மறைந்துபோயுள்ள பல விடயங்களை படம்பிடித்துக் காட்டும் ‘கடவுளின் நாற்காலி’ நாவல்! - த. நரேஸ் நியூட்டன் -
அறிமுகம்
அண்மையில் எனது நண்பர் ஒருவர் மூலமாக ஒரு புத்தகம் கிடைத்தது. அனேகமாக இந்த காலம் முழுக்க முழுக்க அனேகமானவர்கள் இணையத் தளத்திலேயே முகம் புதைத்து காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு நானும் விதிவிலக்கல்ல எனது நேரத்திலும் குறிப்பிட்ட பகுதி இணையத்திற்குள் தான் முடங்கிப்போய்விடுகிறது. இதற்கு இந்த கொரோனா நோய்த்தொற்று இன்னமும் உரமூட்டிவிட்டிருக்கிறது என்று தான் கூறவேண்டும். இப்படியான சந்தர்ப்பத்தில்தான் அந்த நண்பர் எனக்கு இந்த நூலை அளித்திருந்தார். இணையத்தோடு வாசிப்பு பழக்கம் ஒன்றிப்போய்விட்டதால் புத்தகத்தை பெறும்போது எனது நூலகத்திற்கு மற்றொரு நூல்கிடைக்கிறது என்ற மகிழ்ச்சி ஒருபுறமிருந்தாலும் அதனை படித்து முடிக்க எவ்வளவு நாளாகும் என்ற யோசனை மற்றொருபுறம் என்னை குழப்பியது. காரணம் அது ஒரு நாவல் அதேவேளை 198 பக்கங்களையுடைய பெரிய புத்தகம். தற்போது எல்லாமே கைக்கடக்கமாக பழகிப்போய்விட்டதால் அதனுடைய பக்க எண்ணிக்கை சற்று சஞ்சலத்தை உண்டுபண்ணியது. மேலும் ஒரு விடயம் யாதெனில் அந்த நாவலை எழுதியவர் ஒரு புதிய எழுத்தாளர் அதே வேளை இந்த நாவல் அவரது முதலாவது நாவல் என்ற விடயம் மேலும் அதனை படிப்பதில் தயக்கத்தை உண்டுபண்ணியது. அந்த நூலை படித்து முடித்ததும் உடனடியாகவே இந்த கட்டுரையை எழுததொடங்கிவிட்டேன். அந்த நாவலை படிக்கும்போது என்னுள் ஏற்பட்ட உளக்கிளர்ச்சியே என்னை இந்த ஆய்வை எழுதத் தூண்டிற்று.
நூல் ஆசிரியர்
‘கடவுளின் நாற்காலி’ என்ற இந்த நாவலின் படைப்பாளர் அதியமான் கார்த்திக் அவர்கள். நான் பல கதாசிரியர்களின் படைப்புக்களை படித்திருக்கிறேன் அவர்களுக்குள் இவரது பெயரை நான் இதுவரை கேள்விப்பட்டதில்லை. இவர் ஏற்கனவே மிகப்பிரபலமாக இருக்கும் எழுத்தாளர் சமூகத்துள் அண்மையில் நுழைந்த ஒரு புதிய படைப்பாளியாகவே என்னால் பார்க்கமுடிகிறது. இவரது தந்தை பெயர் ரத்தினம். கார்த்திக் தமிழ்நாடு வேளாண்மைப்பல்கலைக்கழகத்தில் வனவியல் பட்டம் பெற்றவர். விவசாயத்தில் அதிக நாட்டமுள்ளவர் என்பது இவரைப்பற்றிய தேடலின் மூலம் என்னால் அறியமுடிந்தவிடயம். இவருடய சொந்த இடம் தர்மபுரி மாவட்டத்தின் கடத்தூர் என்ற ஊர். இவரது பணியின் காரணமாக இந்தியாவிலும் ஆபிரிக்க நாடுகளிலும் மாறி மாறி வசித்து வருகிறார். இவர் ஆபிரிக்காவின் 25ற்கும் மேற்பட்ட நாடுகளில் தொடர்ச்சியாக பயணம்செய்து வருபவர். அதனாலோ என்னவோ தனது பயணங்களின் போது இவர் பெற்ற அனுபவங்களையெல்லாம் ஒவ்வொரு பகுதியாக உருவாக்கி தனது முதலாவது படைப்பாக ‘நாடோடியின் கடிதங்கள்’ என்ற நூலை எழுதி வெளியிட்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து இவரது இரண்டாவது படைப்பாகவும் அதேவேளை முதலாவது நாவலாகவும் ‘கடவுளின் நாற்காலி’ என்ற இந்த நாவலை எழுதி வெளியிட்டிருக்கின்றார். ‘கடவுளின் நாற்காலி’ எனும் இந்த நாவல் மிக அண்மையில் 2021 புரட்டாதி மாதத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. இவற்றைவிட மேலதிகமாக இவரைப்பற்றி அஙிந்துகொள்வதற்காக நான் மேற்கொண்ட முயற்சிகள் ஏதும் பலனளிக்கவில்லை.



