வடிவேலுவின் மற்றும் ஒரு பரிமாணம் மாமன்னன் ! பயணத்தின் வழியே ஒரு பார்வை! - முருகபூபதி -

தமிழ்த்திரையுலகில் நகைச்சுவை நடிகராகவும், சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் நாயகனாகவும் அதிக கவனத்திற்குள்ளான வடிவேலு நடித்த மாமன்னன் படத்தை எனது தொடர் வெளிநாட்டு பயணங்களுக்கிடையே பார்த்தேன்.
கடந்த ஜூன் மாதம் ரெட்ஜெயன்ட் மூவிஸின் தயாரிப்பில், மாரி செல்வராஜின் இயக்கத்தில் ஏ. ஆர். ரகுமானின் இசையில் வடிவேலு ( மாமன்னன் ) பகத்பாஸில் ( ரத்தினவேல் ) உதயநிதி ஸ்டாலின் ( அதிவீரன் ) கீர்த்தி சுரேஷ் ( லீலா ) ஆகியோரின் நடிப்பில் வெளியாகியிருக்கும் இத்திரைப்படம், தமிழ் சமூகத்தில் சமகாலத்தில் பரவலாகப்பேசப்படுகிறது. இத்திரைப்படத்தை தடைசெய்யவேண்டும் என்ற குரலும் எழுந்திருக்கிறது. எனினும் வசூலில் சாதனையை நிகழ்த்தி வருகிறது. இதன் கதை சமகாலத்திலும் பேசுபொருளாக இருப்பதுதான் இதற்கெல்லாம் காரணம்.
ஏற்கனவே பரியேறும் பெருமாள், கர்ணன் முதலான திரைப்படங்களையும் சாதிப்பிரச்சினையை மையப்படுத்தி எடுத்திருக்கும் மாரி செல்வராஜ், மாமன்னன் திரைப்படம் மூலம் வடிவேலுவின் மற்றும் ஒரு வித்தியாசமான பரிமாணத்தை காண்பித்துள்ளார்.







உலகில் எந்தப் பாகத்திற்குச் சென்றாலும், அஞ்சலிக் குறிப்பு எழுதும் எனது வேலைக்கு மாத்திரம் ஓய்வு கிட்டாது போலிருக்கிறது. கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல்விருது விழாவுக்கு கடந்த ஜூன் 01 ஆம் திகதி மெல்பனிலிருந்து புறப்படும்போதே எனக்கு நன்கு தெரிந்த இரண்டு அன்பர்கள் இறந்துவிட்டனர். கனடா வந்து சேர்ந்தபின்னர் மற்றும் ஒரு சகோதரி திருமதி புஸ்பா சிவபாலன் மெல்பனில் இறந்துவிட்டார் என்ற செய்தி வந்தது. புஸ்பா எமது அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் உறுப்பினர். கலை, இலக்கிய ஆர்வலர். எமது எழுத்தாளர் விழாக்களிலும் இலக்கிய சந்திப்புகளிலும் பங்கேற்பவர்.




















பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









