பிரான்ஸ்சில் 'ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள்' மற்றும் சத்தியசீலனோடு ஓர் உரையாடல்…
ஈழப்போராட்ட வரலாற்றின் ஆரம்ப நிலையில் தன்னை இணைத்துக் கொண்டவரும், பிரபாகரனோடு புலிகள் அமைப்பை ஆரம்பித்தவருமான ஐயர் (கணேசன்) எழுதிய 'ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள்' என்ற வரலாற்று ஆவண நூல் பற்றிய விமர்சனமும் உரையாடலும் நடைபெற இருக்கிறது. இவ் விமர்சனக் கலந்துரையாடலில் ஈழப் போராட்டத்தில் ஆரம்ப நிலைகளில் செயல்பட்ட பல்வேறு கருத்துநிலை கொண்ட செயல்பாட்டாளர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள இருக்கின்றார்கள். போலியான போராட்ட வரலாற்று கட்டமைப்புக்களை, புனைவுகளை 'வரலாறு' என்ற போர்வையில் எழுதிக் குவிக்கும் புலம்பெயர் சூழலில், இந் நூலும் இவ் விமர்சனக் கலந்துரையாடலும் உண்மை சார்ந்த வரலாறுகளை மீளவும் மக்களிடம் கொண்டு செல்லும் ஒரு முக்கிய புள்ளியை நோக்கி நகருகின்றது. எனவே சமூக அக்கறை கொண்ட அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அழைக்கின்றோம்.



குறும்பட விருது
அன்புடையீர் கொழும்புத் தமிழ்ச்சங்கம் ஜூன்2,3,4ஆம் திகதிகளில் நடத்தவிருக்கிம் உலகத் தமிழ் இலக்கிய விழாவில் கலந்து கொள்ளுமாறு தங்ளை அன்புடன் அழைக்கிறோம். கலந்துகொள்ளமுடியாத நிலையிருப்பின் மலருக்கு கட்டுரை அனுப்பிவைக்கவும். மேலதிக விபரங்கள் 
இலங்கைத் தமிழ்பேசும் சமூகங்கள் தொடர்பான எல்லா வகையான அறிவுத் தொகுதிகளையும் ஆவணப்படுத்திப் பாதுகாத்து அனைவருக்கும் கிடைக்கச் செய்தலை பணி இலக்காகக் கொண்ட நூலக நிறுவனத்தின் கனடியப் பிரிவின் அறிமுக நிகழ்வு.
“இளம் பாடகி செல்வி மஞ்சரி கலாமோகன் கலைப்பாரம்பரியம் மிகுந்த குடும்பப் பின்னணியில் இருந்து வருவது சிறப்பு அம்சமாகும். இவரது பாட்டனாரின் தமையனார் குழந்தைவேலு இலங்கை வானொலியில் முதல்தர இசை வித்துவானாக திகழ்ந்தவராவார். ஓவியம், இசை ஆகிய துறைகளில் ஆற்றல் மிக்கவர்களைக் கொண்ட பின்னணியுடன் கர்நாடக இசையில் கால் பதித்திருக்கும் மஞ்சரி கலாமோகன் ஸ்ரீமதி மனோரமா பிரசாத்தின் கீழ் பதினொரு ஆண்டுகள் கர்நாடக இசையைப் பயின்று பயின்று தனது இசைத் திறமையை வளர்த்துக்கொண்டிருக்கிறார். அவரது சமர்ப்பணம் என்ற இந்த இசை நிகழ்வு ஒரு குருவினதும் ஆர்வம் மிகுந்த சிஷையினதும் கடினமான உழைப்பின் அறுவடை என்று கூறலாம்” என்று விமர்சகர் மு.நித்தியானந்தன் சென்ற சனியன்று லண்டனில் விம்பிள்டன் பிள்ளையார் கோயிலில் இடம்பெற்ற விழாவில் உரையாற்றும்போது தெரிவித்தார்.
