குரு அரவிந்தன்(செல்போன்கள் பாவனைக்கு வரமுன்பு கனடாவில் நடந்த ஒரு சம்பவம் சிறுகதையாக்கப்பட்டது)

வாசலில் அழைப்பு மணி கேட்டது. கதவைத் திறந்து எட்டிப் பார்த்தேன். எட்டு
வயது மதிக்கத்தக்க பையன் ஒருவன் வாசலில் நின்றான். முகத்தில் ஒரு துடிப்புத்
தெரிந்தது.

‘நைக்கி’ ரீ சேட், நைக்கி சூ, நைக்கி காப். எல்லாமே நைக்கி மயம். தொப்பியின் முன் பக்கத்தைத் திருப்பி பின் பக்கமாகப் போட்டிருந்தான்.

‘ஜெஸ்........மே ஐ ஹெல்ப் யூ’ என்றேன்.

‘ஹாய்!...... அங்கிள், ஐ யாம் கிறிஸ்தோஃபர். வீ....ஆ.... கோயிங் டு....பி...யுவ நெய்பேர்ஸ்’.

என்று அறிமுகம் செய்து சைகையால் அடுத்த வீட்டைக் காட்டினான்.
வெளியே எட்டிப் பார்த்தேன். அடுத்த வீட்டிற்கு முன்னால் வண்டியில் இருந்து வீட்டுத் தளபாடங்களை இறக்கிக் கொண்டிருந்தார்கள்.

‘ஹாய்....ஐ...ஆம்....சிவா...கிளாட்யு மீட்யூ, யூ ஆர் வெல்க்கம்’

‘டாட்..!’ இங்கிருந்தே குரல் கொடுத்தான் கிறிஸ்தோஃபர்.

முப்பத்தைந்து வயது மதிக்கத் தக்க ஒருவர் வந்தார்.

‘மீட் மை டாட்,... டாட் ஹீ ஸ் மிஸ்டர் சிவா!’  என்றான் கிறிஸ்தோஃபர்.

‘ஹாய்’ என்று நீட்டிய கையைக் குலுக்கினேன். ‘ஐ யாம் மைக். அடுத்த வீட்டிற்கு நாங்கள் தான் புதிதாக குடி வந்திருக்கிறோம்.
உங்களைச் சந்தித்ததில் ரொம்ப மகிழ்ச்சி. மீண்டும் சந்திப்போம்!’

அவர்கள் தங்களை அறிமுகம் செய்து கொண்ட பண்பு என் மனதைத் தொட்டது. நாங்களும் கனடாவுக்குப் புதியவர்களாக இருந்தோம், நல்ல அயலவர்கள் கிடைக்கா விட்டால் தினந்தினம் பிரச்சனைதான்!

எனது மகனும் கிறிஸ்தோஃபரும் ஒரே வகுப்பில் படித்ததால் இருவரும் நல்ல நண்பர்களானார்கள். மாலைநேரங்களில் வீட்டிற்கு முன்பாக ஓடி விளையாடுவார்கள்.

பனிக்குளிர் காலம் தொடங்கும் அறிகுறிகள் தெரிந்தன. வீட்டிற்கு முன்பாக உள்ள ரோஜாச் செடிகளைப் பனிக்குளிரில் இருந்து பாதுகாப்பதற்காக அவற்றின் கிளைகளை ஒவ்வொன்றாக நறுக்கிக் கொண்டிருந்தேன்.

‘ஹாய்......சிவா....ஹவ்வாயு?’ கலகலப்பான குரல் என் கவனத்தைத் திசை திருப்பியது.

திரும்பிப் பார்த்தேன், மைக்!

‘ஓ.....ஐ....யாம் ஃபயின்! மைக் எப்படி இருக்கிறீங்க?’

‘நல்லா இருக்கிறேன் சிவா! ஊரிலே இருந்தது போன்ற பிரச்சனைகள் இங்கே இல்லை. இங்கே வீஹாவ் மோ ப்ரைவஸி! அதனாலே நாங்க ரொம்ப சந்தோஷமாய் இருக்கிறோம்’.

எங்க ஊரிலே எங்களுக்குத் தான் பிரச்சனை என்று பார்த்தால் இது என்ன அவர்களுக்கும் அவங்க ஊரிலே பிரச்சனையாமே?

என்னவென்று கேட்டுப் பார்க்க வேண்டும் போல ஆவலாக இருந்தது. எப்படி அறிவது என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது மைக்கே கதையைத் தொடக்கினான்.

