(தொடர் கட்டுரை) ஜெயமோகனின் வெள்ளையானை நகர்த்தும் அரசியல் (3) - ஜோதிகுமார் -
3
ஏய்டன் நீலமேகத்தின் சாதீய மனத்திண்மை குறித்து சிந்திப்பதும், அச்சிந்தனைக்கூடு, மனித ‘நம்பிக்கை’ பொறுத்த, பின்வரும் தரிசனங்களுக்கு வந்து சேர்வதாகவும் நாவல் காட்டுவதாய் உள்ளது.
“இவனை ஒரு தாழ்ந்த சாதியினனைத் தொட வைத்தேன் என்றால் நான் வெற்றிபெற்றவனாவேன் அல்லது குறைந்த பட்சம் மனமுடைந்து அழ வைத்தாலாவது வெற்றி பெற்றவனென உணர முடியும்”
“ஒரு போதும் அதற்கான வாய்ப்பை இவன் எனக்கு அளிக்கப் போவதில்லை..”
“ஆம். இவன் மௌனமாக இறப்பான். தன்னுடைய ‘நம்பிக்கைகளுக்காக’ உறுதியாக வதைப்பட்டு அமைதியாக உயிர் துறக்கிற ஓர் புனிதரை போல! புனிதரா? என்ன வேறுபாடு? எல்லாம் நம்பிக்கைதான்…இவன் மிக முட்டாள் தனமான ஒன்றுக்காக, மனித ஆன்மாவுக்கே எதிரான ஒன்றுக்காக இறக்கின்றான். ஆனால் இவன் இப்போது இறக்கும் மனநிலைக்கும் அந்த புனிதரின் மனநிலைக்கும் வேறுபாடு இல்லை. என்ன அபத்தம்” (பக்கம்-74) (அழுத்தம் எம்முடையது)
அதாவது நீலமேகத்தின் சாதீய பார்வையும் ஏய்டனின் சமூக நீதிக்கான பார்வையும், நம்பிக்கை எனும் ஒரே அடிப்படையில் இருந்து எழுவனவாக தர்க்கிக்கப்படுகின்றது.
‘நம்பிக்கை’ என்ற அடிப்படையைக் கொண்டு நோக்கும் போது, இரண்டுமே ஒன்றுதான் என்பதும், இதன் தொடர்ச்சியாக, இக்காரணத்தாலேயே வாழ்வே அபத்தம் என்ற முடிவுக்கு வருதலும் எவ்வளவு தூரம் அபத்தமானது என்பதும் இலகுவில் கண்டுக்கொள்ளக்கூடிய ஒன்று தான்.
அதாவது ‘நம்பிக்கை’ என்ற ஒரு அடிப்படையை வைத்துக் கொண்டு வௌ;வேறான இரண்டு வேறுபட்ட நம்பிக்கைகளை, இவை இரண்டுமே ஏதோ ஒரு வகையில் நம்பிக்கைதாம் எனும் அடிப்படையில் பார்த்து, இவை ‘ஒன்றுதான்’ என முடிப்பதும் அதன் வழியாக, இறுதியில், இக்காரணத்தினாலேயே , இவ்வடிப்படையில், வாழ்வே அபத்தம் எனப் பாடும் பாட்டு இந்திய வரலாற்றில் ‘யாவையும் மாயை’ எனப் பாடப்பட்ட பாடலுக்கு ஒப்பானதேயாகும்.

