அதிகம் அறியப்படாத தமிழ் ஆளுமை: கவிஞர் 'நாங்குநேரி திரு எம். சுப்பையா' அவர்களின் கவிதைகள் !

- கவிஞர் 'நாங்குநேரி திரு எம். சுப்பையா' -
கவிஞர் அறிமுகம்: அதிகம் அறியப்படாத தமிழ் ஆளுமை: கவிஞர் 'நாங்குநேரி திரு எம். சுப்பையா' அவர்களின் கவிதைகள் ! - நாங்குநேரி வாசஸ்ரீ் -
- கவிஞர் எம். சுப்பையா அவர்கள் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு மூத்த தமிழறிஞர். அவர் நாங்குநேரி அருகேயுள்ள புதுக்குளம் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி 1993ல் ஓய்வு பெற்றவர். ‘இலக்கிய இன்பம்’ என்ற அமைப்பின் மூலம் அக்காலத்திய பல பட்டிமன்றங்களிலும், பொது மேடைகளிலும் தமது பேச்சாற்றலால் புகழ் பெற்றவர். பல தலைவர்களின் மேடைகளில் பேசி அவர்களின் பாராட்டைப் பெற்றவர். தற்போது தொண்ணூறு வயதினைத் தாண்டிய பின்னும், தம் இல்லத்தின் வெளிச்சுவற்றில் ‘தினம் ஒரு திருக்குறள்’ எழுதி இளம் சிறார்களிடையே தமிழ் ஆர்வத்தைத் தூண்டி வருபவர். அவர் சமூகம், தத்துவம், காதல், புரட்சி, பக்தி சார்ந்த பல கவிதைகளைப் படைத்து அவற்றைப் பாடலாகவும் பாடி வந்துள்ளார். இன்னும் முழுமையாக வெளியிடப்படாத நிலையிலுள்ள அவரின் கவிதைத் தொகுப்பிலிருந்து ஒரு சில கவிதைகளை இங்கே காணலாம். -
தத்துவப் பாடல்!
மனிதா! மனிதா! சிந்தித்து நடடா மனிதா
தடம் பார்த்து நடப்பவன் மனிதன்
தடம் பதித்து நடப்பவன் மாமனிதன்
முன்வரிதனை மனதில் வை
பின்வரிதனை செயலில் காட்டு
நேற்றைய வாழ்வு நாளைய பாடம்
புரிந்து நடடா மனிதா
பட்டறிவு வாழ்க்கைப் பாடமன்றோ மனிதா
பார்போற்றும் மாமனிதர் கற்றுத்தந்தார்
இதை மறவாதே மனிதா
எந்நாளும் இனிய நாளே மனிதா.




அது புதிய வண்ணத்துப்பூச்சி 
[ராஃபெல்லின் புகழ்பெற்ற ஓவியம் 'The School of Athens'. பிளேட்டோ விரலை மேலேயும், அரிஸ்டோட்டில் உள்ளங்கையைக் கீழேயும் காட்டியபடி இருக்கும் சித்திரம் அது. ராஃபெல்லின் அந்த உன்னதமான ஓவியம், வெறும் வண்ணங்களின் தொகுப்பல்ல; அது மனிதச் சிந்தனையின் இரு துருவங்களுக்கிடையிலான நித்திய உரையாடல். அந்த ஓவிய உரையாடல் கவிதையாக உயிர்ப்பாகியுள்ளது.]

வசந்தம் வீசிட மனமெலாம் மகிழ 
ஊழின்வலி பெறுஒரே உயிரினம் யான் மட்டுமே
முகத்தில்


எளிமையின் உருவமாக
ஒரு முன்னுரை
1










பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









