சிங்களத் திரையுலகின் ஆளுமை பிரசன்ன விதானகே! - முருகபூபதி -

காடும், காட்டை அண்மித்த பிரதேசமும் கொண்ட அந்தச்சிங்களக் கிராமத்தில் ஒரு முதிய விவசாயியின் சிறிய குடும்பம். மனைவி இல்லை. இரண்டு மகள், ஒரு மகன். வானம்பார்த்த பூமி. குடிதண்ணீருக்கும் குளத்தை தேடிச்செல்லவேண்டும். குடும்பத்தின் ஏழ்மையை போக்குவதற்காக மகன் பண்டார இலங்கை இராணுவத்தில் சேர்ந்து உள்நாட்டுப் போர்க்களம் சென்றுவிடுகிறான். விடுதலைப்புலிகளின் ஈழப்போராட்டத்தில் ஒரு கண்ணிவெடித்தாக்குதலில் அவன் உடல் சிதறிச்செத்துவிட்டான் என்ற செய்தியுடன், அவனது உடல் மூடிய சவப்பெட்டியில் சீலிடப்பட்டு வருகிறது. அவனது தந்தையான முதியவர் வின்னிஹாமி க்கு கண்பார்வையும் மங்கல். தட்டுத்தடுமாறி, ஊன்றுகோலுடன் நடமாடும் அவருக்கு செவிப்புலன் கூர்மையானது. பறவைகளின் குரலும், குளத்தில் கும்மாளமிட்டு குளிக்கும் சிறுவர்களின் சிரிப்பொலியும் கேட்டு பரவசமடைபவர். ஒரு வாகனத்தில் சவப்பெட்டியை எடுத்துவந்து அந்த குடிசையில் ஒப்படைத்துவிட்டு விடைபெறும் இராணுவத்தினர், உடல் மிகவும் மோசமாக சிதறியிருக்கிறது. அதனால் திறக்கவேண்டாம் என்றும் வலியுறுத்துகின்றனர். இலங்கையின் தேசியக்கொடி போர்த்தப்பட்ட அந்த சவப்பெட்டியை பார்த்து சகோதரன் பண்டாரவை நினைத்து கதறி அழுகின்றனர் சகோதரிகள். தேசத்தை காக்கச்சென்றவன், சிதறுண்டு வருகிறானே என்ற சோகம் அக்கிராமத்தை சூழ்ந்துவிடுகிறது. குடும்பத்தலைவர் வின்னிஹாமி கண்ணீரே சிந்தாமல் திக்பிரமை பிடித்திருக்கிறார். அந்த சவப்பெட்டியை தடுமாற்றத்துடன் தடவிப்பார்க்கிறார். தேசியக்கொடிதான் அவரது மங்கிய கண்களுக்குத் தெரிகிறது. கிராமத்தின் பௌத்த பிக்கு மற்றும் கிராமத்துப்பாடசாலை ஆசிரியர், கிராம சேவகர் உட்பட பலரும் வந்து முதியவருக்கு ஆறுதல் சொல்கின்றனர்.


