அறிவியல் உலகில் விண்கற்கள் பற்றி சிறிதளவாவது நாம் அறிந்திருப்பது நல்லதென நினைக்கின்றேன். 4660 என்ற இலக்கத்தைக் கொண்ட நிரெஸ் விண்கல் டிசெம்பர் மாதம் 11 ஆம் திகதி 2021 ஆம் ஆண்டு பூமிக்கு அருகே சுமார் 3.9 மில்லியன் கிலோ மீட்டர் அருகே வருகின்றது. சூரியனைச் சுற்றி வரும் இந்த விண்கல், 2060 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இதைவிட இன்னும் அருகே, 1.2 மில்லியன் கிலோ மீட்டர் அருகே வரவிருக்கின்றது. சூரியக்குடும்பத்தில் சூரியனைச் சுற்றிவரும், இந்த விண்கல்லால் உடனடிப் பாதிப்பு இல்லாவிட்டாலும், பூமிக்கு ஆபத்தான விண்கற்களின் பட்டியலில் இதுவும் இடம் பெற்றிருக்கின்றது. இதனுடைய திசை காலப்போக்கில் மாற்றமடையவும் வாய்ப்புண்டு. 1982 டிபி என்பது இதன் முன்னைய பெயராகும். 1082 அடி நீளமானது, அதாவது பாரிஸ் கோபுரத்தைவிட சற்று உயரமானது. 2 கிலோ மீட்டர் குறுக்களவைக் கொண்டது. 1982 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி எலியநோர் கெலின் என்ற அமெரிக்க பெண் வானியலாளரால் கண்டு பிடிக்கப்பட்டது. இவர் பூமிக்கு மிகஅருகே வரும் விண்கற்களை இனங்காணும் நாசாவின் திட்டத்தில் பணியாற்றியதால், இவருக்கு இந்த வாய்ப்புக் கிடைத்தது. இந்த விண்கல் சூரியனைச் சுற்றி வருவதற்குச் சுமார் 1.82 வருடம் எடுக்கின்றது.

‘ஓநாய் வருகிறது’ என்ற வேடிக்கைக் கதைபோல, இது போன்ற அஸ்ரோயிட் என்று சொல்லப்படுகின்ற விண்கற்கலால் பூமிக்கு ஒரு நாள் ஆபத்து ஏற்படலாம். யப்பான் நாட்டின் MUSES-C probe விண்கலம், இதைக் கண்காணிக்க அனுப்பப்பட இருந்தாலும், அனுப்புவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இதை அருகே சென்று கண்காணிக்க முடியவில்லை. தினமும் ஏராளமான சிறிய விண்கற்கள் பூமியில் விழுந்த வண்ணம்தான் இருக்கின்றன. அவை பூமியை நோக்கி வரும்போது, அவற்றின் வேகம் காரணமாக வளிமண்டலத்தில் உராய்வு ஏற்பட்டு அதன் காரணமாக அனேகமான கற்கள் எரிந்து சாம்பலாகி விடுகின்றன. அதையும் மீறிச் சில கற்கள் பூமியைத் தாக்குகின்றன. மனிதர்கள் இதனால் இதுவரை அதிகம் பாதிக்கப்படவில்லை. 1954 ஆம் ஆண்டு அலபாமாவில் வீட்டுக் கூரையை உடைத்து விண்கல் விழுந்ததில் ஒரு பெண் காயடைந்திருந்தார். இதுவரை பூமியில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பெரிய விண்கல் நமீபியா நாட்டில் விழுந்த கோபா, 60 தொன் எடை உள்ளதாகும். பொதுமக்கள் பார்வைக்காக அந்த விண்கல்லை இப்பொழுதும் அந்த இடத்திலேயே வைத்திருக்கிறார்கள். 1908 ஆம் ஆண்டு ரஸ்யாவில் விழுந்த விண் கல்லைத் துங்குஷ்கா நிகழ்வு என்று சொல்கிறார்கள், காரணம் துங்குஷ்கா ஆற்றில் இது விழுந்தது. ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுக்குண்டைவிட 185 மடங்கு சக்திவாய்ந்ததாக இருந்தது. பல்லாயிரக் கணக்கான காடுகள் இதனால் அழிக்கப்பட்டன. 1922 ஆம் ஆண்டு வோல்கோகிராட் பகுதியில் விண்கற்கள் மழை கொட்டுவது போல விழுந்தன. அதில் ஒரு பெரியகல் 284 கிலோ எடையுள்ளதாக இருந்தது. 2002 ஆம் ஆண்டும் இது போல இர்குட்ஸ் பகுதியிலும் விண்கற்கள் விழுந்தன. 2003 ஆம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் விழுந்த விண்கலின் எடை 17 கிலோவாக இருந்தது.

