யோகேஸ்வரி சிவப்பிரகாசம் அவர்களின் 'தாலி' சிறுகதைத் தொகுப்பு - நூல்நயம்! - ரஞ்ஜனி சுப்ரமணியம் –

'நாம் விரும்புகின்றவையும் திட்டமிடுபவையும் எப்போதும் நடந்து விடுவதில்லை .விரும்பாதவையும் எதிர்பாராதவையும் நடந்து விடுகின்றன ' . யோகேஸ்வரி சிவப்பிரகாசம் அம்மையாரின் 'தாலி' சிறுகதைத் தொகுப்பில் படைப்பாளியின் உரை இவ்வாறுதான் ஆரம்பிக்கின்றது. தத்துவார்த்தமான வசனங்கள் மட்டுமல்ல, சிறுகதைத் தொகுப்பின் பெரும்பாலான கதைகளின் அடிநாதமாகவும் இதுவே அமைந்துள்ளது.
யுத்தமும் இடம்பெயர்வுகளும் பேரழிவுகளும் உயிரிழப்புகளும் யாரும் விரும்பிப் பெற்றவை அல்ல. சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அமைந்தவையும் அல்ல. சர்வதேச அரசியல் சதிகளினாலும் மனச்சாட்சியற்ற உள்நாட்டு அரசியல் வாதிகளாலும் திட்டமிட்டே வடிவமைக்கப் பட்டவை. ஆனாலும் அப்பாவிப் பொதுமக்களுக்கு இவை எதிர்பாராதவை. விரும்பத் தகாதவை. பத்து சிறுகதைகளை உள்ளடக்கிய இத்தொகுப்பு, 'நெல்லியடி பரணி அச்சகத்தின்' வெளியீடாகும். தமிழ்ப் பாரம்பரியத்தின் உணர்வு பூர்வமான குறியீடாகவும் முக்கியமான சிறுகதையின் தலைப்புமான 'தாலி' அட்டைப் படத்தினை அலங்கரிக்கிறது.
இனப்பிரச்சனை சார்ந்த வன்முறைகளில், மிகக் குறைந்த அனுபவங்களையே கொண்டிருக்கும் பலரால், இவ்வாறான பயங்கரங்கள் உணரப்படுவதற்கு இலக்கியத்தின் மூலம் பங்களிப்பை நல்கும் இவரைப் போன்ற எழுத்தாளர்களின் பணி பெறுமதி மிக்கது. யுத்த வன்முறைகள் இயல்பு வாழ்வினை பலிவாங்கிய கடந்த காலங்களில், மக்களின் வாழ்வியல் எவ்வாறு அதனை உள்வாங்கியது என்பதே இத்தொகுப்பின் முக்கிய பேசுபொருள். எளிமையான யதார்த்த நடை எழுத்தாளரின் அனுபவச் சிறப்பினை உணர வைக்கின்றது. எனினும் ஆழ்ந்த கலாசார பாரம்பரிய சிந்தனைகளுக்கும், பெண்ணியம் சார்ந்த மனோதத்துவங்களுக்கும் இடம் கொடுக்கும் இரு முக்கிய கதைகளான 'தாலி`, 'மலை முகடுகள் சரிக்கப்படுகின்றன', ஒப்பீட்டுக்கு உரியவை. இக்கதைகள் பல கேள்விகளை மனதில் எழுப்பவும் தவறவில்லை.




"பெண் அடிமைத்தனத்தில் இருந்து மீண்ட வரலாறு உண்டு. ஆனால் முழுமையாக அவள் மீளவில்லை. பெண்கள் வெளித்தோற்றத்தில் உயர்வு பெற்றதாக தெரிகிறது. பதவி உயர்வு பெற்றது, குடும்பத்தில் சில பொறுப்புகளை அடைந்தது, சமூகத்தில் சில நிலைகளை அடைவது வேறு வகையில் தோற்றம் கொள்கின்றன, ஆனால் பெண் அப்படியெல்லாம் பெரிதாக மாறுதலுக்குள் உட்படவில்லை குடும்பமே பெண்ணை மீட்டெடுக்க வேண்டு,ம் சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் விஷயங்களுக்கு பதிலடிதான் பெண்கள் எழுத்து பெரியார் ஒவ்வொரு பெண்களும் இருக்கிறார் என்பதைத் தான் பெண்களிம் மறுமலர்ர்சி நடவடிக்கைகள் சொல்கின்றன. எதற்காக எழுத வேண்டும் என்றால் குடும்பத்தின் தளைகளில் இருந்து பெண்ணை விடுவிப்பதற்கும் அதை தீர்வை தன் அனுபவங்களில் மூலம் செல்வதற்கும் பெண்ணே எழுத வேண்டிருக்கிறது" என்று எழுத்தாளர் அகிலா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் சக்தி விருது 2023 விழாவில் விருதைப் பெற்றுக் கொண்டு பேசும்போது தெரிவித்தார். விருது பெற்ற பிற எழுத்தாளர்கள் தங்களின் எழுத்து அனுபவங்களை விரிவாக எடுத்துரைத்தனர்.
திருச்சூர் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட போது இளம் பெண் கவி அனிஷா அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது . அவருடன் கவிதை சார்ந்த ஒரு உரையாடல் :




