நேர்காணல் பகுதி நான்கு : ஓவியர் வீரப்பன் சதானந்தனுடன் ஓர் உரையாடல்! - நேர்காணல் கண்டவர்: எழுத்தாளர் ஜோதிகுமார் -

கேள்வி: சென்றமுறை கதைக்கும் போது,இருள் கவியத் தொடங்கும் மங்கலான மாலைகளில், இயற்கை, தனது Impressionism ஓவியத்தை தீட்டி முடிக்கின்றது என கூறினீர்கள் (உணர்வு நிலை நிற்கும் ஓவியங்களை) - மங்கலான ஒளியில் மலைகளினதும் மரங்களினதும் விளிம்புகள் தெளிவுற தென்படாது, மறைய தொடங்குகையில், மனிதனின் கவிதை மனம் விழிக்க முற்படுகின்றது – இது போலவேதான் Impressionism ஓவியங்களும் உருவெடுக்க தொடங்குகின்றன என்பது போல் கருத்து தெரிவித்திருந்தீர்கள். கூடவே கலைஞன் என்பவன் தனது ஓவியத்தில், தனது கவிதையில் இயற்கையை அல்லது மனிதனை அல்லது வாழ்வை பரிமளித்து காட்ட உரிமை கொண்டவன்தான் என்றும் கூறியிருந்தீர்கள். அதாவது இத்தகைய பரிமளிப்புகள் ஆக்கப்பூர்வமானதாய் இருத்தல் வேண்டும் என்ற அடிப்படையில் இவ் உரிமை அங்கீகரிக்கத்தக்கதே என்றும் கூறியிருந்தீர்கள். இத்தகைய ஒரு பின்னணியில் நீங்கள் குறிப்பிட்ட மொனே, பிசாரோ, டேகாஸ் போன்ற ஓவியர்களை எப்படி மதிப்பிட்டு கொள்கின்றீர்கள்?
பதில்: மொனே நீண்ட காலம் வாழ்ந்த ஒரு மாபெரும் கலைஞன். 86 வயது வரை தன் ஓவிய பரீட்சார்த்தங்களை முன்னெடுத்தவன். அவனது அடிவைப்புகளில் இருந்தே உணர்வுநிலை ஓவியங்கள் (Impressionism) முதன் முதலாய் உறுதியாக தோற்றம் கொள்ள தொடங்கின என கூறலாம். இவருக்கு பத்து வருட முந்திய கலைஞனான, பிசாரோ (கிட்டத்தட்ட) இவரது சமகாலத்து ஓவியனாக இருந்த போதிலும், அவரும் உணர்வுநிலை ஓவியங்களை படைத்தளித்திருந்த போதிலும், உணர்வு நிலை ஓவியம் என்பது மொனேயுடனேயே உறுதியாய் தன் காலடியை வரலாற்றில் பொறித்தது எனலாம்.
கேள்வி: இவற்றில் மொனேயின் எந்தெந்த ஓவியங்களை அதிமுக்கியமான ஓவியங்களாக கருதுவீர்கள்?
பதில்: ரயில்கள் தொடர்பாய் அவர் வரைந்த ஓவியங்களையும் தேவாலயங்கள் தொடர்பில் அவர் வரைந்த ஓவியங்களையும் நாம் அழுத்தமாக குறிப்பிட்டாக வேண்டும்.
கேள்வி: இவற்றில் முதலில் மொனேயின் ரயில் சம்பந்தமான ஓவியங்களை பற்றி கூறுவீர்களா?
பதில்: மொனே தனது ரயில் ஓவியங்களை 1870களில் வரைந்திருந்தார். 1871 முதல் 1877 வரை “ரயில்” அவரது தலையாய ஓவிய முன்னெடுப்புகளின் கருப்பொருளாக இருந்தது. அத்தகைய ஒரு ஓவிய பயணத்தின் இறுதி கணங்களில், ரயிலின் காட்சிப்படுத்தலை, அவர் பூரணமாக்கினார் எனலாம்.


உள்ளார்ந்த கலை , இலக்கிய ஆற்றல்களை கொண்டிருப்பவர்கள், தமது தாயகம் விட்டு, வேறு எந்தத் தேசங்களுக்கு புலம்பெயர்ந்து செல்ல நேரிட்டாலும், தமது ஆற்றல்களை வெளிப்படுத்தியே வருவார்கள். அதற்கு எமது புகலிட தமிழ் கலை, இலக்கிய உலகில் சிறந்த உதாரணமாகத் திகழ்பவர்களில் குறிப்பிடத்தகுந்த ஒருவர் எழுத்தாளரும் நாடகக் கலைஞருமான யாழ். பாஸ்கர். இவர் இந்தத் துறைகளில் தடம் பதித்து, வளர்ந்து ஆஸ்திரேலியா நாட்டில் இதழ் ஆசிரியராகவும் மலர்ந்தவர். யாழ்ப்பாணம் கொட்டடியைச்சேர்ந்த இவர், தனது ஆரம்பக்கல்வியை கொட்டடி நமசிவாயா பாடசாலையிலும், நவாந்துறை றோமன் கத்தோலிக்க தமிழ்ப்பாடசாலையிலும் பயின்று, பின்னர் யாழ். பரமேஸ்வராக் கல்லூரியில் இணைந்தார்.


