இலங்கையில் நீடித்திருந்த உள்நாட்டுப்போர் கடந்த 2009 ஆம் ஆண்டு மேமாதம் நடுப்பகுதியில் முடிவுக்கு வந்திருந்தாலும், அதன் பாதிப்புகள் தொடர்பான விவாதங்கள், விசாரணைகள், ஆய்வுகள் இன்னமும் முடிவுக்கு வரவில்லை.

அந்த கொடிய போர்க்காலத்தில் காணாமல்போனவர்களின் உடன்பிறப்புகள், உறவினர்கள் நடத்திவரும் அறப்போராட்டங்களும் முற்றுப்பெறவில்லை. அதேசமயம் நீடித்த அந்தப்போரின் உறைபொருளையும் மறைபொருளையும் பின்னணியாக வைத்து நூல்கள் வெளிவருவதும் முற்றுப்பெறவில்லை. தமிழிலும், ஆங்கிலத்திலும், சிங்களத்திலும் இலங்கை உள்நாட்டுப்போர் அல்லது தமிழ் ஈழ விடுதலைப்போர் என்பதை கருப்பொருளாகக் கொண்டு சிறுகதைகள், கவிதைகள், நாவல்கள் பல வெளிவந்தன. வந்தவண்ணமிருக்கின்றன.

விடுதலைப்புலிகளின் மகளிர் படையணியில் முக்கிய பொறுப்பிலிருந்து, போர் முடிவுற்ற காலத்தில் சரணடைந்து, புனர்வாழ்வு முகாமிலிருந்து வெளியேறிய தமிழினி சிவகாமி எழுதிய ஒரு கூர்வாளின் நிழலில், விடுதலைப்புலிகளினால் கடல்பரப்பில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த கடற்படையைச் சேர்ந்த கொமடோர் அஜித் போயாகொட எழுதிய காத்திருப்பு, ஆகிய நூல்கள் சிங்கள – தமிழ் மொழிகளில் வந்திருப்பதுபோன்று, மேஜர் கமால் குணரட்ண எழுதிய Road to Nandikadal என்ற நூலும் வெளிவந்து பரபரப்பாக பேசப்பட்டது.

இந்தவரிசையில் அவுஸ்திரேலியாவில் நான்கு தசாப்த காலங்களுக்கும் மேலாக வதியும் ‘ சுந்தர் ‘ சுந்தரமூர்த்தி எழுதிய Dare to Differ என்ற நூல் அண்மையில் வெளிவந்துள்ளது. அச்சம் தவிர் என்றார் ஔவையார். அச்சமில்லை… அச்சமில்லை என்றார் பாரதியார். இக்கூற்றுக்களை கேட்டும் படித்தும் கடந்துவந்திருக்கும் நாம், ‘ சுந்தர் ‘ சுந்தரமூர்த்தியின் Dare to Differ என்ற நூலின் தலைப்பினை மாறுபட அஞ்சேல் எனவும் துணிந்து மாறுபடு எனவும் அர்த்தப்படுத்திக்கொள்ள முடியும்.

சுந்தர், அவுஸ்திரேலியா விக்ரோரியா மாநிலத்தில் இயங்கிய இலங்கை தமிழ்ச்சங்கத்தின் செய்தி ஏடான தென்துருவ தமிழ்முரசு இதழின் ஆசிரியராகவும் இங்கு இயங்கிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழ் ஈழ பொருளாதார மேம்பாட்டு அமைப்பிலும் Tamil Elam Economic Development Organiழ்ation (TEEDOR) போரின் முடிவுக்குப்பின்னர் வடக்கு - கிழக்கு புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்தி என்னும் தன்னார்வ அமைப்புடன் North East Rehabilitation and Development Organization (NERDO)  முதலானவற்றில் இணைந்து பணியாற்றியவர்.

