மெல்பனில் Dare to Differ நூல் வெளியீட்டு அரங்கு!



பதிவுகள் இணைய இதழ் மீது மதிப்பும், பற்றும் வைத்துள்ள , பவள விழாக்காணும் கவிஞர் 'தேசபாரதி' வே.இராசலிங்கம் அவர்களை வாழ்த்துகின்றோம். புதுக்கவிதை கோலோச்சும் கால கட்டத்தில் இன்னும் மரபுக் கவிதைகளைச் சிறப்பாக எழுதிவரும் கவிஞர் அவர். அவ்வகையில அவர் முக்கியமானவர். அவரது பவள விழா நிகழ்வு பற்றிய தகவலினை உரிய நேரத்தில் கவனிக்கத் தவறியதையிட்டு வருந்துகின்றோம். ஒரு பதிவுக்காக அந்நிகழ்வு பற்றிய செய்தியினையும் இங்கு இணைக்கின்றோம்.
Meeting ID: 834 2958 4996 | Pass code: 493623
Web: www.atlasonline.org
Email: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Time: February 19, 2022

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச் சங்கம் இலங்கை எழுத்தாளர்களுக்காக நடத்திய இலக்கியப்போட்டி முடிவுகள் வெளியாகியுள்ளன. கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக அவுஸ்திரேலியாவில் இயங்கிவரும் தமிழ் இலக்கிய கலைச்சங்கம், இலங்கை தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் நோக்கத்தில், கடந்த 2019 – 2020 ஆம் ஆண்டுகளில் இலங்கையில் வெளியான நூல்களில் சிறந்தவற்றை தேர்வுசெய்து, அவற்றை எழுதியவர்களுக்கு பரிசு வழங்கத் தீர்மானித்திருந்தது.
இந்தத் தீர்மானத்திற்கு அமைவாக குறிப்பிட்ட இரண்டு ஆண்டு காலப்பகுதியில் இலங்கையில் வெளியான சிறுகதை, நாவல், கட்டுரை, கவிதை , மொழிபெயர்ப்பு முதலான ஐந்து துறைகளில் வெளியான நூல்கள், அவற்றை எழுதிய எழுத்தாளர்களிடமிருந்து கோரப்பட்டிருந்தன. அதன்பிரகாரம் கிடைக்கப்பெற்ற நூல்களை தேர்ந்த இலக்கிய வாசகர்கள் படித்து, பரிந்துரை செய்தவற்றிலிருந்து இறுதிக்கட்டத் தேர்வில் சிறந்த நூலாக தெரிவானவற்றுக்கு பரிசில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மொழிபெயர்ப்புத் துறையில் ஒரே ஒரு நூலே போட்டிக்கு வந்தமையால், இனிவரும் ஆண்டுகளில் நடத்தவிருக்கும் போட்டியில் அதனை பரிசீலிப்பது என முடிவாகியிருக்கிறது.

Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/87604318200?pwd=Y1FOdW1zWnZyZXRyOUVNaVVFOUs2dz09
Meeting ID: 876 0431 8200
Passcode: 122791

யாழ்ப்பாணத்தில் சாதாரண மத்திய தரக் குடும்பத்தில் பிறந்து, உயர்கல்வியை பெறுவதற்குரிய வாய்ப்பு வசதிகளை இழந்து, அறிஞர்களினதும் முற்போக்கு எழுத்தாளர்களினதும் நூல்களை வாசித்துப்பெற்ற அனுபவங்களினாலேயே மேதையாக வலம்வந்து, ஈழத்து தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு கடுமையாக உழைத்திருக்கும் மல்லிகை ஜீவா, கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 28 ஆம் திகதி கொழும்பில் தமது 93 வயதில் மறைந்தார்.

