ஜெயமோகனின் ‘ரப்பர்’ நாவல் முன்னகர்த்தும் அரசியல்! (1) - ஜோதிகுமார் -

1
தமிழ் இலக்கிய வரலாற்றில் வெங்கட்சுவாமிநாதன், கா.நா.சு., அசோகமித்திரன், பாலகுமாரன் போன்ற நீண்ட ஓர் பட்டியல் இருந்திருந்தாலும், தமது அரசியல் பாத்திரத்தை நன்கு பிரக்ஞையுடன் தெளிவுற வகுத்துக்கொண்டவராக ஜெயமோகனைக் குறிப்பிடலாம். முக்கியமாக ஒரு சாதீய இந்தியச் சமூகத்தின் பின்னணியில்.
தனது முதல் நாவலான ரப்பரின் முன்னுரையில் அவர் பின்வருமாறு குறிப்பிடுவார் : “என் இருப்பை நியாயப்படுத்திக் கொள்ள இயலாது என்று தோன்றியபோதுதான் நான் எழுத ஆரம்பித்தேன்”
ஆனால், இவரது இருப்புதான் யாது – அது சொல்லவரும் சேதியின் அரசியல் என்ன என்பது ரப்பர் நாவலை நிதானித்துப் படிக்கும்போது விடுவிக்கப்படுகின்றது.
இவரே ஓரிடத்தில் கூறுமாப்போல், “பிற்பாடு இது வளர்ந்து பல முகங்களைப்பெற்று” இருந்தாலும் இம்முதல் நாவலில் காணக்கிட்டும் இவரது அரசியல், அர்த்தப்பூர்வமானது என்றாகின்றது. பிற்காலத்தில், இவர் தனது இந்தியச் சாதீயச் சமூகத்தையும், உழைப்பாளிகள் சார்பான வேறு இலக்கியங்களையும், கூர்மையாக அவதானித்த பின், அவற்றை ஒன்றில் இருந்து வேறாக, வேறுபடுத்தி, தனித்தனியே பிரித்து வைப்பதில் உள்ள முக்கியத்துத்தை, அதாவது தணிந்த சாதிய வகுப்பினரை மேலும் பிளவுப்படுத்திக் கொள்வதில் உள்ள அரசியல் முக்கியத்துவத்தை அல்லது இன்னும் வேறுவகையில், ராணுவத்தினரை அல்லது படையினரை, உழைப்பாளி மக்களுடன் கைகோர்க்க விடாது, அவர்களையும் வேறுபடுத்தி, அந்நியப்படுத்தி விடுவதிலுள்ள ஆழமான நலன்களை அல்லது ஜெயகாந்தன் முதலானோர் முன்வைத்த சாதிய ஒற்றுமைகளை அல்லது முற்போக்குப் பிராமணர்கள் உள்ளிட்ட சக்திகளின் உள்ளீர்ப்பை உழைக்கும் மக்களின் ஒன்றிணைப்பிலிருந்து கத்தரித்து விடுவதிலுள்ள நன்மைகளைத் தெளிவுறப்பார்க்கும் ஆற்றல் கொண்டவராய், இவர் பிற்காலத்தில் பரிணமித்திருக்கக்கூடும்.


எம்மண்ணின் விடியல் என்பது அத்தனை பேரழகு! விரிந்த மொட்டுக்களின் வாசத்தை அள்ளிவரும் தென்றல்.பல்லவி சரணமாக பவனிவரும் பறவைகளின் சங்கீதம். உயிரை உருக்கும் பெருமாள் கோயில் சுப்ரபாதம்.வானத்தில் துள்ளிக்குதித்து கடலுக்குள் விழுந்து எழுந்து,பனைகளுள் ஒளித்து மறையும் சூரிய உதயம். அடுப்படியில் சுண்டக்காய்ச்சிய ஆட்டுப் பாலின் வாசமும், சாமியறைச் சாம்பிராணி வாசமும் போர்வைக்குள் முடங்கிக்கிடந்த என்னை மெல்லத்தட்டி எழுப்பும்.முகங்கழுவி அடுப்படிக்குள் கால்வைத்தால் சுடச்சுட ஆட்டுப்பால் தேநீரை அம்மா தர,அது தொண்டைக்குள்ளால் உள்ளிறங்க இந்த விடியலின் அழகும்,ஆட்டுப்பால் தேநீரின் சுவையும் பரவசப்படுத்தும் மனசுக்குள் புகுந்து புதுக்கவிதை எழுதும்.அப்படித்தான் ஆரம்பிக்கும் அந்த நாளின் புதுவரவு. நல்லூரும் கொடியேறிவிட்டால் இந்த நாட்கள் எமக்கு ஆட்டமும்,கொண்டாட்டமும்தான்!
அவுஸ்திரேலியா மெல்பனில் வதியும் சமூக, அரசியல், மனித உரிமைச்செயற்பாட்டாளரும், அவ்வாறே கடந்த அரைநூற்றாண்டுக்கும் மேலாக இயங்கிவருபவரும், மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் செயலாளருமான தோழர் லயனல் போப்பகேயின் அன்புத்துணைவியாருமான சகோதரி சித்ரா லயனல் போப்பகேயின் வாழ்வையும்பணிகளையும்சித்திரிக்கும் ஆவணப்படம்தான் Nun other than .


