இலங்கையின் துயரம்: குண்டு வெடிப்புகள் ஏற்படுத்திய பேரழிவு!
அண்மைக்காலமாக அமைதியாக விளங்கிய இலங்கையின் தலைநகரான கொழும்பிலும், கொழும்புக்கு அண்மையிலுள்ள நீர்கொழும்பிலும் , மட்டக்களப்பிலும் கிறித்தவ ஆலயங்களில் மற்றும் கொழும்பிலுள்ள நட்சத்திர ஹொட்டல்கள் சிலவற்றில் குண்டு வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. கிறித்தவர்களின் புனித நாளான ஈஸ்ட்டர் ஞாயிறான இன்று நடைபெற்ற குண்டு வெடிப்புகள் மீண்டும் யுத்தச்சூழல் நினைவுகளையெழுப்புகின்றன. குண்டு வெடிப்புகள் கிறித்தவ ஆலயங்களிலும், கொழும்பிலுள்ள ஹொட்டல்களிலும் நடைபெற்றதாக இன்னுமோர் ஊடகம் தெரிவிக்கின்றது.
ஆட்சியைப்பிடிக்க முனைவதற்காகத் தீய சக்திகள் இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளைப் பாவித்து , நாட்டில் உறுதியற்ற நிலையினை ஏற்படுத்தி, அரசியல் ஆதாயம் பெற முயற்சிகள் செய்யக்கூடுமென்ற நிலையில், மத, இன வெறி பிடித்த அமைப்புகள் தம் சித்தாந்தங்களின் அடிப்படையில் ஆதாயங்கள் பெற இதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்கக்கூடுமென்ற நிலையில் இக்குண்டு வெடிப்புகள் மூலம் நாட்டில் உறுதியற்ற நிலை தோன்றாத வகையில் இலங்கை அரசு விரைந்து நடவடிக்கைகள் எடுக்குமென எதிர்பார்ப்போம். விரைவில் குண்டு வெடிப்புகளுக்குக் காரணமான சக்திகளை இனங்கண்டு , நாட்டில் சட்ட ஒழுங்கினை நிலை நாட்டிட விரைவான , உறுதியான நடவடிக்கைகள் அவசியம்.
வெறுப்பும் வேரறுப்பும்
அமெரிக்காவில் 2017ஆம் ஆண்டு, வெறுப்புக் குற்றங்கள் (Hate Crimes) 17 சதவீதத்தினால் அதிகரித்திருப்பதாக அந்த நாட்டின் மத்திய புலனாய்வுத்துறை கூறியிருப்பது, எம்மைப் பொறுத்தவரை, ஒரு புதினமல்ல! ஆனால், கனடாவில் 2017ஆம் ஆண்டு, வெறுப்புக் குற்றங்கள் 47 சதவீதத்தினால் அதிகரித்திருக்கின்றன என்பது கனடியர்களால் புறக்கணிக்கப்படக்கூடிய ஒரு செய்தியல்ல! கனடாவில் வெறுப்புக் குற்றங்கள் குறித்த முறைப்பாடுகள் பதிவுசெய்யப்படத் தொடங்கிய கடந்த 10 வருடங்களில் இதுவே மிகப் பெரும் அதிகரிப்பு. 29-11-2018 வியாழன்று கனடிய புள்ளிவிபரத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் காணப்படும் இத்தகவல்களைக் கனடியர்கள் கருத்தில் கொள்ளாமல், வெறுமனே கடந்துசெல்ல முடியாது.
கனடா, உலகில் முதன்முதலாகப் பன்முகப் பண்பாட்டுக் கருத்தியலுக்கு வெற்றிகரமாக வித்தூன்றிய பெருமைக்குரிய நாடு; இருக்க இடம்தேடிவரும் உலகநாட்டு ஏதிலிகளை இன்முகம் காட்டி வரவேற்பதற்கெனத் தன் வாசற்கதவை எப்போதும் அகலத் திறந்து வைத்திருக்கும், தயவும் தாராண்மையும் கொண்ட நாடு; வேற்றுமைகளுக்கிடையே ஒற்றுமையைக் கட்டியெழுப்பி, உச்சப் பலாபலன் பெறுதற்கான தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் கொண்ட நாடு; சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் போன்ற மக்களாட்சிப் பண்புகளை, மையவிழுமியங்களாகக் கொண்ட நாடு; அன்பை விதைத்து, அதனை உரமூட்டி வளர்த்தெடுத்து, அதன் பயனுறு விளைச்சல்களை அறுவடை செய்வதில் வெற்றிகண்ட நாடு. இத்தகைய உன்னதங்களைத் தன்னகத்தே கொண்ட கனடிய மண்ணில், இன்று வெறுப்பும், பகைமையும், வன்மமும் உப்பாக ஊடுபரவ ஆரம்பித்துள்ளமை, இந்த நாட்டு மக்களுக்கு உவப்பான செய்தியல்ல!
‘இனத்துவம், பாலியல் போன்ற பல்வகை வேறுபாடுகள் சார்ந்த வெறுப்புணர்ச்சியினால் அல்லது தப்பபிப்பிராயத்தினால் தூண்டப்பட்டு, பொதுவாக வன்செயலில் வந்து முடியும் ஒரு குற்றச் செயலே வெறுப்புக் குற்றம்’ என வரைவிலக்கணம் ஒன்று கூறுகின்றது. இதன்படி, குறிப்பிட்ட சமூகக் குழுக்களை அல்லது இனங்களை இலக்காகக் கொண்டே, குற்றம் புரிவோர் இவ்வாறான வெறுப்புக் குற்றங்களில் ஈடுபடுவதாகத் தெரியவருகின்றது.
2016ஆம் ஆண்டு கனடாவில் 1,409 வெறுப்புக் குற்றங்கள் இடம்பெற்றிருக்கின்றன. அடுத்து வந்த ஆண்டில் (2017), அதன் எண்ணிக்கை 2,073 ஆக அதிகரித்திருக்கின்றது. 2014 முதல், கனடாவில் வெறுப்புக் குற்றங்கள் படிப்படியாக அதிகரித்து வந்துள்ளபோதிலும், 2017ஆம் ஆண்டு இடம்பெற்ற அதிகரிப்பு, புறக்கணிக்க முடியாதபடி கணிசமானது எனக் கனடியப் புள்ளிவிபரத் திணைக்களப் பேச்சாளரான றெபெக்கா கொங் (Rebecca Kong) கூறுகின்றார். மேலும், ஒன்ராறியோ, கியூபெக் மாகாணங்களில் காவற் துறையினரிடம் முறைப்பாடு செய்யப்பட்ட வெறுப்புக் குற்றங்களுள், தனியார் சொத்துக்களைத் தாக்கியழித்தல், பொதுச்சுவர் அவதூற்று எழுத்துருவங்கள் (graffities) போன்ற வெறுப்புக் குற்றங்கள் காரணமாகவே 2017ஆம் ஆண்டு இவற்றின் எண்ணிக்கை திடீரென உயர்ந்திருப்பதாகக் கூறப்படுகின்றது.
2017ஆம் ஆண்டு முறைப்பாடு செய்யப்பட்ட வெறுப்புக் குற்றங்களில் 43 சதவீதமானவை, இன வெறுப்புணர்ச்சி சார்ந்தவையாகவும், 41 சதவீதமானவை, மத வெறுப்புணர்ச்சி சார்ந்தவையாகவும், 10 சதவீதமானவை, பாலின வேறுபாடு அல்லது பாலினச் செயற்பாடு சார்ந்தவையாகவும் காணப்படுகின்றன. இவ்வகைப்பட்ட குற்றங்களுள் அநேகமானவை, முஸ்லீம்களையும் யூதர்களையும் கறுப்பினத்தவர்களையும் இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்டவையாகும். குறிப்பாக, முஸ்லீம்களுக்கு எதிராக 349 வெறுப்புக் குற்றச் சம்பவங்கள் 2017ஆம் ஆண்டு இடம்பெற்றிருப்பதாகவும், இவ்வெண்ணிக்கை முன்னைய ஆண்டுக்கான எண்ணிக்கையைவிட இரண்டு மடங்குக்கும் அதிகமானதெனவும் கண்டறியப்பட்டிருக்கின்றது.
2014இல் இடம்பெற்ற கருத்துக் கணிப்பின் பிரகாரம், அக்காலப் பகுதியில் வெறுப்புக் குற்றங்களுக்கு இலக்கானவர்களுள் சுமார் 66 சதவீதத்தினர் தமக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் காவற் துறையினரிடம் முறைப்பாடு செய்யவில்லை. முறைப்பாடு செய்வோர் மீண்டும் பழிவாங்கப்படுவார்கள் என்றும், முறைப்பாடுகளை யாரும் நம்பப்போவதில்லை என்றும், சம்பந்தப்பட்டோர் மனங்களில் அந்நாட்களில் நிலவிவந்த அச்சமும் அவநம்பிக்கையுமே அதற்கான பிரதான காரணங்களாகும். பிற்பட்ட காலங்களில் பாதிக்கப்பட்டோர்க்கு காவற் துறை வழங்கிவந்துள்ள ஊக்குவிப்பு, 2017ஆம் ஆண்டு முறைப்பாடு செய்யப்பட்ட வெறுப்புக் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு வழி திறந்துள்ளதெனலாம்.
இலங்கை அரசியல் ஆடுகளத்தில் ஜனாதிபதியின் கோமாளிக் கூத்து
ஒழுங்கும், நேரான இலக்குமுள்ள, வஞ்சக உள்ளமற்ற, நேர்மையான தலைவனொருவனைக் காணும் பாக்கியத்தை இலங்கை எனும் தேசம் பெறவேயில்லை. தலைவனாக முகமூடியணிந்தவாறு, நாட்டு மக்களை பலிகடாக்களாக்கி விளையாடும் கோமாளிகளும், சுயநலவாத நரிகளும் ஆட்சிக்கு வந்து தேசத்தைச் சூறையாடுவதையே எப்போதும் செய்து கொண்டிருக்கிறார்கள். தமது கையாலாகாத்தனத்தை மூடி மறைப்பதற்காக அடுத்தவர் மீது பழி சுமத்தும் தலைவர்கள் இலங்கையை மீண்டும் மீண்டும் ஆண்டு கொண்டிருக்கிறார்கள்.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன எனும் பொய்காரரை ஜனாதிபதியாக ஆக்கியது இந் நாட்டு மக்களால் நிகழ்த்தப்பட்ட மிகவும் பாரதூரமான, தவறான முடிவாக மாறியிருக்கிறது. தனது அளவிட முடியாத தன்னம்பிக்கையோடு, சில தினங்களுக்கு முன்னர் அவர் பாராளுமன்றத்தின் அதிகப்படியான வாக்குகள் தனக்கேயுள்ளன எனப் பெருமையடித்துக் கொண்டிருந்தார். எனினும், அவரது வாய்ச் சவடால் பொய்யாகி, அவருக்கு எவ்விதத்திலும் ஆதரவற்ற நிஜ உலகும், யதார்த்தமும் தென்படத் தொடங்கிய போது, அதனை மறைப்பதற்காக அவர் பாராளுமன்றத்தைக் கலைக்கும் புதியதொரு நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார். ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி திடீரென மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்கி, இலங்கையின் ஆட்சியமைப்பைக் கேலிக்குரியதாக்கிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, நவம்பர் மாதம் ஒன்பதாம் திகதி இரவு திடீரென பாராளுமன்றத்தைக் கலைத்ததன் மூலம் மீண்டும் இலங்கை அரசியலமைப்பைக் கையிலெடுத்து விளையாட்டுக் காட்டத் தொடங்கியிருக்கிறார். இனி இது மாதக் கணக்கில் நீடிக்கக் கூடும்.
