சண்முகதாசனின் நினைவாக...(1) - ஜோதிகுமார் -

அண்மையில், பேராசிரியர் மௌனகுருவின் தலைமையில், சண்முகதாசனின் நினைவு சொற்பொழிவு ஒன்று பேராசிரியர் அகிலன் கதிர்காமரால் நிகழ்த்தப்பட்டது. இதன்போது, மூலதனக் குவியல்களுடன் உலகு அடைந்திருக்கக்கூடிய மாற்றங்களை அவர் கோடிட்டிருந்தார்.
ஒல்லாந்தர் காலம் தொட்டு, ஆங்கிலேயர், அமெரிக்கர் என உலகை ஆண்ட ஆதிக்கச் சக்திகள், மாறி மாறி வந்த ஒரு முதலாளித்துவ கட்டமைப்பில், எவ்விதம் முன்னோக்கி நகர்ந்தனர் என்பது உரையின் சாரமானது. சுருக்கமாகக் கூறுவதெனில், மூலதனக் குவியல் என்பது, காலத்துக்குக் காலம் நாடுக்களிடைக் கைமாறுவதும் நகர்வதுமாகவே இருக்கின்றது என்பதும், இதற்கமைய அந்தந்த நாடுகள் உலக ஆதிக்கத்தைக் கைப்பற்றுதல் நடைமுறையாகின்றது என்பதுமே உரையானது.
வேறு வார்த்தையில் கூறுவதென்றால், உலகின் ஒருமுனை ஒழுங்கானது (Uni Polar World Order) எப்படி உருவாக்கப்படுகின்றது என்பதனை உரையானது தேட முயற்சித்தது எனலாம்.
2
மூலதனக் குவியலானது, ராணுவ வளர்ச்சியினையும் தொழில்நுட்பத்தையும் தனக்குச் சாதகமாக உருவாக்கிக் கொண்டே தனது ஆதிக்கத்தைக் கட்டமைத்து நிலைநாட்டி கொள்கின்றது.
இவற்றுக்கு இடையிலான நெருக்கமானது, மிக கவனமாகப் பரிசீலிக்கத்தக்கது. ஒருவேளை இம்மூன்றுமே ஒன்று சேர்ந்தாற் போல் வளர்வதாயும் இருக்கக் கூடும்.






கிளியோளியோ அவளின் அறையில் இல்லை. அவள் வீட்டில் இருந்தால் ஜாஸ் இசை இருக்கும் என்பதால் அந்த இசையற்ற மௌனம் அசாதாரணமானது. கிளியோ ஜாஸ் இசையை நேசிக்கிறாள். ‘இது மனித குலத்தின் ஆன்மாவின் ஒலி’ என்கிறாள். அவளின் அறை காலியாக உள்ளது அவளுடைய பயணப் பை அங்கு இல்லை. அவளை இழந்த உணர்வு அவளின் வளர்ப்புத் தாயான ஸாராவுக்கு ஏற்படுகிறது.
நல்ல புத்தகம் ஒன்று வாசகனின் கையில் வந்துவிட்டால் அடுத்த நிமிடமே அதற்கொரு உயிர் வந்துவிடும். எல்லாக் காலகட்டத்திலும், புறக்கணிப்புக்கள் மத்தியிலும் கதைகள்தான் எம்மோடு பேசக் காத்திருக்கின்றன. புத்தகங்கள்தான் அத்தகைய அந்தரங்கமான விடயங்களையும் நினைவுகளினூடாக எமக்குப் பரிசளிக்கின்றன. கதைகளுக்கு இதயம் இருக்கிறது என்று நம்புகின்றேன்.



மனித சமூகத்தை அச்சுறுத்தும் நோய்களில் ஒன்றாக மறதி நோயும் மாறிவருவதை நாங்கள் பார்க்கின்றோம். மனிதரின் ஆயுள் காலத்தை மருத்துவத் துறையின் முன்னேற்றம் அதிகரித்திருப்பதால், இந்த நோயினால் பாதிக்கப்படுபவர்களின் அளவும் அதிகரித்திருக்கின்றது என்றும் நாங்கள் பொருள்கொள்ளலாம். அதேவேளையில் ஒருவரின் வாழ்க்கைமுறையும் இதற்குப் பங்களிக்கிறது என்பதும் விஞ்ஞானம் கூறும் ஓர் உண்மையாகும். மறதி நோயை விளங்கிக்கொள்வது, அதன் அறிகுறிகளை விரைவில் இனம்காண்பதற்கும், அவற்றைக் கையாள்வதற்குத் தேவையான உதவிகளைப் பெற்று, வாழ்க்கைத் தரத்தை ஓரளவாவது பேணிக்கொள்வதற்கும் உதவிசெய்யும்.
புலம்பெயர் தமிழர்கள் வாழும் நாடுகளில் ஒன்று மலேசியா. மலேசியாவில் உள்ள தமிழர்கள் தங்கள் தாய்த்திருநாட்டையும் மொழியையும் வளர்க்க தமிழ் அமைப்புகளை நிறுவியும், தங்களது எண்ணங்களை ஊடகங்களின் துணைகொண்டும் வெளியிட்டு வருகின்றனர். மலேசியாவில் சிறுகதை, கவிதை, புதினம் ஆகிய தளங்களில் தங்களது முத்திரையைப் பதித்தவர்கள் பலர். மலேசியத் தமிழ்க் கவிதைகள் ஆரம்ப காலத்தில் அவர்களது துன்பங்களைத் தாங்கியதாகவும், பின்னர் சமூக வெளிப்பாடுகளின் கூடாரமாகவும் மிளிர்ந்தன.

