'லெப்ரோ'வும் மு.நித்தியானந்தனும் தமிழ் அரசியலும்! - ஜோதிகுமார் -


நெருக்கடி மிகுந்த இன்றைய காலப்பகுதியில், ரஷ்ய வெளிநாட்டு மந்திரியான, ‘லெப்ரோ’ என்ற மனிதரின் முக்கியத்துவம் பல மடங்குப் பெரிதாகின்றது. இதன் காரணமாகவே, பூமியில் வாழும், அரசியல் ஞானம் மிகுந்த ஜீவராசிகள் ஒவ்வொன்றும் இம்மனிதரை, தத்தம் பார்வையில், பார்க்க விழைவது இயல்பானதே. முக்கியமாக, உலகு இன்று வரலாறு காணாத இழுபறிகளுக்குள் சிக்கியுள்ள இந்நேரம், இது, பொதுவானதே. இதற்கு திரு. மு.நித்தியானந்தன் அவர்களும் விதிவிலக்கானவர் அல்ல என்பதனை, அவரது வீரகேசரிக் கட்டுரை வெளிப்படுத்துகின்றது.
ii
ஒருமுனை ஒழுங்கில் இருந்து, இன்று, பல்முனை உலக ஒழுங்கை நோக்கி உலகுப் பயணப்பட்டுக் கொண்டிருப்பதாய்க் கூறப்படுகின்றது. இவ் இழுபறி, வடக்குக்கும், தெற்குக்குமான இழுபறி என்றும் வர்ணிக்கப்படுகின்றது. அதாவது, அமெரிக்காவின் தலைமையில் காணக்கிட்டும் ஓர் ஐரோப்பிய யூனியனின் இழுபறி, தூய வெள்ளை நிறத்தவருக்கும், சீன-ரஷ்ய தலைமையிலான தூய வெள்ளை நிறம் அல்லாத அல்லது கறுப்பு அல்லது மாநிறத்தவர்களுக்கும் இடையே நடக்கும் இழுபறி என வரையறுக்கப்படுகின்றது. ஆனால், இது ஒரு பல்முனை ஒழுங்குக்கான முயற்சி அல்லது இதுவே இன்று வடக்கின் ஆதிக்கத்தை எதிர்ப்பதற்கான முயற்சி என்றும் கூறப்படுகின்றது.
iii
சீனத்தின், SHELONG விண்வெளி விமானம், இப்போது அமெரிக்காவின் X-37B விண்வெளி விமானத்துக்குப் போட்டியாகக் குதித்துள்ளது என்றும், இது விண்வெளியில் இருக்கும் செய்மதிகளைச் செயலிழக்கச் செய்யும் மர்ம சாகசத்தில் ஈடுபட்டு வருவதாகவும் செய்திகள் உலாவுகின்றன. இச்செய்திகளில் உண்மையும் இருக்கலாம். பொய்யும் இருக்கலாம். ஆனால், விண்வெளி ஆதிக்கத்துக்காக ஓர் உக்கிரப் போர் இன்று ஆரம்பமாகி உள்ளது என்பதில் சந்தேகமில்லை. இதனாலேயே, இவ் உக்கிரப் போரினால் உந்தப்பட்ட நாடுகள், ‘நாளும்’ தத்தமது செய்மதிகளை விண்வெளியில் நிலை நிறுத்தத் தெண்டித்து வருவது இன்றைய நடைமுறையாகின்றது.



மதியத்துக்குப் பின்பாக , பஹல்காம் நகரின் மத்தியப் பகுதியில் வாகன நெரிசலில் நாங்கள் வந்த வாகனம் நத்தையைப் போல் மெதுவாக நகர்ந்தது. அச்சமயம், பாதையோரத்தில் ஒருவரின் குரலும் சைகைகளும் என் கவனத்தை ஈர்த்தன. உயரமான பெண் ஒருவர் பரபரப்பாகப் பேசிக் கொண்டிருந்தார். அவரது வெள்ளைச் சட்டை, சேற்றில் உழுது வீடு வந்த விவசாயியின் தோற்றத்தை நினைவூட்டியது. அந்தக் காட்சி என்னுள் ஒரு கலவர உணர்வை உருவாக்கியது— இங்கு ஏதோ அசாதாரணமான ஒன்று நடந்திருக்க வேண்டும்.





