மறு யுகம் வெளியீடான 'வாழ்வின் பின் நோக்கிய பயணமிது' பற்றிய குறிப்புகள்.. - வ.ந.கிரிதரன் -
மறு யுகம் பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ள 'வாழ்வின் பின் நோக்கிய பயணமிது' நூலை வாசித்தேன். இந்நூல் எனக்குக் கிடைப்பதற்கு வழி செய்த நண்பரும், சமூக, அரசியற் செயற்பாட்டாளருமான எல்லாளனுக்கு நன்றி. சிவகாமி, யாழினி என்னும் இரண்டு முன்னாட் பெண் போராளிகளின் போராட்ட அனுபவங்களைக் கூறும் நூல். சிவகாமியின் போராட்ட அனுபவங்கள் படர்க்கையில் விபரிக்கப்பட்டுள்ளன. இவரது அனுபவங்களே 48 பக்கங்களைக் கொண்ட இச்சிறு நூலின் பிரதான பகுதியாக அமைகின்றது.
பல்வேறு இயக்கங்களைச் சார்ந்தவர்களாலும் அவரவர் சார்ந்த அமைப்புகளைப்பற்றிய விமர்சனங்கள் எழுந்துள்ளன. சமூக, அரசியல் மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களால் அமைப்புகளைப்பற்றிய , இலங்கையின் அரசுகளைப்பற்றிய விமர்சனங்கள் எழுதப்பட்டுள்ளன. 2009 ற்கு அடுத்த காலகட்டத்தில் முன்னாட் பெண் போராளியான விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த தமிழினியின் 'ஒரு கூர்வாளின் நிழலில்' என்னும் சுய விமர்சனத்தை உள்ளடக்கிய சுய சரிதை நூல் எழுதப்பட்டு வெளியானது. இவ்விதமானதொரு சூழலில் தற்போது இன்னுமொரு சிவகாமியினால் இன்னுமொரு விமர்சன நூல் எழுதப்பட்டு வெளியாகியுள்ளது முக்கிய கவனத்தைப்பெறுகின்றது. இந்நூல் அவர் சார்ந்திருந்த அமைப்பு மீதான விமர்சனத்தை, இயக்கங்களுக்கு இடையிலான உள் முரண்பாடுகள் காரணமாக அவரை இரு தடவைகள் கைது செய்து இருபாலைத் தடுப்பு முகாமில் வைத்திருந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான விமர்சனத்தை முன் வைக்கின்றது. நூலின் அளவு சிறியதானாலும், கடுகு சிறுதானாலும் காரம் பெரிது என்பதற்கேற்ப நூல் அமைந்துள்ளது.
பெண் போராளியின் குடும்பச் சூழல், நாட்டில் நிலவிய அரசியற் சூழல் இவற்றின் காரணமாகச் சிவகாமி தமிழீழ விடுதலை இயக்கத்தில் இணைந்து கொள்கின்றார். மேலதிகப் பயிற்சிக்காகத் தமிழகம் செல்கின்றார். அப்போது நிகழ்ந்த மனோ மாஸ்டரின் படுகொலையை அடுத்து பெண் போராளிகளில் சோதியா போன்ற சிலர் சிலர் விடுதலைப்புலிகள் அமைப்பில் சேர்ந்து கொள்கின்றனர். ஏனையோர் இலங்கை திரும்புகின்றனர். இவ்விதம் ஏனைய பெண் போராளிகள் அமைப்பினர் பத்திரமாக நாடு திரும்பும் வரையில் அவர்களுக்குப் பாதுகாப்பாக ஆண் போராளிகளொருவராக விளங்கிய எல்லாளன் (ரஞ்சித்), மனோ மாஸ்ட்டரின் சகோதரன் ராஜன் மற்றும் ஏனைய போராளிகள் சிலர் இருந்ததையும் நூல் பதிவு செய்கின்றது. உண்மையில் இந்நூல் வெளிவருவதற்கு முக்கிய காரணங்களிலொன்றாக எல்லாளன் எழுதிய அவரது நினைவுக் குறிப்புகள் இருந்துள்ளதையும், அதன் காரணமாகவே மெளனமாகப் பல்வேறு நாடுகளில் வாழ்ந்து கொண்டிருந்த 'டெலோ' அமைப்பின் முன்னாட் போராளிகளுக்கிடையில் மீண்டும் தொடர்புகள் ஏற்பட்டதையும், நூலுக்கான எல்லாளனின் 'ஞாபகக் குறிப்'பிலிருந்து அறிந்துகொள்ள முடிகின்றது.