கடந்த பதினைந்து ஆண்டுகளாக நண்பர்கள் பேச்சின் ஊடாக எனது நினைவில் பதிந்து விட்ட எழுத்தாளர் இமயம். 1990களில் ஏற்பட்ட சமூகப் பொருளாதார மாற்றங்கள் காரணமாகப் பண்பாட்டுத் தளத்தில் பெரும் தாக்கத்தையும் மாற்றத்தையும் சமூகம் சந்தித்தது. மேற்கத்தியத் தொடர்பால் பல புதிய இயக்கப் போக்குகளும் புதிய சிந்தனை வெளிப்பாடுகளும் தமிழ் இலக்கியத்திற்கு வந்து சேர்ந்தன. சமூகத்தின் முதற் பொருளாகப் பேசப்பட்ட பெண்ணியம், தலித்தியம், பின்நவீனத்துவம் அமைப்பியல், போன்ற சொல்லாடல்கள் மேடையேறி பெரும் விவாதத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தின. இந்தப் பேச்சுப் போக்கில் வந்தடைந்தவர் இமையம். கோவேறு கழுதைகள், ஆறுமுகம் போன்ற நாவல்களின் மூலமாகப் புதிய எதார்த்த சூழலை இலக்கியத்திற்குக் கொண்டு வந்து பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி இருந்தார். அன்றிலிருந்து பின்தொடரும் ஒருவனாக ஆகிப்போனேன். செடல் படித்துவிட்டுக் கதைகளின் ஊற்று மூலம் குறித்த தேடலின் முடிவுக்கு வந்திருந்தேன். புத்தகத் தயாரிப்பில் எப்போதும் என்னை வியப்பில் ஆழ்த்தி வரும் கிரியா பதிப்பகம் இமையத்தின் அனைத்துப் படைப்புகளையும் தொடர்ந்து வெளியிட்டு வருவதையும் கவனிக்கத் தவறியது இல்லை.
இன்று எழுத்தாளர் எஸ்.பொ அவர்களின் நினைவு தினம். அவரை நினைவு கூர்வோம். இலங்கைத் தமிழ் இலக்கியத்தில், உலகத்தமிழ் இலக்கியத்தில் எஸ்.பொ அவர்களுக்கு நிலையானதோரிடமுண்டு. அவரது இலக்கியப்பங்களிப்பு யாரும் அறிந்ததே. அதே சமயம் அவர் முக்கியமானதொரு பதிப்பாசிரியராகவும் இருந்திருக்கின்றார் என்பதையும் பதிவு செய்ய வேண்டும்.
இலங்கையின் மூத்த படைப்பாளி எஸ்.பொ. யாழ்ப்பாணம் நல்லூரில் 1932 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 04 ஆம் திகதி பிறந்தார். அவுஸ்திரேலியாவில் சிட்னியில் கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் திகதி மறைந்தார். இன்று அவரது நினைவு தினம் !