இலங்கை மண்ணுக்கு புகழ் பெற்றுத் தந்த பெண் அறிவிப்பாளர் திருமதி இராஜேஸ்வரி சண்முகம் அவர்களது நினைவாக ,'தடாகம் கலை இலக்கிய வட்டம் '(அஞ்சலி கவிதை )நிகழ்வினை கல்முனையில் நடாத்த ஏற்பாடு செய்து வருகின்றது. இக் கவி அரங்கில் இலங்கையின் எப் பகுதில் இருந்தும் கவி உள்ளங்கள் கலந்து சிறப்பிக்கலாம். அத்தோடு (கானக் குயிலுக்கு ஓர் கண்ணீர் அஞ்சலி .)எனும் தலைப்பில் கவிதைகளை சர்வதேச மட்டத்தில் இருந்தும் எதிர்பாக்கின்றோம் அக் கவிதைகளை தரமான நூலகவெளியிட உள்ளோம் எனவே உங்கள் கவிதைகளை அனுப்பி வையுங்கள் தரமான கவிதைகளுக்கு அம்மாவின் நினைவுப் பரிசுகள் வழங்கப்படும். மேலதிக விபரங்களுக்கும் , ஆக்கங்களை அனுப்பி வைப்பதற்கும் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
எங்கள் காலத்தில் வாழ்ந்த அற்புதமான கதைசொல்லி. அவரது "ஓர் எழுதுவினைஞனின் டயரி" சிறுகதைத் தொகுப்பு ஒன்றே போதும் அவரின் பெயர் தமிழ் இலக்கிய உலகில் நிலைத்து நிற்க. எழுத்தாளர் ஆனந்தமயில் ஈழத்துப் படைப்பாளிகளில் ஒருவர். 12 சிறுகதைகள் கொண்ட ‘ஒரு எழுதுவினைஞனின் டயறி’ என்ற தொகுப்பினூடாகவே இன்று பலருக்கும் அறிமுகமானவர். 70 களில் எழுத்துலகில் அறிமுகமானவர். துரதிஸ்டவசமாக அவரின் படைப்புக்கள் அப்போது நூலுருப்பெறாத காரணத்தினால் இலக்கிய உலகில் பேசப்படாமல் மறைக்கப்பட்டிருந்தார். வீரகேசரி, மல்லிகை, சமர், அலை முதலான ஏடுகளில் அவரின் படைப்புக்கள் வெளிவந்துள்ளன. மண்ணின் பதிவாக, உயிரோட்டமான வாழ்வின் பதிவாக அவரது பல கதைகள் உள்ளன. குறிப்பாக ‘முருகைக்கற்பூக்கள்’ என்ற சிறுகதை கடற்பிரதேச வாழ்வினைப் பதிவு செய்யும் ஈழத்துக் கதைகளில் முக்கியமானதாக அமைந்திருக்கின்றது. மறைந்த ஆனந்தமயில் அவர்களின் குடும்பத்தாரின் துயரத்தில் நாமும் பங்குகொள்கின்றோம்.
JOBFAIR Reminder: Come on THURS. March 15, 2012 Centennial College Residence, 940 Progress Ave. PLEASE forward this email to friends
வணக்கம்! கவின் கலாலயா நடத்தும் இறுவட்டு வெளியீட்டு நிகழ்ச்சிக்கு தாங்கள் அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள். விபரங்கள் இணைக்கப்பட்டுள்ளன.


