எழுத்தாளர் முருகபூபதியின் 'பாட்டி சொன்ன கதைகள்' - வ.ந.கிரிதரன் -
- ஜீவநதி சஞ்சிகையின் 189ஆவது இதழ் எழுத்தாளர் முருகபூபதி சிறப்பிதழாக வெளியாகியுள்ளது. அதில் வெளியான வ.ந.கிரிதரனின் கட்டுரை. ஜீவநதி சஞ்சிகையினைப் பெற விரும்புபவர்கள் அதன் ஆசிரியர் பரணீதரனுடன் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்னும் மின்னஞ்சல் முகவரி மூலம் தொடர்பு கொள்ளுங்கள். - பதிவுகள்.காம் -

1. உருவக் கதைகளும் முருகபூபதியின் 'பாட்டி சொன்ன கதைகளும்'!
எழுத்தாளர் முருகபூபதியின் மல்லிகைப்பந்தல் வெளியீடாக வெளிவந்த 'பாட்டி சொன்ன கதைகள்' நூலைப்படித்தபோது இந்நூல் என் கவனத்தைப் பல வழிகளில் ஈர்த்தது. முருகபூபதி ஊடகத்துறையில் நீண்ட கால அனுபவம் மிக்க எழுத்தாளர். தன் ஊடகத்துறை அனுபவங்களைத் தவறாமல் தனது கட்டுரைகள் மூலம் ஆவணப்படுத்தி வருபவர். சிறுகதைகள், நேர்காணல்கள், பயண அனுபவங்கள், நூல் விமர்சனங்கள், உருவகக் கதைகள் என அவரது இலக்கியப் பங்களிப்பு முக்கியமானது.தொடர்ச்சியாகப் பத்திரிகைகள், இணைய இதழ்களில் எழுதி வருபவர். இக்கட்டுரை அவரது 'பாட்டி சொன்ன கதைகள்' என்னும் உருவக்கதைகளின் தொகுப்பு பற்றிய திறனாய்வுக் குறிப்புகள் எனலாம்.
உருவகக் கதைகள் என்றதும் நினைவுக்கு வருபவவை கலீல் கிப்ரானின் கதைகள், ஈசாப் கதைகள், பஞ்சதந்திரக் கதைகள். தமிழகத்தில் உருவகக் கதைகள் என்றால் முதலில் நினைவுக்கு வருபவர் ஐ.சாமிநாதன். அறுபதுகள், எழுபதுகளில் இவரது உருவகக் கதைகள் பல தமிழக வெகுசன இதழ்களில் வெளியாகின. இவர் கலைமகள் ஆசிரியராக விளங்கிய கி.வா.ஐகநாதனின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது. எழுத்தாளர் விந்தனும் உருவகக் கதைகள் எழுதியிருக்கின்றார். எழுத்தாளர் பா.செயப்பிரகாசமும் உருவகக் கதைகளை எழுதியுள்ளதாக அறியப்படுகின்றது. இலங்கையைப் பொறுத்தவரைல் தமிழில் உருவக் கதைகள் என்றால் முதலில் நினைவுக்கு வருபவர் சு.வே என்றழைக்கப்படும் எழுத்தாளர் சு.வேலுப்பிள்ளை. அடுத்தவர் எழுத்தாளர் எஸ்.முத்துமீரான். எஸ்.பொ, செம்பியன் செல்வன், செங்கையாழியான் போன்றவர்களும் உருவக்கதையின் பக்கம் தம் கவனத்தைத் திருப்பியிருக்கின்றார்கள். 'நான்' (யாழ்ப்பாணம்) பதிப்பக வெளியீடாக செம்பியன் செல்வனின் 'குறுங்கதை நூறு' (!986) தொகுதியில் சமூக, அரசியலைச் சாடும் சிறப்பான உருவகக் குறுங்கதைகள் சில உள்ளன.




இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் போர்பந்தர் என்னும் ஊரில் பிறந்த குழந்தை காந்தி எப்படி மகாத்மாவானார்...? எவ்வாறு ஒரு தேசத்தின் பிதாவானார் ....? என்பதற்கெல்லாம் வரலாறுகள் இருக்கின்றன. தற்காலக்குழந்தைகளுக்கும் இனிபிறக்கவிருக்கும் குழந்தைகளுக்கும் இப்படியும் ஒரு மனிதர் இந்தியாவில் பிறந்து - வாழ்ந்து - மறைந்தார் என்று சொல்லிக்காண்பிப்பதற்கு காந்தி பற்றிய திரைப்படங்களும் ஆங்கிலத்திலும் அனைந்திந்திய மொழிகளிலும் இருக்கின்றன. இந்திய சுதந்திரத்திற்காக அகிம்சை வழியில் உண்ணாவிரதப் போர்களையும் மௌனத்துடன் உப்புச்சத்தியாக்கிரகப் போராட்டங்களையும் நடத்தி நேற்று வரையில் இந்தப் போர்களை எதற்காகவும் தொடரலாம் என்ற முன்னுதாரணத்தையும் விதைத்துவிட்டுச் சென்றிருப்பவருக்கு 02-10-2023 ஆம் திகதி 153 ஆவது பிறந்த தினம். 1869 ஒக்டோபர் மாதம் 02 ஆம் திகதி பிறந்த காந்தி எந்தத்தேசத்தின் விடுதலைக்காக அறவழியில் போராடினாரோ... அதே தேசத்தின் குடிமகன் ஒருவனால் 1948 இல் ஜனவரி 30 ஆம் திகதி சுட்டுக் கொல்லப்பட்டார்.
கேள்வி: சென்றமுறை 1815இன், கண்டிய ஒப்பந்தம் பற்றி கதைக்க நேரிட்டது. நீங்கள் உங்கள் பாடலில் போற்றியுள்ள, கெப்பட்டிபொல மொனரவிலவும், மேற்படி கண்டிய ஒப்பந்தத்துக்கு, ஒரு பங்குதாரியாகி கையொப்பமிட்டிருந்தாலும், ஆங்கிலேயர் அவ் ஒப்பந்தத்தை மதியாது, தங்கள் நலனை மாத்திரம் முன்னகர்த்தி, இந்நாட்டு மக்களின் நலனை காட்டிக் கொடுத்த போது, கெப்படிபொல இந்நாட்டின் முதலாவது சுதந்திர போராட்டத்தை தொடங்கினார் என்றும், அதனை தொடர்ந்து கிட்டத்தட்ட 40,000 மக்களை கொன்று குவித்தே, அச்சுதந்திர போராட்டத்தை ஆங்கிலேயர் இந்நாட்டில் அடக்கினர் எனவும் நீங்கள் குறிப்பிட்டீர்கள். ஆங்கிலேயர் இப்படி தாங்கள் செய்து கொண்ட கண்டிய ஒப்பந்தத்தை, தாங்களே மதிக்காததை இட்டு நீங்கள் என்ன கூறுவீர்கள்? ஏனெனில், முக்கியமாக, மேலோட்டமாக பார்க்குமிடத்து, ஆங்கிலேயர்கள்தாம் நாகரிகத்தின் சொந்தக்காரர்கள் அல்லது நாகரிகத்தின் பிரதிநிதிகள் என்று பொதுவில் நம்பப்பட்டும் கூறப்பட்டும், ஏற்றுக்கொள்ளப்பட்டும் இருக்கின்றது. கூறப்படுகின்றது?
பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகளும் & வ.ந.கிரிதரன் மின்னூல் படைப்புகளும்
அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச் சங்கம் இலங்கை எழுத்தாளர்களுக்காக நடத்திய இலக்கியப்போட்டி முடிவுகள் வெளியாகியுள்ளன. கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக அவுஸ்திரேலியாவில் இயங்கிவரும் தமிழ் இலக்கிய கலைச்சங்கம், இலங்கை தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் நோக்கத்தில், கடந்த 2021 ஆம் ஆண்டு இலங்கையில் வெளியான நூல்களில் சிறந்தவற்றை தேர்வுசெய்து, அவற்றை எழுதியவர்களுக்கு பரிசு வழங்கத் தீர்மானித்திருந்தது.
மே 2009 இதழ் 113 