சின்னக்கா , அவரது பெயர் சியாமளா, அவரின் புதல்வர் தோழர் குருநாதிக்கு பதினாறு வயதிற்கு மேலே இராது . அக்காவிற்கு அந்த மித்திரனின் மீது அபார நம்பிக்கை . காரணம் அவன் அவருக்குப் பிடித்த லகஷ்மி ஆசிரியையின் புத்திரன் . அந்த கிராமத்தில் , ஆசிரியையை யாருக்குத் தான் பிடிக்காது . சரஸ்வதியின் (கல்வி) முகம் . பள்ளிக்கூடத்தில் முகத்தை பார்த்த மாத்திரத்திலே புரிந்து கொண்டு " சாப்பிட்டாயா? "என விசாரிக்கும் எம்ஜிஆரின்பண்பு. பள்ளிக்குப் பிறம்பான நேரங்களில் கிராமத்திலிலுள்ள ...மாணவரின் வீட்டிற்கும் சென்று கதைக்கும் அன்பு . மாணவரின் பெற்றோருக்கு ஆலோசனைகள் வேறு கூறுவார் . அங்கே , வறிய நிலையில் இருப்பவர் அவர் மூலமாகவும் வேலையற்ற காலங்களில் மற்றைய ஆசிரியர்கள் வீடுகளிற்கும் சென்று மா, மிளகாய்த்தூள் .... இடித்தல் முதலான வேலைகள் ,பரஸ்பர உதவிகளைப் பெறுகிறார்கள் . விவசாயிகள் வாசிகசாலைகளிற்கு விலைச்சலில் சிறிதளவு நெல்... கொடுக்கிறதும் இடம் பெறுகிறது . கொடுக்கிறதில் உள்ள நெகிழ்ச்சியில் ஒரு வளர்ச்சி ஏற்படும் என்கிறார்கள் . காந்தி வழி . அவ்விடத்துப்பெடியள் அவற்றைப் பகிர்கிறார்கள் . இவரைப் பார்த்து மற்ற ஆசிரியரும் கூட ...மாணவர் வீடுகளிற்குச் சென்று விசாரிக்கிறதெல்லாம் இடம் பெறுகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் . இது ஒரு காலத்தில் உடைத்து விடுமா?சமூக சுவகளை தகர்த்து விடுமா ?
நுஃமான் என்ற பெயர் நான் ஏழாம் எட்டாம் வகுப்புகளில் கற்கின்ற காலத்தில் எனக்குள் பதியமாயிற்று. எழுபதுகளின் நடுப்பகுதியில் என்னிரு சகோதரிகளும் கொழும்பு, யாழ் பல்கலைக்கழ கங்களில் பயின்றுக்கொண்டிருந்தனர். பல்கலைக்கழக விடுமுறையின் போது அவர்கள் வீட்டுக்கு வந்தால் பல்கலைக்கழக சங்கதிகள் பற்றி கதைப்பார்கள். குறிப்பாக குசினியில் வேலை செய்கின்ற பொழுது இலக்கியம் (கவிதை, நாவல்), சினிமா, அரசியல் என்று இன்னோரன்ன விடங்கள் பற்றி விமர்சனப்பூர்வமாக விவாதிப்பார்கள். நான் “ஒரு கண்விடுக்காத ஒரு பூனைக்குட்டியாய்” (நுஃமான் கவி வரி) ஓர் ஓரமாக நின்று இவற்றினை கேட்டுக்கொண்டிருப்பேன். யாழ் பல்கலைக்கழகத்தில் பயின்றுக் கொண்டிருந்த என் இளைய சகோதரி (மும்தாஜ் பேகம்) ‘நுஃமான்’ என்ற பெயரை அடிக்கடி பயன்படுத்துவதனை அவதானித்திருக்கிறேன். அவரது தமிழ் கற்பிக்கும் நுட்பம் பற்றியும் அவரது கவிதைகள் பற்றியும் அவர் தமிழ்பெயர்த்த பலஸ்தீன கவிதைகள் பற்றியும் சிலாகித்து பேசக்கேட்டிருக்கிறேன். இப்படித்தான் நுஃமான் என்ற பெயரையும் அவரது புலமைத்துவத்தையும் அறியமுடிந்தது. அக்காலம் தொட்டு இன்று வரை ஒரு தவிர்க்க இயலாமையுடன் நுஃமான் அவர்களது எழுத்துக்களை வாசித்துவருகின்றேன். அவரது பிரதிகளை படிப்பது, அவை பற்றி எழுதுவது, அவற்றினை அடுத்தவர்களுக்கு அறிமுகம் செய்வது என் விருப்புக்குரியதாயிற்று. கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக என்னிடம் தமிழ் கற்கின்ற மாணாக்கருக்கு (உயர்தரம், பட்டப் படிப்பு) பேராசிரியர் நுஃமான் அவர்களது “அடிப்படைத் தமிழ் இலக்கணம்” என்ற நூலை வாங்க வைத்திருக்கிறேன். நுஃமான் அவர்களது எழுத்துக்களை தொடர்ச்சியாக படிக்கையில் அவை எனக்குள் ஒரு இசமாக/ இயமாக பரிமாணமடைந்து, நுஃமானிசமாக பரிணமித்துநிற்கின்றது. ‘முற்றுப்பெறாத விவாதங்கள்’ (2023) என்ற நேர்காணல் தொகுப்பில் ‘நுஃமானிசத்தை’ அவரது வாக்குமூலமாக நோக்க முடிகின்றது.