புலம்பெயர் எழுத்தாளர்களில் தனது படைப்புக்களினால் உலகளாவிய தமிழ் வாசகர்களின் கவனத்தை ஈர்த்த மிகச்சிலரில் குறிப்பிடக்கூடிய ஒருவர், கனடாவை வாழ்விடமாகக்கொண்ட எழுத்தாளர் குரு அரவிந்தன். சென்ற ஆண்டில் இந்தியாவில் கலைமகள் சஞ்சிகை நடாத்திய குறுநாவல் போட்டியில் “தாயுமானவர்” என்ற இவரது குறுநாவல் விருது பெற்றதின் தொடர்ச்சியாக, கனடாவில் புகழ்பெற்ற “தமிழர் தகவல்” விருது அண்மையில் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. எழுத்தாற்றலுக்காக இந்த விருதைப்பெற்ற மிகச்சிலரில் குரு அரவிந்தனும் இடம்பெறுவது பொருத்தமானதே. இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த பின்னரே எழுத்துப்பணியில் புயலென உருவாகிய இவரது படைப்புகள் உலகின் பலபாகங்களில் வெளிவரும் சஞ்சிகைகளிலும், பத்திரிகைகளிலும் வெளிவந்து பாராட்டுக்களையும், பரிசுகளையும் பெற்றுள்ளன. தமிழகத்தில் ஏராளமான வாசகர்களைக்கொண்ட பிரபல சஞ்சிகைளில் அண்மைக்காலத்தில் இவரது படைப்புக்கள் பல வெளிவந்துள்ளன. “ஆனந்தவிகடன்” சஞ்சிகை வெளியிடும் தீபாவளி மலர்களுக்காக இவரது சிறுகதைகளை கோரிப்பெற்று பிரசுரிப்பது பெருமை தரும் சந்தர்ப்பங்களாகும். குறிப்பாக இவர் எழுதிய இருபத்துநான்கு பக்கக் கதையான “நீர் மூழ்கி நீரில் மூழ்கி” ஆனந்தவிகடனின் ஒரே இதழில் முதன்முறையாக ஐந்து புகழ்பெற்ற ஓவியர்களின் ஓவியங்களுடன் வெளிவந்து லட்சக்கணக்கான வாசகர்களின் பாராட்டினைப் பெற்றது.

சயந்தனின் ஆறாவடு நாவல் பற்றிய கலந்துரையாடல் ஒன்று 18.02.2012 சனிக்கிழமை கவிஞர் சத்தியபாலன் இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. நிகழ்வில் தபின், நிலாந்தன், கருணாகரன், சசீவன், துவாரகன், சு. ரமேஸ் ஆகியோர் உரையாடலில் பங்கெடுத்தனர். நிலாந்தனின் உரையானது; சயந்தனின் நாவலில் வெளிப்படும் அரசியல் பற்றியதாகவே அமைந்திருந்தது. தமிழரின் காயங்களை உலகளாவிய கூட்டுக்காயங்களுடன் இனங்காண்பதுடன் இந்நாவல் நிறைவு பெறுகின்றது என்றார். ஒப்பீட்டளவில் எல்லாத்தரப்பினரையும் கவனத்தில் எடுக்கும் வகையில் நாவல் அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். சாத்திரியார், சனாதனன், பா.அகிலன் ஆகியோரின் படைப்புக்களும் உரையில் ஒப்பிட்டுப் பேசப்பட்டது. கருணாகரனும் இந்தக் கருத்துக்களை ஒட்டியே மேலும் தனது உரையினை நிகழ்த்தினார். தபின் உரை நிகழ்த்தும்போது சயந்தனுடன் ஒரு நாடகத்தில் நடித்த அனுபவத்துடன் நாவல் பற்றிய உரையினை நிகழ்த்தினார். நாவலில் வரும் சம்பவங்களை, உண்மை நிகழ்வுகளை வாசிக்கும்போது யுத்தத்தினால் எங்களுக்கு ஏற்பட்ட வடுக்களே ஞாபகங்களாக வருகின்றன எனக்குறிப்பிட்டார்.


வணக்கம், எதிர் வரும் 12.02.2012 ஞாயிறு மாலை 6- மணியளவில் ''ஜீராங் ஈஸ்ட்" (Jurong Regional Library - Jurong East MRT) நூலகத்தில் உயிர்மை பதிப்பக வெளியீடான நண்பர் ஷாநவாஸ் எழுதிய "ஒரு முட்டை பரோட்டாவும் சாதா பரோட்டாவும்" புத்தகம் வெளியீடு காணவிருக்கிறது. இந்நிகழ்வில் தமிழகத்திலிருந்து உயிர்மை பதிப்பாளர் எழுத்தாளர் கவிஞர் மதிப்பிற்குரிய மனுஸ்யபுத்திரன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றவிருக்கிறார். விழாவிற்கான அழைப்பிதழ் இணைத்திருக்கிறேன், உங்களின் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். புதிய நண்பர்களை அழைத்துவாருங்கள்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