- இலங்கையிலிருந்து வெளிவந்த 'நந்தலாலா' , 'தீர்த்தக்கரை' ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியர்களில் ஒருவரும் சட்டத்தரணியுமான திரு. ஜோதிகுமார் தனது பயணங்களில் சந்தித்த மனிதர்கள் பற்றிய கட்டுரைத்தொடர் 'என் கொடைகானல் மனிதர்கள்! - பதிவுகள்.காம் -

ராணுவம் அடுத்த முன்னகர்வுக்கு வழக்கமாக எடுக்கும் ஓய்வை அந்தமுறை எடுக்கவில்லைப்போல் தெரிந்தது. எரி குண்டுகளும், ஷெல்களும் விழுந்து சிதறின. அங்கே நிறையப் போராளிகளும் கூடியிருந்தனர். ஒரு யுத்தத்திற்கான முன்னாயத்தங்கள் தெரிந்தன. அது அவ்வாறுதான் இருக்கும். புலிகள் இயக்கத்து தலைமையின் மையம் அது. போராளிகளின் பிரசன்னம் பாதுகாப்புக்கான அம்சமாக ஒரு காலத்தில் இருந்ததுதான். அப்போது இல்லை. அதன் அர்த்தம் போராளிகள் நிறைய இருக்கிறவரையில் புதுக்குடியிருப்பு இனி பாதுகாப்பில்லை என்பதுதான். முருகமூர்த்தி உஷாரானான். “பையை எடு, ஜோதி” என்றான்.
“சாமி….. முகூர்த்த டைம் முடியிறத்துக்கு இன்னும் அரைமணி நேரத்துக்கு மேல இருக்கு…. நாமெல்லாம் மனசுவெச்சா இந்தக் கேப்புக்குள்ள கலியாணத்தையும் முடிச்சிடலாம் இல்லியா….”


நான் இந்த சிறுகதை மீண்டும் கிடைக்குமென்று எதிர்பார்க்கவேயில்லை. ஆனால் நூலகம் தளத்தின் உதவியால் மீண்டும் இச்சிறுகதையினைப் பெற முடிந்தது. அதற்காக நூலகத்துக்கு நன்றி.



