சுப்ரபாரதிமணியன்பச்சைப் பசுங்கோயில் –இன்பப்
பண்ணை மலைநாடு
இச்சைக்குகந்த நிலம்- என்
இதயம் போன்ற நிலம்
- சுத்தானந்த பாரதியார் -

அய்ந்து நாவல்கள் கொண்ட ரெ.கார்த்திகேசு அவர்களின் இத் தொகுப்பை  படித்து முடிக்கிற போது மலேசியாவின் நிலவியல் சார்ந்த பதிவுகளும், கல்வித்துறை சார்ந்த முனைப்புகளும்,முப்பது ஆண்டுகளுக்கு முந்திய மலேசிய மனிதர்களின் ஒரு பகுதியினரும்  மனதில் வெகுவாக  நிற்கின்றனர்.

ரெ.கார்த்திகேசுவின் அய்ந்தாவது நாவலை எடுத்துக் கொள்ளலாம்.” சூதாட்டம் ஆடும் காலம்” இதன் நாயகன்  கொஞ்ச காலம் பத்திரிக்கையாளனாக இருந்து  விட்டுக்  கல்வித்துறை விரிவுரையாளனாகச் செல்கிறான். அப்பாவின் வன்முறையால் வீட்டை விட்டு ஓடிப்போய் கல்வி கற்று முன்னேறியவன் அவன். அம்மாவைத் தேடிப்போகிறான். காதலியாக இருப்பவள் இன்னொருத்தனை பணத்துக்காக ஆசைப்பட்டு திருமணம் செய்து கொண்டு  பின் விவாகரத்து பெறுகிறவள் இவனை விரும்புகிறாள். அப்பா, அம்மாக்களை தேடிப்போய் அவர்களின் நோய், மரணம்  ஆகியவற்றில் அக்கறை கொள்கிறான்.

இந்த அம்சங்களை மற்ற நாவல்களிலும் காண முடிவதில் அவர் தன்னை பாதித்த  அனுபவங்களைத் திரும்பிப் பார்க்கிற தன்மை காணப்பட்டது.      முதல் நாவலில்  ( வானத்து வேலிகள்) குணசேகரன் இப்படி வீட்டை விட்டு விரட்டப்பட்டவன் மாட்டுத் தொழுவத்தில் வேலை பார்த்து அந்த வீட்டு பணக்காரப் பெண்ணை காதலித்து, லண்டன் போய் படித்து பெரும் பணம் சம்பாதித்து ஏழை மாணவகளுக்கு விடுதி ஒன்றை பெரும் செலவில் கட்டுகிறான். மனைவியுடன் உடல் தொடர்பு இல்லாமல் இருக்கிறவன் மகன் தந்த பாடத்தால்   மனைவியுடன் சேர்கிறான். ராணி என்ற குணசேகரனின்உதவியாளர் திருமணம் செய்து கணவனைப்  பிரிந்து கொஞ்சம் குணசேகரனுக்காக தவிக்கிறவள்.  ” தேடியிருக்கும் தருணங்களில் ” நாவலில் நாயகன் அப்பாவின் சாவு, அஸ்தி கரைப்பு என , தன் அம்மாவைத் தேடிப் போகிறான்.  அம்மா சாதாரண கூலிக்காரப் பெண். அவளைக் கண்டடைகிறான்.  ” அந்திம காலம் “ நாவலில் சுந்தரத்திற்கு புற்று நோய். மகள் ராதா கணவணை விட்டு லண்டனுக்கு மகன் பரமாவை அப்பா சுந்தரத்திடம் விட்டு போய்விடுகிறாள். பின் அந்த வாழ்க்கையும் சரியில்லையென்று திரும்புகிறாள். பரமா இறந்து விடுகிறான்.சுந்தரம் புற்று நோயிலிருந்து தப்பிக்கிறார். ” காதலினால் அல்ல”நாவலில்  கணேஷின் பல்கழைக்கழக அனுபவம், ரேக்கிங்,,அத்தை பெண், காதலிப்பவனைக் கட்டாமல் அத்தைப் பெண்ணை கட்டும் சூழல். எல்லா நாவல்களிலும் நோய் சார்ந்த மனிதர்களின் அவஸ்தை இருக்கிறது. அதிலும் புற்று நோய் என்று வருகிற போது விவரமான விவரிப்பு இருக்கிறது. கல்வி சூழல் சார்ந்த விரிவான அணுகுமுறை, பாடத்திட்டங்கள்,பல்கலைக்கழக கல்வியில் இருக்கும் அரசியல், மாணவர்களின் போக்குகள், ரேக்கிங் சித்ரவதைகள் இடம்பெறுகின்றன.அங்கங்கே இடம் பெறும் இலக்கியக் குறிப்புகளும்  சுவாரஸ்யப்படுத்துகின்றன. எளிய மனிதர்கள் படித்து சுய அக்கறையுடன் கல்வியைத் துணைக்கு வைத்துக் கொண்டு லவுகீய வாழ்க்கையில் முன்னேறும் படிமங்களின் சிதறல் எங்கும் காணப்படுகிறது.