இந்நிகழ்வுகள் பகுதியில் கலை, இலக்கிய நிகழ்வுகள் பற்றிய அறிவிப்புகளுடன், யு டியூப்ப்பில் வெளியாகும் கலை, இலக்கியக் காணொளிகளையும் அவ்வப்போது பகிர்ந்துகொள்ள பதிவுகள்,காம் முடிவு செய்துள்ளது. அவ்வப்போது இத்தகைய காணொளிகளின் முக்கியத்துவம் கருதி அவை பகிர்ந்துகொள்ளப்படும். அந்த வகையில் எழுத்தாளர் ஜெயமோகனின் நாவல் பற்றிய உரையினை உள்ளடக்கிய இக்காணொளி இங்கு பகிர்ந்துகொள்ளப்படுகின்றது. - பதிவுகள்.காம் -
நாவல் பற்றிய எழுத்தாளர் ஜெயமோகனின் உரை:
Time: Jan 22, 2022 02:30 PM London, ,3.30 PM Europe ,8.00 PM Sri Lanka & India, 9.30 AM Canada
Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/82214331642?pwd=ekxjdXNndDdSeXdQZER1cUFaOFIyZz09
Meeting ID: 822 1433 1642
Passcode: 462013


நம்மவர் பேசுகிறார்: நடன நர்த்தகி, கலை, இலக்கிய ஆய்வாளர், வானொலி ஊடகவியலாளர் கலாநிதி கார்த்திகா கணேசர் ( பவளவிழா நாயகி ) அவர்களுடன் உரையாடல்
மெய்நிகர் இணைப்பு: Join Zoom Meeting:
https://us02web.zoom.us/j/88645005608?pwd=M1J5TS9TR3ZUbzVxZVVMQlcySFBJZz09
Meeting ID: 886 4500 5608 | Passcode: 334900
கொரோனோ பெருந்தொற்று உலகடங்கிலும் உக்கிரத்தாண்டவம் ஆடத் தொடங்கிய காலப்பகுதியில், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் திகதி தேனீ இணைய இதழின் ஆசிரியர் ஜெமினி கெங்காதரனையும் அது ஜெர்மனியில் காவுகொண்டுவிட்டது. புங்குடுதீவில் 1965 ஆம் ஆண்டு கணேஷ் – மங்கையற்கரசி தம்பதியரின் புதல்வனாகப்பிறந்த ஜெமினி கெங்காதரன் யாழ். இந்துக்கல்லூரியின் முன்னாள் மாணவர். 1980 களில் அய்ரோப்பாவுக்கு புலம்பெயர்ந்த அவர், 1989 ஆம் ஆண்டு தொடக்கத்தில் நண்பர்களுடன் இணைந்து தேனீ என்ற சிற்றிதழை ஆரம்பித்தார். கலை, இலக்கிய, அரசியல், சமூக அக்கறை சார்ந்த படைப்புகளுக்கு குறிப்பிட்ட இதழ் களம் வழங்கியது. அதனையடுத்து அக்கினி என்ற இதழையும் சிறிதுகாலம் நடத்தினார். அதன்பின்னர் தேனீ இணைய இதழை தொடங்கி தினமும் பல வருடங்களாகப் பதிவேற்றினார். தேனீ இணைய இதழை தனிமனிதராக அர்ப்பணிப்போடு வெளியிட்டு, மாற்றுச்சிந்தனைகளுக்கும் சிறந்த களம் வழங்கினார். கலை, இலக்கியம் மற்றும் அரசியல் ஆய்வுத் தொடர்களுக்கும் பயனுள்ள நேர்காணல்களுக்கும் மொழிபெயர்ப்புகளுக்கும் களம் வழங்கி, வாசகர்களிடம் சேர்ப்பித்தவர். அதற்காக எந்த ஊதியமும் பெறாமல் கருத்துக்களையும் எதிர்வினைகளையும் விமர்சனங்களையும் மாத்திரமே ஏற்றுக்கொண்டவர். தேனீயில் வெளிவரும் ஆக்கங்களுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பு என்றவுணர்வுடன் ஊடக தர்மத்தை பின்பற்றி, பாரதூரமான விமர்சனங்கள் வரும்போது அவற்றை உரியவர்களுக்கே அனுப்பி அவர்களின் கவனத்திற்குட்படுத்தி ஊடக தர்மத்தின் கண்ணியத்தையும் காப்பாற்றினார்.

இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் சிறுகதை, கவிதை, கட்டுரை, திறனாய்வு, நாவல், நாடகம், மொழிபெயர்ப்பு மற்றும் ஊடகத்துறை எனப் பன்முகப்பங்களிப்பு நல்கிய எழுத்தாளர் அ.ந.கந்தாமியின் கிடைக்கபெறும் ஒரேயொரு நாவல்: 'மனக்கண்; 1967இல் தினகரன் (இலங்கை) பத்திரிகையில் தொடராக வெளிவந்து மிகுந்த ஆதரவைப்பெற்ற நவீனம். பின்னர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் வானொலி நாடகமாக எழுத்தாளர் சில்லையூர் செலவராசனால் ஒலிபரப்பப்பட்டது.


வாழ்க தமிழ்மொழி!
வாழ்க தமிழ்மொழி!
வாழ்க தமிழ்மொழியே!
வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
வாழிய வாழியவே!
வான மளந்த தனைத்தும் அளந்திடும்
வண்மொழி வாழியவே!........
மகாகவி பாரதியின் தமிழ் வாழ்த்து திருமதி சரண்யா மனோசங்கரின் குரலில் தேன் மதுரமாய் அந்த மண்டபத்தை நிரப்புகிறது! இது மகாகவியின் நினைவு நூற்றாண்டு என்பதை நினைவுபடுத்துகிறது.
இம் மாதம் 19 ஆம் திகதி ஞாயிறு மாலை சரியாக நான்கு மணி. மெல்பனில் பேர்விக் மூத்த பிரஜைகள் மண்டபத்தில் அந்தக்குரல் ஒலிக்கிறது. மண்டபத்தில் திரண்டிருந்து மக்கள் எழுந்து நின்று சிரம் தாழ்த்தி அமைதியாக செவிமடுக்கின்றனர்.
நான் எனது கண்களை மெதுவாக நிமிர்த்திப் பார்க்கிறேன்.
மேடையின் வலது பக்கத்தில் முறுக்கிய மீசைக்கூடாக மந்திரப் புன்னகையுடன் என்னை நோக்குகிறது மகாகவி பாரதியின் நேர்கொண்ட அந்தப் பார்வை.
எமது கனடா கவிஞர் கழகமானது ஒவ்வொரு மாதத்தின் கடைசிக் கிழமையிலும் தமிழறிஞர்கள், படைப்பாளிகள் மற்றும் கலைஞர்களை அழைத்து மெய்நிகர் வழியாகச் சிறப்புரைகளையும், கலந்துரையாடல் களையும் நடத்தி வருகின்றது. அதன்படி, சென்ற செப்ரெம்பர் மாதம் இருபத்தைந்தாம் திகதி சனிக்கிழமை எமது கழகத்தின் இணைய வழிக் கலந்துரையாடல் காலை 10 மணி தொடக்கம் 12 மணிவரை இடம் பெற்றது. இந்த நிகழ்வில் பிரபல எழுத்தாளரும், கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் தலைவருமான குரு அரவிந்தன் அவர்களின் ‘சிறுகதை எழுதுவது எப்படி?’ என்ற பயிற்சிப்பட்டறை இடம் பெற்றது. முதலில் கழகத்தின் தலைவர் திரு. கந்த ஸ்ரீ பஞ்சநாதன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். அதைத் தொடர்ந்து பொருளாளர் திரு. குமரகுரு. கணபதிப்பிள்ளை அவர்கள் எழுத்தாளர் குரு அரவிந்தனை அறிமுகம் செய்து வைத்தார்.
அடுத்து ‘கவிஞர்களும் எழுத்தாளராகலாம்’ என்ற தலைப்பில் குரு அரவிந்தன் சிறுகதை எழுவது எப்படி என்பது பற்றியும், ஏன் அதிக மக்களால் சிறுகதைகள் வாசிக்கப்படுகின்றன என்பது பற்றியும் விளக்கங்களைத் தந்தார். சிறுகதையின் தொடக்கம், அதன் வளர்ச்சி, இன்றைய நவீன சிறுகதைகள் பற்றி உதாரணங்களையும் இலகு நடையில் எடுத்துச் சொன்னார். மேலும் அவர் தனது உரையில் சிறுகதைகள் எவ்வாறு எழுதப்படவேண்டும் எனவும், அவை எவ்வாறு வாசகர் உள்ளங்களைச் சென்றடையும் என்னும் பொருளிலும் பின்வரும் வழி முறைகளை எடுத்துச் சொன்னார்.
- ''பதிவுகள்' இதழின் நிகழ்வுகள் பகுதிக்குத் தகவல்கள் அனுப்புபவர்கள் குறைந்தது ஒரு வாரத்துக்கு முன்னராவது அனுப்புங்கள். கடைசி நேரத்தில் வரும் தகவல்களை உரிய நேரத்தில் வெளியிடாமல் போகும் சந்தர்ப்பங்களுண்டு. இத்தகவலும் இறுதி நேரத்தில் வந்த தகவல். ஒரு பதிவுக்காகப் பிரசுரிக்கின்றோம். - பதிவுகள் -
விதை குழுமத்தின் தோழமைகளுக்கு வணக்கம், அந்தனி டி சிமித் [ANTHONY D SMITH] லண்டன் ஸ்கூல் ஒவ் இக்கொனமிக்ஸ் [LSE] என்ற புகழ்பெற்ற நிறுவனத்தில் பேராசிரியராக இருந்தவர். 1982 - 2000 காலத்தில் இவர் தேசியவாதம் குறித்த மிக முக்கியமான கோட்பாட்டாளர்களில் ஒருவராக அறிவுலகின் கவனத்தைப் பெற்றார்.
1980 களில் தேசியவாதம் பற்றிய மூன்று கோட்பாடுகள் முதன்மையிடத்தைப் பிடித்துக் கொண்டிருந்தன. அவையாவன:
i. ஆதிமுதல்வாதம் [PRIMORDIALISM]
ii. நிரந்தரவாதம் [PERENNIALISM]
iii. நவீனத்துவவாதம் [MODERNISM]
இக்கோட்பாடுகளோடு 1990 களில் அந்தனி டி சிமித் அவர்களின் இனக்குழும குறியீட்டுவாதம் இன்னொரு முக்கியமான கோட்பாடு என்ற தகுதியயைப் பெற்றது.
விதை குழுமத்தின் அறிதலும் பகிர்தலும் டிசம்பர் 2021 நிகழ்வில் அந்தனி டி சிமித் அவர்களின் இனக்குழும குறியீட்டுவாதம் பற்றி விரிவாக ஆராயப்படும். அந்தனி டி சிமித் ஆதிமுதல்வாதம், நிரந்தரவாதம், நவீனத்துவவாதம் என்னும் கோட்பாடுகளின் குறை நிறைகளை விமர்சனநோக்கில் மதிப்பீடு செய்வதோடு, இக்கோட்பாடுகளின் சிறப்பான கூறுகளை ஏற்றுக் கொண்டு தேசியவாதங்கள் பற்றிய புதிய விளக்கத்தை முன்வைக்கின்றார்.

