தூக்கணாங்குருவிக்கூடு தூங்கக் கண்டார் மரத்திலே என்ற பாடல் காதுக்கு இனிமையாக இருப்பது போல் கூடுகளும் கண்ணுக்கு விருந்தாக... இருக்கும். இந்த கூடுகளை இன்றைய தலைமுறைக் குழந்தைகளில் எத்தனை பேர் தூக்கணாங்குருவியையும், அதன் கூட்டையும் பார்த்திருப்பார்கள் என்பது கேள்விக்குரியதே. ஒரு அற்புதமான கட்டிடக்கலைஞன் பறவையாய் பிறந்து விட்டதே என்று வியக்கும் வ்ண்ணம் ஒரு பறவை கூடுகட்டி வாழ்ந்து வருகிறது. ஒரு அற்புதமான கூட்டினை கட்டுவதற்கு அது பதினெட்டு நாட்கள் எடுத்துக்கொள்கிறது என்றால் அது எவ்வளவு பெரிய வல்லுநராக இருக்க வேண்டும். வீடு கட்டியாகி விட்டது. வீட்டுக்கு விளக்கேத்த வேண்டுமே. பறவைகள் மண்ணெண்ணெய்க்கும் மின்சாரத்துக்கும் எங்கு போகும். இயற்கை அதற்கும் வழி சொல்லித்தந்துள்ளது. ஒரு மின்மினிப்பூச்சியை பிடித்து வந்து கூட்டில் வைத்துள்ள ஈரகளிமண்ணில் அதைப் பதித்து வைத்து கூட்டுக்குள் ஒளியேற்றிக் கொள்கிறது.

'தூக்கணாங்குருவிக்கூடு தூங்கக் கண்டார் மரத்திலே' என்ற பாடல் காதுக்கு இனிமையாக இருப்பது போல் கூடுகளும் கண்ணுக்கு விருந்தாக... இருக்கும். ' இன்றைய தலைமுறைக் குழந்தைகளில் எத்தனை பேர் தூக்கணாங் குருவியையும், அதன் கூட்டையும் பார்த்திருப்பார்கள் என்பது கேள்விக்குரியதே. ஒரு அற்புதமான கட்டிடக்கலைஞன் பறவையாய் பிறந்து விட்டதே என்று வியக்கும் வ்ண்ணம் ஒரு பறவை கூடுகட்டி வாழ்ந்து வருகிறது. ஒரு அற்புதமான கூட்டினை கட்டுவதற்கு அது பதினெட்டு நாட்கள் எடுத்துக்கொள்கிறது என்றால் அது எவ்வளவு பெரிய வல்லுநராக இருக்க வேண்டும். வீடு கட்டியாகி விட்டது. வீட்டுக்கு விளக்கேத்த வேண்டுமே. பறவைகள் மண்ணெண்ணெய்க்கும் மின்சாரத்துக்கும் எங்கு போகும். இயற்கை அதற்கும் வழி சொல்லித்தந்துள்ளது. ஒரு மின்மினிப்பூச்சியை பிடித்து வந்து கூட்டில் வைத்துள்ள ஈரகளிமண்ணில் அதைப் பதித்து வைத்து கூட்டுக்குள் ஒளியேற்றிக் கொள்கிறது.

