்க
ஓயாமல்
எரிந்து கொண்டே
இருக்கின்றது
அவ்வறையின்
குண்டு பல்பும்
அக்கா
எழுதிச் சென்ற
கடிதமும்......"
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
மனக்குறள்:28 , 29 & 30

வாகை சூடிய ஹரி ஆனந்தசங்கரி
வையமெலாம் போற்றும் வகையான வெற்றியின்
கைகளிலே வென்றான் ஹரி !
ரூச்றிவர் வண்ணம் உளமாகிச் செந்தமிழ்
ஆச்சுதே மீண்டும் அரண் !
இன்பக் கனடா இயன்றபத் தொன்பதின்
நற்தேர்தல் சொல்லும் நலம் !
சனரஞ் சகத்தோடும் சான்றாகும் யஸ்ரின்
கனடாவென் றானார் கரம் !
எந்நாளும் மக்கள் இதயத் திருப்பாகும்
நல்லோர்க் கெனவாகும் நாடு !
முள்ளிவாய்க் காலும் முகத்தும் கனலாகி
அள்ளுதுயர் கண்டார் அரி !
கனடா நிலைப்பாடு கண்டதுவே அய்நா
இனத்தோடும் எண்ணம் எடுத்து !
போர்தந்த நாட்டிற் புதையுற்ற தாய்நிலத்தில்
நேர்கண்ட மாந்தன் நெறி !
ஐந்தல்ல நூறல்ல ஆயிரம்பல் லாயிரம்
தந்துமண் கண்டான் தனம் !
மண்ணொடும் நீராக வயலொடும் நெல்லாக
எண்ணிய மாமனிதன் என்க !
அஞ்சலி: ஆழ்துளை அவலம்
- மணப்பாறைக்கு (திருச்சி) அண்மையிலுள்ள நடுக்காட்டுப்பட்டியில் குழாய்க்கிணற்றினுள் தவறி விழுந்த இரன்டு வயதுக்குழந்தை சுர்ஜித்தைக் காப்பாற்றுவதற்கான மீட்பதற்கான முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்தன. இறந்த நிலையில் குழந்தையின் உடல் மீட்கப்பட்டது. -

கண்ணீரே வந்தது
ஆழ்துளைக்குள்
அழுகையொலி - இன்னும்
எதிரொலித்தே நிற்கிறது
நன்றி வரைத்தன்று.....

"திடீரென்று
அலுவலகம்
புகுந்த
அந்தத்
தெருநாயின்
சேறு படிந்த
கால்தடம்
நாள்தோறும்
வீட்டிற்கு
வெளியில்
கிடக்கும்
அப்பாவின்
சேறு அப்பிய
செருப்பினை
நினைவுப்படுத்துகிறது....
வாலாட்டியே
கடந்துபோகும்
அதன்
வாலசைவிற்கு
மண்டியிட்டது
என் வாழ்க்கை...."
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
ஆனந்தமாய் தீபாவளி அமைகவென வேண்டி நிற்போம் !

தித்திக்க தித்திக்க பட்சணங்கள் செய்திடுவோம்
தெருவெங்கும் மத்தாப்பு வெடிவெடித்து நின்றிடுவோம்
மொத்தமுள்ள உறவுகளை முகமலர்ச்சி ஆக்கிடுவோம்
அத்தனைபேர் ஆசியையும் அன்புடனே பெற்றிடுவோம்
சித்தமதில் சினமதனை தேக்கிவிடா நாமிருப்போம்
செருக்கென்னும் குணமதனை சிறகொடியப் பண்ணிடுவோம்
அர்த்தமுடன் தீபாவளி அமைந்திடவே வேண்டுமென
அனைவருமே ஆண்டவனை அடிதொழுது பரவிநிற்போம் !
இரவில் நான்

இரவுக் கட்டியை விழிநீரிட்டு இழைத்தாலும்
அடுத்த நாளும் அடரிருட்டோடு கிடக்க
மிச்சத் துளிகளால் குழைத்தப் பின்னும்
விடாது தொடர்ந்த கருமையை
துடைத்தழிக்க எதுவுமில்லாத
வெறுமையை நிரப்பும்
ஞாபக குவியலை
கிளறித் தேடியதில்
மா -னீ கவிதைகள்!