சிலப்பதிகாரத்தை ஏன் படிக்க வேண்டும்? சிலப்பதிகாரத்தில் அப்படி என்னதான் பொதிந்து கிடக்கிறது ! சிலப்பதிகாரத்தைவிட வேறு காப்பியங்கள் தமிழில் சிறந்து விளங்கவில்லையா ? என்றெல்லாம் எம க்குமுன்னே பல ஐயங்கள் வந்து நிற்கும் . சிலப்பதிகாரத்தைப் பற்றிய சிறப்பும் அதன் சிந்தனைகருத் துக்களும் சரியான முறையில் எம்மிடம் புகுந்துவிடுமானால் இப்படியான ஐயம் எழுவதற்கே இடமில் லாமல் போய்விடும் என்பது எனது மனக்கருத்தாகும்.தமிழில் வந்த முதல்காப்பியமாக சிலப்பதிகாரமே விளங்குகிறது. 

நம்மிடத்தில் – நம்மவர்களைப் பற்றிய எதிர்பார்ப்பு ஒன்று உண்டு. அவருக்கு கடிதம் எழுதினேன் – பதிலே இல்லை. கடிதமா ? ஐயோ – எழுத நேரம் எங்கே கிடைக்கிறது. அமர்ந்து கடிதம் எழுதுவதற்கு நேரம் தேடி போராடுகின்றோம். கோபிக்க வேண்டாம். உங்கள் கடிதம் கிடைத்தது. பதில் எழுத முடியாமல் போய்விட்டது. அவ்வளவு பிஸி. இவ்வாறு உரையாடுபவர்களை நாம் பார்த்திருக்கின்றோம். இந்த நிலைமை முன்புதான். ஆனால், தற்போது நாம் வேறு ஒரு யுகத்தில் வாழ்கின்றோம். முன்னைய யுகம் எப்பொழுது?


கிராமியக் கலை வடிவங்கள் பல்வேறு வகையினவாக தொன்று தொட்டு மக்களிடையே பயின்று வந்துள்ளமை நாம் அறிந்ததே. கூத்து என்னும் பதம் தமிழில் மிக நீண்ட காலமாக நிலவி வருகின்றது. திருமூலரின் திருமந்திரத்திலும். திருக்குறளிலும் தொல்காப்பியத்திலும் இச்சொல்லாடலைக் காணமுடிகின்றது. தமிழகத்திற்கும் ஈழத்திற்கும் இடையே பல்வேறு வகைகளில் தொடர்புகள் பேணப்பட்டு வந்துள்ளன. கலை, கலாச்சார பண்பாட்டு விழுமியங்களில் ஒற்றுமை பேணப்பட்டு வந்துள்ளது. இருப்பினும் இடவேறுபாடு காரணமாக பிரதேசத்திற்கான தனித்துவமும் பேணப்படுகின்றது. தமிழால் இணைந்துள்ள நிலைமையை நாம் எல்லாக் கலைகளிலும் காணமுடியும்.