சில விண்கற்களில் இரும்பு 90 சதவீதமும், சுமார் 8 சதவீதம் நிக்கலும் கலந்து இருக்கும். சாதாரண விண் கல்லைவிட இது எடை கூடியதாக இருக்கும். செவ்வாய், புதன் கிரகங்களில் மோதலால் வெடித்துப் பறந்த கற்களும் பூமியில் வந்து விழுந்திருக்கின்றன. ஏனைய கற்களோடு சேர்ந்திருந்தால் இவற்றை இனங்காணுவது கடினம். அரிசோனாவில் விண்கல் விழுந்ததால் ஏற்பட்ட பெரிய பள்ளம் ASTROBLEME ஒன்று உள்ளது. சுமார் ஆறு கோடி ஆண்டுகளுக்கு முன் இப்படியான மிகப்பெரிய விண்கல் ஒன்று பூமியைத் தாக்கியதால்தான் டையனோசர்கள் அழிந்தன என்று ஆய்வாளர் குறிப்பிடுவர். பூமியின் 70 சதவீதம் கடல் பரப்பாக இருப்பதால், விண்கற்கள் நிலத்தில் வந்து விழுவதற்கான சாத்தியக் கூறுகள் குறைவாகவே இருக்கின்றன. இதனால்தான் நாசா நிறுவனம் பூமிக்கு அருகே வரும் விண்கற்களை அவதானித்தபடி இருக்கின்றது. அவற்றால் உடனடியாக எந்த ஆபத்தும் இல்லை என்பதை நாசா உறுதிப்படுத்தி இருக்கின்றது. ஆனாலும் வருங்காலங்களில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று பூமிக்கு அருகே உள்ள சில விண்கற்களைக் கவனமாக அவதானிக்கின்றது. தேவை ஏற்படின் அவற்றைச் சிறு துண்டுகளாக உடைப்பதற்கும் நாசா ஏற்பாடுகளைச் செய்கின்றது. இயற்கை அழிவு தவிர்க்க முடியாதது. அது எப்படியும், எப்போதும், ஏற்படலாம், யார் அறிவார்?

Kuru Aravinthan: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க
                                        

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள் இணைய இதழின்  முக்கிய நோக்கம் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை  பலவேறு நாடுகளிலும் வாழும் தமிழர்களுடன் பகிர்ந்துகொள்வதாகும். படைப்புகளை அனுப்பும் எழுத்தாளர்கள் புகைப்படங்களை அல்லது ஓவியங்களை அனுப்பும்போது அவற்றுக்கான காப்புரிமைக்கு உரிமை உள்ளவர்களாக இருந்தால் மட்டுமே அவற்றை அனுப்பவும். தமிழ் மொழியை இணையத்தில் பரப்புவதும் இவ்விணைய இதழின் முக்கிய நோக்கமாகும். படைப்புகளை ngiri2704@rogers.com , editor@pathivukal.com ஆகிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.

Pathivugal Online Magazine''s  main aim is to share the creative works of Tamil writers with Tamils living in various countries. When writers submit their works—such as photographs or paintings—please send them only if you hold the copyright for those items. Spreading the Tamil language on the Internet is also a key objective of this online magazine. Please send your submissions to ngiri2704@rogers.com and editor@pathivukal.com.

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும்.  நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 
பதிவுகள் விளம்பரம்