எஸ்.பொ என்னும் பெயர் எழுத்துலகில் ஒரு முத்திரை எனலாம்.அவரின் முத்திரை எழுத்துக்கள் அத்தனையும் தமிழ் இலக்கியப்பரப்பில் தனியான இடத்தினைத் தொட்டு நிற்கிறது என்பதை அவரை விமர்சிப்பவர்களும் ஏற்றுக்கொள்ளுவார்கள். 1947 இல் கவிதை மூலமாக எழுத்துத் துறைக்குள் புகுந்து - சிறுகதை, நாவல் விமர்சனம், கட்டுரை, உருவகக்கதை, மொழிபெயர்ப்பு , நாடகம், என அவரின் ஆற்றல் பரந்துவிரிந்து செல்வதையும் காண்கி றோம். எஸ்.பொ என்னும் பெயரைக் கேட்டாலே பலருக்கும் ஒருவித பயம் ஏற்படுவது உண்டு. அவரின் காரசாரமான அஞ்சாத விமர்சன மேயாகும்.எழுத்திலோ பேச்சிலோ பயங்காட்டாத தனிப்பட்ட ஒருவராக இவர் இருந்தார். இதுவே அவரின் தனித்துவமும் பலமாகவும் பலவீனமாகவும் இருந்தது என்றும் எடுத்துக் கொள்ளலாம்.
கேள்வி: சென்றமுறை உங்களை கவர்ந்த உலக ஓவியர்களின் வரிசையில் பலரையும் குறிப்பிட்டிருந்தீர்கள். அதில் முதலாவதாக இடம் பிடித்திருந்தவர் ஜோன் கொன்ஸ்டபில். அவரைப் பற்றி வாதிப்பதற்கு முன் இரண்டு கேள்விகள் உண்டு. முதலாவதாக, நீங்கள் குறிப்பிட்ட, ஓவியர்களின் பெரும்பாலான ஓவியங்கள் ரவிவர்மா காலத்து ஓவியங்களில் இருந்து வித்தியாசப்பட்டிருக்கின்றன. முக்கியமாக, வான்கோவின் ஓவியம் மிக மிக வித்தியாசப்பட்டு காணப்படுகின்றது. இவற்றை ரசிப்பதற்கு அல்லது இவற்றின் உள்ளார்ந்த மதிப்பை சரியாக போற்றுவதற்கு தனியான ஒரு கற்கை – அல்லது பயிற்சி, தேவையானது என்று கருதுகின்றீர்களா?
அண்மையில் நான் வாசித்த புனைகதை 'தரணி'. இதுவொரு சிங்கள நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பு. சிங்கள இலக்கிய உலகில் நன்கறியப்பட்ட எழுத்தாளர்களிலொருவர் கத்யானா அமரசிங்ஹ. புனைகதை, கவிதை, மொழிபெயர்ப்பு என இலக்கியத்தில் பன்முகத்திறமை மிக்கவர் இவர். அத்துடன் ஊடகத்துறையிலும் தீவிரமாகச் செயற்படும் சமூக, அரசியற் செயற்பாட்டாளர். இலங்கையின் சமகால சமூக, அரசியற் பிரச்சினைகளில் மிகுந்த தெளிவு மிக்கவர். அவற்றை இன, மத, மொழி ரீதியாக அணுகாமல், மானுடப்பிரச்சினைகளாக அணுகுமொருவர். இதனை இவர் எழுதி அண்மையில் வெளிவந்த 'தரணி' நாவலிலும் காணலாம். இந்நாவல் இலங்கையில் பல விருதுகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
தோழர் குட்டி ‘தீப்பொறி’, ‘தமிழீழ மக்கள் கட்சி’, மற்றும் ‘மே 18 இயக்கம்’ போன்ற அமைப்புகளுடன் மிகவும் நெருக்கமாக இணைந்து செயற்பட்டவர். அமைப்பின் ஒவ்வொரு முன்னெடுப்புகளிலும் தீவிரமாக தன்னை வெளிப்படுத்தியவர். அமைப்பிற்காக லண்டனில் மாத்திரமன்றி, ஏனைய ஐரோப்பிய தலைநகரங்களிலும் பணியாற்றியவர்.
