டால்ஸ்டாயின் முகங்கள்: கார்க்கி – பகுதி 6 - ஜோதிகுமார் -

நாங்கள் வீட்டை விட்டு வெளியேறும் போது செக்காவ் கூறினார்: ‘நம்ப முடியவில்லை. வாழ்நாள் முழுவதும் சந்தோசத்தைக் கண்டதில்லை என அவர் கூறுவதை!’. ஆனாலும், நான் அதை நம்பத்தான் செய்வேன். நம்ப மறுத்த ஒரு விடயம் உண்டெனில் அது அவர் பிறருக்காக வாழ்ந்தார் எனக் கூறுவதைத்தான். ஏனெனில், மிகுதியாக இருப்பதைத்தான் அவர் பிறருக்குத் தானமாகக் கொடுத்தார். அந்த பிறரையும் அவர் தன் வழியே (?) பயிற்றுவிக்கத் தவறவில்லை. வாசிக்க, நடைபயில, தாவர உணவைப் புசிக்க, கிராமத்து விவசாயிகளின் மேல் அன்பு செலுத்த, முக்கியமாக டால்ஸ்டாயின் மத நம்பிக்கைகளில் ஊறித்திளைக்க, மத சிந்தனையின் தாக்கத்திலேயே மயங்க…’
‘மனிதர்களிடம் இருந்து, தப்பி, விலகி தன்போக்கில் சுதந்திரத்துடன் இருக்க வேண்டுமெனில் அவர்களை எதிலாவது ஈடுபடுத்தி அவர்களைக் கட்டிப்போட்டு வைத்திருப்பது முக்கியமானதாகின்றது. முக்கியமாக ஆழ்ந்து துன்புற்றுத் தனிமையில் வாழும் அந்த புனித மனம் ஆதியும் அந்தமும் அற்ற அந்தச் சக்தி பொறுத்து தனது தீவிர ஆய்வுகளில் ஈடுபட்டிருக்க…’… … …. ….
எனது ‘Lower Depths’ இன் கிழவர் லூக்கா மனிதர்களை விரும்புவது போல படைக்கப்படவில்லை. அவன் மனிதர்களுக்கு மேலாக, பதில்களையே–அவை பல்வேறு வகைப்பட்டதாக இருந்தாலும் - விரும்புவான். மக்களுக்கு எதிராக செயல்பட்ட ஒருவனே அவன். மக்களை அவன் ஆற்றுப்படுத்தினான் என்றால் அவர்களிடம் இருந்து தப்பித்துக் கொள்ளவே. மக்கள் தனது பாதையில் குறுக்கிட்டு விடாமல் இருக்க அவன் கைகொண்ட நடைமுறைகள் இவை.
இந்தத் தனிநபர்களின் அனைத்து தத்துவங்களும், பிச்சையை மக்களிடை வேண்டா வெறுப்புடன் விட்டெறியும் முறைமைத்தான். அவற்றின் அடியில், பின்வரும் முறையீட்டையும், அவலத்தையும் பயனற்ற தன்மையையும் கேட்கலாம்.:






மீஜி சின்ரோ ஆலயம் ( Meiji Shrine ) யப்பான் செல்பவர்கள் தவிர்க்க முடியாத இடம். அதாவது இந்தியாவில் புது டெல்கியில் பிர்லா மந்தீர் என பிர்லாவின் பெயரால் கோவில் இருப்பது போல் இங்கு மீஜி என்ற யப்பானிய மன்னரின் பெயரால் இந்த ஆலயம் உள்ளது . இந்த ஆலயம் மன்னரால் கி.பி. 1800 ஆண்டுகளில் கட்டப்பட்டது. இந்த ஆலயம் இருப்பது, உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளிலிருந்து கொண்டு வரப்பட்ட ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட மரங்களால் உருவாக்கப்பட்ட 175 ஏக்கர் காட்டுக்குள்ளே நாம் நடந்து போக வேண்டும். இந்த காடு இருக்கும் நிலம் ஆரம்பத்தில் மன்னருக்கு சொந்தமானது .