இரும்புக் கதவுகள் கிறீச்சிட்ட சத்தத்தில் நடேசுவிற்கு விழிப்பு வந்திருக்க வேண்டும். இருட்டுக்குள் பழகிப் போன குழிவிழுந்த கண்களுக்குள் வெளிச்சம் பாய்ச்சப் பட்டதும், கூச்சம் தாங்காமல் அவை தானாகவே இறுக மூடிக் கொண்டன. இமைகள் மூடிக் கொண்டாலும் காது மடல்கள் விரிந்து நெருங்கி வரும் கனமான பூட்ஸின் அதிர்வுகளை மௌனமாக உள்வாங்கிக் கொண்டன. ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போவதற்கான எதிர்பார்ப்பில், இதயம் ஏனோ வேகமாகப் படபடவென்று அடித்துக் கொண்டது. மிக அருகே அதிர்வுகள் நிசப்தமாகிப் போனதால், பயத்தில் இதயம் இன்னும் வேகமாக அடித்துக் கொள்ள, தூங்குவது போலப் பாசாங்கு செய்ய முனைந்தான்.
நேக்கு பூனையை பிடிக்காது. தப்பு, தப்பு...... பூனைகளைன்னு மாத்தி வாசியுங்கோ. பூனையாம் பூன. அதென்ன..... நம்ம கண்ணுக்குள்ளயே ஏதோ தேடற பார்வை...
அண்மையில் நண்பர் எல்லாளன் தந்திருந்த நூல்களிலொன்று 'சமாதானத்திற்கான ஶ்ரீலங்கா சார்புக் கனேடியர்கள்' அமைப்பு வெளியிட்டிருந்த மலையகத்தைச் சேர்ந்த ஊடகவியலாளரும், முன்னாட் விடுதலைப் போராளியுமான வரதன் கிருஷ்ணா எழுதிய 'வெந்து தணியாத பூமி' என்னும் சிறு நூல். இந் நூலை வாசித்தபோது ஒன்று புரிந்தது. இது தொட்டிருக்கும் விடயம் தற்போதுள்ள சூழலில் மிகவும் முக்கியமானதொன்று. இது ஆற்றியிருக்கும் பணியும் முக்கியமானது. காலத்தின் தேவை.

திருமணமாகி மதுரை வந்த நாள்முதல் அடிக்கடி இரவு ஒன்பதுமணிக்கு, எங்கள் பெட்ரூமிலிருந்து அம்மாவிடம், வீடியோ காலில்தான் பேசுவேன். அம்மா தனது பெட்ரூமிலயிருந்து பேசுவாங்க. சிலநாட்களில் சமையல்காரப் பையன் எடுத்துப் பேசுவான். தவிர, நேரம் கிடைக்கும்போதெல்லாம் அத்தானும் பேசத் தவறுவதில்லை.
2012 ஏப்ரல் 12ம் தேதி வியாழக் கிழமை காலை 10 மணியளவில் வவுனியா பூங்காப் பகுதி தடை முகாமிலிருந்து விடுவிக்கப்பட்ட முப்பத்தொரு பெண்களில் சங்கவி ஒருத்தியாக இருந்தாள். அவர்களில் நான்கு பேர் குழந்தைகளோடு இருந்தார்கள்.




திரு.கிரிதரன் இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக ஈழத்து சஞ்சிகைகள், பத்திரிகைகளில் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் எழுதி நன்கு அறிமுகமானவர். பின்னர் புலம்பெயர்ந்து கனடா சென்று தமது படைப்பாற்றலை அங்கும் தொடர்ந்து ஈழத்திலும் வெளிப்படுத்தி வந்துள்ளார். அத்துடன் நின்றுவிடவில்லை. தொடர்ந்து தமிழ் நாட்டிலும் தமிழர் தொழில்முறையாகவும் புலம்பெயர்ந்தும் வாழும் உலக நாடுகளிலெல்லாம் அறிமுகமானார். ஆயினும் நான்கு குறுநாவல்கள் அடங்கிய இத்தொகுதியே அன்னாரின் படைப்பாற்றலையும் எழுத்து வன்மையையும் எளிதில் அளவிடக் கூடியதாக அமைந்துள்ளது எனக்கூறலாம்.
- தமிழ்புக்ஸ்.காம் தளத்தில் வெளியான அஞ்சலிக் கட்டுரை. அனுப்பியவர் நண்பர் ஸ்நேகா பாலாஜி -

எனது ஐந்து வயதுப்பேரனுக்கு பீட்டர் என்ற முயலின் கதையை (Tale of Peter the Rabbit) சமீபத்தில் வாசித்தேன் . அந்த கதை பலருக்குத் தெரிந்திருக்கும். தாய் முயல் தனது பிள்ளைகளான புளுப்சி, மெர்சி, கொட்டன் ரயில் மற்றும் பீட்டரிடம் , “நீங்கள் போய் விளையாடுங்கள். ஆனால் மிஸ்டர் மக்கிரகரின் தோட்டத்திற்கு போகவேண்டாம் . ஏற்கனவே அங்கு போனதால் திருமதி மக்கிரகர், சில காலத்தின் முன்பு உங்களது தந்தையை தங்களது உணவாக சமைத்து உண்டுவிட்டார்கள். ஆகவே கவனம் ” என எச்சரிப்பார்




பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