ஊரின் வாசம்


ஏனைய இலக்கியப் படைப்புகளுடன் ஒப்பிடும்போது சிறுகதைக்கு வீரியம் அதிகம்; குறைந்த பக்க எண்ணிக்கைக்குள் ஆழமான மனப் பதிவை ஏற்படுத்தக்கூடியது. ஒரு கதையைப் படிக்கும்முன் இருந்த மனநிலையிலிருந்து அக்கதையைப் படித்து முடித்தப்பின் வேறொரு மனநிலைக்கு மாற்றக்க்கூடியது; கதைக்கும் வாசகனுக்கும் இடையே சொல்லால் சொல்லப்படாத இடைவெளியை விட்டு அவனோடு உறவாடிக்கொண்டே இருப்பது; அமைதியாய் இருக்கும் வாசகனின் சிந்தனையைக் கிளர்ந்தெழச் செய்வது; கிளர்ந்து கிடக்கும் வாசகனின் சிந்தனையை அமைதியுறச் செய்வது. இவ்வாறாக படைக்கப்படும் சிறுகதை பொழுதுபோக்கு அம்சம் குன்றியும் பொதுபுத்தியில் ஊறிக்கிடக்கும் ஒரு சிந்தனைக்கு மாற்றாக இன்னொரு சிந்தனையை விதைக்கும் தன்மை கொண்டது.