இலங்கை வாழ் முஸ்லிம் மக்களை காலம் காலமாக ஒரு வர்த்தக சமூகமாக கருதி வந்தவர்களின் பார்வையை முற்றாக மாற்றியவர்கள் என்ற பெருமையைப் பெற்றவர்களில் அறிஞர் அஸீஸ், கலாநிதி பதியுதீன் முகம்மது ஆகியோரும் முதன்மையானவர்கள். அறிவார்ந்த தளத்தில் இயங்கத்தக்க இச்சமூகத்திடம் சந்தர்ப்பங்களை வழங்கிப்பாருங்கள் என்று தமது சிந்தனையிலும் எழுத்திலும் செயற்பாடுகளிலும் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருப்பவர்களின் அடிச்சுவட்டில் வந்திருப்பவர்தான் கலாநிதி ஏ. சீ. எல். அமீர் அலி அவர்கள். மேற்கு அவுஸ்திரேலியாவில் மெடோக் பல்லைக்கழகத்தில் பொருளாதாரத்துறையில் விரிவுரையாளராக பணியாற்றியவரான அமீர் அலியின் அரசியல் விமர்சனக் கட்டுரைகளும் ஆய்வேடுகளும் பிரசித்தம். தமிழிலும் ஆங்கிலத்திலும் இவர் எழுதிவரும் ஆக்கங்கள் இலங்கை மற்றும் வெளிநாட்டு ஊடகங்களில் தொடர்ந்தும் வெளிவந்து, அரசியல் மற்றும் உலகப்பொருளாதாரம் குறித்து பேசிவரும் பலருக்கு உசாத்துணையாகவும் மிளிர்கின்றன. சிலர் அமீர் அலியை , ஒரு மேற்குலக சிந்தனாவாதி எனவும் வர்ணிப்பவர். ஒருகாலத்தில் இலங்கையில் இவரது ஆலோசனைகளைப் பெற்றவர்தான் முன்னாள் கல்வி அமைச்சர் ( அமரர் ) பதியூதின் முகம்மத்.
சும்மா இருந்திருக்கலாம். இன்றெனப்ப்பார்த்து மனைவி புத்தகங்களைக் கலைத்து மீள அடுக்கத்தொடங்கினாள். எதிர்பார்க்கவில்லை. காலையிலேயே தேநீருடன் வருபவள் இன்று காணவில்லையேயென இறங்கிவந்தேன் .கடைசிப்படியில் ஒரியோ படுத்திருந்தது. ஒரியோ எங்களது செல்லப்பூனை.வந்து இரண்டுவருடமாகிறது. பிள்ளைகளுக்கு பரீட்சையில் சித்தியடைந்தால் வாங்கித் தருவதாகச் சொல்லியிருந்தேன். இப்போது பிள்ளைகளுள் ஒன்றாகிவிட்டது. நாய்க்குட்டி ஒன்றிருந்தால் நன்றாக இருக்குமே என்கிறாள் கடைசிப்பெண்.முன்பென்றால் துணிந்து வாங்கிவிடுவேன்.இப்போது வேலைக்குப்போகாத நிலையில் வீட்டிற்குப்பாரமாகிவிட்டேனோ என்கிற நினைப்பு வர ஓய்ந்து போன ஒரு மனநிலையும் வந்துவிட்டது.கம்பீரமாக வேலை,வீடு,நண்பர்கள், புத்தகம்,பிள்ளைகள் என வலம்வந்தவனை முடக்கிப்போட்டுவிட்டது இந்த கொறோனா... வேலைக்கு போகாமல் வீட்டினுள் முடங்க எல்லாம் இழந்ததுபோல... படுக்கை,கணினி என இந்த ஒருவருடம் ஓடிவிட்டது.
மண்ணும் அதன் வாசமும் ஒருவனால் சுவாசிக்கப்படுகையில் அவனை தாலாட்டுகிற இயற்கை கூடவே வந்து குந்தியிருந்து பலகதைகள் சொல்லி மகிழ்வூட்டும்.அதே இயற்கை அவனை கைப்பிடித்து நகர்த்தும்.காலம் அவனை அடையாளப்படுத்துமாகில் நெருக்கமுடன் அணைத்து மகிழ்விக்கும்.அந்த மகிழ்வே அவனை ஆலிங்கனம் செய்யத்தூண்டும்.அந்தத் தூண்டுதலே அவனை எல்லாமாகி நிற்கவைக்கும்.அந்த எல்லாமாகி நிற்பவனிடம் வானம் சாமரை வீசும்.காற்று காதலைத் தூதுவிடும்.நானிருக்கிறேன் என மண் தன்னை விசாலப்படுத்தி வரவேற்கும்.பூக்கள் பூக்கவும்,செடிகள் துளிர்க்கவும் புத்துயிர்ப்பாய் கிராமம் கைகுலுக்கிக்கொள்ளும்.