வெகுஜன ஊடகங்களில் கல்விக்கூடம் அதிகம் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படுவதுண்டு. குறிப்பாய் திரைப்படங்களில் இளைஞர்கள் இன்று திரைப்படக் கொட்டாய்களுக்கு அதிகம் செல்பவராய் இருப்பதால் அவர்களைப் பற்றிய மேலோட்டமான விசயங்களைக் கொண்ட திரைப்  படங்களே அதிகம் ஆக்கிரமிக்கின்றன,ஆனால் கல்வித்துறையின் இன்னொரு பக்கமாய் இருக்கும் கல்வித்துறை சார்ந்த அரசியல்,மாணவர்களின் போக்கு, கல்வித்திட்டங்கள், மாணவர் ஆசிரியர் உறவு போன்றவை அதிகம் சொல்லப்படுவதில்லை.இந்நாவல்களில் அதைக்காண முடிவது ஆரோக்கியமானது.

ரெ.கார்த்திகேசு கல்வித்துறையில் பணிபுரிந்தவர் .  கல்வித்துறை சார்ந்த அவரின் விஸ்தாரமான நாவல் அனுபங்கள் வியப்பூட்டுகின்றன. அந்த வகையில் கல்வித்துறை பற்றின முறையான பதிவாகவும் இருப்பது இந்நாவல்களின் பலம்.மலேசியா சூழலின் கல்வித்தன்மை, அவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும் கல்விசூழல் குறிப்பிட வேண்டியது.சம்பந்தப்பட்ட துறைகளில் பணிபுரிகிறபோது அத்துறை பற்றி படைப்புகளில் வெளிபடுத்துவது பல விமர்சனங்களுக்கும்,அத்துறையினருக்கும், சம்பந்தப்பட்ட மாதிரிகளுக்கும் சங்கடங்களையும் பகைமையையும் உருவாக்கும். அதையும் மீறி கல்வித்துறை பற்றிய அனுபவங்களையே முன்னிலைப்படுத்தி கார்த்திகேசு இதில் இயங்குவது  ஆச்சர்யப்படுத்துகிறது. அவர் கல்வித்துறையில் பணிபுரிகிறபோது  இவற்றை எழுதியிருக்கக்  கூடும். அப்போது கல்வித்துறையில் எதிர்கொண்ட பல பாத்திரங்களை பலர் இதில் அடையாளம் கண்டிருப்பார்கள்.விரோதமும் கொண்டிருப்ப்பார்கள்.சிக்கலான சூழ்நிலைகளுக்கும் கொண்டு சென்றிருக்கும். அத்துறையில் பணி செய்யும் காலத்திலேயே இவற்றை அவர் எழுதி வெளியிட்டிருப்பதை பாராட்டியாக வேண்டும்.அவ்வனுபங்களைப் படைப்பாக்குகிற தன்மை தெரிகிறது.   புதிய தலை முறை பற்றிய அக்கறை இந்த கதாபாத்திரங்களுக்கு இருக்கிறது. குழந்தைகளுக்கு ஆங்கில ஆக்கிரமிப்பு மீறி தமிழ் சொல்லித்தரும் தாத்தாக்கள் இருக்கிறார்கள். பழைய இலக்கியங்களில் தோய்ந்து  அவற்றை வெளிப்படுத்தும் பல இடங்கள் உள்ளன. மரணம் பற்றிய பயத்தில் பல கதாபாத்திரங்கள்  அலறிக் கொண்டிருக்கிறார்கள் “மரணம்  கூத்தாடுகிறது. இங்கு எல்லோரும் அதன் பேய்ப் பிடியில் இருக்கிறோம். இன்றொன்றும் நாளையொன்றுமாக தனது விருப்பத்திற்கு அது மனிதர்களைக் கொய்து தின்கிறது.இது மரணப் பேயின் விருந்துக்கூடம் என்று தோன்றியது   “ (பக்கம் 551 )