‘சிவா உங்களோட திருமணம் அரேஞ்ச் மரீச்சா?’

‘இல்லை மைக், காதல் திருமணம்!’

‘காதல் திருமணமா? அப்போ ஊரிலே உங்க சொந்தக்காரங்க எல்லோரும் இதை எப்படியாவது எதிர்த்திருப்பாங்களே?’

‘ஆமாம் காதல் திருமணமென்றால் எப்பவுமே எதிர்ப்பு இருக்கத் தான் செய்யும். ஏனென்றால் ஊரிலே உள்ள பெரியவர்களில் அனேகமானவர்கள் ‘மோ கான்ஸவேட்டிவ்வாய்’ அதாவது பழமைவாதிகளாய் இருப்பாங்க. அவர்களுக்கு காதல் என்றால் கற்பனையில் கூடப் பிடிக்காது!’

‘உண்மைதான்! அவங்க எப்படியும் எதிர்க்கத்தான் செய்வாங்க!’

‘அப்படிப் பட்டவர்களுக்கு உண்மையை விளங்கப் படுத்தணும். இல்லை என்றால் அதை எதிர்த்துக் காதலின் வெற்றிக்காகப் போராடணும்.’

‘போராடணுமா? எப்படி?’

‘எங்களாலே எங்கள் வாழ்க்கையை நல்ல படியாய் அமைக்க முடியும் என்கிற நம்பிக்கை எங்களுக்கு முதலில் வரணும்.  முக்கியமாகப் பொருளாதார நிலையில் உயரவேண்டும். அந்த நம்பிக்கை எங்கள் இருவருக்கும் இருந்திச்சு. அதனாலே நாங்க அவர்களின் எதிர்ப்பைப் பற்றிப் பயப்படல்லே!’

‘நீங்க சொன்னது போலவே எங்க காதலுக்கும் இப்படியான எதிர்ப்பிருந்திச்சு. நாங்களும் போராடிப் பார்த்தோம், முடியலே!’

‘அப்படியா? நீங்களும் போராடினீங்களா?’

‘ஆமா! அதன் பலன் வீட்டை விட்டு வெளியே போன்னு சொன்னாங்க. நாங்க யார் எதிர்த்தாலும் பிரிவதில்லை என்று திடமான முடிவோடு இருந்தோம். காதலுக்காக முடியையே துறந்த மன்னர்களின் கதையோடு பார்க்கும் போது, எங்க சொந்த வீட்டைத் துறந்து போவது ஒன்றும் பெரிய கஷ்;டமாய் எங்களுக்குப் படல்லே!’

‘உண்மைக் காதலென்றால் அப்படித்தான் இருக்க வேண்டும். நீங்க நல்ல முடிவு தான் எடுத்திருக்கிறீங்க. அப்போ உங்க குழந்தை பிறந்த போது கூட பெற்றோர் வந்து பார்க்கலையா? பேரப்பிள்ளை என்கிற பாசம் கூட அவர்களுக்கு இருக்க வில்லையா?’

திடீரென மைக்கின் முகத்தில் மாற்றம் தெரிந்தது. எதையோ சொல்லத் தயங்குவது போல இருந்தது.

‘இல்லை.....சிவா  எங்களுக்குக் குழந்தை இல்லை என்கிற குறை எப்பவுமே எங்க மனசை வாட்டிக் கொண்டிருந்தாலும், அதற்காக வருத்தப்பட்டுக் கொண்டே இருக்க முடியுமா? அதனாலே தான் கிறிஸ்தோஃபரை தத்து எடுத்து வளர்க்கிறோம்.’
‘கிறிஸ்தோஃபர் தத்துக் குழந்தையா?’

‘ஆமா! ஹீ ஸ் வெரி ஸ்மாட். எங்களுக்கும் அவனை நல்லாப் பிடிச்சுப் போச்சு. யார் குழந்தையாக இருந்தால் என்ன? வளர்ப்புப் பிள்ளை என்கிற குறையேயில்லாமல் பார்த்துக்கிறோம்.’

‘நல்ல காலம் மைக்! எங்களுக்குக் கடவுள் அந்தக் குறையை வைக்கவில்லை. மைக், குழந்தை இல்லையே என்று நீங்க வீணாகக் கவலைப் படவேண்டாம். கடவுள் உங்களை என்றுமே கைவிட மாட்டார், இன்னும் காலமிருக்கு’ ஆறுதல் கூறினேன்.