கோபி பகலில் அந்த சாக்கு கட்டிலில் செம தூக்கம் போட்டிருந்தான் . காடு வெட்டி விவசாயம் செய்கிறவர்கள் பயன்படுத்துற மடிக்கிற மரக்கட்டில் அதிசயமாக அவன் வீட்டிலும் ஐயாவால் பயன்பாட்டில் இருக்கிறது . யாழ்ப்பாணத்தில் சுகமான தூக்கம் வருகிற ...இதை யார் பயன்படுத்துகிறார் ? . அவரை சுத்தத் தமிழர் என சமயத்தில் நினைப்பான் . ஐயாவிடம் அவன் விடுத்து விடுத்து கேள்விகள் கேட்க முடியாது . ஒருநாள் ரகுவிடம் கேள்விகளை எழுதிக் கொடுத்து அவன் மூலமாக பேட்டி எடுக்க வேண்டும் . தனக்குள் சிரித்துக் கொண்டு நெட்டி முறித்தான் . அம்மா காதலித்து ஐயாவை முடித்தேன் என்று சொல்வார் . அதுவும் நினைப்பில் வந்தது . அம்மாட வலது கை சின்ன மாமா தான் . அவருக்கும் தம்பிக்கும் இடையில் வயசு வித்தியாசம் நாலு, ஐந்து இருக்கும் . அது தான் ... அக்கா சொன்னால் கேட்பவராக இருந்தார் . அடுத்த ஆண்டில் பிறந்திருந்தால் வில்லனாக அல்லவா இருந்திருப்பார் . ஆனால் , அந்த காலம் இலக்கியக்காதலாக இருந்தது . இன்று இருப்பது போல இல்லை . அட அவனுக்கும் காதலுக்கும் வெகு தூரம் விடுங்கள் . ஐயாவை , அம்மா முதலில் விரும்பவில்லை . அம்மம்மா தான் , அயலுக்குள் இருந்த அவரை " " எடியே , இவன் பிரயாசைக்காரனாக இருக்கிறான், கட்டுவாயா ? " எனக் கேட்டார் . அம்மா " என்னாலே கறுப்பனைக் கட்ட முடியாது " என்று விட்டுப் போய் விட்டார் .
பெரும்பாலான எழுத்தாளர்கள் நவீன கணினி தொழில் நுட்பத்தையே பயன்படுத்தி எழுதி வருகிறார்கள். ஆனால், அந்தப்பக்கமே செல்லாமல், மின்னஞ்சல் பாவனையும் இல்லாமல், தொடர்ந்தும் கையால் எழுதி, தபாலில் அனுப்பிக்கொண்டிருக்கும் எண்பது வயதை நெருங்கும் ஒரு படைப்பாளியை இந்தப்பதிவில் தெரிந்துகொள்ளுங்கள்!

கைவசமிருக்கும் கற்களையும் மணலையும் சிமெண்ட்டையும் 
நான் முதன் முதலில் எழுத்தாளர் மாஸ்டர் சிவலிங்கத்தை அறிந்து கொண்டது எழுபதுகளில் அவர் சிந்தாமணியின் வாரவெளியீட்டில் வெளியான சிறுவர் சிந்தாமணியில் எழுதிய சிறுவர் புனைகதைகள் மூலம்தான். அழகான ஓவியங்களுடன் பிரசுரமான் அக்கதைகள் மூலம் என்னை மிகவும் கவர்ந்து விட்டார் மாஸ்டர் சிவலிங்கம். அவரது எழுத்து நடையும், உலகின் பல பாகங்களிலிருந்தும் பெற்ற கதைகளை அவர் சிறுவர்களுக்காக எழுதிய பாங்கும் எனக்கு அவரைத் தமிழகத்தின் சிறுவர் இலக்கியத்துக்கு மிகப்பெரும் பங்களிப்பு செய்தவரான வாண்டுமாமாவுடன் ஒப்பிட வைத்தன். உண்மையில் அவர் என்னைப்பொறுத்தவரையில் ஈழத்து வாண்டுமாமாதான்.
அ.ந.கந்தசாமியின் 'நாயினும் கடையர்', 'காளிமுத்து வந்த கதை' ஆகிய கதைகளைத் தேடிக்கொண்டிருக்கின்றேன். கிடைக்கவில்லை. 'நாயினும் கடையர்' வீரகேசரியிலும், 'காளிமுத்து வந்த கதை' தேசாபிமானியிலும் வெளிவந்ததாக அறிகின்றேன். உங்களுக்கு அவை பற்றிய தகவல்கள் தெரிந்தால் அறியத்தாருங்கள். இவற்றை வைத்திருப்பவர்கள் பகிர்ந்துகொள்ளுங்கள்.


கனடாவிலே ரொறன்ரோவை மையப்படுத்திய வாழ்க்கைச் சூழலிலே எனக்கும் எனது துணைவியார் கௌசல்யாவுக்கும் கிடைத்த கெழுதகை நண்பர்கள் சிலரில் மிக முக்கியமான ஒருவர் பேராசிரியர் சுப்பராயன் பசுபதி அவர்கள். அறிவியல் துறைசார் கல்வியாளரான அவர் தமிழ் மொழி, இலக்கியம், கலைகள் முதலான பண்பாட்டுத் துறைகளிலும் ஆழ்ந்த புலமை கொண்டவராவார். அவ்வாறான பண்பாட்டுத் துறைகள்சார் புலமை அம்சங்களை ஆய்வரங்குகள் ஊடாகவும் வலைப்பூக்கள் வழியாகவும் சமகால அறிவுலகுக்கு அவர் வாரிவழங்கி வருகிறார்.
வரலாற்றில் நிஜப் பாத்திரங்கள் :