ஒக்டோபர் மாதம் 29 ஆம் திகதியிலிருந்து நவம்பர் மாதம் 09 ஆம் திகதி வரை, தான் புதிதாக அமைக்கப் போகும் ஆட்சிக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் 113 பேரின் ஆதரவு இருப்பதாகவும், தான் ஒருபோதும் பாராளுமன்றத்தைக் கலைக்கப் போவதில்லையெனவும் கூறிக் கொண்டிருந்தார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன. அவ்வாறு திடீரென பாராளுமன்றத்தைக் கலைத்தால் புதிதாக இணைந்துள்ள பாராளுமன்ற அமைச்சர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்க வழியில்லாமல் போகும். அதனால், தான் அதனைச் செய்யப் போவதில்லை என ஒன்பதாம் திகதி காலைவேளை கூட கூறிவிட்டு அன்றிரவே திடீரென பாராளுமன்றத்தைக் கலைத்து விட்டார்.
இவ்வாறா நாட்டின் பிரதான பொறுப்பிலிருக்கும் ஜனாதிபதி சட்டத்தைச் சீர் குலைக்கும் விதத்தில் செயற்பட்டதோடு, மொத்த தேசத்தையும் பொய் கூறி ஏமாற்றியிருக்கிறார். அவரது இவ்வாறான மோசமானதும், இழிவானதுமான செயற்பாடு நாட்டு மக்களுக்கும், இளந் தலைமுறையினருக்கும் எடுத்துக் காட்டுவது என்ன? அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்காக எந்தப் பொய்யையும் கூறி, எவ்வாறான கீழ்த்தரமான செயற்பாடுகளிலும் எவரும் நேர்மையும், வெட்கமுமின்றி ஈடுபடலாம் என்பதைத் தானே?
இன்று, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, இலங்கை அரசியலையும், அரசாங்கத்தையும், ஆட்சிப் பொறுப்பையும், அதிகாரத்தையும் வைத்து விளையாடிக் கொண்டிருக்கும் இந்த விளையாட்டு, இலேசானதல்ல. பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது. இந்த விளையாட்டுக்காக நாட்டில் வசிக்கும் கோடிக்கணக்கான மக்கள், பரம்பரை பரம்பரையாக எதிர்காலத்திலும் நஷ்ட ஈட்டினைச் செலுத்திக் கொண்டேயிருக்க வேண்டியிருக்கும் பொறுக்கித்தனமான செயற்பாடு இது. அவர் கலாசார மதத் துணியால் தன்னைப் போர்த்திக் கொண்டு, அதிகாரத் துஷ்பிரயோகம் செய்தவாறு, ஜனநாயக் கோட்பாடுகளோடு மனம் போன போக்கில் விளையாடிக் கொண்டிருக்கும் ஒரு பொறுக்கியாக மிளிர்கிறார்.
எதிர்வினை: முல்லைத்தீவுக்கு மகாவலி வேண்டுமா? சாத்தியமா?
- அண்மையில் 'பதிவுகள்' இணைய இதழில், முகநூலில் வ.ந.கிரிதரன் எழுதிய குறிப்புகள், தமிழ்சின் சிஎன் இணையத்தளத்தில் நக்கீரன் எழுதிய நீண்ட கட்டுரை, முகநூலில் விஜயபாஸ்கரன், எழுத்தாளர் பா.அ.ஜயகரன், எழுத்தாளர் கருணாகரன் ஆகியோர் தெரிவித்த கருத்துகள் பற்றி அனுபவம் மிகுந்த மின் பொறியியலாளர் ஜானகி பாலகிருஷ்ணன் அவர்கள் அனுப்பி வைத்த எதிர்வினை இது. உங்கள் கருத்துகளையும் அனுப்பி வையுங்கள். ஆக்கபூர்வமான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. பதிவுகளுக்கு உங்கள் கருத்துகளை இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்.- பதிவுகள் -
அண்மையில் சிறீ லங்கா பிரதமரும், யு.என்.பீ. கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க அவர்கள் 200 கோடிகள் பெறுமதியான திட்டமாக மகாவலி ஆற்றினை முல்லைத்தீவு வரை திருப்பப் போவதாகவும், அதனுடன் முல்லைத்தீவின் சில பகுதிகளில் சிங்களக் குடியேற்றத்தினை அமுல்படுத்தப் போவதாவும் அறிவித்தார் என செய்திகள் வெளிவந்தன. அதனையொட்டி பதிவுகள், கட்டுரைகள், கருத்துகள், எதிர்ப்புகள் என்று பல சம்பவங்கள் நடந்தன.
கடந்த புதன்கிழமை, ஆகஸ்ட் 29, 2018 தினம் நண்பர் Giritharan Navaratnam மகாவலித்திட்டம் திசை திருப்பப்படுமாயின் வடக்கு-கிழக்கிற்கான அது பற்றிய பயன்பாடு பற்றியும், அது தொடர்பான ஏற்கத்தகு குடியேற்றத்திட்டம் எவ்வாறு இருக்கவேண்டும் என்பது பற்றியும் தனது கருத்துகளடங்கிய பதிவினைப் பகிர்ந்தார். அவை மறுப்பேதும் கூறாமல் ஏற்றுக் கொள்ளக்கூடியவையே.
இதனிடையே நண்பர் Vijaya Baskaran தனது புதன்கிழமை, ஆகஸ்ட் 28, 2018 “ஏமாற்றாதே ஏமாறாதே” என்ற தலைப்பில் உள்ள பதிவில், பல தரவுகளைத் தந்தும் சில கடந்தகால குடியேற்றத் திட்ட விபரங்களையும் தனது கருத்துகளையும் தெரிவித்திருந்தார். அவையும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவே இருந்தன.
அத்துடன் தானறிந்த வரலாறு நிமித்தம் சில குடியேற்றத்திட்டங்களில் பங்கேற்க தமிழர் முன்வரவில்லை என்பதையும் குறிப்பிட்டு, கல்லோயா திட்டத்தில் தமிழர் உதவிகளைப் பெற்று குடியேறவில்லை எனும் பதிவு பற்றிய உண்மை, பொய் தெரியவில்லை என்றும் கிரிதரன்க கூறியிருந்தார்.
அதே பதிவில் Tamilcnn எனும் தளத்தில் பதிவான, “திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் எல்லாவற்றிலும் மிக மோசமானது அதே சமயம் ஆபத்தானது வெலிஓயா ஆகும்” எனும் தலைப்பில் நக்கீரன் என்பவரினால் எழுதப்பட்ட நீண்ட கட்டுரையின் சில முக்கியமான பகுதிகளை இணைத்து ஆரோக்கியமான தர்க்கத்திற்கு தந்திருப்பதாகக் கிரிதரன் கூறியிருந்தார். இது பற்றிய உங்கள் கருத்தகளைப் பகிருங்கள் நண்பர்களே என்று ஒரு பரந்த வேண்டுகோளையும் விடுத்திருந்தார்.
'பாலியல் இலஞ்சம்'
- நடிகை ஶ்ரீ ரெட்டியின் குற்றச்சாட்டுகளால் தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகின் ஆளுமைகள் பலர் நிலை கலங்கியுள்ளார்கள். ஆணும், பெண்ணும் புரிந்துணர்வுடன் நட்பு கொள்வதென்பது வேறு. பயன் ஒன்றுக்காகப் பெண்ணொருவரை ஆண் ஒருவர் தன் அதிகார நிலை காரணமாகப் பயன்படுத்துவது என்பது வேறு. அதுதான் நடிகை ஶ்ரீ ரெட்டியின் விடயத்திலும் நடத்துள்ளது. இவர் செய்தது சரியா தவறா என்று பார்ப்பதற்குப் பதிலாக இவரை இவ்விதம் பயன்படுத்திய ஆளுமைகள் செய்தது சரியா தவறா என்று பார்க்க வேண்டியதே மிகவும் முக்கியம். ஏனெனில் இத்துறையில் ஆயிரக்கணக்கில் ஆர்வமுள்ள பெண்கள் நுழைந்துகொண்டேயிருக்கின்றார்கள். அவர்கள் எவ்விதத் தயக்கமும் இல்லாமல் ஏனைய துறைகளைப்போல் இத்துறையில் நுழைவதற்கு ஶ்ரீ ரெட்டியின் குற்றச்சாட்டுகள் விடயத்தில் இந்தியச் சட்டட்த்துறை போதிய கவனம் எடுக்க வேண்டும். விசாரணைகளை நடத்த வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். நண்பர் ராகுல் சந்திரா இது பற்றி நல்லதொரு கட்டுரையினை தனது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ளார். ஶ்ரீ ரெட்டிக்கு ஏற்பட்ட நிலையினைப் 'பாலியல் இலஞ்சம்' என்று கூறியிருக்கின்றார். ஆம்! சரியான சொல்லாடல் அது. பாலியல் இலஞ்சம் கொடுத்தும் அதற்குரிய பலனை அவர் அடையவில்லை. இலஞ்சம் வாங்குவது தவறானதொரு செயல். பாலியல் இலஞ்சமும் இலஞ்சத்தில் ஒரு வகையே. ஶ்ரீ ரெட்டியின் அனுபவங்கள் அவரது சொந்தக் கதையினை மட்டும் விவரிக்கவில்லை. தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களில் நிலவும் சமூக விரோதச் செயல்களையும் வெளிப்படுத்துகின்றன. இவ்விதமான சமூக விரோதச் செயல்களைப் புரிபவர்கள் யாராகவிருந்தாலும் சட்டத்தின் முன் தப்ப முடியாது என்னும் நிலை ஏற்பட வேண்டும். பாதிக்கப்பட்டவருக்கு நட்ட ஈடு வழங்கப்பட வேண்டும். அதன் மூலம் மேலும் பெண்கள் பலர் முன்னுக்கு வந்து தம் அனுபவங்களையும் கூறக்கூடும். திரையுலகினைச் சீராக்க வேண்டிய காலகட்டமிது. பெண்கள் எவ்விதத் தயக்கமுமின்றி நடிப்புத் துறையில் ஈடுபடுவதற்குரிய சூழ்ழலை ஏற்படுத்த வேண்டும். அதற்குச் ஶ்ரீ ரெட்டியின் அனுபவங்கள் வழி வகுக்கட்டும். - பதிவுகள் -
நடிகை ஶ்ரீ ரெட்டியுடைய வீடியோ விவகாரம் தொடர்பாக கடந்த சில நாட்களாகவே சமூக ஊடகங்களில் பலவிதமான கருத்துக்களும் பரிமாறப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.ஆரம்பத்திலிருந்தே நான் இந்தவிதமான செய்திகளை hype பண்ணுவதை அசட்டை செய்யவே விரும்பினேன். இப்போது எனக்கு நெருக்கமான பலரும் தமது கருத்துக்களை முன்வைத்த நிலையில், நான் மௌனமாக இருப்பது “சாமி குத்தமாயிடும்” இல்லையா. ஆதலால் இந்த விடயம் தொடர்பாக எனது அபிப்பிராயங்களையம் முன்வைப்பது அவசியமானது என்று கருதி இதனை எழுதுகிறேன். எனக்கென்னவோ இதனை ஒரு பாலியல் இலஞ்சம் தொடர்பான விடயமாக பார்ப்பதே சரியானதாக இருக்கும் என்று படுகிறது. ஏன் என்பதை பார்ப்போம்.