ஆண்பறவைதான் கூடுகட்டும். காய்ந்த புல், வைக்கோல், நீண்ட இலைகள் போன்றவைகளை சேகரித்து வந்து கூடுகட்டும். இவற்றை இணைப்பதற்கு ஈரகளிமண், உலர்ந்த மாட்டு சாணி ஆகியவற்றை கொண்டு வந்து, வீடுகட்ட மனிதன் சிமிண்ட் அல்லது சுண்ணாம்பு கலவையை பயன்படுத்துவது போல், அவற்றை பசையாக்கி புல், வைக்கோல், இலைகள் ஆகியவற்றை இணைத்து வலுவான உறுதியான கூட்டினைக் கட்டுகிறது. தலைகீழாக தொங்கும் சுரைக்காய் போன்று இருக்கும் இதன் கூட்டின் நீண்ட பகுதியை தனது பெண் துணை உறுதியான பின்னரே ஆண்குருவி கட்டுகிறது. அது வரை கூட்டின் கூண்டுப் பகுதி மட்டுமே இருக்கும். இப்பகுதியை கட்டி முடித்த பின் தனது பெண் துணையை ஆண்குருவி கூட்டி வந்து காட்டும். கூட்டின் உட்பகுதி பெண்குருவிக்கு பிடிக்கவில்லை என்றால் பெண்குருவி ஆண்குருவியை விட்டு பிரிந்து விடும். ஆண்குருவி வேறு பெண்குருவியை தேடிச்செல்லும், அல்லது கூட்டை சிறிது மாற்றியமைத்து மீண்டும் பழைய பெண்குருவியை கூட்டி வந்து காட்டும். இவ்வாறு பெண்குருவியின் ரசனைக்கேற்ப கூடுகட்டிய பின் அதை பெண்குருவியும் ஏற்றுக்கொண்ட பின் கூட்டின் நீண்ட பகுதியை ஆண்குருவி கட்டத் தொடங்கும்.இவை நார்களை, இலைகளை தங்கள் அலகுகளால் நேராக கிழித்து அவற்றை பின்னி கூடுகளைக் கட்டும். இதனால் இதனை ஆங்கிலத்தில் வீவர்ஸ் பேர்ட் (WEAVERS BIRD) என்று அழைக்கிறார்கள்.

தூக்கணாங்குருவி ஒரு தலைசிறந்த பொறியியலாளரும் கூட. பெண்குருவி ஒரு பருவத்துக்கு மூன்று அல்லது நான்கு முட்டைகளை இடும். இந்த முட்டைகள் கூண்டு பகுதியில் பாதுகாப்பாக வைக்கப்படும். காற்று வீசும் திசையை நன்கு கணித்து அதற்கேற்ப கூண்டின் குடுவைப்பகுதியும், நீண்டபகுதியும் அமைக்கப்படும். காற்று எவ்வளவு வேகமாக அடித்தாலும், முட்டைகள் குடுவைப்பகுதிக்குள்ளேயே இருக்கும்படி நீண்ட பகுதி பின்னப்பட்டிருக்கும்.மேலும், கூட்டின் மீது காற்றின் தாக்கம் இல்லாத மரக்கிளைகளில் இவைகள் கூடுகட்டும். குடுவை போன்ற பகுதியை கட்ட எட்டு நாட்களும், நீண்ட பகுதியை கட்ட பத்து நாட்களும் இவை எடுத்துக்கொள்ளும். கூடுகட்டும் பொருட்களை சேகரிப்பதற்காக இவை சுமார் 500 முறை பறந்து செல்கின்றன.கூட்டைக்கட்ட சுமார் நான்காயிரத்துக்கு மேற்பட்ட பதர்களையும், மற்றவற்றையும் சேகரிக்கின்றது. பெண்குருவி பதினைந்து நாட்கள் அடைகாக்கும். குஞ்சுகள் இறக்கை முளைத்து பறந்து சென்றபின் ஆண்குருவி வேறு கூட்டை கட்ட ஆரம்பிக்கும்.