உள்ளத்துள்ளே நிறைவான மகிழ்ச்சிமழை பொழிந்ததனால், இரவு முழுவதும் வெளியே பொழிந்து ஓய்ந்த மழைகூட பெரிதாகத் தெரியவில்லை.
- இலங்கையிலிருந்து வெளிவந்த 'நந்தலாலா' , 'தீர்த்தக்கரை' ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியர்களில் ஒருவரும் சட்டத்தரணியுமான திரு. ஜோதிகுமார் தனது பயணங்களில் சந்தித்த மனிதர்கள் பற்றிய கட்டுரைத்தொடர் 'என் கொடைகானல் மனிதர்கள்! - பதிவுகள்.காம் -
கீரிமலைக் கடற்கரை சுனாமி வந்து போனது போல அமைதியாக இருந்தது. அலைகளின் ஆர்ப்பரிப்பைத்தவிர, அங்கே மக்கள் நடமாட்டம் அதிகமிருக்கவில்லை. எங்கிருந்தோ பறந்து வந்த மீன் கொத்திப் பறவை ஒன்று சட்டென்று தண்ணீரில் மூழ்கி எதையோ கொத்திச் சென்றது. சுதந்திரமாய்ச் சிறகடித்து வானத்தில் பறக்கும் கடற்கொக்குகளைக் கூட இன்று காணக் கிடைக்கவில்லை. அஸ்தி கரைப்பதற்காக கீரிமலைக் கடலில் தலை மூழ்கி எழுந்தபோது இதுவரை அடக்கிவைத்த எனது துயரம் தன்னிச்சையாகப் பீறிட்டு வெடித்தது. கிரிகைகள் செய்யும்போது துயரத்தை வெளிக்காட்டக் கூடாது என்பதால் கிரிகைகள் செய்த சமயாச்சாரியின் முன்னால் இதுவரை அடக்கி வைத்த துயரம் தண்ணீரில் ஒவ்வொரு முறையும் தலைமூழ்கி எழுந்தபோது என்னையறியாமலே வெடித்துச் சிதறியது. ஆற்றாமையின் வெளிப்பாடாய் இருக்கலாம், ஏனோ வடதிசையைப் பார்த்து ஓவென்று அழவேண்டும் போலவும் இருந்தது. என் கண்ணீரைப் பாக்குநீரணை தனதாக்கிக் கொண்டபோது, ஆர்ப்பரித்த ஓயாத அலைகளின் ஆரவாரத்தில் என் அழுகைச் சத்தமும் அதற்குள் அடங்கிப் போயிற்று.
வெளியே காற்று அனலாக வீசிக்கொண்டிருந்தது

மறு யுகம் பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ள 'வாழ்வின் பின் நோக்கிய பயணமிது' நூலை வாசித்தேன். இந்நூல் எனக்குக் கிடைப்பதற்கு வழி செய்த நண்பரும், சமூக, அரசியற் செயற்பாட்டாளருமான எல்லாளனுக்கு நன்றி. சிவகாமி, யாழினி என்னும் இரண்டு முன்னாட் பெண் போராளிகளின் போராட்ட அனுபவங்களைக் கூறும் நூல். சிவகாமியின் போராட்ட அனுபவங்கள் படர்க்கையில் விபரிக்கப்பட்டுள்ளன. இவரது அனுபவங்களே 48 பக்கங்களைக் கொண்ட இச்சிறு நூலின் பிரதான பகுதியாக அமைகின்றது.



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