எல்லா ‘அதிகாரபடிநிலை சமுதாயங்களை’ (Hierarchical Societies) போலவே, ஆணாதிக்க சமுதாயத்தில், சமூகத்தின் பொதுவான வளங்கள், வாய்ப்புகள், அதிகாரங்கள் போன்றவை ஆண் - பெண் ஆகிய இரு தரப்பினரிடையே சமமாக பங்கிடப்படுவதில்லை. இவற்றை தமது கரங்களில் குவித்து வைத்துக்கொண்டுள்ள ஆண்கள், இவற்றில் தமக்கு உரிய பங்கை பெற முனையும் பெண்களை தடுக்க முனைகிறார்கள். Gate Keepers போல செயற்படும் இவர்கள், பெண்கள் இவற்றை பெறுவதை தடுக்கிறார்கள். அவற்றை பெண்கள் பெறுவதை தாம் அனுமதிப்பதாயின், அதற்கு தமக்கு பெண்கள் பாலியல் இலஞ்சம் தரவேண்டும் என்று நிர்ப்பந்திக்கிறார்கள்.
பாடசாலை மாணவிகள், பல்கலைக்கழக ஆய்வு மாணவிகள், வீட்டு வேலை முதல் கட்டிட வேலை, சுத்தம் செய்தல் போன்ற அனைத்து அடிதட்ட மட்டத்திலும் பணியாற்றும் ஏழை உழைக்கும் பெண்கள், நடிகைகள், படை வீராங்கணைகள், விளையாட்டு வீரர்கள், அலுவலக ஊழியர்கள், அரசியலில் தீவிரமாக ஈடுபடுபவர்கள்… என்று எல்லா வர்க்க, இன, சாதிய பின்னணிகளில் இருந்து வரும் பெண்களும் இந்த விதமான பாலியல் சுரண்டலுக்கு உள்ளாகிறார்கள். முதலில் இது ஒரு அப்பட்டமான பாலியல் அத்துமீறல் என்பதனை குறித்துக்கொள்ள வேண்டும்.
யாழ்ப்பாண நூலகத்துக்குத் தீ வைத்தவர் ஒருவரின் வாக்குமூலம்
- எழுத்தாளர் பற்றிய குறிப்பு: வைத்தியர் ருவண் எம்.ஜயதுங்க
கவிதை, சிறுகதை, கட்டுரைகள் ஆகிய துறைகளில் சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தனது பங்களிப்பை ஆற்றி வரும் திரு. ருவண் எம் ஜயதுங்க, இலங்கை இராணுவத்தின் மன நலப் பிரிவில் மருத்துவராக கடமையாற்றியவர். அத்தோடு இலங்கை சுகாதார அமைச்சின் புத்தளம் மாவட்டத்துக்கான மன நல உத்தியோகத்தராகவும் கடமையாற்றியவர். ஜோன் எப். கென்னடி, வேலுப்பிள்ளை பிரபாகரன் போன்ற தலைவர்கள் குறித்தும், மன நல மருத்துவம், சிறுகதைத் தொகுப்புகள் என சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள இவர் தற்போது கனடாவில் வசித்து வருகிறார். -
யாழ்ப்பாண நூலகத்துக்குத் தீ வைத்த நபரொருவர் எனக்களித்த வாக்குமூலத்தை பல வருடங்களுக்குப் பிறகு நான் எழுதுகிறேன். இந்த நிகழ்வு குறித்து நான் தனிப்பட்ட பதிவேதும் எழுதவில்லை. எனினும் 2002 ஆம் ஆண்டு என்னால் எழுதப்பட்ட எனது 'பிரபாகரன் நிரூபணம் குறித்த மனோவியல் ஆய்வு' எனும் தொகுப்பில் நான் குறிப்பிட்டிருக்கிறேன். இந்த நபரை, 1994 ஆம் ஆண்டு நான் மாத்தளை வைத்தியசாலையில் கடமையாற்றிய காலத்தில் சந்தித்தேன். அவர் எனது பகுதி நேர நோயாளியாகவிருந்தார். பகுதி நேர நோயாளி என நான் குறிப்பிடுவது ஏனெனில், அவருக்கு ஆரம்பத்திலிருந்து சிகிச்சையளித்த வைத்தியர் நானல்ல. எனினும் அவரது உடல் ரீதியான வியாதிகள் சிலவற்றுக்கு நான் சில வைத்திய அறிவுரைகளைக் கூறியிருந்ததாலும், அவருக்கு சில மருந்துகளை இலவசமாகக் கொடுத்ததாலும் அவர் எனக்கு சினேகமாகியிருந்தார். நான் இங்கு குறிப்பிடப் போவது அந்த நபர் என்னிடம் கூறியதைத்தான். இந்தத் தகவல்கள் உண்மையானவை, பொய்யானவை போன்ற விடயங்களை வாசகர்களின் தீர்மானத்துக்கு விட்டு விடுகிறேன். (ஓய்வுபெற்ற சிரேஷ்ட போலிஸ் பிரதி காவலதிகாரி எட்வட் குணதிலகவால் முன்வைக்கப்பட்ட ‘ஆய்வறிக்கை’யின் பிரகாரம், யாழ்ப்பாண நூலகத்தை எரித்தது விடுதலைப்புலிகள் இயக்கத்தினரது செயல்பாடாகும். அதற்கு சிங்களவர்கள்தான் காரணம் எனக் காட்டி சர்வதேச மக்களின் அனுதாபத்தை வென்றெடுப்பதே அவர்களது நோக்கமாகும்.)
இந்த வாக்குமூலத்தை அளித்த நபரது உத்தியோகம் என்னவாகவிருந்தது என்பதை நான் கூற மாட்டேன். காரணம் அது சர்ச்சைக்குரியதாகவும், ஈழ ஆதரவாளர்களால் இந்த விடயமும் கூட அவர்களது பிரசார தந்திரமாகப் பாவிக்கப்படக் கூடும் என்பதனாலுமாகும். எவ்வாறாயினும், இந்தச் சம்பவம் நடைபெற்ற போது அவர் வடக்கில்தான் இருந்திருக்கிறார்.
ஒரு இலட்சத்துக்கும் அதிகமான புத்தகங்களோடு, ஆசியாவிலிருந்த விசாலமான நூலகங்களிலொன்றான யாழ்ப்பாண நூலகத்துக்கு 1981 ஆம் ஆண்டு, மே மாதம் 31 ஆம் திகதி தீ வைக்கப்பட்டது. அந்தக் கால கட்டத்தில் யாழ்ப்பாண அபிவிருத்திக் குழுத் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருந்ததோடு, கொழும்பிலிருந்து சென்றிருந்த காடையர்கள் யாழ்ப்பாணத்தில் கலவரத்தை ஏற்படுத்தியவாறு இருந்தனர். இந்த நிகழ்வானது இனவாதக் கலவரங்களின் திருப்புமுனையாக அமைந்தது.
முற்றுப் பெறாத உரையாடல்கள்
“வானமும் பூமியும் ஒழிந்து போம். என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை” (மத்தேயு 24:35)
வார்த்தைகளின் வல்லமைகளை பறை சாற்றும் பரிசுத்த வேதாகமத்தின் வாசகங்கள் அவைகள். மனிதனால் மட்டுமே பேச முடிகின்றது. சிந்திக்க முடிகின்றது. வார்த்தைகளை உருவாக்கி இன்னொரு மனிதனுடன் உரையாட முடிகின்றது. இவ் உரையாடல்களின் மூலம் அவன் தனது எண்ணங்களை, உணர்வுகளை தேவைகளை வெளிப்படுத்திக் கொள்கிறான். இன்று மனிதனது தேவைகள் அதிகரித்துள்ளன. பிரச்சினைகளும் சிக்கல்களும் அதிகரித்துள்ளன. இன்றைய 21ம் நூற்றண்டில் தொழில்நுட்பங்களும் ஊடகங்களும் அசுர வளச்சி பெற்றுள்ள நிலையில் அதற்கான உரையாடல் வெளிகளும் என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ளன. எமது புலம்பெயர் வாழ்விலும் நாம் இன்று அதிகம் உரையாட வேண்டிய தேவை எமக்குண்டு. ஒரு வலி மிகுந்த சமூகமாக, 3௦ ஆண்டு கால யுத்தம் ஏற்படுத்திய கொடுந்துயரமான வாழ்வும் அது ஏற்படுத்திய வலிகளும் ரணங்களும் இன்னும் மாற்றம் பெறாத நிலையில், எமது துயரங்கள், தோல்விகள், தவறுகள், குறித்தும் இனி போக வேண்டிய பாதைகள், எதிர்கால நடவடிக்கைகள் குறித்தெல்லாம் நாம் அதிகம் பேச வேண்டிய மனிதர்களாக மாற்றப்பட்டுள்ளோம். உரையாடல்கள் மூலம் நாம் எத்தகைய தீர்வுகளையோ முடிவுகளையோ எட்ட முடியாது என்பது உண்மையாயினும் அதனை செயற்பாடுகளுக்கான ஒரு முன்னூட்டமாக அதனை நாம் மாற்ற முடியும் என்பது எமது அசையாத நம்பிக்கை.
இவ்வகையில் இன்று நாம் பேசுகின்றோம், உரையாடுகின்றோம், பல் வேறு விதமான உரையாடல் வெளிகளை உருவாக்கி வருகின்றோம். பிரதிகள் மூலமாக, பாடல்கள் மூலமாக, செய்திகள் மூலமாக, கலந்துரையாடல்கள், நேர்காணல்கள் மூலமாக, கவிதைகளாக, புனைவுகளாக, வேறும் பல்வேறு வழிகளிலும். அத்தகைய உரையாடல்களில் காத்திரமானவைகளை, அது காற்றில் கலந்து கரைந்து இல்லாமல் போகு முன்பே, பாதுகாப்பாக பதிவுகள் செய்வதே இத்தொடரின் நோக்கமாகும்.
கொலை மறைக்கும் அரசியல் – இது பகை மறப்புக் காலம் அல்ல. •தோழர் சேனனுடனான உரையாடல் குறித்து.
கடந்த வார ஐ.பி.சி. தமிழின் அக்னிபார்வை நிகழ்ச்சியில் தோழர் சேனன் அவர்கள் கலந்து கொண்டார். இங்கு புகலிடத்தில் சமூக, அரசியல், கலாச்சார தளத்தில் இயங்குபவர்களில் சேனனை அறியாதவர்கள் அதிகம் இருக்க முடியாது. தோழர் சேனன் அவர்கள் ஒரு இடதுசாரி செயற்பாட்டாளர், நான்காம் அகிலத்தத்துவத்தை வரித்துக்கொண்ட பிரித்தானிய சோஷலிஸ்ட் கட்சியின் அங்கத்தவர், ‘நிரந்தரக் கனவு காணும் நிரந்தரப் புரட்சியாளர்கள்’ என்று மற்றவர்களால் விமர்சிக்கப்படும் ட்ரொட்ஸ்கிய வாதிகள் மத்தியில் நடைமுறை சார்ந்த பிரச்சினைகளை கவனத்தில் கொண்டு மக்களோடு மக்களாக நின்று உழைப்பவர். Tamil Solidarity அமைப்பின் சர்வதேச ஒருங்கிணைப்பாளர். ‘கொலை மறக்கும் அரசியல்’ லண்டன்காரர்’ என்ற நூல்களின் ஆசிரியர். விமர்சகர். ஊடகவியலாளர்.