உயிர் சுருட்டி கனிமொழி செல்லத்துரை என்பவரால் எழுதப்பட்ட நாவல். 2025 இல் வெளியான இந்நாவல் இன்றைய நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தைக் கதைக்களமாகக் கொண்டு அமைந்துள்ளது. கதைக்களம் என்று சொல்லுவதை விட வேதாரண்யத்தின் நிலவியல் வரைபடமாக இந்நாவல் உள்ளது என்றால் அது மிகப் பொருத்தமானதாக இருக்கும். ஏனெனில், வேதாரண்யம் பகுதியில் உள்ள மக்களின் ஒரு குறிப்பிட்ட காலகட்ட பண்பாட்டு எச்சங்களை ஆவணப்படுத்துவதாக அமைந்துள்ளது இது.
அவனுடைய பார்வை கனகவல்லிக்குப் பிடிக்கிறதில்லை . '' அதிலே இருக்கிற ஒரு வெறி சுடுகிறது ,. எதையும் கூறுகிற அம்மாவிடம் வந்து கூறினாள் . '' எடியே ! நான் உங்க அப்பரைப் பார்க்கிறதுக்கும் , நீ பார்க்கிறதும் வேற மாதிரி இருக்கிறது அல்லவா , திட்டி , புறு புறுத்தாலும் என்னுடையதில் என்ன இருக்கும் சொல்லு ..'' என்று உணர்ச்சிப்படாமல் கேட்ட்டார். ''அன்பு இருக்கும் '' என்று இழுக்க , '' அதில்லையடி ,நாம ஒரே பட்ஜ் ! . நமக்குள் ஒரு சமநிலை இருக்கும் . உனக்கும் அவனுக்கும் பல வயசு .வித்தியாசம் , அதனால் குழப்பமடைகிறாய் . நல்ல வேலை , வாழ்க்கைக்கு ...அத்திவாரம் . அதன் மேலே தான்டி கனவுகள் வரையிறது நடக்கிறது . இப்பத்தைய பெடியள் நீரிலே மூழ்கிற படகுகள் மாதிரி பாலையிலே நிற்கிறாங்கடி . வெளியேற முடியாத முடக்கு, சந்திகள் அனேகம் . . உன்னிலே ஒரு விருப்பம் வந்திருக்கிறது .கிடைக்க மாட்டாய் எனத் தெரியும் . எனவே வெறித்துப் பார்க்கிறான் .. இந்த இனப்பிரச்சனை .. அவனையும் பாதிக்கிறதடி ‘’ என்கிறார் .
ஒருவகையில் சிறுகதையை இவ்வுலகைப் பார்க்கும் ஜன்னல் என்றும் கூறலாம். அந்த ஜன்னலூடு வெளியே விரிந்து கிடக்கும்
5.09.04 அன்று காலை 10.30 மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பமானது. திலகபாமாவின் “நவீன இலக்கியத்தின் சமீபத்திய போக்குகள் பற்றிய” ஆரம்ப உரையுடன் நிகழ்ச்சி ஆரம்பமானது. அவரது உரையில் “வாழ்வோடுதான் என் எழுத்து என வாழ்ந்து கொண்டிருந்தவள் நான். முதன் முறையாக2000த்தில் தான் எழுத்துலகை நின்று கவனிக்கத் துவங்குகின்றேன். இனிமேலும் பேசாமல் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்கின்ற சூழலில் தான் எழுத்து பற்றிய என் விமரிசனங்களை வெளியிடத் துவங்குகின்றேன். இந்த 4 வருட அவதானிப்பு நிறைய எனக்குள் கேள்விகள்: எழுப்பியிருக்கின்றது.. மனிதத்துள் நுழைய முடியாது தவிப்பவர்கள்,சமுகப் பொறுப்புணர்வு அற்றிருப்பவர்கள் எல்லாம் இலக்கியம் செய்ய வந்திருப்பதும், செய்து கொண்டிருப்பதும் தாங்கள் செய்து கொண்டிருந்தவற்றை பலரும் பின் பற்றும் படி செய்ய தொடர் பழக்க வழக்கமாக்கி அதை நிலை நிறுத்துவதும் தொடர்ந்து நடந்த படி இருப்பது இலக்கியத்துள் குறிப்பாக கவிதைகளில் ஒரு ஆரோக்கியமற்ற போக்கை உருவாக்கி வைத்திருக்கின்றது.
புகலிடத்தில் வாழும் பெண்கள் தங்கள் கருத்துக்களையும் அனுபவங்களையும் பரிமாறிக்கொள்ளும் முகமாக 1990இல் ஜேர்மனியில் உள்ள சில பெண்களால் ஆரம்பிக்கப்பட்டது. இப் பெண்கள் சந்திப்பு ஜேர்மனியின் பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற அதேநேரம், அது தனது எல்லைகளை விஸ்தா¢த்து சுவிஸ், பிரான்ஸ் போன்ற நாடுகளிலும் சந்திப்புகளை நடாத்தி வருகின்றது. ஜரோப்பாவில் வாழும் பெண்கள் மட்டுமன்றி இலங்கை, இந்தியா அவுஸ்திரேலியாவிலிருந்தும்கூட பெண்கள் வந்து கலந்து கொள்ளும் சந்திப்பாக வளர்ந்திருக்கிறது. சுவிஸில் மூன்றாவது தடவையாக நடைபெறும் பெண்கள் சந்திப்பின் 22வது தொடர் ஒக்டோபர் மாதம் 11ம் திகத§ சுவிஸ் சூ¡¢ச் நகா¢ல் நடைபெற்றது. இச் சந்திப்பு தனது 13வது வருடத்தை பூர்த்தி செய்வதும் இங்கு குறிப்பிடத்தக்கது. ஓரு நாள் நிகழ்ச்சியாக நடைபெற்ற இச் சந்திப்பில் பெண்ணியச் சிந்தனை நோக்கிலான கருத்தாடல்கள், அனுபவப் பகிர்வுகள், விமர்சனங்கள் என்பன இடம்பெற்றன.
ஐம்பதுகளில் பிரசண்ட விகடன், பொன்னி, புதுமை ஆகிய இலக்கிய இதழ்களில் எழுதியவர். சாகித்ய அகாதமிக்காக சிறுகதைகள் மொழிபெயர்த்துள்ளவர். தமிழக அரசு நாவல் பரிசு, கோவை வில்லி தேவசிகாமணி இலக்கியப் பரிசு, திருப்பூர்த் தமிழ்ச் சங்கப் பரிசுகள் பெற்றவர். 'பொருளின் பொருள் கவிதை' என்ற கட்டுரை நூல், வீடு பேறு, ஞானக்கூத்து, காடன்மலை முதலிய மீன்று சிறுகதைத் தொகுப்புகள், 'பறளியாற்று மாந்தர்' என்ற புதினம் ஆகியவற்றின் படைப்பாளி. தமிழின்பால் அபரிமிதமான அபிமானம் கொண்டவர். எண்பதுகளில் 'மூன்றில்' என்ற சிற்றிதழின் நிறுவனர்- ஆசிரியர் மற்றும் 'மூன்றில் ' என்ற இலக்கிய அமைப்பின் வாயிலாக பல நல்ல புத்தகங்களையும் வெளியிட்டவர். இத்த்னை சிறப்பிற்கும் உரிய திரு. மா.அரங்கநாதனுக்கு 17-04-01 அன்று சென்னையில் இலக்கிய ஆர்வலர்களால் ஒரு பாராட்டுக் கூட்டம் நடத்தப்பட்டது. திரு.ச.சீ.கண்ணனை அடுத்து அமர்நதா, 'வெளி' ரெங்கராயன், லதா ராமகிருஷ்ணன் ஆகியோர் மா.அரங்கநாதனின் படைப்புத் திறனுக்கான பதில் மரியாதையாக ஏற்பாடு செய்திருந்த கூட்டம் இது. 
அன்பினிய "பதிவுகள்" ஆசிரியர் நண்பர் திரு.வ. ந.கிரிதரன் அவர்களுக்கு, வணக்கம். அண்மையில் - கடந்த 20,21,22 ஜனவரி -2004 தேதிகளில், சாகித்ய அகாதெமியின் சார்பில்,நெல்லை ம.சு.பல்கலையில் மூன்று நாள் இலக்கிய விமர்சனக் கருத்தரங்கு ( Three Days Seminar on 'LITERARY CRITICISM' at MSU, Thirunelveli ) நடந்தது. ம.சு.பல்கலையின் ஆங்கிலத்துறைப் பேராசிரியரும், வானம்பாடிக் கவிஞரும், சாகித்ய அகாதெமியின் தமிழ்மொழிக் குழுத் தலைவரும் ஆன முனைவர் பாலா (ஆர்.பாலச்சந்திரன்) அவர்களின் முன் முயற்சியில் கருத்தரங்கு வெகுசிறப்பாக நடந்தது.



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