இடைவேளை விட்டுத் தொடங்கிய காட்சியிலே, கண்ணுக்குத் தெரிந்தது ஆஸ்பத்திரி வார்டு. பார்வையின் கோணத்தை அங்குமிங்கும் ஓடவிட்டேன். சந்தேகமே இல்லை. திருநெல்வேலி “மேட்டுத் திடல்” (ஹைகிரவுண்ட்) அரசு மருத்துவ மனையேதான்.இரண்டு நாட்கள் சுயநினைவின்றிக் கிடந்ததை எதிரே சுவரில் தொங்கிக்கொண்டிருந்த காலண்டர் உறுதிப்படுத்தியது. உடலெங்கும் காயங்கள். முக்கியமாக வலது காலைச் சுற்றி ஏகப்பட்ட பாண்டேஜ் துணி, பந்துபோல திரட்டிச் சுற்றப்பட்டிருந்தது. தலைமாட்டில் கண்ணீருடன் அம்மா. வெறுப்புக்காட்டும் முகத்தோடு அக்கா. அவளின் கைத்தடியாக அருகே அத்தான். அக்கா, அத்தான் இருவருக்கும் காயங்களும், கட்டுக்களும் இருந்தபோதிலும் என்னளவுக்கு இல்லை. கண்களை அகலத் திறந்து எல்லோரையும் பார்த்தபோது, அக்காளின் சுடுகணைகள் திருப்பள்ளியெழுச்சி ஆகின.
அற்றைத் திங்களின் அவ்வெண்ணிலவு அப்போதும் காய்ந்துகொண்டிருந்தது. குன்றுகள்தான் ஒவ்வொன்றாய்ப் பறிபோய்க்கொண்டிருந்தன. மக்கள் திகிலடைந்திருந்தனர். தங்கள் கனவு ராஜ்யம் அழிந்துபோகும் நிர்க்கதி. அது மன மெய்களின் மொத்தமுமான ஸ்தம்பிதமாக இருந்தது.
மொழியை அடிப்படையாகக் கொண்டு படைக்கப்படும் கலை பல்வேறு வடிவங்களையுடையது. அவை வாய்மொழியாகவும் பாட்டு வடிவமாகவும் கதை வடிவமாகவும் நாடகமாகவும் உரைநடை வடிவமாகவும் இருப்பதை நாம் காண்கின்றோம். மனித இன நாகரிக வளர்ச்சியில் நெடுங்காலமாகப் படைக்கப்பட்டுக் கலைத் தன்மையோடு கூடியவையை இலக்கியமாக கருதும் எண்ணப்போக்கு உருவாகியதை உணர முடிகிறது. ‘இலக்கியம் எழுத்து வடிவத்தை வெளிப்படுத்தும் கலை’ என இலக்கிய இயல்பு நூலாசிரியர் விளக்கமளிக்கிறார். ஆனால் இன்றளவும் மக்களோடு கலந்த காவியமாகத் திகழும் நாட்டார் வழக்காற்றில் வாய்மொழி மரபான பாடல்களும் (Oral literature) இவையும் வாய்மொழி இலக்கியமாகவே கருதப்படுகின்றன. எனவே ஏட்டிலக்கிய வடிவத்திற்கு மூலகர்த்தாவாக இருப்பது வாய்மொழி இலக்கியமே என்பதை நம்மால் மறுக்க முடியாது. இவ்வாறு வாழ்க்கையின் விழுமியமாக விளங்குகின்ற இலக்கியங்களை 20- ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து ஒப்பிட்டு ஆராயும் நிலை இலக்கிய உலகில் தோற்றம் பெற்றது. இத்தகைய ஓப்பியல் ஆராய்ச்சியின் விளைவாக ஏட்டிலக்கியத்திற்கு அடிப்படையாக வாய்மொழி இலக்கியமே அடிப்படைத் தரவாக அமைந்தது என்ற கருத்து ஆய்வாளர்களால் முன்னெடுக்கப்பட்டது.