முள்ளிவாய்க்கால்: இன அழிப்பும் போர்க்குற்றங்களும்
- இக்கட்டுரை குளோபல்தமிழ்நியூஸ்.நெற் இணையத்தளத்தில் வெளியான கட்டுரை. நன்றியுடன் மீள்பிரசுரமாகின்றது. - பதிவுகள் -
- கட்டுரையாளரான முனைவர் ஜூட் லால் பெர்ணாண்டோ (Dr Jude Lal Fernando) டப்ளின் டிரினிட்டி கல்லூரியைச் சார்ந்த ஐரிஸ் ஸ்கூல் ஆஃப் எக்குமெனிக்ஸில் அமைதி மற்றும் இணக்க மேம்படுத்தல் துறையில் உயராய்வு மேற்கொள்வதோடு அங்கு விரிவுரையாளராகவும் பணியாற்றுகிறார். இலங்கையின் களனியிலுள்ள துலானா என்னும் மதம் சார்பான உரையாடல் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் உறுப்பினர். டிரினிட்டி கல்லூரியில் 2010இல் இலங்கைக்கான மக்கள் தீர்ப்பாயத்தை ஒருங்கிணைத்தவர். -
அறிமுகம்
மக்கள்திரள்மீதான வன்கொடுமைகள் (mass atrocity) பற்றிய எடுத்துரைப்புகள் (representations) சர்வதேசச் சட்டத்தின் வரையறைகளுக்கு ஏற்பப் போர்க்குற்றங்கள், மானிடத்திற்கெதிரான குற்றங்கள், இன அழிப்பு ஆகிய அடிப்படைகளில் வகைப்படுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுகின்றன. எனினும் இந்தக் கோட்பாட்டுரீதியான வகைப்படுத்தல்கள் குறிப்பிட்ட அரசியல், கருத்தியல் களங்களிலேயே பிரயோகிக்கப்படுவதால் அந்தக் களங்கள் விமர் சனத்திற்குள்ளாக்கப்பட்டு இலங்கையில் இடம்பெற்ற வன்கொடுமைகள் பற்றிய உண்மைகளைக் கூறும் முழுமையான எடுத்துரைப்பு ஒன்று எட்டப்பட வேண்டும். இந்த வன்கொடுமைகள் பற்றிய எடுத்துரைப்புகளை நோக்கினால், எவ்வாறு உண்மைகள் நோக்கப்படுகின்றன என்பதையும், நீதி, புனரமைப்பு (justice and recovery) பற்றிய எதிர்பார்ப்புகள் எவ்வாறு அமைகின்றன என்பதையும் சித்தாந்தம்தான் முடிவுசெய்கிறது என்பதை இந்தக் கட்டுரை நிறுவ முற்படுகிறது. இந்தப் பணியைச் சந்தேகக் கண்ணோடு அணுகுவது அரசியல் சிந்தனையில் மிகச் சரியான எடுத்துரைப்பு வெளிப்படவும் நீதிக்கும் புனரமைப்புக்குமான விசாலமான முன்னெடுப்புகளை அடையாளங்காட்டவும் உதவும்.
எண்ணிலடங்காத மரணங்கள்
ஐ. நா. விபரங்களின்படி நான்கு மாதங்களே நீடித்த இறுதிக்கட்டப் போரில், குறைந்தது 40,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். இலங்கை அரசால் நிறுவப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்களுக்கும் நல்லிணக்கத்திற்குமான ஆணைக் குழுவின் (LLRC) முன்னால் சான்று வழங்கிய மன்னார் ஆயர் 1,46,679 தமிழர்கள் பற்றிய எந்தத் தகவல்களும் இன்னும் கிடைக்கப்பெறவில்லை எனத் தெரிவித்தார். இந்த எண்ணிக்கையை இலங்கை அரசால் வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வத் தரவுகளிலிருந்து அவர் பெற்றுள்ளார்.
இத்தகைய அதிர்ச்சியூட்டும் வகையிலான பெரும் எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் பற்றிய உண்மையை எவ்வாறு சரியாக அரசியல் சிந்தனையில் எடுத்தியம்ப முடியும்? சர்வதேசச் சட்டம் போர்க்குற்றங்கள், மானிடத்திற்கெதிரான குற்றங்கள், இன அழிப்பு, அமைதிக்கெதிரான குற்றம் ஆகியன உள்ளிட்ட சட்ட, கோட்பாட்டு வகைப்பாடுகளை முன்வைக்கிறது. இந்த வகைப்பாடுகளுக்கேற்ப இலங்கையில் இடம்பெற்ற வன்கொடுமைகளை எடுத்துரைத்தால் அது புனரமைப்புக்கும் மீளலுக்கும் எத்தகைய முன்னெடுப்புகள் தேவையென்பதைத் தீர்மானிக்கும்.
Sri Lanka: May Day and Workers’ Rights
May Day was declared a holiday in Sri Lanka in 1956 for the government sector, bank and mercantile sectors. May Day celebrations have never clashed with the interests of or activities conducted during Vesak celebrations. Despite this situation and without consultation, the President has unilaterally decided to postpone May Day on the pretext that there will be a “Vesak Week” this calendar year. A gazette notification issued by Home Affairs Minister yesterday cancelled the May Day holiday which is due on May 1.
The President’s postponement of the May Day celebrations in Sri Lanka to May 7 is allegedly because of a request made by Mahanayaka Theros., This is a crass political ploy of exploiting religious sentiment to inhibit protests of the working people by diverting their attention away from the burning issues of the day. Some of the parties and unions who are supposed to represent workers’ interests have already fallen in line with the government. Others have decided to take their protests to the streets on May 1, despite a municipal ban on marches.
The issue of overlapping of May Day with Vesak Day has arisen many times previously. The façade of religiosity becomes apparent at times when this occurs. In 1967, the UNP regime postponed May Day celebrations to the 2nd of May. As quoted in news reports, the Communist Party (Peking Wing) opposed it and Maithripala Sirisena supported the Communist Party’s decision. Now he himself is displaying his opportunism by postponing May Day celebrations. Several trade unions in Sri Lanka have strongly objected to this decision to postpone May Day, emphasising that it is a right of workers to celebrate international workers’ day on May 1. The JVP has declared that they will go ahead with the May Day Rally but will hold the Colombo rally on May 7. It is holding its May 1st rally in Jaffna, which is interesting. One could question whether this option is utilised not to confront the issue giving prominence to religion over workers’ rights. According to the JVP, bringing large crowds to Colombo on May Day for celebrations would become an obstacle for Vesak celebrations that will be held in Colombo. This is not the first time the JVP seems to have wavered on this issue. In 2008, the JVP took the initiative to change the May Day from May 1 due to Vesak celebrations, by requesting the government to do so.
This year, Vesak Day does not fall on May 1. The clash is due to the declaration of a Vesak week this year. If the Vesak Week is turned into an annual event, it will be interesting to find out what the JVP position would be. One could easily interpret and equate the JVP position to “killing two birds with one stone”. Thus, they avoid having a May Day rally in Colombo on the May Day itself, despite the relevance of the International Working Day to the working people of the south of Sri Lanka, many of whom reside in Colombo.
கனடாத் தமிழ் அமைப்புகள் இழைத்த மாபெரும் தவறும் , கிருஷ்ணகுமார் கனகரத்தினத்தின் மரணமும்!
கனடாவில் தமிழர் அமைப்புகள் பல உள்ளன. ஊர்ச் சங்கங்கள் பல உள்ளன. தென்னிந்தியக் கலைஞர்களை அழைத்துப் பணத்தை வாரியிறைக்கின்றார்கள். ஆனால் தமிழர் நலன்களுக்காக இயங்குவதாகக் கூறும் இச்சங்கங்கள் புற்றீசல்கள் போல் இருந்தும் பயனென்ன? அரசு தரும் நிதி உதவியைப்பெறுவதற்காகவே சங்கங்கள் பல உள்ளன. வேறு சிலவோ இவ்வாறு கிடைக்கும் பெருமளவு பணத்தைப் பல்வேறு வழிகளில் செலவழித்துக் கணக்குக் காட்டுவதில் திறமையாய உள்ளன. ஆனால் இவ்விதமான அமைப்புகள் செய்ய வேண்டிய முக்கியமான பணிகளில் முதன்மையானது எது?
இலங்கையில் நிலவிய சமூக, அரசியற் சூழல் காரணமாக ஆயிரக்கணக்க்கில் ஈழத்தமிழர்கள் பல்வேறு வழிகளில் உயிரைப்பணயம் வைத்து , உலகின் பல்வேறு நாடுகளுக்கும் அகதிகளாகத் தஞ்சம் கோரிப் புலம் பெயர்ந்தார்கள். நூற்றுக்கணக்கில் பலர் செல்லும் வழிகளில், கடலில், காடுகளிலெனத் தம் உயிரை இழந்தார்கள். சூழலைப்பாவித்த முகவர்கள் சிலரின் சமூக, விரோதச்செயல்களால் பலர் பணத்தையும் இழந்தார்கள். அந்நிய நாடுகளில் கைவிடப்பட்ட நிலையில் வாடி மடிந்தார்கள். பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு பல்விதமான துன்பங்களுக்கு உள்ளானார்கள்.
இவ்விதமாக ஒருவழியாக புகலிட நாடுகளில் வந்திறங்கிய தமிழ் அகதிகள் அடைந்த அடையும் துன்பங்கள் பல? இவற்றில் தலையிட்டு , உதவி செய்ய வேண்டிய முக்கியமான தமிழர் அமைப்புகள் எல்லாம் அகதிக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் எவ்வகையான உதவிகளை அவ்விதமான தமிழர்களுக்குச் செய்கின்றன. இங்குள்ள அரசியல்வாதிகளைத் தமிழர்தம் பாரம்பரிய ஆடைகளில் அழைத்து வருகின்றார்கள். அரசியல்வாதிகள் என்னும் பெயரில் அடிக்கடி பத்திரிகைகளில் , நிகழ்வுகளில் தலை காட்டுவதில் தம் நேரத்தைச் செலவிடும் இவர்கள் , இவ்விதமான அகதிக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, மேன் முறையீடுகளும் நிராகரிக்கப்பட்டு , தலை மறைவாக வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள ஈழத்தமிழர்கள் விடயத்தில் என்ன செய்தார்கள். அவர்களிடமிருந்து பணத்தைச் சுருட்டுவதில்தான் இவர்கள் பலரின் கவனம் இருந்ததேதவிர , இவ்விதமான தமிழர்களுக்கு உதவுவதற்காக அல்ல என்பது வெட்கப்படத்தக்கதொன்று.
கனடிய அரசு யுத்த நிலை காரணமாகச் சிரியா போன்ற நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கானவர்களை அகதிகளாக அழைக்கின்றது. பிரதமரே விமான நிலையம் சென்று வரவேற்கின்றார். அவ்விதம் ஆயிரக்கணக்கானவர்களை அகதிகளாக எவ்விதமான தனிப்பட்ட ஓவ்வொருவரும் அகதியா என்று நிரூபிக்கப்படாத நிலையில் அழைத்து , அங்கீகரித்து, வரவேற்கும் கனடிய அரசு எதற்காக ஈழத்தமிழர்கள் விடயத்தில் மட்டும் , அங்கு நிலவிய யுத்தச் சூழல்கள் நிலவிய நிலை தெரிந்தும், அங்கு யுத்தத்திற்கு முன்னர் மக்கள் அடைந்த மனித உரிமை மீறல்கள் தெரிந்தும், ஒவ்வொரு அகதிக்கோரிகையாளரும் தம் நிலையினை நிரூபிக்க வேண்டுமென வலியுறுத்த வேண்டும்? இங்குள்ள தமிழர் அமைப்புகள் அப்பொழுதெல்லாம் என்ன செய்து கொண்டிருந்தன? சிரியா அகதிகளை வரவேற்றது போல் , ஈழத்தமிழ் அகதிகளையும் இரு கரம் நீட்டி, அனைவரையும் அகதிகளாக ஏற்றுக்கொண்டு வரவேற்றிருக்க வேண்டும் என்பதை இவ்வமைப்புகள் செய்திருக்க வேண்டுமல்லவா? இவ்விதமாக அகதிக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட அகதிக்குடும்பங்கள் , குடும்ப அங்கத்தவர்கள் பிரிக்கப்பட்ட நிலையில் நாடு கடத்தப்பட்டபோது அவர்கள் நிலையைப் பொறுப்பெடுத்து அவர்களுக்காகக் குரல் கொடுத்திருக்க வேண்டுமல்லவா?
