பதிவுகள் இணைய இதழும் அதன் ஆரம்ப கால இலக்கியப் பங்களிப்பும்! - வ.ந.கிரிதரன் -
ஆரம்ப காலத்திலிருந்து வெளியாகும் தமிழ் இணைய இதழ்களான திண்ணை , பதிவுகளின் ஆரோக்கியமான இலக்கியப் பங்களிப்பு பற்றி நான் நிச்சயம் பெருமைப்படுகின்றேன். திருப்திப்படுகின்றேன். பதிவுகள் இணைய இதழைத் தொடங்கியபோது முக்கியமான நோக்கங்களாக இருந்தவை: என் படைப்புகளை இணைய மூலம் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும். அதே சமயம் இணையத்தில் தமிழ் எழுத்துகளை எழுதுவதற்குத் தூண்டுகோலாகவிருக்க வேண்டும். இவ்விதமான எண்ணங்களோடு பதிவுகள் இணைய இதழை ஆரம்பித்தேன். அப்போது வலைப்பதிவுகள் ஏதுமில்லை. இவ்விதமானதொரு சூழலில் முரசு அஞ்சல் எழுத்துரு எனக்குப் பெரிதும் கை கொடுத்தது. ஏனென்றால் எனக்குத் தமிழ்த் தட்டச்சு செய்வதில் பெரிதும் ஆற்றலில்லை. ஆனால் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்வது அதனுடன் ஒப்பிடும்போது இலகுவாகவிருந்தது. இவ்விதம் பதிவுகள் இணைய இதழை ஆரம்பித்து படைப்புகளைத் தமிழில் பிரசுரித்தபோது அது இணையத்தில் தமிழ் வாசகர்களைக் கவர ஆரம்பித்தது. பலர் தம் படைப்புகளை அனுப்ப ஆரம்பித்தார்கள். அப்பொழுது அவ்விதம் படைப்புகளை அனுப்புபவர்களுக்கு நான் கூறியது: பதிவுகளுக்கு படைப்புகள் அனுப்புபவர்கள் படைப்புகளை பதிவுகளுக்கு உரிய எழுத்துரு பாவித்துத் தட்டச்சு செய்து அனுப்ப வேண்டுமென்பதுதான். இதற்கு முக்கிய காரணங்கள்: ஒன்று மீண்டும் தட்டச்சு செய்யும் சிரமம் இல்லை. அடுத்தது தமிழில் தட்டச்சு செய்வதன் மூலம் எழுத்தாளர்களை இணையத்தமிழுக்கு அறிமுகப்படுத்துவது. இவ்விதம் தமிழில் தட்டச்சு செய்து அனுப்பப்படும் படைப்புகளையே பதிவுகள் ஏற்றுக்கொண்டு பிரசுரிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளது.



குணவர்தனா, தபாலில் வந்த கடிதத்தை படித்துவிட்டு, வீட்டின் விட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான். கொவிட் பெருந்தொற்று தொடங்கிய காலத்திலிருந்து அவனும் வீட்டிலிருந்தே வேலை செய்கிறான். மனைவி நிலாந்தி பாடசாலைக்குச் சென்ற மகனை அழைத்துவரச்சென்று திரும்பும்போது, வீட்டு தபால் பெட்டியிலிருந்து எடுத்து வந்த கடிதத்தை அறையை தட்டி தந்துவிட்டு, மகனை குளியலறைக்கு கூட்டிச்சென்றாள்.

பழந்தமிழ் இலக்கியச் செல்வங்களுள் இன்று குறை நூலாய்க் கிடைத்துள்ளவற்றுள் முத்தொள்ளாயிரமும் ஒன்றாகும். புறத்திரட்டு நூலிலிருந்து தொகுக்கப்பட்ட நூற்றெட்டுப் பாடலோடு பழைய உரைகளிலிருந்து தொகுக்கப்பட்ட இருபத்திரண்டு பாடல்களும் சேர்ந்து தற்பொழுது வழக்கில் இருப்பது நூற்று முப்பது பாடல்களாகும். மூன்று, தொள்ளாயிரம் ஆகிய இரு சொற்களும் சேர்ந்து முத்தொள்ளாயிரம் எனப் பெயர் பெற்றது. இந்நூற்பாடல்கள் சேர, சோழ, பாண்டியர் ஆகிய மூவர் வரலாற்றையும் சுட்டுகின்றன. ஒவ்வொருவருக்கும் தொள்ளாயிரம் பாடல்கள் வீதம் இரண்டாயிரத்து எழுநூறு பாடல்களைக் கொண்ட இந்நூல் கனலாலும், புனலாலும், காற்றாலும், காழ்ப்பாலும் அழிந்தன போக எஞ்சிய நூற்று முப்பது பாடல்களைக் கொண்டுள்ளது.