1.
இனிதே நிறைவு பெற்றது .
பிறகு
அனைவரும் அமர்ந்தனர்.
நான்கிற்கு நான்காய் வீடு
நடுவில் நீளமாய் மேஜை
துணி விரித்துப் போட்டு
விளைநிலம் எழுதி
வீடு எழுதி
வரைபடம் சரி பார்த்து
கையொப்பம் பெற்று
தொகை எண்ணி சம்மதித்து
மோதிரம் மாற்றிய
பிறகு
அனைவரும் அமர்ந்தனர்.
முனைவர் சி.திருவேங்கடம் கவிதைகள் ஐந்து!

1. வேழத்தின் ஓலம்
அடர்ந்த பெருங்காட்டிலிருந்து
வேட்கை மிகுதியால்
நீர் தேடி அலைந்து
திரிந்து திசைமாறி
கணப் பொழுதில்
பாதுகாப்பற்ற
தண்டவாளத்தை
யாதுமறியாமல்
கடந்து செல்ல
முனைகிறது
பேருருவம் கொண்ட
யானை.
வேதா. இலங்காதிலகம் (டென்மார்க்.) கவிதைகள் மூன்று!

1. பகல் வேடக்காடு....
நன்மதியைத் துன்மதி ஆக்குபவர்
வன்முறையாளர் பழிவாங்கும் சிந்தனையாளர்
இன்பமில்லா விடமேறிய சொற்களுடன்
அன்புக்காட்டைக் கொலைக்காடு ஆக்குபவர்
புன்னகையில் மர்மங்கள் புதைத்துள்ள
தென்பற்ற உறவுகள் விலக்குதற்குரியன.
பூச்சொரியும் என்று புறப்பட்ட
பாதங்கள் பாவிசை கேட்காது
பரவச மொழியை இழந்தால்
பந்தம் அறுத்திடும் ஒரு
பகல் வேடக்காடு தானே
பகிரங்க வாழ்வு மேடை.
முகத்தை முகம் பார்த்து
முக்காடற்று நிமிர்ந்து நேராக
முகம் கொடுப்பதே சுயநடை
முனகி விம்மும் மனமுகடு
முரணாகிச் சரிவதும் இயல்பு.
தரமற்ற நிலையின் தழுவலேயிது!
மகாதேவஐயர் ஜெயராமசர்மா (மெல்பேண்,. அவுஸ்திரேலியா ) கவிதைகள் இரண்டு!
1. காந்திசொன்ன தத்துவங்கள் கதிகலங்கி நிற்குது !
- அண்ணல்காந்திக்குச் சமர்ப்பணம் -
கண்ணியத்தை வாழ்வாக்கி
காந்திமகான் வாழ்ந்திருந்தார்
காசுபற்றி எண்ணாமால்
கடமைவழி அவர்சென்றார்
காசுபற்றி எண்ணாதா
காந்திமகான் தனையிப்போ
காசுகளில் இருத்திவைத்து
கறுப்புப்பணம் ஆக்குகிறார் !
காந்திமகான் பெயராலே
காரியங்கள் ஆற்றுகிறார்
கயமைநிறை அத்தனையும்
கவலையின்றி செய்கின்றார்
கயமைதனை அகற்றுதற்கு
காந்திபட்ட துன்பம்
கண்ணீரின் கதையாக
ஆகியதை மறந்திட்டார் !
மனக்குறள் -25 , 26 & 27 :கண்ணதாசன் என்னும் காலக்கவிஞன்