ஈழத்தின் சிறார் இலக்கியப் பரப்பில் கவிஞர் இக்பால் அலியின் வகிபாகத்தைப் பற்றி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். ‘இக்பால் அலியின் சிறார் இலக்கியத்தின் பாடுபொருள் மற்றும் எடுத்துரைப்பு பிற சிறார் இலக்கியங்களிலிருந்து வேறுபடுகிறது.’ என்ற கருதுகோளினைக் கொன்டு இக் கட்டுரை அமைகிறது. இக்கட்டுரைக்கு இதுவரை வெளிவந்துள்ள இக்பால் அலியின் சிறார் பாடல்கள் கொண்ட நூல்களை முதன்மைத் தரவுகளாகவும் இப்பாடல் நூல்களுடன் தொடர்புடைய திறனாய்வுகள், கட்டுரைகள் மற்றும் ஆய்வேடுகள் துணைமைத் தரவுகளாகவும் அமைகின்றன. கட்டுரையானது விபரிப்பு மற்றும் உள்ளடக்கப் பகுப்பாய்வு முறையியல்களைப் பின்பற்றியும் விளக்கப்படுகின்றது. ஈழத்து சிறார் இலக்கியத்தின் வழி மனித குலத்தின் மேம்பாடுதான் இக்பால் அலியின் வலியுறுத்தல் என்பதே இக்கட்டுரையின் முடிவாகும்.
திருமாவளவன் - வணக்கம் ஆதவன்
சாமக்கோடாங்கி ரவி என்ற பெயரில்25 க்கும் மேற்பட்ட சிறுகதைகள்100 க்கும் மேற்பட்ட கவிதைகள் எழுதியுள்ளார். திருப்பூர் இலக்கிய விருது நிகழ்வு ஒருங்கிணைப்பாளராக பல சாதனைகள் புரிந்தவர்.

இலக்கியங்கள் அவையவை தோன்றிய காலத்துச் சமுதாயத்தை வெளிக்கொணர்ந்து காட்டும் காலக்கண்ணாடிகள் எனலாம். இவ்வகையில் புதின இலக்கியமும் தான் தோன்றிய காலத்துச் சமுதாயத்தைப் படம்பிடித்துக் காட்டத் தவறவில்லை. இப்புதின இலக்கியம் தன் காலச் சமுதாயத்து நிகழ்ச்சிகளைக் கூறுவதன் வாயிலாக வருங்காலச் சமுதாயத்தைத் திருத்த அல்லது நல்வழிச் செலுத்த முனைகின்றது. தற்காலத்துப் புதின ஆசிரியர்கள் பலருள்ளும் சு.சமுத்திரம் சமுதாய சிக்கலை இலைமைறை காய்ப்போல் அல்லாமல், அங்கை நெல்லியெனப் பளிச்சிடக் கொணர்வதை அறிந்தேன். என் உணர்வுக்கு ஏற்றாற் போலவே அவருடய வேரில் பழுத்த பலாவும் சாகித்திய அகாடமி பரிசைப் பெற்றது. அவருடைய இன்னொரு நூலாகிய நெருப்புத் தடயங்கள் என் நினைவுக்கு வந்தது. நெருப்புத் தடயமும் வேரில்பழுத்த பலாவைப் போலவே சிறந்தது என எண்ணியதால், அப்புதினத்தின் சிறப்புக் கூறுகளான உரையாடல், மொழி நடை போன்றவை கதையில் எவ்வாறு அமைய வேண்டும் என்பதையும் அவ்வாறு அமைய வேண்டியதன் அவசியம் என்ன என்பதையும், அது ‘நெருப்புத் தடயங்கள்’ என்னும் புதினத்தில் எங்ஙனம் அமைந்துள்ளது என்பதையும் ஆராய்ந்து விளக்கிக் கூறுவதே இவ்வாய்வின் நோக்கம்.
16வது ஆண்டில்.. இதுவரை சுமார் 350 படைப்பாளிகளுக்கு எளிமையாக இந்த திருப்பூர் இலக்கிய விருது கடந்த 16 ஆண்டுகளில் வழங்கப்பட்டு இருக்கிறது. அவர் இல்லை இவர் இல்லை என்று சொல்பவர்கள் அவர்களும் இவர்களும் முன்பே இடம்பெற்றிருக்கிறார்கள் என்பதை மனதில் கொள்ளலாம்
சிகப்பு மஞ்சள் விளக்குகள் மின்னிக் கொண்டிருக்க, இராணுவ நோயாளர் காவுவண்டி ஒன்று அலறி அடித்துக் கொண்டு மருத்துவமனை வாசலில் வந்து நின்றது. என்னவோ ஏதோவென்று மருத்துவமனை ஊழியர்கள் எட்டிப் பார்த்தனர். நோயாளர் காவுவண்டிக்குப் பாதுகாப்பாய் வந்த இன்னுமொரு வண்டியில் இருந்து குதித்து இறங்கிய இராணுவத்தினர் ஆயுதங்களோடு தடதட என்று உள்ளே நுழைந்தனர். வெளிநோயாளர் பயந்துபோய் ஒதுங்கி நிற்க, வரவேற்பு மேசையில் இருந்த பெண் பதட்டத்தில் தன்னை அறியாமலே சட்டென்று எழுந்து நின்றாள்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