பாரதியார் எழுதிய முதல் கவிதையும் , முதல் சிறுகதையும் என்ன... ? என்பது பற்றியும் இலக்கிய உலகில் ஆராயப்படுகிறது. வழக்கமாக இலக்கிய வரலாற்றாசிரியர்கள் வ.வே.சு. ஐயர் ( வரகனேரி வேங்கடேச சுப்பிரமணிய ஐயர் ) எழுதிய குளத்தங்கரை அரசமரம் தான் முதலில் தமிழில் வெளிவந்த சிறுகதை என்று நிறுவுகின்றனர். இவர் 1881 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் 02 ஆம் திகதி திருச்சி வரகனேரியில் பிறந்தார். இந்திய சுதந்திரப்போராட்டத்தின்போது தமிழ் நாட்டில் இவரது பங்களிப்பு மிக மிக முக்கியமானது. லண்டன் சென்று சட்டமும் படித்து பரீஸ்டரானவர். சுதந்திரம் சும்மா கிடைக்காது, ஆயுதத்தினாலும் பெறமுடியும் என நம்பிய தீவிரவாதி. பாரதியின் வாழ்க்கைச் சரிதத்தில் இவரும் முக்கிய தருணங்களில் இடம்பெறுகிறார். பாரதி மறைவதற்கு முதல் நாள் 1921 ஆம் ஆண்டு 11 ஆம் திகதி, சென்னையில் வ.வே.சு. ஐயர் கைதாகி சிறைசெல்லுகிறார். பாரதி கடும் சுகவீனமுற்றிருப்பது அறிந்து, அவரைச்சென்று பார்க்க விரும்பும் ஐயர், பொலிஸாரிடம் அனுமதி கேட்கிறார். இவரை சிறைக்கு அழைத்துச்செல்லும் பொலிஸாருக்கு இரக்க குணம் இருந்திருக்கவேண்டும்.
‘உலகிலே அதி உயரமான மலையின் உச்சியில் இப்போது நீங்கள் நிற்கிறீர்கள்’ என்று சொல்லி எனக்கு அதிர்ச்சி தந்தாள் வரவேற்பில் நின்ற, தலைமுடியில் ஒற்றைப்பூ செருகிய இளம் பெண்மணி. ஹவாயில் உள்ள மௌனாகியா மலையின் உச்சியில் நாங்கள் அப்போது நின்றிருந்தோம். இமயமலை ஆசியாவில்தான் இருக்கிறது என்ற எனது நம்பிக்கையை ஒரு கணம் கேள்விக்குறியாக்கினாள். நேபாளத்திற்கும், தீபெத்திற்கும் இடையே உள்ள இமயமலையின் எவரெஸ்ட் சிகரம்தான் உலகிலே அதிக உயரமான சிகரம் என்பதும், அதன் உயரம் 29,028 அடி என்பதும் மாணவப்பருவத்தில் இருந்தே என் மனதில் பதிந்திருந்தது. அதன்பின் இன்றுவரை இமயமலை 4 அங்குலம் வளர்ந்திருந்ததும் தெரியும். வரவேற்பில் நின்ற பெண்மணிக்கு அனுபவம் போதவில்லை, எவெரெஸ்ட் பற்றி இவர் அறிந்திருக்கவில்லை என்ற நினைவோடு, அவரைப் பார்த்தேன். எனது பார்வையைப் புரிந்து கொண்ட அவரோ அருகே இருந்த பதாதையை நோக்கிச் சுட்டுவிரலை நீட்டினார். மௌனாகியா மலையின் படத்தையும் அதைப்பற்றிய குறிப்பையும் வாசித்த போது என்னால் ஏற்றுக் கொள்ள முடியாமல் ஒருகணம் தடுமாறிப் போனேன்.

எனக்கு நடிகரும் பாடகருமான மு.க.முத்து மீது எப்போதுமே ஒருவித அனுதாபமுண்டு. கலைஞர் எம்ஜிஆரின் அரசியல் மற்றும் திரையுலகச் செல்வாக்கைப்பற்றித் தப்புக் கணக்கு போட்டார். அரசியலில் அவர் போட்ட தப்புக்கணக்கு எம்ஜிஆரைக் கட்சியிலிருந்து விலக்கியது. விளைவு? எம்ஜிஆர் உயிருடன் இருந்தவரையில் கலைஞரால் ஆட்சியைப் பிடிக்கவே முடியவில்லை. அதுபோல் எம்ஜிஆரைக் கட்சியிலிருந்து விலக்க முன்னர் எம்ஜிஆரின் திரையுலக வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவரத் தன் புதல்வனான மு.க.முத்துவைக் கதாநாயகனாக வைத்து எம்ஜிஆரைப்போல் நடிக்க வைத்தார். அது அவர் போட்ட எம்ஜிஆர் பற்றிய முதலாவது தப்புக் கணக்கு. விளைவு? நடிப்புத் திறமை, பாடும் திறமை மிக்க மு.க.முத்துவின் கலையுலக வாழ்க்கை உதித்த வேகத்திலேயே அஸ்தமித்துப்போனது. எம்ஜிஆருக்கு எதிராக மு.க.முத்துவை நடிக்க வைத்ததற்குப் பதிலாக நடிக்க வைத்திருந்தால் மு.க.முத்துவின் கலையுலக வாழ்க்கை பிரகாசித்திருக்கும் என்பதே என் கணிப்பு. 




பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