இவை தானியங்கள், பூச்சி புழுக்கள் ஆகியவற்றை உண்டு உயிர்வாழக்கூடியவை. இவை கூட்டம் கூட்டமாக வாழக்கூடியவை. இவற்றின் கூட்டை தனியாக பார்க்கமுடியாது. ஒரு பகுதியில் குறைந்தது இருபது முப்பது வீடுகள் இருக்கும். இந்திய துணைக்கண்டம் முழுவதும் இப்பறவைகளைக் காணலாம். தெற்காசியா, தென்கிழக்காசியாவின் தெற்குப்பகுதிகளில் மட்டும் இப்பறவைகளைக் காணமுடியும். சிட்டுக்குருவி இனத்தை சேர்ந்தது தூக்கணாங்குருவி. இக்குருவியின் உச்சந்தலை, மார்பு ஆகியவை மஞ்சள் நிறத்தில் இருக்கும்.பெண்குருவிகள் பொதுவாக மரவண்ண நிறத்தில் இருக்கும்., முட்டையிடும் பருவத்தில் ஆண், பெண் குருவிகள் இரண்டும் அடர்த்தியான பிரகாசமான மஞ்சள், கருப்பு நிறங்களைப் பெற்றிருக்கும் . இனப்பெருக்கம் இல்லாத காலங்களில் இவை கூடு கட்டுவதில்லை. அக்காலங்களில் இவை மரப்பொந்துகள் போன்ற அடைவிடங்களில் கூடி இரவைக் கழிக்கும். பொதுவாக இப்பறவைகள் முட்கள் இருக்கக்கூடிய ஈச்சமரம், கருவேலமரம், இலந்தை மரம் போன்ற மரங்களில் கூடுகளைக் கட்டும். பொதுவாக நீர்வளம் நிறைந்த பகுதிகளை தேடி இவை கூடுகளைக் கட்டும்.முட்டைகளை யும் குஞ்சுகளையும் உணவாக்கிக் கொள்ளவரும் பாம்பு, காகம் ஆகியவைகளிடம் இருந்து தப்பிக்கவே இவ்வாறு கூடுகளைக் கட்டுகின்றன. இவற்றின் கூடுகளை விவசாயக்கிணறுகளுக்குள்ளும் காணலாம்.

தமிழகத்தின் செழிப்பு மிகுந்த பகுதிகளில் இவை பரவலாக காணப்படும். முல்லையாற்றின் கரையில் இக்கூடுகளை பரவலாக காணலாம். வைகை அணையில் இருந்து பேரணை வரையிலான பகுதிகளில் ஆகஸ்ட் முதல் நவம்பர் வரையிலான மழைக்காலங்களில் இவற்றின் கூட்டினை இப்பகுதிகளில் ஏராளமாக காணலாம். விவசாயப்பரப்பு குறைந்து வருவதும், பருவநிலை மாற்றத்தால் பயிர்கள் அழிந்து வருவதும், இயற்கையை மனிதன் பகைத்துக் கொண்டதால் உருவாகும் வறட்சியும் பஞ்சமும் இவற்றை மிகவும் பாதித்துள்ளன.சர்வதேச நாடுகளின் அழிந்துவரும் இனங்களின் பட்டியலில் தூக்கணாங்குருவிகள் இடம் பெறவில்லை. அதனால் அழிவுக் கவலையற்ற இனங்கள் பட்டியலில் தூக்கணாங்கருவிகள் இடம் பெற்றுள்ளன.எனவே இவற்றை பற்றி யாரும் கவலைப்படுவதில்லை என்பது பொது உண்மையாகி விட்டது. ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பது அறுபதுகளில் நீர்நிலைகள் அருகில் இருந்த மரங்களில் இவற்றின் கூடுகள் தொங்குவது மிகவும் சாதாரணமான விஷயமாக இருந்தது. இன்று அவற்றின் கூடுகளை காண மிகவும் சிரமப்பட வேண்டியுள்ளது. சிட்டுக்குருவிகளைப் பாதுகாக்க ஒரு இயக்கம் தோன்றியுள்ளது போல் இவற்றை பாதுகாக்கவும் ஒரு இயக்கம் தொடங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. வறண்டு போன ஆறுகள், காய்ந்து போன ஏரிகள், கண்மாய்க்கரைகள் நிரந்தரமாகி விட்ட இன்றைய சூழலில் இவை மாயமாகி வருகின்றன. இவற்றை பாதுகாக்க வேண்டும் என்றால், நாம் இயற்கையை பாதுகாக்க வேண்டும். நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும், பசுமையை உருவாக்க வேண்டும், காடுகளை பராமரிக்க வேண்டும் .

நன்றி: முகநூல் நண்பர் சுப்ரமணியன் ரவிகுமார்


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க
                                        

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 
பதிவுகள் விளம்பரம்