இலங்கையின் மூத்த எழுத்தாளரும் மல்லிகை ஆசிரியருமான டொமினிக்ஜீவா அவர்களினால் இலக்கிய உலகிற்கு 1970 களில் அறிமுகப்படுத்தப்பட்ட எழுத்தாளரும் சமூகப்பணியாளருமான முருகபூபதியின் 70 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு வெளியாகும் கதைத் தொகுப்பின் கதை ( சிறுகதை ) நடந்தாய் வாழி களனி கங்கை ( கட்டுரை ) பாட்டி சொன்ன கதைகள் ( சிறுவர் இலக்கியம் ) நூல்களின் வெளியீட்டு அரங்கு இம்மாதம் 19 ஆம் திதி ( 19-12-2021 ) ஞாயிற்றுக்கிழமை மாலை 4-00 மணிக்கு அவுஸ்திரேலியா மெல்பனில் Berwick senior citizens hall (112 High Street, Berwick VIC 3806) மண்டபத்தில் நடைபெறும். மெல்பன் வாசகர் வட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமதி சாந்தி சிவக்குமார் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வு, திருமதி மேகானந்தா சிவராசாவின் வரவேற்புரையுடன் ஆரம்பமாகும். திருமதி சரண்யா மனோசங்கர் தமிழ்வாழ்த்து பாடுவார்.