வாய்மொழி வழியாகத் தோற்றம் பெற்ற இலக்கியங்கள் காலமாற்றத்திற்கு ஏற்ப சங்க இலக்கியம், அற இலக்கியம், பக்தி இலக்கியம், காப்பியம், சிற்றிலக்கியம், சித்தர் இலக்கியம், நவீன இலக்கியம் என புதிய செய்திகளைத் தன்னுள் அடக்கிக் கொண்டு திகழ்கின்றது. இதனைத் தொல்காப்பியர்,
ஜென் தங்கக் கோவில் எனது கோயாட்டாவில் உள்ள மூன்றடுக்கு கட்டிடம் யூனெஸ்கோவால் பாதுகாக்கப்படும் அந்த ஜென் கோவில் 1399ல் கட்டப்பட்டது. அதில் இரண்டு அடுக்குகள் தங்கத்தால் ஆனவை . தூரத்தில் இருந்து பார்த்தபோது ஏற்கனவே நான் பார்த்த அமிர்தசரஸ் பொற்கோவிலை நினைவு படுத்தியது. இங்கும் கட்டிடத்தின் முன்பகுதியில் பெரிய தடாகம் உள்ளதால் சூரிய ஒளியில், கட்டிடத்தின் நிழல் அழகான பிம்பமாக நீரில் தெரியும். இந்த கோவிலின் கூரையின் உச்சத்தில் தங்கத்தாலான கருடன் ஒளிர்ந்தபடியே பறந்துகொண்டிருந்தது. ஏற்கனவே இந்தியாவிலிருந்து இமாலயத்தை கடந்து சென்ற பௌத்தம், சீனாவில் விரிவடைந்து மகாஜான பௌத்தம் ஆகி , அதிலிருந்து பூத்தது இந்த ஜென் பிரிவு. இந்த பௌத்த கோவில் ஜென் பிரிவுக்கானது.
பழமொழிகள் அச்சமுதாயத்தினரின் அனுபவ முதிர்ச்சியையும், அறிவுக்கூர்மையையும் எடுத்து விளக்குவதாக அமைகின்றன. எடுத்துக்கொண்ட பொருளைச் சுருக்கமாகவும், தெளிவுடனும், சுவையுடனும் பழமொழிகள் விளங்க வைக்கின்றன. சுருங்கச்சொல்லி விளங்க வைப்பதற்காக கம்பர் தம் இராமாயணத்தில் தேவைப்படும் இடங்களில் பழமொழிகளை பயன்படுத்தியுள்ளதை இக்கட்டுரையில் நாம் ஆராய்வோம்.







‘காலம் நுஃமான் சிறப்பிதழ்’ வெளியீட்டு நிகழ்வில் (February 23.02.2025: Scarborough Villege Center; Canada) அவ்வை நிகழ்த்திய வெளியீட்டுரையின் காணொளியை அண்மையில் முகநூலில் கண்ணுற்றேன். உணர்வை உந்தச்செய்த உயிர்ப்பான உரை. நுஃமான் , மஹாகவி உறவின் ஆத்மார்த்தம் பற்றி அவ்வை உயிரோட்டமாய் உரையாடியிருந்தார். தந்தை மஹாகவி, மாமா நுஃமான் ஆகிய ஆளுமைகளது ஆப்த நேசம் பற்றிய அவ்வையின் உரையாடல் விரிபடுத்தப்பட்டு எழுதப்படுதல் நல்லது. அவ்வை அப்படி எழுதினால் அது ஒரு முக்கிய ஈழத்து இலக்கிய ஆவணமாக அமையலாம் என்ற உணர்வை அப்பேச்சு எனக்குள் உருவாக்கிற்று. அவ்வையின் வெளியீட்டுரை குறிப்பிட்டது போல, ‘எப்போதுமே சிறந்த படைப்புகளை தாங்கி வரும் காலம் இம்முறை நுஃமான் சிறப்பிதழாக வந்துள்ளது. இவ்விதழை முதலில் இருந்து கடைசிவரை ஒரே மூச்சாக வாசித்து முடித்தபோது அப்படியொரு பரவசமான நிலை’. இவ்விதழின் (ஜனவரி 2025) உயிர்ப்பான உள்ளடக்கம் எனக்குள்ளும் அப்படியொரு பரவசத்தை உருவாக்கிற்று. புன்முறுவல் பூத்த நுஃமான் அவர்களின் ‘அமுத’ புகைப்படம் அட்டையில் ‘நுண்மாண் நுழைபுல நுஃமானாக மினுக்கமுறுகிறது.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