( மீள்பிரசுரம்: சரிநிகர் ) பிறேமவதி மனம்பேரி: ஒரு அழகிய போராளியின் நினைவுகள்
1971 ஜேவிபி'யினரின் அரசுகெதிரான புரட்சியின் போது கதிர்காமம் அவர்களின் முக்கியதொரு கோட்டையாக விளங்கியது. அங்கு புரட்சியாளர்களை அடக்கிய இலங்கை அரச படையினர் ஆண்கள், பெண்களென்று பலரைக் கைது செய்தார்கள். அவர்களில் பிரேமவதி மனம்பெரியும் ஒருவர். இரவு முழுவதும் தடுப்புக்காவலில் அவரைப்பலமாகச் சித்திரவதைக்குட்படுத்தினர். அவரிடமிருந்து எவ்விதமான தகவல்களையும் பெற முடியாத நிலையில் ஆத்திரமுற்ற உயர் இராணுவ அதிகாரி அவரை நகரத்தெருக்களினூடு நிர்வாணமாக்கி நடக்க வைத்தார். அவ்விதம் செல்லும்போது இன்னுமோர் அதிகாரி அவரைப்பலமாகத் தாக்கினார். இறுதியில் தபால் நிலையமருகில் அவரைச்சுட்டு உயிருடன் புதைகுழிக்குள் விட்டுச் சென்றனர். பின் மீண்டும் இரு தடவைகள் வந்து அவரைச் சுட்டுக் கொன்றனர். பிரேமவதி மனம்பெரிக்கு அப்பொழுது வயது 22. அவரைக்கொன்ற இராணுவ அதிகாரிகளான விஜேசூரியா, அமரதாச ரட்னாயக்க ஆகியோர் நீதி விசாரணைக்குட்படுத்தப்பட்டு 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றனர். இவர்களில் விஜேசூரியாவை 1988இல் ஜேவிபியினர் பிரேமவதி மனம்பெரியைக் கொன்றதற்காகச் சுட்டுக்கொன்றனர். சுடப்பட்டு புதைகுழிக்குள் மரணத்தின் விளிம்பில் இருந்தபோதும் அவர் யாரையும் காட்டிக்கொடுக்கவில்லை. யார் மேலும் தனக்குக் கோபமில்லையென்றே கூறியிருக்கின்றார். அந்த மனவலிமை எல்லோருக்கும் வந்து விடாது. பிரேமவதி மனம்பெரி உண்மையான புரட்சிப்பெண். - பதிவுகள் -
இன்று (ஏப்ரில் 16) ஜே.வி.பி. ஏப்ரல் கிளர்ச்சியின் 40வது வருட நினைவுநாள்…
இக்கட்டுரை ஜே.வி.பி.யின் முதலாவது கிளர்ச்சியான 1971 ஏப்ரல் கிளர்ச்சியின் 40 வது வருட நினைவு கூரல் நாடெங்கிலும் நடந்து கொண்டிருகின்ற இந்த வேளை அதன்போது கொல்லப்பட்ட மனம்பேரியை நினைவு கூருகிறது. 1996ஆம் ஆண்டு ஜே.வி.பி. கிளர்ச்சியின் 25வது வருட நிகழ்வை நினைவை முன்னிட்டு சரிநிகரில் எழுதிய சிறப்புக் கட்டுரைகளில் இதுவும் ஒன்று. இக்கட்டுரை எழுதுவதற்காக கதிர்காமத்திலுள்ள மனம்பேரியின் வீட்டுக்குச் சென்று வீட்டாருடனும் பெற்றோருடனும் உரையாடினேன். கதிர்காமத்தில் மனம்பேரி கொல்லப்பட்ட இடத்தையும் சென்று பார்வையிட்டேன். ஜே.வி.பி தோழர்கள் என்னுடைய இந்த பயணத்தில் உதவினார்கள். குறிப்பாக முற்றிலும் சிங்களப் பிரதேசமான அங்கு அன்றைய சமயத்தில் தமிழர்கள் அச்சமின்றி போய் வரும் நிலை இருக்கவில்லை. என்னோடு வந்த என் சக ஜே.வி.பி. தோழர்கள் என்னுடைய பாதுகாப்பில் மிகுந்த அக்கறை எடுத்துக்கொண்டனர்.
மனம்பேரி வழக்கின் முக்கிய சாட்சிகளில் ஒருவரான எலடினையும் போய் சந்தித்தேன். அது தவிர 71 கிளர்ச்சி பற்றி விசாரணை செய்த விசேட நீதிமன்ற நீதிபதி ஏ.சி.அலஸ் (*1) எழுதிய நூலில் இருந்த தகவல்கள் சில இக்கட்டுரைக்கு உதவிற்று. மேலும் மனம்பேரி வழக்கு இடம்பெற்ற (1973 – மே) காலப்பகுதியில் வெளியான பத்திரிகைகளை தேசிய சுவடிகூடத் திணைக்களத்தில் இருந்து சில நாட்களாக திரட்டிய தகவல்கள் என்பவற்றின் அடிப்படையில் இக்கட்டுரை தயாரிக்கப்பட்டது. இலங்கையில் முதன் முதலில் பாரிய ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் மக்கள் விடுதலை முன்னணியினர். 1971 ஏப்ரல் கிளர்ச்சி என அழைக்கப்பட்ட இது அரசாங்கத்தின் கொடூர ஒடுக்குமுறையினால் அடக்கப்பட்டது. இக்காலப் பகுதியில் கொல்லப்பட்ட ம.வி.மு. பெண் போராளி மனம்பேரி பற்றி இந்த 40 வது வருட நினைவில் சில குறிப்புகள்.
அவள் கொல்லப்பட்டு 40 வருடங்கள். 20,000க்கும் மேற்பட்ட அவளின் தோழர்கள் கொல்லப்பட்டு 40 வருடங்கள். அவளையும் அவளது தோழர்களையும் கொன்றழித்த அந்த அரசமைப்பு மட்டும் இன்னமும் வாழ்கிறது. அவர்களது போராட்டம்…?
ஏப்ரல் கிளர்ச்சியை ஒடுக்குவதற்காக அன்றைய பிரதமர் சிறிமா பண்டாரநாயக இந்திய பிரதமர் இந்திரா காந்தியின் உதவியை நாடியதைத் தொடர்ந்து, இந்திரா காந்தி இந்திய படைகளை அனுப்பி உதவினார். இந்தியப் படைகள் தெற்கு காடுகளில் புரிந்த சித்திரவதைகளை பலர் சிங்களத்தில் பதிவு செய்திருக்கின்றனர்.) 1971 ஏப்ரல் கிளர்ச்சியின் போது அரச படையினால் கொல்லப்பட்ட பெண் போராளிகளில் அவளும் ஒருத்தி. இருபதாயிரத்துக்கும் மேற்ப்பட்ட இளம், ஆண், பெண் போராளிகளை அரச யந்திரம் கொன்றொழித்தது. ஆனால் அத்தனைக்கும் நியாயம் கற்பித்த அரசு, ஒரே ஒரு கொலையை மாத்திரம் படையினரின் அதிகார துஷபிரயோகச் செயல் எனக் கூறி கண்துடைப்புக்காக விசாரணையை நடத்தியது. அவ்விசாரணை தான் பிரேமவதி மனம்பேரியின் கொலை விசாரணை. இதிலுள்ள இன்னொரு முக்கிய அம்சம் என்னவெனில் படையினருக்கு எதிரான விசாரணையொன்றில் அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்ட ஒரே வழக்கும் இதுதான்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்: இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கான தண்டனைகள் வழங்கப்படாமை, மிகவும் ஆபத்தானது !
- நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்!-
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கான தண்டனைகள் வழங்கப்படாமை, மிகவும் ஆபத்தானது என்று யுத்தக்குற்றங்களுக்கான அமெரிக்காவின் முன்னாள் விசேட தூதுவர் ஸ்டீவன் ரெப் தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் நடைபெற்று வருகின்ற 37வது மனித உரிமைகள் மாநாட்டின் உபகுழு கூட்டம் ஒன்றில் கருத்து வெளியிடும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இந்த நிகழ்வை ஒழுங்கு செய்திருந்தது.
கடந்த காலங்களில் குற்றங்களைப் புரிந்த பலர் தண்டனைகளில் இருந்து தப்பிக் கொள்ளும் நிலைமை அதிகம் உள்ளது. அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள், பாதுகாப்பு மற்றும் பொலிஸ் அதிகாரிகள் போன்றோர் பாரிய அளவில் மனித உரிமை குற்றங்களில் ஈடுபடுகின்ற போதும், அவர்களுக்கு சட்ட ரீதியான தண்டனை வழங்கப்படுவதில்லை. இதன் விளைவுகளாலே முஸ்லிம்களுக்கு எதிரான பேரினவாத தாக்குதல்கள் உள்ளிட்ட பல வன்முறைகள் இடம்பெற்றன. குற்றங்களைப் புரிந்துவிட்டு தப்பிக் கொள்வதற்கான வழிகள் இருக்கின்றன என்பதை வன்முறையாளர்கள் அறிந்திருக்கின்றனர்.
இந்தநிலைமையை மாற்றுவதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், தண்டனை வழங்கப்படாமை மிகப்பெரிய பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குற்றங்கள் தண்டிக்கப்படாமல் விடப்பட்டதன் ஆபத்துக்களை இலங்கை தெளிவாகக் காட்டுகின்றது என பன்னாட்டு சட்டவாளர் றிச்சர்ட் ஜே றோஜெர்ஸ். குற்றங்கள் தண்டிக்கப்படாமல் விடப்பட்டதன் ஆபத்துக்களை இலங்கை தெளிவாகக் காட்டுகின்றது என பன்னாட்டு சட்டவாளர் றிச்சர்ட் ஜே றோஜெர்ஸ் தெரிவித்துள்ளார். இலங்கையை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டு சுயாதீனமாக இயங்கி வரும் இலங்கையின் நிலைமாறுகால நீதிச்செயற்பாடுகளைக் கண்காணிக்கும் பன்னாட்டு நிபுணர் குழு வின் (Sri Lanka Monitoring and Accountability Panel. MAP) ஒருங்கிணைப்பாளராக றிச்சர்ட் செயற்படுகின்றார். மேலும், மானிடத்துக்கு எதிரான குற்றங்களை விசாரணை செய்யும் கம்போடிய கலப்பு நீதிமன்றத்தின் சட்டவாளராகவும் றிச்சர்ட் காணப்படுகின்றார்.
ஆனமடுவ மக்களைப் பாராட்டுவோம்!
ஆனமடுவ மக்களே! நீங்கள் வாழி!