இரும்புக் கதவுகள் கிறீச்சிட்ட சத்தத்தில் நடேசுவிற்கு விழிப்பு வந்திருக்க வேண்டும். இருட்டுக்குள் பழகிப் போன குழிவிழுந்த கண்களுக்குள் வெளிச்சம் பாய்ச்சப் பட்டதும், கூச்சம் தாங்காமல் அவை தானாகவே இறுக மூடிக் கொண்டன. இமைகள் மூடிக் கொண்டாலும் காது மடல்கள் விரிந்து நெருங்கி வரும் கனமான பூட்ஸின் அதிர்வுகளை மௌனமாக உள்வாங்கிக் கொண்டன. ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போவதற்கான எதிர்பார்ப்பில், இதயம் ஏனோ வேகமாகப் படபடவென்று அடித்துக் கொண்டது. மிக அருகே அதிர்வுகள் நிசப்தமாகிப் போனதால், பயத்தில் இதயம் இன்னும் வேகமாக அடித்துக் கொள்ள, தூங்குவது போலப் பாசாங்கு செய்ய முனைந்தான்.
நேக்கு பூனையை பிடிக்காது. தப்பு, தப்பு...... பூனைகளைன்னு மாத்தி வாசியுங்கோ. பூனையாம் பூன. அதென்ன..... நம்ம கண்ணுக்குள்ளயே ஏதோ தேடற பார்வை...
அண்மையில் நண்பர் எல்லாளன் தந்திருந்த நூல்களிலொன்று 'சமாதானத்திற்கான ஶ்ரீலங்கா சார்புக் கனேடியர்கள்' அமைப்பு வெளியிட்டிருந்த மலையகத்தைச் சேர்ந்த ஊடகவியலாளரும், முன்னாட் விடுதலைப் போராளியுமான வரதன் கிருஷ்ணா எழுதிய 'வெந்து தணியாத பூமி' என்னும் சிறு நூல். இந் நூலை வாசித்தபோது ஒன்று புரிந்தது. இது தொட்டிருக்கும் விடயம் தற்போதுள்ள சூழலில் மிகவும் முக்கியமானதொன்று. இது ஆற்றியிருக்கும் பணியும் முக்கியமானது. காலத்தின் தேவை.

திருமணமாகி மதுரை வந்த நாள்முதல் அடிக்கடி இரவு ஒன்பதுமணிக்கு, எங்கள் பெட்ரூமிலிருந்து அம்மாவிடம், வீடியோ காலில்தான் பேசுவேன். அம்மா தனது பெட்ரூமிலயிருந்து பேசுவாங்க. சிலநாட்களில் சமையல்காரப் பையன் எடுத்துப் பேசுவான். தவிர, நேரம் கிடைக்கும்போதெல்லாம் அத்தானும் பேசத் தவறுவதில்லை.
2012 ஏப்ரல் 12ம் தேதி வியாழக் கிழமை காலை 10 மணியளவில் வவுனியா பூங்காப் பகுதி தடை முகாமிலிருந்து விடுவிக்கப்பட்ட முப்பத்தொரு பெண்களில் சங்கவி ஒருத்தியாக இருந்தாள். அவர்களில் நான்கு பேர் குழந்தைகளோடு இருந்தார்கள்.




திரு.கிரிதரன் இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக ஈழத்து சஞ்சிகைகள், பத்திரிகைகளில் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் எழுதி நன்கு அறிமுகமானவர். பின்னர் புலம்பெயர்ந்து கனடா சென்று தமது படைப்பாற்றலை அங்கும் தொடர்ந்து ஈழத்திலும் வெளிப்படுத்தி வந்துள்ளார். அத்துடன் நின்றுவிடவில்லை. தொடர்ந்து தமிழ் நாட்டிலும் தமிழர் தொழில்முறையாகவும் புலம்பெயர்ந்தும் வாழும் உலக நாடுகளிலெல்லாம் அறிமுகமானார். ஆயினும் நான்கு குறுநாவல்கள் அடங்கிய இத்தொகுதியே அன்னாரின் படைப்பாற்றலையும் எழுத்து வன்மையையும் எளிதில் அளவிடக் கூடியதாக அமைந்துள்ளது எனக்கூறலாம்.
- தமிழ்புக்ஸ்.காம் தளத்தில் வெளியான அஞ்சலிக் கட்டுரை. அனுப்பியவர் நண்பர் ஸ்நேகா பாலாஜி -

எனது ஐந்து வயதுப்பேரனுக்கு பீட்டர் என்ற முயலின் கதையை (Tale of Peter the Rabbit) சமீபத்தில் வாசித்தேன் . அந்த கதை பலருக்குத் தெரிந்திருக்கும். தாய் முயல் தனது பிள்ளைகளான புளுப்சி, மெர்சி, கொட்டன் ரயில் மற்றும் பீட்டரிடம் , “நீங்கள் போய் விளையாடுங்கள். ஆனால் மிஸ்டர் மக்கிரகரின் தோட்டத்திற்கு போகவேண்டாம் . ஏற்கனவே அங்கு போனதால் திருமதி மக்கிரகர், சில காலத்தின் முன்பு உங்களது தந்தையை தங்களது உணவாக சமைத்து உண்டுவிட்டார்கள். ஆகவே கவனம் ” என எச்சரிப்பார்
பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