கட்டடக்கலை ஒரு அற்புதமான கலை. பின்நவீனத்துவம் தோன்றிய களமும் அதுதான். இப்போ கட்டடக் கலையில் புதிய சகாப்தமொன்றை Vertical Forest (செங்குத்துக் காடு) நிறுவியிருக்கிறது. செங்குத்து காடு என்றால் என்ன. அதன் கருத்தாக்கம் (concept) என்ன. 

முன்னுரை
கவிஞர் இந்திரனது ‘தமிழ் அழகியல்’ ‘புத்தகத்தைப் படிக்கும் வரை நான் தமிழில் அழகியலை முழுமையான ஒரு பகுதியாகச் சிந்திக்கவில்லை . ஆனால் , உலகத்தின் பல வசதியான நட்சத்திர விடுதிகளில் தங்கியிருந்தாலும் துபாயில் உள்ள நட்சத்திர விடுதிகள்தான் என்னைக் கவர்ந்தன. அதற்கான காரணத்தை யோசித்தேன். அரேபியா இஸ்லாமியர்களிடம் எப்பொழுதும் இன்ரீரியரர் டிசையின் (interior design) நன்றாக இருந்தது. உருவங்கள் அற்று அவர்கள் சிந்திப்பதாலோ? தெரியவில்லை.



கலாநிதி செல்லத்துரை சுதர்சன் கடந்த சுமார் இருபது ஆண்டுகளாக ஈழத்து இலக்கிய உலகில் தீவிரமாகச் செயற்பட்டுவரும் இளந் தலைமுறையைச் சேர்ந்த ஒரு முக்கியமான ஆளுமையாக அறியப்படுபவர். பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையில்; சிறப்புப் பட்டம் பெற்று, அங்கேயே சிரேஷ்ட விரிவுரையாளராகக் கடமையாற்றிவருகிறார். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர். தமிழ்நாட்டின் முக்கியமான எழுத்தாளர்கள், விமர்சகர்கள், அறிஞர்களுடன் நெருக்கமான உறவு உடையவர். ஒரு பல்கலைக்கழக விரிவுரையாளர் என்றவகையில் தமிழியல் ஆய்வில் ஆழமாகத் தடம்பதித்துவருபவர். முக்கியமான ஆய்வுக் கட்டுரைகள் பலவற்றை எழுதி வெளியிட்டிருக்கிறார். ஆசிரியர், பதிப்பாசிரியர் என்றவகையில் இதுவரை சுமார் இருபது நூல்கள் வெளியிட்டுள்ளார். இளந் தலைமுறையைச் சேர்ந்த பல்கலைக்கழக விரிவுரையாளர்களுள் இவரளவு தீவிரமாகச் செயற்படுபவர்கள் மிகச் சிலர் என்றே சொல்லவேண்டும்.
ஆறுமுகத்தாற்றை முகம் பெருத்த யோசனையில் ஆழ்ந்திருந்தது. தலையை பக்கவாட்டில் குலுக்கிக் கொண்டார். எதுவும் தோன்றவில்லை. மேலும் கீழுமாகப் பார்த்து யோசித்தார். அதுவும் சரிவரவில்லை.ஒழுகும் மூக்கைப் துடைப்பதற்கு என்று கைகாவலாக வாயில் கவ்வும் கை லேஞ்சியையும் வழமை போல கவ்விக் கொண்டார். அவனிட்டையாவது கேட்டுப் பாப்பம். 


பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் 