புனைவிலக்கியம் என்பது வெறும் எண்ணங்களின் அழகியல் வடிவம் மட்டுமே சார்ந்ததல்ல. அதில் அறிவின் தேடுதலும் இணைந்தே அமைந்திருந்தால் வாசிப்பனுபவத்தின் பெறுமதியை நிச்சயம் மேலோங்கச் செய்யும். இவ்வகையான நியாயமான எண்ணங்கள் உள்மன ஓரத்தில் எட்டிப் பார்க்கும் போதெல்லாம், ஆசி கந்தராஜா அவர்களின் படைப்புகள் என் நினைவில் தோன்றும். அவரது கதைகளை நான் அதிகம் வாசித்திருக்கிறேன் என்பது ஒரு காரணமாக இருந்தாலும், அவ்வாறு வாசிக்கத் தூண்டும் ஆர்வத்தை அது நிச்சயம் கொண்டிருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. ஒரு வரலாறு ஆவணப்படுத்தலாக மட்டுமே முன்வைக்கப் படுவதை விட, புனைவின் சிறப்பும், சுவாரசியமும் சேரும் போது வாசகனின் உள்வாங்கல் அதிகரிக்கிறது, நினைவிலும் நிலைக்கிறது.

பள்ளி இறுதி வகுப்பை முடித்து கல்லூரிக்கு தயாராகிக் கொண்டிருந்த நண்பர்கள், மீசை முளைத்த, ஓட்டுப் போடும் வயது நெருங்கிய பரவசத்தில், வாழ்க்கை பற்றி அன்று பெரிய திட்டங்கள் வகுக்கத் தொடங்கினோம். ஒரு நண்பன் ஆவேசமாக சொன்னான். “சும்மா செங்கல்லை வைத்து ஒரு வீடு கட்டுவதற்காக மொத்த ஆயுளையும் வங்கியில் அடமானம் வைக்கும் சாதாரண வாழ்க்கையை நான் தேர்வு செய்யப் போவதில்லை”. உலகம் முழுக்க பயணம் செய்ய வேண்டும் என்பது அவன் கனவாக இருந்தது. மற்றவர்கள் கைத்தட்டி அவன் பேச்சை வரவேற்றோம். ஒரு தசாப்தம் கடந்து, இன்று திரும்பி பார்த்தால் சுற்றியுள்ள ஊர்களில் ஒவ்வொரு சதுர அடியும் என்ன விலை போகிறது என்கிற தகவலை அதே நண்பனிடம்தான் பலரும் கேட்டுத் தெரிந்து கொள்கிறார்கள். எந்த வீட்டை பார்த்தாலும் அதன் செலவு என்ன மதிப்பு என்ன என்பதை உடனடியாக கணக்கிட்டுவிடுகிறான். “கல்யாணம் முடிந்து கார் வாங்கியாகிற்று. அடுத்து வீடு வாங்கி செட்டில் ஆக வேண்டும் நண்பா” என்று அழுத்தமாக சொல்கிறான். தன் பழைய சூளுரையும் ஆக்ரோஷமும் இப்போது அவனுக்கே ஞாபகம் இருக்குமா என்று தெரியவில்லை. ஆனால் இது ஆச்சர்யமூட்டும் தனி நிகழ்வல்ல. இயல்பாக நம்மிடையே வந்து சேர்கிறது இம்மாற்றம். முதிரா இளமையில் வீட்டை விட்டு வெளியேற துடிக்கிறோம். உலகம் வீட்டுக்கு வெளியே இருப்பதாகத் தோன்றுகிறது. அப்புறம் சீக்கிரமே நமக்கென்று ஒரு வீடு கட்டி அமைந்துவிட விருப்பம் வருகிறது. அதன் பாதுகாப்பை நாடத் தொடங்குகிறோம்.
கிளிம்மின், மாகாணத்தை நோக்கிய நகர்வு, முன்னரே குறித்தவாறு, மரீனாவால் ஏற்படுகின்றது.
