நூல் வெளியீட்டு விழா: கூலித்தமிழ் - மு.நித்தியானந்தன்

இடம்: ZOROASTRIAN CENTRE, 440 Alexandra Avenue, Harrow HA2 9TL (opposite Rayners Lane Tube Station) | நாள்: ஏப்ரில் 25, 2015 (சனிக்கிழமை) | நேரம்: மாலை 6.00 மணி
தலைமை: ஆர்.ராமலிங்கம் | வரவேற்புரை: நடா மோகன் | சிறப்புரை: அம்ஷன்குமார்
உரைகள்: மாதவி சிவலீலன், இளைய அப்துல்லா, தோழர் வேலு, இளையதம்பி தயான்ந்தா, செ.சிறிக்கந்தராஜா.
வெளியீட்டுரை: ஆர்.பத்மநாபஐயர் | நூல் வெளியீடு: சு.மகாலிங்கசிவம் | நன்றியுரை: எஸ்.பி.யோகரட்ணம்
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். தொடர்புகளுக்கு: நித்தி / மீனா 02084206440 / 07405374170
தகவல்: நவஜோதி யோகரட்ணம்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.



25, 26 ஏப்ரல் 2015 மலையகப் பெண்களும் ஊடறுவும் இணைந்து நடாத்தும் பெண்நிலைச் சந்திப்பும் பெண்ணிய உரையாடலும் Tuesday, April 14, 2015 @ 7:11 PM
பாரதி பள்ளியின் 20 வருட நிறைவு விழாவும் பெற்றோர் - பிள்ளைகள் - பொதுமக்கள் ஒன்றுகூடலும். மெல்பனில் 1994 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு வேறு வேறு பிரதேசங்களில் நான்கு வளாகங்களில் வாராந்தம் இயங்கிவரும் பாரதி பள்ளியின் இருபது வருட நிறைவு விழாவும் மாணவர்கள் - பெற்றோர்கள் - பொதுமக்கள் இணைந்து பங்குபற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் ஒன்றுகூடலும் எதிர்வரும் 26-04-2015 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10 மணியிலிருந்து மாலை 6 மணிவரையில் Dandenong High School மண்டபத்தில் (Ann Street, Dandenong 3175) நடைபெறும்.



நாவல் - அவளுக்குத் தெரியாத ரகசியம்
தோழர்
கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் 2014 ஆம் ஆண்டுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருதைக் கனடாவின் மூத்த தமிழ் இலக்கிய முன்னோடிகளான அமரர் அதிபர் திரு. பொ. கனகசபாபதி அவர்களுக்கும் கவிஞர் திரு. வி. கந்தவனம் அவர்களுக்கும் வழங்கிக் கௌரவித்தது. சென்ற ஞாயிற்றுக் கிழமை (14-03-2015) ஸ்காபரோ சிவிக்சென்ரர் அரங்கத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்ற இந்த விருது வழங்கும் விழாவில் தமிழ் ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் சார்பாக அன்று நடைபெற்ற வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழாவில் இணையத்தின் உபதலைவர் எழுத்தாளர் குரு அரவிந்தனின் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். அவரது வரவேற்புரையில் இருந்து ஒரு பகுதியை இங்கே தருகின்றோம்.
நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி பழையமாணவர் மன்றம் ஏற்பாடு செய்துள்ள நெய்தல் நூல் வெளியீட்டு அரங்கு எதிர்வரும் 28-02-2015 சனிக்கிழமை மாலை 3 மணிக்கு கல்லூரி மண்டபத்தில் நடைபெறும். மன்றத்தின் தலைவரும் நீர்கொழும்பு மாநகராட்சி மன்ற பிரதிநிதியுமான திரு. சதிஸ் மோகன் தலைமையில் நடைபெறவுள்ள இந்த அரங்கில் வெளியிடப்படும் நெய்தல் நூல் நீர்கொழும்பின் வாழ்வையும் வளத்தையும் விரிவாகப்பதிவுசெய்துள்ளது. இக்கல்லூரியின் வைரவிழாவை முன்னிட்டு கல்லூரியின் முதல் மாணவரும் படைப்பிலக்கியவாதியுமான திரு. லெ. முருகபூபதி இந்நூலை தொகுத்துள்ளார்.



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