தனிமனிதனிடம் இயல்பாக அமையப்பெற்ற செயல் பழக்கமாகும். “பழக்கம்” என்பது பலநாளாகக் கற்கும் செயலாகும். இதைத் தொடர் வழக்கமாகக் கொள்ளும் நிலையாகும். பழக்கம் என்பது தனி மனிதனது நடவடிக்கை என்றும், வழக்கம் சமூகம் சார்ந்தாகவும் அமைகிறது. தனிமனிதனும், சமுதாயமும் ஒருங்கிணைந்து அவற்றால் வெளிப்படுவது பழக்கவழக்கமாகும்.இவை இயற்கையாகவும், செயற்கையாகவும் தோன்றக்கூடியது. மனிதனின் மனதில் தோன்றும் எழுச்சி, உணர்ச்சி,விருப்பு, வெறுப்போடு தொடர்புடையதாக அமையும்.

எழுத்தாளர் மதிவதனி பத்மநாதன் தற்போது சுவிட்சர்லாந்தில் வசித்து வருகின்றார். மதுரையில் பிறந்து, இலங்கையில் வளர்ந்து தற்போது சுவிட்சர்லாந்தில் ஆசிரியராக பணிபுரிந்து வருகின்றார். பேராதனைப் பல்கலைக்கழக இளங்கலைப் பட்டதாரியான இவர் வாணமதி , மதிவதனி ஆகிய பெயர்களில் இலக்கிய உலகில் அறியப்பட்டவர். கவிதை, சிறுகதை, கட்டுரை மற்றும் சிறுவர் இலக்கியமென இவரது இலக்கியப் பங்களிப்பு பரந்துபட்டது.
1971-1977 காலப்பகுதியில் யாழ் இந்துக்கல்லூரியில், சமகால வகுப்புகளில் கல்வி கற்று வெளியேறி அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, ஐக்கிய அரபு இராச்சியம், இந்தியா, இலங்கை, தென்னாபிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் வசித்துவரும் மாணவர்களில் சிலர் இணைந்து உருவாக்கிய, சமூக அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கும், பதிவு செய்யப்பட்ட, இலாப நோக்கற்று இயங்கும் அமைப்பே ஓராயம் அமைப்பு. இவ்வமைப்பு புலத்து மக்களோடு இணைந்து செயற்படும் வகையில் கல்வி, விவசாயம், நீர்வளப்பாதுகாப்பு, சுகவாழ்வு, சூழற்பாதுகாப்பு, இளையோர் தொழிற்கல்வி ஆகிய துறைகளில் ஆறு உபகுழுக்களை அமைத்து இயங்கத்தொடங்கியுள்ளது. இதற்காக இவர்கள் இணையத்தளமொன்றினையும் உருவாக்கியுள்ளார்கள்.
யாழ்ப்பாணம் பற்றி எத்தனையோ கவிஞர்கள் கவிதைகள் பல இயற்றியிருக்கின்றார்கள். ஆனால் கவிஞர் மஹாகவியின் 'யாழ்ப்பாணம்' பற்றிய வரிகளைப்போல் இதுவரை வேறெவரும் எழுதியதாக எனக்கு நினைவில்லை. அவ்வரிகளைக் கீழே தருகின்றேன். இவ்வரிகள் அவரது புகழ் பெற்ற காப்பியமான 'கண்மணியாள் காதை'யில் இடம் பெற்றுள்ளன.