கார்த்திகேசுவின் சிறுகதைகளின் நுணுக்கமான விசயங்கள் இதிலும் உள்ளன. அவரின் சிறுகதைகள் வெகுவாக சமகாலத்தன்மையோடும் நவீன வாழ்க்கைச் சிக்கலோடும் வெளிப்படுபவை. ஆனால் இந்நாவல்களின் பிரசுரிப்பு காலம்80,90 என்பதால்  அக்கால மாதிரிகள்  மத்திய தர மலேசியர்களின் வாழ்க்கையை மையமாகக் வெளிப்படுத்துபவையாக அமைந்துள்ளன.. அக்கால இலக்கிய சூழலையும் மனதில் கொண்டே இவற்றை மதிப்பிடுவது நியாயமாகும். இந்நாவல்களின்    நேரடிசாட்சியாக இருந்து அனுபவித்திருப்பதை வெளிப்படுத்தியிருப்பதில்  தன்னை முன்னிருத்திய நேர்மை  தென்படுகிறது. வேறு கற்பனை அனுபவங்களைத் தேடிப்போகாமல் தன் அலுவலக அனுபவங்களையே மேலோங்கியபடிச் சொல்லியிருக்கும் பாணி இவரின் தனித்தன்மையானதாக உள்ளது. இன்றைய புது வாசகன்  இதிலிருந்து  சற்றே மாறுபடலாம். ஆனால் அந்த அனுபவங்களைக் கடந்துதானே இன்றைய சூழலுக்கு வந்திருக்கிறோம் என்பதையும் மறக்க முடியாது.. மலேசியா நிலவியல் சார்ந்த பெரும் விவரிப்புகளும், சரளமான  நடையும்  நாவகளை நல்ல வாசிப்பிற்குள்ளாக்குகிறது.மலேசியா பற்றிய    தகவல்களை அள்ளித்தருகிறது.முன்னுரையில் கார்த்திகேசு இப்படி குறிப்பிடுகிறார்.  “ இது பிள்ளைப் பேறுமாதிரிதான்.பிறக்கும்போது என்ன அமைகிறதோ அதுதான் அதற்கு வாய்த்தது. அடுத்தவர் கையில் கொடுத்த பிறகு இதன் மூக்கைக் கொஞ்சம் எடுப்பாகப் பண்ணியிருக்கலாம். கண்ணை கொஞ்சம் நீடியிருக்கலாம் எனத் தாய் கவலைப்பட்டு பயனில்லை.எழுத்தின் கருத்துகளுக்கு அவனே பொறுப்பு, ஆனால் நாவலின் மொத்த வடிவத்துக்கு அவன் மூளையோடு அவன் சுரப்பிகளும் பொறுப்பு என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும் “ இவ்வகை திருப்தியின்மையும், சுய விமர்சனமும் எழுத்தாளனிடம் தென்படுவது ஆரோக்யமாக படைப்புத்தளத்தை முன்னகர்த்திச் செல்லும்.முப்பது ஆண்டுகளுக்கு முந்திய மலேசிய வாழ்க்கையின்  அப்போதைய பதிவாக அவற்றைத் திரும்பிப் பார்க்க வைக்கிறது. அய்ந்து நாவல்களை ஒரே தொகுப்பாக வெளியிட்டிருப்பது அவரின் நாவல் படைப்புகளை ஒரு சேர படிக்கவும், கல்வித்துறை சாந்தவர்களுக்கும், ஆராய்ச்சிமாணவர்களுக்கும், மலேசியா சூழலை ஓரளவு வெளீயிலிருக்கும் வாசகன் சரியாகப் புரிந்து   கொள்ளவும் சரியானதாக அமையும்.

- காவ்யா பதிப்பகம், சென்னை வெளியீடு  998 பக்கங்கள்  விலை ரூ 1300 -

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க
                                        

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள் இணைய இதழின்  முக்கிய நோக்கம் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை  பலவேறு நாடுகளிலும் வாழும் தமிழர்களுடன் பகிர்ந்துகொள்வதாகும். படைப்புகளை அனுப்பும் எழுத்தாளர்கள் புகைப்படங்களை அல்லது ஓவியங்களை அனுப்பும்போது அவற்றுக்கான காப்புரிமைக்கு உரிமை உள்ளவர்களாக இருந்தால் மட்டுமே அவற்றை அனுப்பவும். தமிழ் மொழியை இணையத்தில் பரப்புவதும் இவ்விணைய இதழின் முக்கிய நோக்கமாகும். படைப்புகளை ngiri2704@rogers.com , editor@pathivukal.com ஆகிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.

Pathivugal Online Magazine''s  main aim is to share the creative works of Tamil writers with Tamils living in various countries. When writers submit their works—such as photographs or paintings—please send them only if you hold the copyright for those items. Spreading the Tamil language on the Internet is also a key objective of this online magazine. Please send your submissions to ngiri2704@rogers.com and editor@pathivukal.com.

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும்.  நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 
பதிவுகள் விளம்பரம்