மனக்குறள் -25 கண்ணதாசன் என்னும் காலக்கவிஞன்
கண்ணதாசன் இன்பக் கவியரசன் காலெடுத்துக்
கண்;ணில் மலர்ந்தேன் கவி !
எண்ணிப் பரந்த இதயக் கருவறைக்குள்;
எண்ணம் வகுத்தான் இதயம் !
வேதாந்தம் சைவம் விளங்கும் மறைமொழிபோல்
நாதாந்த மிட்டான் நயம் !
ஏடு வரைந்து எடுத்தபெயர் கண்ணதாசன்
வேகும் அரசியலின் வேர்!
அர்த்தமுள்ள இந்துமதம் ஆன்மக் கருந்துகளைக்
கற்றுவிட வைத்தானே கண்!
கவிதை: தெப்பக்குளத்துப் பிள்ளையார் குமுறல் !
தெப்பக் குளத்தின் தென்புறத்தில்,
திண்டில் அரச மரநிழலில்,
செப்பற் கடங்கா அருள்சுரக்கும்,
சிவனார் உமையாள் முதற்குமரர்,
தொப்பை வயிற்றார் : துதிக்கை யார்,
தூங்கா மல்தினம் கண்விழித்து,
குப்பைக் குணத்தார் செயல்கண்டு,
குமுறு கின்றார் குழம்புகின்றார் !
“ஆற்றங் கரையோ குளக்கரையோ,
அதிலோர் அரச மரநிழலோ,
ஏற்றம் பெறவே இனிதுநின் றால்,
என்னை ஏனதில் இருத்துகின்றார்?
வேற்று மதத்தார் கோவிலெல்லாம்,
விண்புகழ் சேர்க்கும் மேன்மைபெற,
நாற்றம் பிடித்த இடத்திலெல்லாம்,
நமையேன் வைத்து நசிக்கின்றார் ?
காலைப் பொழுதில் அபிஷேகம் : பின்,
கடமைக் கெனவொரு சிறுபூஜை !
மாலைப் பொழுதிலும் இதுதொடரும்,
மதிப்பாய் தினமும் இருவேளை !
வேலை என்று இதைத்தொடர்ந்து,
வெறுப்பை உளத்தில் ஏற்றுகின்றார் !
நாலு தலையார் நம்மாமர்,
நமக்கென ஏனிதை எழுதிவைத்தார் ?
விழியாக விளங்குகிறாய் பாரதியே!
- பாட்டுக்கொரு புலவன் பாரதியின் நினைவு நாளில் இக்கவிதை அவருக்குச் சமர்ப்பணம் - 
வறுமையிலே உழன்றாலும்
பெறுமதியாய் கவிபடைத்தாய்
அறிவுறுத்தும் ஆவேசம்
அதுவேயுன் கவியாச்சே
துணிவுடனே கருத்துரைத்தாய்
துவிண்டுவிடா உளங்கொண்டாய்
புவிமீது வந்ததனால்
பொங்கிற்றே உணர்ச்சிவெள்ளம் !
பலமொழிகள் நீகற்றாய்
பற்றுதலோ தமிழின்பால்
தேமதுரத் தமிழென்று
தீர்க்கமாய் நீமொழிந்தாய்
காதலுடன் தமிழணைத்தாய்
கற்கண்டாய் கவிதைதந்தாய்
ஆதலால் பாரதியே
அமர்ந்துவிட்டாய் உள்ளமெலாம் !
கவிதை: முதியோர் முரசு

அது ஒரு அளவான குடும்பம் - ஆனால்
அழகான குடும்பம் என்று சொல்வதற்கில்லை...
அது மூன்று தலைமுறைகள் வாழுகின்ற வீடு
மூவருக்கு அது கூடு -
வயதில் முதிர்ந்த இருவருக்கு அது கூண்டு...
முதிர்ந்த தலைமுறைக்கு மகனொருவன்
உண்டு - அவன் மனைவி என்னும்
மலரின் பின்னால் சுற்றுகின்ற மயக்க வண்டு...
இன்னும் சொன்னால் மனைவி
என்னும் சாட்டையால் சுற்றுகின்ற பம்பரம்
மணிக்கணக்கில் வேலை
செய்து தளர்ந்துவிடும் எந்திரம்...
அந்த வீட்டின் இல்லத்தரசி ஆணைகளால் ஆளுகிறாள் -
அடக்கி ஆளுகின்ற அதிகாரத்தால் நீளுகிறாள்...
மூன்றாம் தலைமுறையாய் மழலை
மொழி பேசும் மகவொன்றும் உண்டு -
அவன் வாசமும் பாசமும் வீசுகின்ற மலர்ச்செண்டு...
அந்த வீட்டின் இரு தூண்கள் வேம்போடு ஓர் அரசு...
அவர்கள் படும் இன்னல்களில் உருவானது என் முரசு...
வாழ்கையில் கடந்து வந்த பாதைகளை
முதிய நெஞ்சங்கள் அசை போடுகின்றன
விரக்கிதியின் விளிம்பில் நின்று
சோக இசை பாடுகின்றன...
நிறைவு

காலைக் கதிரவனோடு
கைகோர்த்து
தூரத்து
ரயில் பயணம்
தொடர் வண்டியின்
தடதட சப்தம்
திடீரென
வீசிய சாரல்
மழை!!
கவிதை: குப்பைகள் குறித்து...