எமது இனிய நண்பர் கலாநிதி தம்பிராஜா வசந்தகுமார் அவர்கள் திடீரென எம்மைவிட்டுச் சென்ற 14ஆம் திகதி யூன் மாதம் 2021 அன்று பிரிந்து விட்டார். கோவிட்-19 காலச் சூழ்நிலையில் நேரடியான தொடர்புகள் அற்ற நிலையில் அவரது திடீர் மறைவு கனடிய தமிழ் சமூகத்திற்கு அதிர்ச்சி தருவதாகவே இருக்கின்றது. இந்தக் குறுகிய காலத்தில் இவரைப் போன்ற மூத்த தலைமுறைத் தமிழ் உணர்வாளர்கள் பலரை நாம் இழந்திருக்கின்றோம். இந்த மண்ணில் தமிழ் மொழியும், எமது பண்பாடும் நிலைத்து நிற்கப் பாடுபட்டவர்களில் நண்பர் கலாநிதி வசந்தகுமார் அவர்களுக்கும் பெரியதொரு பங்குண்டு. கடந்த சுமார் 30 ஆண்டுகளாக எங்களைப் போலவே அவரும் கனடிய மண்ணில் எம்மினத்தின், எமது மொழியின் வளர்ச்சிக்காகத் தன்னை அர்ப்பணித்திருந்தார்.



மலர்களின் வாசனை மனதுக்கு உவப்பானது. அனைவரும் அறிந்தது. ஆனால் உயிரின் வாசனையை உணர்ந்தவர்கள் மிகச் சிலரே இருப்பர். விலைமதிக்க முடியாத உயிரின் மேன்மையை மனிதன் உணரும் கணங்கள் அநேகமாக மரணத்தை நிகர்த்த துன்பம் தருவனவாகவே அமைந்திருத்தல் கூடும்.அவ்வாறான வலிமிகுந்த தருணங்களை எழுத்தினால் மொழிபெயர்க்கும் வல்லமை கொண்ட படைப்பாளர்கள் அவற்றின் மூலம் வரலாற்றுக்கான தமது தடங்களையும் அழுத்தமாகப் பதிவு செய்து கொண்டே செல்கின்றனர்.

எழுத்தாளர் முருகபூபதியின் பார்வையில் : "சூரியகுமாரி பஞ்சநாதன் யாழ். பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் சிவத்தம்பி, நுஃமான் , சித்திரலேகாவின் மாணவி. அத்துடன் கவிஞர் சிவரமணியின் தோழி. சூரியகுமாரி கிழக்கு பல்கலைக்கழகத்தில் துணை விரிவுரையாளராகவும் சிறிதுகாலம் பணியாற்றியவர். பின்னர் கொழும்பில் வீரகேசரியில் துணை ஆசிரியராக பணியாற்றினார். தற்போது துபாயில் பணியாற்றுகிறார். அங்கு சென்றபின்னர், எழுதுவதும் குறைந்துவிட்டது. சிறந்த ஆற்றல் மிக்க விமர்சகர்."
முன்னுரை
தமிழில் மொழிபெயர்ப்பில் முன்னோடியாகத் திகழ்ந்தவர் பாரதியார். அவர் இராமாயணத்தை மொழி பெயர்த்தார். மொழி பெயர்ப்பின் வழியாக நமக்கு அரசியல், தத்துவப் பார்வையை ஊட்டினார். இன்றைய மார்க்சியத் தத்துவமும் ஜனநாயகக் கோட்பாடும் மொழிபெயர்ப்பில் கிடைத்ததுதான் .
இன்று பழைய புத்தகங்களைத் தேடியபோது கவிதைப்புத்தகமொன்று அகப்பட்டது. நெடுங்கவிதையது. பெயர் " சாம்பல் வார்த்தைகள்:. கலை, இலக்கிய விமர்சகரும், கவிஞருமான இந்திரன் அவர்களின் நெடுங்கவிதை நூல். யாளி பதிவு வெளியீடு. வெளியிட்ட ஆண்டு ஜனவரி 1994. அட்டைப்பட வடிவமைப்பு ஏ.கோபாலன். நூல் வடிவமைப்பை இந்திரனே செய்திருக்கின்றார்.


பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