இந்த நாட்டில் குழந்தைப்பேறு சம்பந்தமாக நவீன வைத்திய வசதிகள் இருந்துமே சிலருக்குத் தீர்க்க முடியாத வேறு சில பிரச்சனைகள் இன்றும் இருக்கத் தான் செய்கின்றன.

இவர்களுக்கு என்ன வயதா போய்விட்டது. இளம் ஜோடி தானே. வாழ்வதற்கு இன்னும் எவ்வளவோ காலம் இருக்கிறது. காலம் தான் இவர்கள் குறையைத் தீர்க்க வேண்டும். ஒருவேளை இல்லாதவர்களுக்குத் தான் ‘இல்லை’ என்பதன் அர்த்தம் என்னவென்று புரியுமோ என்னவோ!

அன்று காலை தொடக்கம் பனிகொட்டிக் கொண்டிருந்தது. டிரைவ்வே பனியால் மூடிக்கிடந்தது. காரை டிரைவ்வேயில் இருந்து எடுப்பதற்காகப் பாதையைச் சுத்தம் செய்தேன். அடுத்த வீட்டு றைவ்வேயை அவர்கள் குடும்பமாக நின்று சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள்.

‘ஹாய்....சிவா’ என்றான் மைக் அங்கிருந்து.

‘ஹாய்....!’ என்றேன் பதிலுக்கு இங்கிருந்து.

எஸ்கிமோக்களைப் போல உடம்பெல்லாம் மூடிக்கட்டி இருக்க, முகம் மட்டும் வெளியே எட்டிப் பார்த்தது. ஈரமான பனியை உருண்டையாக்கிப் பந்துகள் செய்து மூவரும் ஒருவருக்கொருவர்; எறிந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். கிறிஸ்தோஃபர் பனியில் உருண்டு அவர்கள் எறியும் பனிஉருண்டைகளைப் பிடித்துக் கொண்டிருந்தான். கணவன், மனைவி, குழந்தை என்று நல்ல சந்தோஷமான இளம் குடும்பம் என்று மனசுக்குள் நினைத்துக் கொண்டேன்.

அன்றிரவு பனிப்புயல் அடித்ததால் எங்கள் வீட்டின் தொலைபேசித் தொடர்பில் ஏதோ கோளாறு ஏற்பட்டுத் தொடர்பு தடைப்பட்டது.

அவசரமாக ஒரு நண்பரோடு தொடர்பு கொள்ள வேண்டி இருந்ததால் நான் அடுத்த வீட்டிற்குப் போனேன். வாசல் மணியை அடித்தபோது, மைக்தான் வந்து கதவைத் திறந்தான். வந்த விடயத்தைச் சொன்னேன்.

‘என்ன சிவா இதற்குத் தயங்கணுமா? யூ ஆர் வெரி வெல்கம்’ என்று சொல்லி தொலைபேசி இருக்கும் இடத்தைக்காட்டி விட்டான். பாதவணியை வாசலில் கழட்டி வைத்து விட்டு தொலைபேசியில் பேசிவிட்டுத் திரும்பிப் போகும் போது நன்றி சொன்னேன். மைக்கோ விடவில்லை. இருந்து காப்பி சாப்பிட்டு விட்டுப் போகுமாறு அன்போடு கேட்டான்.

அந்த அன்புக் கட்டளையை மறுக்க முடியாமல் அரைமனதோடு ஹாலில் உட்கார்ந்தேன்.

‘டார்லிங்....கம்..ஹிய, வீ ஹாவ் ஏ விசிட்டர்’ மாடியில் உள்ளபடுக்கை அறையை நோக்கி மைக் குரல் கொடுத்தான்.

எனக்கு என்னவோ போல இருந்தது. நேரம் கெட்ட நேரத்தில் இங்கு வந்து அவர்களைக் கஷ்டப்படுத்தி விட்டேனோ என்று நினைத்தேன்.

‘ஜானி...டார்லிங்....இங்கே வந்து பாரேன்.....நெக்ஸ்டோ நெய்பர் சிவா வந்திருக்கிறார்.’

ஜானி! அழகான பெயர், பெயரைப் போலவே அவளும் அழகாக இருப்பாளோ? அவளை நான் நேரில் கண்டதில்லை, அவள் வருவாளா? என்று ஆவலோடு காத்திருந்தேன்.

சற்று நேரத்தால், மாடிப் படிகளில் யாரோ மெதுவாக அடி வைத்து இறங்கி வரும் ஓசை கேட்டது.

என் நெஞ்சு படபடத்தது.

