காலத்தால் அழியாத கானம்: "புஞ்சை உண்டு நஞ்சை உண்டு" - ஊர்க்குருவி -
https://www.youtube.com/watch?v=Kyv_1k1SMu8
கவிஞர் புலமைப்பித்தனின் சிறந்த பாடல்களிலொன்று. பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், இசைஞானி, கமலஹாசன் , கே.பாலச்சந்தர் & ஜெமினி கணேசன் கூட்டணியில் உருவான சிறந்த கருத்துகளை உள்வாங்கி எடுக்கப்பட்ட திரைப்படம் 'உன்னால் முடியும் தம்பி'.
இப்படத்தில் இடம் பெற்றுள்ள 'உன்னால் முடியும் தம்பி', மற்றும் இந்தப்பாடல் இரண்டையும் கேட்கையில் உற்சாகத்தையும், மானுட வாழ்க்கையைப் பயனுள்ளதாக்கப் பாடுபட வேண்டும் என்னும் உணர்வினையும் , உத்வேகத்தினையும் எவரும் அடைவர்.
கமலஹாசன் தனித்துவம் மிக்க தன் நடிப்பின் மூலம் இப்பாடலை நினைவில் நிலைத்திடச் செய்திருக்கின்றார். எஸ்.பி.பியும் வரிகளின் உணர்வுகளை உள்வாங்கிச் சிறப்பாகப் பாடியிருக்கின்றார். கேட்கையில் நாமும் வரிகள் வெளிப்படுத்தும் உணர்வுகளை அடைய வைக்கின்றது அவரது குரல்.
இந்தியாவின் பல்வேறு சமூகங்களின் அரசியலும் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும், தவறுகளையும் விமர்சித்துச் சிந்திக்க வைக்கும் வரிகள் கேட்பவரைச் சிந்திக்க வைப்பதுடன் பொங்கி எழவும் வைக்கின்றன.












குழந்தைகளை அடிப்பது கொடூர வன்முறைச் செயல். காலத்திற்கும் குழந்தைகளுக்கு உளவியல் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. சக குழந்தை அடிவாங்குவதைக் கையறுநிலையில் பார்த்துக்கொண்டிருக்கும் குழந்தை யும் மனரீதியாக பாதிப்படையும் என்று பல உளவியல் ஆராய்ச்சிகள் எடுத்துரைக்கின்றன.
புதிதாய் பிறந்த வருடத்தின் ஆரம்பநாளில் பூமராங் எனும் காலாண்டு மின்னிதழ் வெளிவந்திருக்கிறது. அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வெளியீடாக வந்திருக்கும் இவ்விதழ், முதற்பார்வையிலேயே எமது கவனத்தை ஈர்த்துக் கொள்கிறது. அட்டை வடிவமைப்பு இதழை ஆவலோடு புரட்ட வைக்கிறது. 

(நான் காதல் என்றேன், அவள் டேற்ரிங் என்றாள்.


அண்மையில் நடந்த நிகழ்வுகளில் இரண்டு விடயங்கள், முக்கியமானவையாக காணப்படுகின்றன:
கடந்த 10 ஆம் திகதி சனிக்கிழமை அதிகாலை நான் வதியும் புறநகரத்திலிருந்து மெல்பன் நோக்கி பயணத்தை தொடங்கிய வேளையில், சிட்னியிலிருந்து இலக்கிய நண்பரும் வானொலி ஊடகருமான கானா. பிரபா தொலைபேசியில் தொடர்புகொண்டு, நண்பர் கலாமணி மறைந்துவிட்டார் என்ற துயரச்செய்தியை பகிர்ந்துகொண்டபோது அதிர்ந்துவிட்டேன். கடந்த ஆண்டு ஜூலை மாதம் 02 ஆம், 03 ஆம் திகதிகளில் எனது சில பொழுதுகள் வடமராட்சியில் அவருடன் கரைந்தது. அவர் தனது இரண்டாவது புதல்வனின் வீட்டிலிருந்து, மூத்த புதல்வன் பரணீதரனின் இல்லத்தில் நடந்த எனது 'சினிமா: பார்த்ததும் கேட்டதும்' புதிய நூலின் ( ஜீவநதி வெளியீடு ) வெளியீட்டு அரங்கிற்கும் வருகை தந்தார்.


யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சமூகத்தினருக்கு வணக்கம்,

கம்பராமாயணத்தில் விலங்குகள், பறவைகள்,நீர்வாழ்வன குறித்துக் கூறியுள்ளதைப் போல சில பூச்சிகள் குறித்தும் கம்பர் கூறியுள்ளார். அவற்றுள் குழவி,விளக்கு விட்டில் பூச்சி,மின்மினிப்பூச்சி,சிலந்திப் பூச்சி, வண்டு,தும்பி, மிஞிறு,இந்திரகோபப்பூச்சி,ஈ, எறும்பு, சிவப்பு எறும்பு,சிற்றெறும்பு,கரையான் முதலிய பூச்சிகள் குறித்து கம்பர், தம் இராமாயணத்தில் கூறியுள்ள பூச்சிகள் குறித்து ஆராய்வோம்.


பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