நீங்கள் சீர் செய்தது உணவகத்தை மட்டும்
அல்ல;
இனங்களுக்கிடையிலான குரோதங்களையும்தாம்.
நீர் வாழி! உம் செயல் வாழி!
வெறிபிடித்த மானுட உணர்வுகள்
விளைவித்த அழிவினை மட்டுமா
சீர் செய்தீர்! கூடவே
மானுட நேயமென்னும் பண்பினையும்தான்
மலர்வித்தீர்!
மானுடரே! நீர் வாழி! வாழி!
அண்மையில் இலங்கையில் நடைபெற்ற முஸ்லீம் மக்களுக்கெதிரான வன்முறையின்போது ஆனமடுவப் பகுதியில் சேதத்துக்குள்ளாக்கப்பட்ட முஸ்லிம் உணவகத்தை அப்பகுதிச் சிங்கள மக்கள் , பெளத்த மதகுருமார் மற்றும் வணிக நிறுவனங்கள் இணைந்து சீரமைத்துக்கொடுத்திருக்கின்றார்கள் என்னும் செய்தியினை பி.பி.சி.தமிழ் இணையத்தளத்தில் வாசித்தேன். மிகவும் வரவேற்கத்தக்க விடயம். இவ்விதம் தாங்களாகவே முன் வந்து இனவாதிகளால் சேதமாக்கப்பட்ட உணவகத்தைச் சீராக்கியதன் மூலம் அப்பகுதிச் சிங்கள மக்கள் அனைவருக்கும் முன் மாதிரியாகத் திகழ்கின்றார்கள். அவர்கள் சேதமாக்கப்பட்ட உணவகத்தை மட்டுமல்ல சீர் செய்தது, இனங்களுக்கிடையிலான குரோத உணர்வுகளையும்தாம். அச்செய்தியினை முழுமையாகக் கீழே தருகின்றேன் ஒரு பதிவுக்காக:
பி.பி.சி தமிழ் செய்தி!
பி.பி.சி தமிழ்: இன மோதலால் சிதைக்கப்பட்ட உணவகத்தை சீரமைத்து தந்த பெளத்த மதகுருமார்கள்
இலங்கையில் சமீபத்தில் நடைபெற்ற இன மோதலில் ஆனமடுவவில் சேதப்படுத்தப்பட்ட முஸ்லிம் உணவகத்தை உள்ளூர் சிங்கள மக்கள், பௌத்த மதகுருமார் மற்றும் வணிகர் சங்கத்தினர் சீரமைத்து கொடுத்துள்ள சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் கண்டி மாவட்டத்திலும், அம்பாறையிலும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்செயல்கள் நடந்தபோது பெரிதும் இலக்கு வைக்கப்பட்டவை முஸ்லிம்களின் வணிக நிறுவனங்கள்தான். அவற்றில் பெரு வணிக நிறுவனங்களும் மிகச் சிறிய கடைகளும் உணவு விடுதிகளும் அடக்கம். குறிப்பாக, கண்டி மாவட்டத்தின் நிலைமை மிகவும் மோசம். முஸ்லிம்கள் அங்கு பெருத்த சேதத்தை எதிர்கொண்டிருந்தார்கள். ஆனால், இப்போது நாம் கூறப்போகும் நிகழ்வு நடந்தது புத்தளம் மாவட்டத்தில் ஆனமடுவ என்னும் இடத்தில். இங்கும் முதலில் நடந்தது வன்செயல்கள்தான் என்றாலும் இங்கு மனிதம் இன்னமும் உயிர்வாழ்கிறது என்று காண்பிக்கும் ஒரு நிகழ்வும் அதன் தொடர்ச்சியாக நடந்துள்ளது. அது மட்டுமல்ல சிங்கள மக்கள் தமது மனித நேய உணர்வை பற்றி பெருமைப்பட்டுக்கொள்ளக்கூடிய நிகழ்வு இது என்றேகூட சொல்லலாம்.
முன்னாள் போராளிகளை ‘கடனாளிகள் ஆக்கும்’ அமைச்சர் சுவாமிநாதன்!
- சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், புனர்நிர்மாணம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் (கொழும்பு) முகவரியிட்டு, சுயாதீன இளம் ஊடகவியலாளரும், சிவில் சமுக மனித உரிமைகள் செயல்பாட்டாளருமான அ.ஈழம் சேகுவேரா என்பவர், அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனுக்கு மடல் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். அந்த மடல், யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் ‘காலைக்கதிர்’ பத்திரிகையில் (04.03.2018 ஞாயிற்றுக்கிழமை அன்று) பிரசுரமாகியிருந்தது. அதன் முழுவிவரம்: -
அமைச்சர் அவர்களே! முன்னாள் போராளிகளை ‘கடனாளிகள் ஆக்கும்’ தங்கள் அமைச்சின் வாழ்வாதார உதவித்திட்டம் தொடர்பாக,
தங்கள் அமைச்சின் வாழ்வாதார உதவித்திட்டம் ஊடாக ‘முன்னாள் போராளிகள்’ கால்நடைகளை வளர்த்து தமது வாழ்வாதாரத்தை ஸ்திரப்படுத்திக்கொள்ள விண்ணப்பிக்கும் போது, அந்த உதவித்திட்டத்தில் உள்ள நிர்வாக ஒழுங்குபடுத்தல் குறைபாடுகள் காரணமாக ‘குறித்த வாழ்வாதார உதவித்திட்டமே போராளிகளை நிரந்தர கடனாளிகளாக ஆக்கிய’ துன்பியல் நிலைமைகள் தொடர்பாகவும், மிகவும் மோசமான இந்த இடர்நிலைமைகளை களைந்து அவர்களது ‘வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான மாற்றுத்தீர்வுகள்’ தொடர்பாகவும், தங்களுக்கு இந்த மடலை எழுதுகிறேன்.
*** ஒரு இலட்சம் ரூபாய் (100,000) நிதி ஒதுக்கீட்டுக்குள் வாழ்வாதாரத்துக்கான கால்நடைகளை (மாடுகள்,ஆடுகள்,கோழிகள்) தெரிவுசெய்யுமாறு பயனாளிகளுக்கு பணிக்கப்படுகின்றது.
பயனாளிகளும் தமது விருப்பத்துக்கு ஏற்றவாறு கால்நடைகள் அமையும் வரை அலைந்து திரிந்து, பண்ணையாளர்களை தேடிக்கண்டறிந்து, தமக்கு பொருத்தமான கால்நடைகளை இனங்கண்டபின்னர், அரசாங்க கால்நடை வைத்தியரை தமது சொந்தச்செலவில் அழைத்துச்சென்று, கால்நடைகளுக்கு காது இலக்கத்தகடு இட்டு, தங்கள் அமைச்சினால் வாழ்வாதார உதவித்திட்டத்துக்கென்றே பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டுள்ள படிவத்தை பூரணப்படுத்தி, பண்ணையாளர்களிடம் உள்ள கால்நடை உரிம அட்டையை பயனாளிகள் தமக்கு உரிமம் மாற்றம் செய்து, அவற்றை கச்சேரியில் கொண்டு வந்து ஒப்படைத்த பின்னர், குறித்த கால்நடைகளை பயனாளிகளுக்கு பெற்றுக்கொடுப்பதற்கு, ‘மூன்று மாத காலம் வரை’ காத்திருக்குமாறு கச்சேரி உத்தியோகத்தர்களால் கூறப்படுகின்றது.
யாராவது ஒரு நபர் கூடிய சீக்கிரம் தனது செலவுக்கு பணம் தேவைப்படும் (நோய், விபத்து, சத்திரசிகிச்சை, வெளிநாட்டு பயணம், உயர்கல்வி, புதிய தொழில் முனைப்பு, கடன் பிரச்சினை) சந்தர்ப்பங்களில் மாத்திரமே, கைக்குத்தேவையான பணத்தை புரட்டுவதற்கு பல வழிகளிலும் முயன்று எதுவும் கைகூடிவரவில்லை என்றானபோது, ‘தன்னிடம் உள்ள அசையும் அசையா சொத்துகள் - துரவுகளை விற்பது’ எனும் இறுதித்தீர்மானத்துக்கு வருவார். ஆனால் இந்த அடிப்படை புரிதல் கூட இல்லாமல் தங்கள் அமைச்சின் உதவித்திட்டத்தின் போது ‘மூன்று மாத காலம் வரை காத்திருக்குமாறு’ பண்ணையாளர்களிடம் கூறுமாறு பயனாளிகளிடம் சொல்லப்படுகின்றது.
‘அவசர பணத்தேவை காரணமாக, அவ்வளவு காலத்துக்கு தம்மால் பொறுத்துக்கொள்ள முடியாது’ என்று கூறும் பண்ணையாளர்கள், கூடிய சீக்கிரம் தமக்கு பணம் தந்து உதவக்கூடிய வேறு நபர்களுக்கு கால்நடைகளை விற்று, துரிதகதியில் தமது பண நெருக்கடி பிரச்சினையை சமாளித்துக்கொள்கிறார்கள்.
Anti-Muslim violence rears its ugly head again in Sri Lanka By Dr Lionel Bopage President Australian Advocacy for Good Governance in Sri Lanka
Anti-Muslim violence rears its ugly head again in Sri Lanka
- Australian Advocacy for Good Governance in Sri Lanka Inc. Committee: Wimal Jayakody, Viraj Dissanayake, Sithy Marikkar, Siraj Perera, Shyamon Jayasinghe, Sarath Jayasuriya, Sarath Bandara, Saliya Galappaththi, Ranjith Weerasinghe, Prasad Mohotti, Nalliah Suriyakumaran, Lionel Bopage, Larry Marshal, Lal Perera, Jude Perera, Cyril Gunarathne, Chitra Bopage, Athula Pathinayake, Asoka Athuraliya, Ari Pitipana, Anura Manchanayake, Antony Gratian, Ajith Rajapakse -
Anti-Muslim violence rears its ugly head again in Sri Lanka Inciting violence, hatred and threats against other citizens because of their diverse backgrounds is harmful for sustained peace and reconciliation in Sri Lanka. Ridiculing their religious beliefs and destroying their properties is terrifying for the targeted groups and distressing for the law abiding community members. A free nation shows its maturity by allowing minorities to enjoy the same rights and privileges the rest of the community is entitled to.
In June 1980, Sri Lanka acceded to the International Covenant on Civil and Political Rights (ICCPR), and it came into force in September 1980. Article 17 of the ICCPR provides that “No person shall be subjected to arbitrary or unlawful interference with his privacy, family, home or correspondence, nor to unlawful attacks on his honour and reputation”, and “Everyone has the right to the protection of the law against such interference or attacks”. Article 20(2) states that "any advocacy of national, racial or religious hatred that constitutes incitement to discrimination, hostility or violence shall be prohibited by law". However, in practice, legislative measures have done little to address or deter the reasons for such unacceptable forms of behaviour. The international experience indicates that racial hatred legislation is not the answer to curb these situations. The use of community education in schools and local communities and mass public education campaigns better serve such purpose.
அண்மைய இலண்டன் தூதரகச் சம்பவமும், அது ஏற்படுத்திய அரசியல் அதிர்வலையும்....