இந்தக்கிழமை முழுவதும் இரவு வேலை செய்யவேண்டும். இரவு நேரங்களில் வைத்தியசாலையின் அவசரபிரிவிற்கு வருபவர்களில் கொஞ்சம் வித்தியாசமானவர்களும் இருப்பார்கள். வெறி முற்றியவர்கள், போதைவஸ்துக்கள் பாவித்து கிலி முற்றியவர்கள் என பல ரகம். சாதி மத இன பால் பாகுபாடுகளின்றி எல்லாநாட்டு மனிதர்களும் இதற்குள் அடக்கம். அவர்களை ஒரு கொன்ரோலுக்குள் கொண்டுவருவது மிகவும் கடினம். நான் ஒரு பெண் தாதி என்பதையும் மறந்து, என் கை கால்களையும் பிடித்துவிடுவார்கள்.
- 'மல்லிகை' சஞ்சிகையின் 15.10.67 இதழில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் 'வில்லூன்றி மயானம்' என்னும் இக் கட்டுரை வெளியாகியுள்ளது. அ.ந.க மறைந்தது 14.02.1968இல். ஆனால் இக்கட்டுரை அதற்குச் சில மாதங்களுக்கு முன்னர் அவர் எழுதிய கட்டுரை. அந்த வகையில் அவரது கடைசிக்காலத்தில் எழுதப்பட்ட படைப்புகளிலொன்றாக இதனைக் கருதலாம். 1944இல் சாதியின் பெயரால் நடாத்தப்பட்ட 'வில்லூன்றி மயானப்படுகொலை' பற்றி 1944 நவம்பர் 9ந் தேதி 'தினகரன்' தினசரியில் அ.ந.க வில்லூன்றி மயானம் என்றொரு கவிதையை எழுதியிருக்கின்றார். அப்பொழுது அ.ந.க.வுக்கு வயது இருபது. அதன் பின்னர் மல்லிகையில் இக்கட்டுரையை எழுதும்போது அவருக்கு வயது 43. அ.ந.க.வின் இக்கட்டுரை அவரது அந்திமக் காலத்தில் வெளியான அவரது படைப்புகளில் ஒன்று என்ற வகையிலும் முக்கியத்துவம் மிக்கது. - பதிவுகள்.காம் -
நோயில்லா நெறியை உணர்த்துவது உணவு நெறியாகும். உடலுக்கு ஒவ்வாத உணவு என்னும் வகை உணவை நீக்கி விட்டு, உடலுக்கு மனத்துக்கும் ஏற்ற உணவை உட்கொண்டால் உடலுக்கு மட்டுமல்ல உயிருக்கும் குற்றம் உண்டாகாது என்பர். உணவே உயிர் வாழ்வதற்குத் தேவையாகவும், உணவே உடல் நோய்க்கு மருந்தாகவும், அவ்வுணவே பல சமயங்களில் உடல் நோயைக் கொடுக்கும் மருந்தாகவும் அமைவதுண்டு. நாம் அன்றாட சமையலுக்கு பயன்படுத்தும் மிளகு கருப்பு தங்கம் என்று அழைக்கப்படுகிறது. அதனால் பல நூறு ஆண்டுகளுக்கு மேலாக மிளகை வணிகத்திற்கு பயன்படுத்தி வந்துள்ளனா். ஐரோப்பாவில் அந்த காலத்தில் பெண்ணிற்கு திருமணம் செய்து வைத்து சீதனமாக மிளகை தான் கொடுத்து வந்துள்ளனர். அந்த அளவிற்கு மிளகு மிகவும் விலை உயா்ந்த பொருளாக இருந்துள்ளது. இப்பொழுது ஒரு கிலோ தங்கத்தின் விலையை விட மிளகின் விலை அதிகமாக இருந்துள்ளது. மிளகுக்கு எப்பொழுதுமே உணவில் மிக முக்கிய இடம் உண்டு. உணவில் நஞ்சிருந்தாலும் அதனை முறிக்கும் திறன் மிளகுக்கு உண்டு. அதனால் தான் எதிரி வீட்டில் சாப்பிடுவிட்டு வந்து நாலு மிளகைச் சாப்பிட்டால் போதுமென இன்றும் கிராம பகுதியில் கூறுவார்கள்.