தமிழர்க்குத் தொண்டு செய்யும் தமிழ னுக்குத்
ஜெயதேவன் என்னும் பெயரில் கவிதை உலகில் இயங்கி வந்த இவரின் இயற்பெயர் மகாதேவன் . முதுகலை தமிழ் பட்டமும் ஆசிரியர் பயிற்சி பட்டமும் பெற்றவர். தமிழ் ஆசிரியராக பணியாற்றி விட்டுப் பணி நிறைவு பெற்றவர். தமிழ்நாட்டில் உள்ள கொடைக்கானல் வட்டத்தில் உள்ள பண்ணைக்காடு கவிஞரின் சொந்த ஊர் ஆகும். இவரது இலக்கிய செயல்பாடு என்பது சமூக ஊடகத்தில் தொடர்ந்து எழுதி வந்தது ஆகும். அத்தோடு பல்வேறு இலக்கிய இதழ்களில் தொடர்ந்து எழுதி வந்தவர்.,




இலக்கியங்கள் ஒவ்வொரு காலகட்டத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்வு, வரலாறு, பண்பாடு மற்றும் கலாச்சாரத்தினை வெளிப்படுத்துவதாக அமைகின்றன. இலக்கியங்கள் வருங்கால சந்ததியினருக்கு உணர்த்திச் சென்ற அறநெறிகள் ஏராளம். அதில் சித்தர்களின் பாடல்களில் மக்கள் அறிந்துக் கொள்ளக்கூடிய நிலையாமை கருத்துக்கள் மிகுந்து காணப்படுகின்றன. அந்த வகையில் குதம்பைச் சித்தரின் பாடல்களில் காணப்படும் வாழ்வியல் நெறிமுறைகள் குறித்து ஆய்வாக இக்கட்டுரை அமைகிறது.
ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலையான எட்னா எரிமலை கடந்த திங்கட்கிழமை ஜூன் மாதம் 2 ஆம் திகதி மதியம் போல மீண்டும் வெடித்ததாக இத்தாலியின் தேசிய புவி இயற்பியல் மற்றும் எரிமலையியல் எட்னா ஆய்வகம் தெரிவித்துள்ளது. எரிமலை வெடித்தபோது பல கிலோ மீட்டர் தூரத்திற்குக் கரும்புகையோடு கலந்த தூசிகளும் கற்களும் பறந்ததால், அங்கிருந்த சுற்றுலாப் பயணிகள் பயந்து போயிருந்தனர். எந்த நேரமும் விமானப் போக்குவரத்து தடைப்படலாம் என்ற பயத்தில் சில சுற்றுலாப் பயணிகள் சிசிலித் தீவைவிட்டு உடனே கிளம்பினார்கள்.


தமிழில் வாசிப்புக் கலாசாரத்தை வளர்த்தெடுத்ததில் வரலாற்று நாவல்களுக்கு முதன்மையான இடமுண்டு. கல்கி, சாண்டில்யன் வரிசை நாவல்களின் ஈர்ப்புக் காரணமாக அதில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்களையே தமது பிள்ளைகளுக்குச் சூட்டுமளவிற்கு அந்நாவல்கள் வாசகர்களிடையே ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் ஏற்படுத்தியிருந்தன.


சென்னை திருச்சி ஸ்ரீ பாரதகலா குரு நடனமாமணி ஸ்ரீமதி பூர்ணா புஷ்கலா அவர்களின் பரத நாட்டிய நடனம் கொழும்பு கதிர்காமத்தில் எதிர்வரும் ஜுலை மாதம் 4 ஆம் தேதி கொழும்பிலும் 6 ஆம் தேதி கதிர்காமத்திலும் இடம்பெறவுள்ளது.

ஏடுகளாய் இருந்தவற்றை எப்படியோ கண்டெடுத்து

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