இலங்கையின் சுதந்திர தினநாளன்று இலண்டனிலுள்ள இலங்கைத்தூதுவராலயத்தில் நடைபெற்ற விவகாரமானது தமிழ் ,சிங்கள அரசியல்வாதிகளுக்கு மெல்லக் கிடைத்த அவலாகியுள்ளது. பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவின் கழுத்தை வெட்டும் சைகை தற்போதுள்ள சூழலில் , யுத்தத்திற்குப் பின்னரான சூழலில் தேவையற்றதொன்று. அவரது செய்கையினை நாட்டில் நல்லெண்ணத்தை ஏற்படுத்துவதற்காகப் பதவிக்கு வந்த இலங்கை ஜனாதிபதி மைத்திரி சிறிசேனாவின் அரசில் அங்கம் வகிக்கும் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தனா வரவேற்றுப் பாராட்டிப் பேசினார். இலங்கை வெளிவிவகார அமைச்சு உடனடியாக அவரைப் பதவியிலிருந்து நிறுத்தி விசாரணையை ஆரம்பித்தது. ஆனால் தென்னிலங்கையில் அரசியல்வாதிகளால் இச்சம்பவம் இனரீதியாக ஊதிப்பெருப்பிக்கப்பட்டதை அடுத்து , அதற்கு அடிபணிந்த ஜனாதிபதி மைத்திரி சிறிசேன அதனை இடை நிறுத்தி அவரை மீண்டும் பதவியில் அமர்த்தினார். இதன் மூலம் அவர் நாட்டின் ஒரினத்துக்குச் சார்பாகச் செயற்படும் ஜனாதிபதியாகவே தென்படுவார். இணக்க அரசியல் பேசும் தமிழர் விடுதலைக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனையும் இப்பிரச்சினை விட்டு வைக்கவில்லை. அவரும் சூழலுக்கு அடிபணிந்து உடனடியாகப் பிரிகேடியரை நாட்டுக்குத் திருப்பி அழைக்குமாறு கோரியிருக்கின்றார். இதற்கிடையில் இப்பிரச்சினை பூதாகாரமாக வெளிப்பட்ட நிலையில் தமிழர்கள் மத்தியிலுள்ள புலம்பெயர் அரசியல்வாதிகளும், தென்னிலங்கை அரசியல்வாதிகளைப்போல் இதனைத் தம் அரசியல் நலன்களுக்காகப் பாவிக்கத்தொடங்கினர்.
இலங்கைத் தூதுவராலயத்தின் முன் அமைதியாக புலிக்கொடியுடன் போராட்டம் நடத்துவது அதனை நடாத்துவதற்கு அனுமதியளித்த ஜனநாயக நாடொன்றில் ஏற்றுக்கொள்ளப்படக் கூடியதே. அதனை இவ்விதமானதொரு சைகையின் மூலம் பிரிகேடியர் பிரியங்க பெர்ணாண்டோ வெளிப்படுத்திக் கையாண்டிருக்கத்தேவையில்லை. நாட்டில் விடுதலைப்புலிகளுடான யுத்தம் முடிவுற்ற நிலையில் இன்னும் இவ்வளவுதூரம் பிரிகேடியர் உணர்ச்சி வசப்பட்டிருக்கத் தேவையில்லை. உண்மையில் இச்செய்கையானது சிறுபிள்ளைத்தனமானது. இருவர் வாக்குவாதப்படுகையில் கொல்லுவேன், வெட்டுவேன் என்று பயமுறுத்துவதைப்போன்றது. நாட்டில் 2009இல் யுத்தமே முடிவுக்கு வந்துள்ள நிலையில், அந்த யுத்தத்தின் பாதிப்புகள், யுத்தக் குற்றங்கள், தொடரும் இலங்கையிலுள்ள சிறுபான்மையினப் பிரச்சினைகளுக்கான தீர்வு போன்றவற்றுக்கான தீர்வுகள் இன்னும் உரிய முறையில் கிட்டாத நிலையில் இவ்விதமான பொறுப்பற்ற செயல்கள் , நாட்டில் நல்லெண்ணச் சூழல் ஏற்படுவதைத் தாமதமாக்கும். மேலும் தற்போதுள்ள சூழல் மேலுள்ள கவனத்தைச் சீர்குலைத்து , மக்களுக்கு மத்தியில் இனரீதியிலான முரண்பாடுகளை அதிகரிக்கவெவே வைக்கும். அரசியல் நலன்களுக்காக அனைத்து அரசியல்வாதிகளும் இவ்விடயத்தை இனரீதியாக ஊதிப்பெருப்பிக்கவே முயல்வார்கள்.
இந்நிலையில் இலங்கை ஜனாதிபதி பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரிகேடியருக்கு மீள்பதவியை வழங்குவதற்குப்பதில் , நாட்டின அனைத்து மக்களுக்கும் தான் ஜனாதிபதியாகச் செயற்பட்டிருக்க வேண்டும். பிரிகேடியரின் தற்போது பத்திரிகையாளர்களின் சந்திப்பொன்றில் விளக்கமளித்துள்ளார். இவ்விதமான விளக்கங்கள் அளிப்பதற்கு முன்னர் இதுபோன்ற செயலினை அவர் செய்யாமல் இருந்திருக்கலாம். ஏற்கனவே சீர்குலைந்திருக்கும் இனங்களுக்கான உறவுகள் சிறிது சிறிதாகச் சீர்பெற்று வருமொரு சூழலில் இந்தச்சிறு செயலின் மூலம் இலங்கையின் பதவி, இன வெறி பிடித்த அரசியல்வாதிகளுக்கு மீண்டும் மெல்லுவதற்கு அவலைக்கொடுத்துள்ளார் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ.
தமிழ்மொழி மீதான உரிமையை இழந்து வரும் வடக்கின் தமிழர்கள்!
- சிங்கள எழுத்தாளரும், ஊடகவியலாளரும், லக்பிம நியூஸ் பேப்பர்ஸ் லிமிட்டெட் (Lakbima Newspapers ) நிறுவனத்தில் பணிபுரிபவரும் , கொழும்புப் பல்கலைக்கழக விஞ்ஞானபீடப் பட்டதாரியுமான கத்யானா அமரசிங்ஹ (Kathyana Amarasinghe) தனது யாழ்ப்பாண விஜயத்தின்போது அங்குள்ள மக்கள் மொழி காரணமாக எதிர்கொள்ளும் பிரச்சினைகளை வெளிப்படுத்தி கட்டுரையொன்றினை எழுதியுள்ளார். மிகவும் பயனுள்ள கட்டுரை. இது போன்ற கட்டுரைகள் சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் மக்கள் அன்றாடம் அனுபவிக்கும் பிரச்சினைகளை வெளிப்படுத்துவதால், புரிந்துணர்வுக்கு வழி வகுப்பதுடன் , பிரச்சினைகளின் பக்கம் அரசியல்வாதிகளின் கவனத்தையும் திருப்பும் சாத்தியமுண்டென்பதால் வரவேற்கத்தக்கவை. கட்டுரையினைப் பெற்று 'பதிவுகள்' இணைய இதழுக்கு அனுப்பிய நண்பர் ஜெயக்குமாரனுக்கு (ஜெயன்) நன்றி. -
யாழ்ப்பாணத்துக்குச் சென்று, அங்கு ஒரு டாக்ஸி வாகனத்தில் ஏறியதும், அதன் சாரதி அப்போதுவரை ஒலித்துக் கொண்டிருந்த தமிழ்ப் பாடல் இறுவட்டை நீக்கிவிட்டு, சிங்களப் பாடல்களடங்கிய இறுவட்டை இட்டு ஒலிக்கவிட்டார். கேட்டதுமே தலைவலியை உண்டாக்கும் விதமாக மோசமான அர்த்தங்களையுடைய சிங்களப் பாடலொன்று அதிலிருந்து ஒலிக்கத் தொடங்கியது. அது அருமையான சிங்களப் பாடலொன்று என்றும், அதனை ஒலிக்க விடுவதன் மூலம் இலங்கையின் தென்பாகத்திலிருந்து வந்திருக்கும் எம்மை மகிழ்விக்க முடியும் எனவும் சிங்கள மொழியை அறியாத அந்த அப்பாவி சாரதி எண்ணியிருக்கக் கூடும். இறுதியில் அப் பாடலை ரசிக்கவே முடியாதவிடத்து தமிழ்ப் பாடல்களையே ஒலிக்க விடச் சொல்லி பாடல் இறுவட்டை தமிழுக்கு மாற்றச் செய்தேன். பின்புறம் திரும்பிப் பார்த்த சாரதி தமிழ்ப் பாடல்களை ரசிக்கும் எம்மை வியப்புடன் பார்த்து புன்னகைத்தார்.
‘தமிழனுக்கு தமிழனாக இருப்பதால் முகம் கொடுக்க நேரும் சிக்கல்கள் எவை?’
எனக்கு அக் கணத்தில், முகநூல் சமூக வலைத்தள விவாதத்துக்குக் காரணமான அக் கேள்வி நினைவுக்கு வந்தது. எனது இனவாத நண்பர்கள் அதில் மாறி மாறிச் சொன்ன விடயம் என்னவென்றால், ‘தமிழனுக்கு தமிழனாக இருப்பதால் முகம்கொடுக்க நேரும் பிரச்சினைகள் எவையும் இலங்கையில் இல்லை’ என்பதாகும். அவ்வாறானதொரு நண்பன் முகநூலில் கிண்டலாக எழுதியிருந்த விதத்தில் (அவர் புரிந்து கொண்டிருக்கும் விதத்தில்) தமிழனுக்கு தமிழனாக இருப்பதால் முகம் கொடுக்க நேரும் சிக்கல்கள் என்பவை ஈழத்துக்கென தனியானதொரு தேசியக் கொடி, தேசிய கீதம் இல்லாமலிருத்தல், தனியான காவல்துறை இல்லாதிருத்தல் போன்ற சில ஆகும்.
“தமிழனாக இருப்பதால் முகம்கொடுக்க நேரும் சிக்கல்கள் பற்றிக் கேட்கிறீர்கள். கேள்வியிலேயே பதிலும் இருக்கிறது. வேறெதற்காகவும் இல்லை. நாங்கள் தமிழர்களாக இருப்பதுவே சிக்கலுக்குரியதாகத்தான் இருக்கிறது.”
நான் யாழ்ப்பாணத்தில் சந்தித்த தமிழர்கள் அநேகரது பதிலும் இவ்வாறுதான் இருந்தது. எனது தேசப்பற்று மிக்க தோழன் எண்ணிக் கொண்டிருக்கும் விதத்தில் தனியான தேசியக் கொடி, தனியான தேசிய கீதம் போன்ற சில்லறைக் காரணங்களை விடவும், தமிழர்களுக்கு – விஷேசமாக யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு தாம் முகம் கொடுக்க நேரும் சிக்கல்கள் பல இருக்கின்றன. அதில் பிரதானமானது மொழிப் பிரச்சினையாகும். பொதுவாக தமிழர்கள் எனும்போது தெற்கில் வாழும் சிங்களம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளையும் அறிந்திருக்கும் தமிழர்களை மாத்திரம் நினைவில் கொள்பவர்கள், மூன்று தசாப்த காலமாக சிங்கள சமூகத்திலிருந்தும் முற்றுமுழுதாகத் தூரமாகி வாழ நேர்ந்திருக்கும் யாழ்ப்பாணத் தமிழர்களைக் குறித்து எண்ணிப் பார்க்க மறந்துவிடுகிறார்கள்.
2017 ஒரு பார்வை!