UNSUNG HEROES என்று ஆங்கிலத்தில் குறிக்கப்படுபவர்கள் எல்லாத் துறைகளிலும் உண்டு. ஒரு துறையில் அவர்கள் ஆற்றிய சீரிய பணியும் பங்களிப்பும் அங்கீகரிக்கப்படாத நிலையில் இருப்பவர்கள். இந்த அங்கீகாரம் என்பதில் உள்ள ’அரசியல்’ காரணமாக ஓரங்கட்டப்படுபவர்கள் தமிழ் இலக்கியத் துறையில், குறிப்பாக கவிதைப் பிரிவில் நிறையவே உண்டு. காத்திரமாக தொடர்ந்து கவிதைவெளியில் இயங்கிவந்தாலும் இலக்கியத் திறனாய்வாளர்கள் என்ற அடைமொழியோடு அவ்வப்போது பட்டியலிட்டுக் கொண்டிருப்பவர்களுடைய கருணைவிழிகள் இவர்கள் பக்கம் திரும்புவதேயில்லை! அரசியல்துறையில் உள்ள, திரைப்படத்துறையில் உள்ள பிரபலங்களோடு தான் தோளோடு தோள்சேர்த்து நிற்கும் படங்களைத் திரும்பத்திரும்ப வெளியிட்டுக் கொள்ளாததனால் இருக்கலாம், கவிதைகள் எழுதுவதோடு நில்லாமல் தன் கவிதைகளைப் பற்றிப் பெரிதாகப் பேசிக்கொள்ளத் தெரியாததால் இருக்கலாம். சமூக சீர்திருத்தக் கண்ணோட்டங்களைக் கொண்டு வாழ்ந்துவருபவராயிருப்பினும் அதை வெளிச்சம்போட்டுக் காட்டத்தெரியாததாயிருக்கலாம்; சமூகத்தை உய்விப்பதே தன் கவிதைகளின் முழுமுதற்கடன் என்று உரத்து முழக்கமிடத் தெரியாததாயிருக்கலாம்.

இலக்கிய உலகில் தன் எழுத்துக்களால் தனக்கென ஒரு இடத்தைத் தக்க வைத்திருப்பவர் கே ஆர் டேவிட். . சிறுகதை, குறுநாவல், நாவல் எனும் தளங்களில் அறுபது வருடங்களுக்கு மேலாக பயணித்து வருபவர். தன்னுடைய எழுத்துக்களுக்காக பல விருதுகளையும் கௌரவங்களையும் பெற்றிருப்பவர். இலங்கையில் வசிக்கும் எழுத்தாளர்களுக்காக அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் நடத்திய போட்டியில் சிறுகதைகளுக்கான விருதை கே ஆர் டேவிட் சிறுகதைகள் எனும் தொகுதி பெற்றிருக்கின்றது. இப்படி ஒரு போட்டியை நடத்திய அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தினருக்கு பாராட்டுகளையும் சொல்லிக் கொள்கின்றேன். பரிசு பெற்ற இந்நூலின் ஆசிரியருக்கும் என் வாழ்த்துக்கள்.
'காலச்சுவடு' கண்ணனுக்குச் செவாலியர் விருது கிடைத்துள்ளதாக முகநூல் கூறுகின்றது. வாழ்த்துகள். இன்று பெரும்பாலும் விருதுகள் என்பது தொடர்புகளின் அடிப்படையில் வழங்கப்படும் ஒன்றாக மாறிவிட்டது. அவ்வப்போது விருதுகள் சர்ச்சைகளை உருவாக்கி விடுவதுமுண்டு. காலச்சுவடு கண்ணனுக்குச் செவாலியர் விருது என்றதும் எனக்கு இவ்விருதினைப்பெற்ற நடிகர் திலகம் நினைவுக்கு வந்தார். நடிகர் கமலகாசன் நினைவுக்கு வந்தார். அவர்கள் தமிழ்த்திரையுலகின் சாதனையாளர்கள்.



அன்று மதியம் பழைய புத்தகக் கொட்டகையில் இருந்தேன். மே மாதம் என்பதால் உள்ளே ஒரே வெக்கை. காற்றில்லாத புழுக்கத்தில் மர அலமாரிகளின் நடுவில், பழைய புத்தகங்களின் வாசனையில் என்னோடு சேர்ந்து, உள்ளே வேறு இரு வாடிக்கையாளர்கள் தேடிக் கொண்டிருந்தார்கள்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் 