மைக்கின் காதலி, தங்கள் காதலுக்காக கடைசிவரை போராடி வெற்றி கண்டவள். சொந்தம் பந்தமெல்லாம் துறந்து அவனேதான் தன் உலகம் என்று துணிச்சலோடு அவனோடு வாழ வந்தவள். எப்படி இருப்பாள்?

ஆவலோடு எதிரே இருந்த மாடிப்படியைப் பார்த்தேன்.

அவள் இறங்கி வரும்போது பான்ஸ்ஸால் மூடாத மெல்லிய சிவந்த பாதங்கள் தான் முதலில் தெரிந்தன. சற்றே நிமிர்ந்து மேலே பார்த்தேன். ஜீன்ஸ் பேன்ட், மெல்லிய நீலத்தில் பூப்போட்ட நைக்கி சார்ட். சார்ட்டின் மேல் பட்டன் பூட்டப் படாமல் அலட்சியமாய்த் திறந்திருந்தது. இந்தக் காலத்திற்கும், நாட்டுக்கும் ஏற்ற  ‘பாஷனபிளான மொடேன் கேளாக’ இருக்கலாம் என்று மனசு கணக்குப் போட்டது.

மெல்லிய புன்சிரிப்போடு, அருகே வந்து மெல்லக் குனிந்து,

‘ஹாய் மிஸ்டர் சிவா! ஐ யாம் ஜான், கிளாட்யு மீட்யூ!’ என்று சொல்லிக் கை குலுக்கிய போது ஜானியின் மேல் பட்டன் திறந்த சட்டைக்குள்ளால் நெஞ்சு நிறைய சுருண்ட முடி தெரிந்தது. விழிகள் தடுமாறி ஒரு கணம் உறைந்து போக, செய்வதறியாது வியப்போடு அதற்கும் கொஞ்சம் மேலே நிமிர்ந்து பார்த்தேன். ஒற்றைக் காதிலே தோடு. மஸ்றூம் கட்.

‘என்ன சாப்பிடுறீங்க? காப்பியா.......இல்லை......யூஸ்....ஏதாவது?’ என்ற இனிய குரலுக்கு என்ன சொன்னேன் என்று எனக்கே தெரியாது. காபிதான் கேட்டிருப்பேன்.
ஏனென்றால் காபிதான் குடித்ததாக ஞாபகம், வாயெல்லம் கோப்பியின் ஒருமாதியான கசப்புச் சுவையை உணரமுடிந்தது.

‘தாங்யூ’ சொல்லி அப்புறம் அவர்களுக்கு ‘பாய்’ சொல்லி விட்டு, அவசரமாக எனது வீட்டிற்கு வந்து வாசலில் அழைப்பு மணியை அடித்தேன். வாசற் கதவை எனது மகன் தான் திறந்தான்.

‘அப்பா...கிறிஸ்தோஃபருடைய அம்மாவைப் பார்த்தீங்களா? இஸ் ஸி நைஸ்?’
தனது நண்பனின் தாயைப் பற்றி அறியும் ஆவலில் மகன் கேட்டான். எனது காதிலே மகன் கேட்டது விழாதது போல நான் உள்ளே போனேன்.

‘அம்மாவா..?’ மகனின் அந்தக் கேள்விக்கு நான் என்ன பதில் சொல்ல...?  

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க
                                        

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள் இணைய இதழின்  முக்கிய நோக்கம் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை  பலவேறு நாடுகளிலும் வாழும் தமிழர்களுடன் பகிர்ந்துகொள்வதாகும். படைப்புகளை அனுப்பும் எழுத்தாளர்கள் புகைப்படங்களை அல்லது ஓவியங்களை அனுப்பும்போது அவற்றுக்கான காப்புரிமைக்கு உரிமை உள்ளவர்களாக இருந்தால் மட்டுமே அவற்றை அனுப்பவும். தமிழ் மொழியை இணையத்தில் பரப்புவதும் இவ்விணைய இதழின் முக்கிய நோக்கமாகும். படைப்புகளை ngiri2704@rogers.com , editor@pathivukal.com ஆகிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.

Pathivugal Online Magazine''s  main aim is to share the creative works of Tamil writers with Tamils living in various countries. When writers submit their works—such as photographs or paintings—please send them only if you hold the copyright for those items. Spreading the Tamil language on the Internet is also a key objective of this online magazine. Please send your submissions to ngiri2704@rogers.com and editor@pathivukal.com.

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும்.  நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 
பதிவுகள் விளம்பரம்