வருடமொன்று கடந்து செல்லுது. வாழ்க்கை தானே விரைந்து போகுது. வருவது வருவதும் செல்வது செல்வதும் யாரின் அனுமதி கேட்காமலும் தானே இயங்கிக் கொண்டு போகிறது. ஒவ்வொரு வருடமும் ஒவ்வொருவருக்கும் வாழ்வில் பல நிகழ்வுகளுக்குக் காரணமாகின்றன. அது சிலரின் வாழ்வில் மகிழ்ச்சிகரமானதாகவும், சிலரின் வாழ்வில் துயரமிக்கதாகவும் அமைந்து விடுகிறது. அவ்வகையில் கடந்து செல்லும் இந்த 2017 எதை எதை விட்டுச் செல்கிறது என்பதை இந்தச் சாமான்யனின் பார்வையில் மீட்டுப் பார்க்கிறேன். எனது மீள்பார்வை கொஞ்சம் சத்தமாக உங்கள் முன்றலிலும் விழுகிறது.
முதலாவதாக சர்வதேச அரங்கை எடுத்துப் பார்க்கிறேன். 2017ம் ஆண்டின் ஆரம்பம் அனைத்து உள்ளங்களையும் வித்தியாசமான உணர்வுகளால் தாக்கியது. ஜனநாயக ரசியலில் முன்னனியில் நிற்கும் மேலை நாடுகளில் ஒன்றான அமெரிக்கா எந்தத் திசையை நோக்கிப் பயணிக்கப் போகிறது ? எனும் கேள்வி அரசியல் ஆர்வலர்கள் தொடங்கி, சாதரண மக்கள் வரை சர்வதேச அளவில் மிகப்பெரிய கேள்வியாகத் தொங்கிக் கொண்டிருந்தது. தனது தேர்தல் பிரசார மேடைகளில் மிகத் தீவிரமான வகதுசாரப் போக்கைக் கடைப்பிடித்த அமெரிக்க ஜனாதிபது ட்ரம்ப் அவர்கள் பயணிக்கப் போகும் பாதையும், அப்பாதையினால் ஏற்படப்போகும் சர்வதேச தாக்கத்தைப் பற்றிய ஒருவிதமான அச்ச உணர்வும் மக்களிடையே பரவியிருந்தது. இன்றைய சூழலில் அவர் பதவிக்கு வந்து ஒரு வருடம் பூர்த்தியாகப் போகும் நிலையில் அவரின் அதிகாரம் நான் எதிர்பார்த்ததை விட குறைந்த அளவிலான சர்வதேச தாக்கத்தையே எற்படுத்தியிருக்கிறது. மத்திய கிழக்கு நாடுகளின் மீதான அவரது செயற்பசடுகளும், அமெரிக்க உள்நாட்டு இனவாதப் பிரச்சனைகளின் மேலோக்கத்திற்கு துணை போகும் அவரது சில செயற்பாடுகளையும் தவிர இதுவரை மட்டுப்படுத்தக்கூடிய அளவிலேயே திரு ட்ரம்ப் அவர்களின் செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன.
சரியான பாதையில் , ஒற்றுமையுடன், தீர்க்கதரிசனத்துடன் செல்வோம்! செயற்படுவோம்!
"கூட்டமைப்பில் உள்ளவர்களில் தமிழரசு கட்சியை தவிர ஏனையவர்கள் ஆயுத குழுக்களில் இருந்து வந்தவர்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்" என்ற செய்தி பற்றி முகநூலில் வாதப்பிரதிவாதங்கள் செல்வதை அவதானித்தேன். அது பற்றிய என் நோக்கு இது:
உண்மைதானே பெருமைப்பட வேண்டிய விசயம்தானே. ஆனால் சிறு திருத்தம். அவர்கள் வெறும் ஆயுதக் குழுக்கள் அல்லர். ஆயுதம் தாங்கி விடுதலைக்காகப் போராட எழுந்தவர்கள். ஒரு கட்டத்தில் ஆயுதம் தூக்க வேண்டிய நிலை ஏற்பட்டபோது, தம் கனவுகளை, உறவுகளை எல்லாம் விட்டு விட்டுத் தம்மை விடுதலைக்காக அர்ப்பணித்துப் போராடப் புறப்பட்ட அவர்கள் ஆயுதமேந்திய விடுதலைப்போராளிகள். அவர்களை வெறும் ஆயுதக் குழுக்களாகச் சுருக்குவதன் மூலம் அப்போராட்டக்காலக் கட்டத்தில் இந்தியாவில் சென்று ஒதுங்கிய அல்லது அரசியலில் இருந்து ஒதுங்கிய மிதவாதக் கட்சியான தமிழரசுக்கட்சி ஏதோ முக்கியத்துவம் வாய்ந்த கட்சிபோலச் சுமத்திரன் சித்திரிக்க முனைவது நகைப்புக்கிடமானது. ஆயுதக் குழுக்கள் வேறு. ஆயுதமேந்திய விடுதலைப்போராளிகள் வேறு. சட்டத்தரணிக்கு இந்த உண்மைகூடத் தெரியவில்லையே.
ஈழத்தமிழர்தம் விடுதலைக்காக ஆயுதமேந்திய விடுதலைபோராட்ட அமைப்புகளில் தவறுகள் நடைபெற்றிருந்தபோதும், அவற்றுக்கப்பால் அவர்களது போராட்டம் , நோக்கம் . உயிர் அர்ப்பணிப்பு ஆகியன கொச்சைப்படுத்தப்பட முடியாதவை.
தற்போதுள்ள சூழலில் தமிழர் அனைவரினதும் முரண்பாடுகளுடன் கூடிய ஒற்றுமை அவசியம். அதன் மூலமே ஒரு தீர்வுக்கான் சாத்தியமுண்டு. இரு பக்கங்களிலும் தம் அரசியல் சுய இலாபங்களுக்காக மக்களின் ஒற்றுமையினைக் குழப்புவதற்கு முனையும் சக்திகள் உள்ளன. இவற்றுக்குப் பின் தம் தேசிய நலன்களை மையப்படுத்திய உள்நாட்டு, உப கண்ட மற்றும் சர்வதேசச் சக்திகளுள்ளன. ஆனால் அவற்றின் இடையூறுகளைத் தவிர்க்க முடியாது. அவற்றை விளங்கிச் சரியான பாதையில் , ஒற்றுமையுடன், தீர்க்கதரிசனத்துடன் செல்வது, செயற்படுவது நல்லது.
போராளிகள் அனைவரையும் நினைவு கூர்வோம்! - சிவராசா கருணாகரன் -
- எழுத்தாளர் கருணாகரன் தனது முகநூற் பதிவொன்றில் இலங்கைத்தமிழர்களின் விடுதலைப்போராட்டத்தில் தம்மை அர்ப்பணித்த அனைவருக்கும் அஞ்சலி செய்வது பற்றிய தமது கருத்தினைப் பகிர்ந்திருந்தார். தற்போதுள்ள சூழலில் மிகவும் பயனுள்ள கருத்து என்பதால் `பதிவுகள் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கின்றோம். நீங்களும் படித்துப்பாருங்கள்.- பதிவுகள் -
மாவீரர்களுக்கான அஞ்சலி அல்லது வழிபாடு அல்லது நினைவு கூரல் அல்லது நினைவு கொள்ளல் என்பதை ஒரு திரள் மக்கள், எழுச்சியாக மேற்கொள்கின்றனர். இன்னொரு திரளினர் அதை விமர்சனத்திற்குரியதாகப் பார்க்கின்றனர். அல்லது எதிர்க்கின்றனர். இதற்கு வரலாற்று ரீதியான காரணங்கள் உண்டு. அதற்கான நியாயங்களும் உண்டு. இது குறித்து ஏற்கனவே பலராலும் பல்வேறு கோணங்களில் எழுதப்பட்டும் விவாதிக்கப்பட்டும் இருக்கிறது. புலிகளின் வீழ்ச்சிக்குப் பிறகு மாவீரர் நினைவு கூரலைச் செய்ய முடியாத நிலை ஏற்பட்டபோது, போராட்டத்தில் உயிர் நீத்தவர்களுக்கான பொது நினைவு கூரலைச் செய்தால், இந்த நெருக்கடியைக் கடக்க முடியும். அத்துடன் அது ஒரு புதிய (ஒருங்கிணைந்த) பண்பாட்டுத் தொடக்கமாக இருக்கும் எனக் கூறப்பட்டது. 2009 க்குப் பின்னர் உருவாகிய புதிய அரசியற் சூழலும் அதற்கான சிந்தனைகளும் இதை மேலும் வலுப்படுத்தின. இதன் விளைவாக, கடந்த கால அரசியல் வரலாற்று அனுபவங்களின் அடிப்படையில், ஒரு பொதுக் கருத்து நிலை ஏறக்குறைய எட்டப்பட்டிருந்தது. அனைத்து விடுதலை இயக்கங்களிலிருந்தும் போராட்டத்தின்போது உயிர்நீத்தவர்களுக்கான “பொது நினைவு கூரல்” ஒன்றைச் செய்யலாம் என்பதே அந்த முடிவாகும்.
தமிழ் மக்களுடைய அரசியலை முன்னெடுப்பதற்கு கூட்டணிகளை அமைக்கலாம் என்றால், அந்த அரசியலுக்காக உயிர் துறந்தவர்களை நினைவு கூருவதற்கு ஏன் கூட்டாக இணைய முடியாது? அதற்குரிய நினைவுச் சதுக்கங்களையும் ஒவ்வொரு இடத்திலும் உருவாக்கலாம் என்ற அபிப்பிராயங்களும் முன்வைக்கப்பட்டன. அவையும் பலராலும் உடன்பாடு காணப்பட்டிருந்தன. ஆனால், துரதிருஸ்டவசமாக அவை எதுவுமே இதுவரையில நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதற்குக் காரணம், இந்த விடயம் தொடர்பாகப் பேசியோர் அனைவரும் ஒரு மையத்தில் கூடி இதற்கான தீர்மானங்களை எடுக்கவும் இல்லை. அவற்றுக்கான செயற்றிட்டத்தை வரையவும் இல்லை. நடைமுறைப்படுத்துவதற்கான தயாரிப்புகளில் ஈடுபடவும் இல்லை. முன்வைக்கப்பட்ட அபிப்பிராயங்களும் கருத்துகளும் நியாயங்களும் கொள்கை அளவிலேயே ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தன. செயலாக்கத்துக்கான சிந்தனையாக மலரவில்லை. இதனால், இன்னும் ஒவ்வொரு தரப்பினரும் தத்தமது தரப்பிலிருந்து உயிர் நீத்தவர்களுக்கான நினைவு கூரலை “தியாகிகள் தினம்” (ஈ.பி.ஆர்.எல்.எவ்) , வீரமக்கள் தினம்(புளொட்), தமிழ்த்தேசிய வீரர்கள் தினம்(ரெலோ) மாவீரர் நாள் (புலிகள் - ஈரோஸ்) என தனித்தனியே செய்து வருகின்றனர். ஏனைய இயக்கத்தினர் அங்கங்கே தங்கள் தலைமைகளையும் போராளிகளையும் நினைவு கொள்கின்றனர். இதனால், ஒவ்வொரு தரப்பின் நினைவு கூரலிலும் சில தரப்பினர் மட்டுமே சம்மந்தப்படுகின்றனர். ஏனையோர் விலகி நிற்கின்றனர். அல்லது அதைப் பொருட்டுத்த வேண்டியதில்லை என்ற உணர்வோடிருக்கின்றனர். இது மீளவும் உட்புகைச்சலையும் விமசர்சனங்களையும் உண்டாக்குகின்றது. அதே பழைய நிலை என்பது விரும்பத்தகாத ஒரு நீங்காத நிழலைப்போலவே தொடருகிறது. மட்டுமல்ல, பொது நினைவு கூரலுக்கான வடிவமும் தள்ளிப் போய்க்கொண்டேயிருக்கிறது. இது நல்லதல்ல.