தம்பா (நோர்வே) கவிதைகள் இரண்டு!
1. இருப்பில் இல்லாத கடன்.
இரண்டு வீடு
மூன்று கார்கள்
இலட்சம் இலட்சமாக பணம்
வங்கி வைப்புகளில் இருந்தும்
நேரத்தை கடன் வேண்டியே
செலவு செய்யும்
மேலத்தேய பிச்சைக்காரர்கள் நாம்.
நேற்றய தினமும்
நேற்றய முன் தினமும்
இன்றய தினத்திலிருந்து
நேரத்தை திருடி தின்று
ஏப்பம் விட்டு விடுகின்றன..
நாளைய தினத்திலோ
நாளைய மறு தினத்திலோ இருந்து
நேரத்தை கடன் வேண்டியே
செலவு செய்ய வேண்டிய நிலை இன்று.
நாளாந்த கடனாளி மீண்டுவிடுவான்.
நாமோ ஆயுள் கடனாளியாக
சபிக்கப்பட்டவர்கள்.
நேரம் பொன்னானது தான்,
இந்த பொன்னை மட்டும் தான்
யாராலும் திருட முடிவதில்லை.
நான் மட்டுமே திருட முடிகிற
பாதுகாப்பான வங்கிக்கணக்கு.







’வனஜா, கிரிஜா – வளைஞ்சா நெளிஞ்சா….”
சாவே வாழ்வான போதினிலும் 














1. நினைக்கின்றோம் இதுநாள்!

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