குப்பை:1
இதுவரை அப்படியொன்றும் செய்ததில்லை
எல்லோரும் அதனை சர்வசாதாரணமான நிகழ்வு என்று
தங்களுக்குள்ளும், பிறருக்கும் சொல்லிக் கொள்கின்றனர்.
அவர்களுடைய கால்கள் பதிந்த பாதச்சுவடுகளில் சில
பழைய பாதைகள் பதிவதைக் காணமுடிந்தது. எப்படியோ?
ஆனால் அது உண்மைதான்.
கடற்கரையருகே நடக்கவேண்டியவன்
அலைகளுக்குள் தன்னை கரைத்துக் கொண்டான்
அலைகள் இழுத்துச் சென்ற மணல் மீதிருந்த
ஒரு குப்பையைப் போல.
அவன் ஒரு குப்பைதான் சந்தேகமென்ன?
ஒரு குப்பைக்குத்தான் மற்றொரு குப்பையின் மதிப்பு என்ன?
என்று தெரியுமே.
கவிதை: குடும்ப விளக்கு
- 30.08.2019 அன்று, “மனைவியர் தின” த்தினை முன்னிட்டு, குத்துவிளக்காகத் திகழும் “குடும்ப விளக்கு”ப் பெண்ணைச் சிறப்பித்த பாவேந்தரது வரிகளை, முடிந்தவரை என் வரிகளில் தருகின்றேன். -
முட்டிடும் கூரைவீட்டில்,
குட்டைபோல் குனிந்துசேவை.
மட்டிலா செய்யும் மனைவி!
கட்டிய கணவன் நெஞ்சில்,
கிட்டவும் துன்பம் சேரா
கெட்டியாய் நிற்கும் துணைவி !
பட்டிகள் தொட்டிதோறும்,
இட்டமாம் நேசத்தோடு,
பரிமாறும் இதயம் இரண்டு !
திட்டமாய் இருந்தால் அதனைத்
தீர்க்கமாய்ச் சொல்லலாமே
திறமான குடும்பம் என்று !
பட்டினியோடு சென்று,
பகல்சாயத் திரும்பி வந்து
பாயாசம் உண்டேன் நான் என்பான்!
கட்டிய மனையாள் உண்ணக்
கவளத்துச் சாதம்தொட்டுக்,
காதலோ டூட்டச் சொல்வான் இவளோ
மனக்குறள் 22,23 & 24

மனக்குறள்-22: தமிழும் தமிழரும்
உயிரெழுத்துப் பன்னிரண்டு மெய்பதி னெட்டும்
பயிராக்கும் முப்பதுவே பார்!
இருநூற்றுப் பத்துமாறும் ஏர்முப்பத் தாய்தம்
இருநூற்றி நாற்பதேழாம் என்க!
இலங்கையும் சிங்கபூரும் ஏற்றதோ ராட்சி
இலங்க மொழியும் தமிழ்!
எட்டுகோடி யாம்தமிழர் என்க உலகமெலாம்
பற்றுமண் வாழ்கின்றார் பார்!
தொல்வாழ் விடங்கள் சிறகாரும் ஈழமும்
விள்ளும் தமிழ்நாடும் வேர்!
இருநூற்றி ஐந்து எழில்நாடு இன்றெம்
இருந்தமிழர் வாழும் இடம்!
இந்தியா சிங்கப்பூர் (இ)லங்கா மொரிசியசும்
தந்தாரே காசிற் தமிழ்!
தமிழ்மரபுத் தைத்திங்கள் சாருங் கனடா
அரசேற்றி வைத்தார் அறி!
இரண்டா யிரத்துப் பதினாறில் இட்டார்
மரபுதமிழ்ச் சட்டம் வரைந்து!
சொல்லும் தமிழ்மரபு சேர்த்தாரே சட்டமெலாஞ்
சொல்லும் பலநாடு சேர!


தண்ணீரில்

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