1986 இலேயே அவுஸ்திரேலியா லிபரல் கட்சியிலும் அங்கத்தவராக சேர்ந்தவர். 1991 முதல் 2004 வரையில் சமூகத்தொடர்புச் செயலாளராக அவுஸ்திரேலிய தமிழர் பேரவையிலும்  Australasian Federation of Tamil Association (AFTA) 1994 முதல் 2005 வரையில் ஸ்தாபக உறுப்பினராகவும் இணைப்பாளராகவும்  இயங்கிவந்திருப்பவர். பல மாநாடுகள், கருத்தரங்குகள் ஆகியனவற்றில் சம்பந்தப்பட்டிருந்த இவர் ஜெனீவா வரையில், ஈழத்தமிழருக்காக குரல் கொடுக்கச்சென்றவருமாவார். அதனால், தான் கற்றதையும் பெற்றதையும், சந்தித்த தலைவர்கள், இயக்கத்தினர், அரசியல் ஆலோசகர்கள் பற்றியெல்லாம் தமது நூலில் விபரித்துள்ளார். தனது நாற்பது ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பொதுவாழ்வுபற்றி எழுதியிருக்கும் சுந்தரின் நினைவாற்றல், பல செய்திகளையும் சம்பவங்களையும் துல்லியமாக பதிவுசெய்திருக்கிறது.

அத்துடன் அவரது தீர்க்கதரிசனமும், இனி நாம் என்ன செய்யவேண்டும் என்பதற்கான யோசனைகளும் இந்நூலில் வெளிப்பட்டுள்ளது. அதன் மூலம் அவரது அரசியல், சமூக நிலைப்பாடும் தெரியவருகிறது. தான் கடந்து வந்த பாதையில் நேர்ந்த மாற்றங்களை படிப்படியாக சித்திரித்திருக்கும் சுந்தர், ஒரு நோக்கத்திற்காக முன்னெடுக்கப்பட்ட விடுதலைப்போரின் உள்ளிடுக்குகளில் நிகழ்ந்த தான் நேருக்கு நேர் சந்தித்த சம்பவங்களையும் பதிவுசெய்துள்ளார்.

விடுதலைப்புலிகளின் மதியுரைஞர் அன்டன் பாலசிங்கம், குமார் பொன்னம்பலம், தமிழ்ச்செல்வன், மற்றும் ஒரு காலத்தில் ஐக்கிய நாடுகள் சபையில் குரல் எழுப்பிய கிருஷ்ணா வைகுந்தவாசன் முதலானோருடன் நடத்திய உரையாடல்கள் குறித்தும் இந்நூலில் எழுதியிருக்கிறார்.

அரசியல் ஆய்வாளர்களுக்கும், ஈழ விடுதலை அரசியலை கற்க விரும்பும் மாணவர்களுக்கும் இந்த நூல் வாயில்களை திறந்துவிட்டிருக்கிறது. இந்த நூல்பற்றிய சிறிய அறிமுகம்தான் இந்தப்பதிவு. எனினும் இந்நூல் கூறும் முரண் நகை, குறித்து எழுதுவதற்கு நிறையவுண்டு. அவை பற்றி பிறிதொரு சந்தர்ப்பத்தில் எழுதலாம்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க
                                        

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள் இணைய இதழின்  முக்கிய நோக்கம் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை  பலவேறு நாடுகளிலும் வாழும் தமிழர்களுடன் பகிர்ந்துகொள்வதாகும். படைப்புகளை அனுப்பும் எழுத்தாளர்கள் புகைப்படங்களை அல்லது ஓவியங்களை அனுப்பும்போது அவற்றுக்கான காப்புரிமைக்கு உரிமை உள்ளவர்களாக இருந்தால் மட்டுமே அவற்றை அனுப்பவும். தமிழ் மொழியை இணையத்தில் பரப்புவதும் இவ்விணைய இதழின் முக்கிய நோக்கமாகும். படைப்புகளை ngiri2704@rogers.com , editor@pathivukal.com ஆகிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.

Pathivugal Online Magazine''s  main aim is to share the creative works of Tamil writers with Tamils living in various countries. When writers submit their works—such as photographs or paintings—please send them only if you hold the copyright for those items. Spreading the Tamil language on the Internet is also a key objective of this online magazine. Please send your submissions to ngiri2704@rogers.com and editor@pathivukal.com.

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும்.  நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 
பதிவுகள் விளம்பரம்