Miral எம்.கே.முருகானந்தன்மண்ணிலிருந்து வேரோடு பிடிங்கி எறியப்பட்ட மரம் தன் பசிய இலைகள் ஊடாக வியர்வை சிந்திக் கருகுவதைப் போல மனித உயிர்கள் அடாவடித்தனமாக பறிக்கப்படுவதைக் கண்டும் மனம் கலங்காத கல் மனம் கொண்டவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உயிரைப் பறிப்பது  மட்டுமல்ல தன் மண்ணிலிருந்து தூக்கி எறியப்படுவதும் அத்தகையதே. ஒருவர்; காலாகாலமாக வாழ்ந்த பூமியை மற்றொருவர் அடாவடித்தனமாக பிடித்து அமுக்கித் தமதாக்கி, அதன் பூர்வீக உரிமையாளர்களை அடிக்கி ஒடுக்கி இரண்டாந்தரப் பிரஜைகளாக்குவது அநியாயமான செயல்பாடு என்பதைச் சொல்லித் தெரிய வேண்டும் என்றில்லை. தான் மாத்திரமல்ல தனது பெற்றோர், பேரன் பீட்டிகள் எனப் பரப்பரை பரம்பரையாக வாழ்ந்த மண்ணை இழப்பதன் சோகத்தை வார்த்தை சிறைகளுக்குள் அடக்க முடியாது.

  பாலஸ்தீனர்கள் தமது மண்ணிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். மிகுதி மண்ணில் அடையாள அட்டை, வேலை செய்வதற்குப் பாஸ், இஸ்ரேலியர்களை எதிர்த்துப் பேசினால் கடும் தண்டனை எனக் கடுமையான அடக்கு முறைகளுக்கு ஆளானார்கள். இந்த நிலையை அவர்கள் எவ்வாறு எதிர் கொண்டார்கள் என்பதை நாம் அறிவோம். பலஸ்தீன விடுதலை இயக்கம் பற்றியும், இனவெறி பிடித்த இஸ்ரேலிய அரசின் வெறித்தனமான செயற்பாடுகளையும், அதற்குத் துணை போகும் மேலைத் தேச அரசுகள் எனப் பலதையும் அறிந்து வைத்திருக்கிறோம்.

ஆயினும் றீமிக்சிங் செய்யும் ஊடக ஒலிகளுக்கு அப்பால், அங்கு வாழும் சாதாரண மக்களின் குரலை இயல்பாகக் கேட்டது அரிது. நான்கு பெண்களின் வாழ்வின் நாதமாக, போரினால் பாதிக்கப்பட்ட அந்த மக்களின் குரல் இத் திரைப்படத்தில் ஒலிக்கிறது. ஆனால் அந்த நான்கு குரல்களும் ஒரே லயமானவை அல்ல. சுரதிபேதம் கொண்டவை. அவர்களது பார்வைகள் ஒரே விதமான பார்வைகள் அல்ல. வௌ;வேறு கோணங்களில் தெறிக்கும் பார்வைகள். ஒரே அடிப்படைப் பிரச்சனையை, வஞ்சிக்கப்பட்ட அந்த ஒரே வாழ்வை நால்வரும் அனுபவித்தாலும் அவர்களது எண்ணம், எதிர்பார்ப்புகள், எல்லாம் பல்வேறு விதங்களாக இருக்கின்றன.

மிரால் என்ற இச் சினிமா அமெரிக்க தயாரிப்பாளரால், அமெரிக்க நெறியாளர் ஊடாக அமெரிக்க சமுதாயத்திற்காக எடுக்கப்பட்டது. இருந்தபோதும்

ரூலா ஜெப்ரியல் என்ற பெண்ணினது சுயசரிதை நூலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது என்பதால் பலாஸ்தீனக் குரல் அடிநாதமாக ஒலித்தபடியிருப்பதைத் தடுக்க முடியவில்லை எனலாம். ஆங்கிலப்படம். ஆயினும் இடையிடையே அரபி மொழி கலந்திருக்கிறது. முக்கியமாக அவர்களின் கலை, பண்பாட்டு அம்சங்கள் காட்சிப்படுத்தப்படும்போது. இதனால் ஆங்கில உபதலைப்பின்றியும் புரிவதில் சிரமமிருக்கவில்லை.

படத்தின் பிரதான பாத்திரம் மிரால் என்ற இன்றையப் பெண். இவள் வாழ்வே படத்தின் முக்கிய பகுதி. இவளது வாழ்க்கைப் பாதையைச் செதுக்குவதில் ஏதொவொரு வழியில் உதவியவர்கள் ஏனைய மூவருமாகும். பிரதான பாத்திரம் திரையில் வருவதற்கு முன்னர் கிட்டத்தட்ட படத்தின் மூன்றில் ஒரு பகுதி ஓடி முடிந்துவிடுகிறது. பாலஸ்தீனியப் பிரச்சனையை ஓரளவு புரிந்து கொள்ள இது அவசியம்தான். ஆனாலும் கருவின் மையத்துள் நுளைவதற்கு இவ்வளவு நேரம் எடுப்பது சற்றுச் சோர்வு அளிக்கிறது. அத்துடன் ஆரம்பக் காட்சிகளைப் புரிந்து கொள்வதில் சற்று சிக்கல் இருந்தது. வேறு விதமாக எடிட் பண்ணியிருக்க முடியாதா என எண்ணத் தோன்றுகிறது.

முதல் பெண் ஹின்ட் ஹீசெனி. இவள் முதலாமவள். பாலஸ்தீனத்திலிருந்து ஒரு பகுதியைப் பிய்த்தெடுத்து இஸ்ரேல் உருவாக்கப்பட்டபோது அறிமுகமாகிறாள். இஸ்ரேல் உருவானபோது ஏற்பட்ட போரில் அனாதைகளான, வாழ வழியில்லாத மக்களின் பெண் குழந்தைகளைக் காப்பாற்றி, வளர்த்து, கல்வியூட்டி நல்ல பிரஜைகளாக்குவதற்காக தனது சொந்த வீட்டையே பள்ளியாக்குகிறாள். அது Tifl Al-Arabi Institute என்ற பெயரோடு அரசியல் சாயல் படியாத மனிதாபிமான கல்வி நிறுவனமாகத் தொண்டாற்றுகிறது.

இரண்டாமவள் நடியா. இவள்தான் மிராலின் தாய் ஆகும். பாலியல் ரீதியாக வஞ்சிக்கப்பட்டவள். ஒரு இஸ்ரேலியப் பெண்ணை பஸ்சில் வைத்து அடித்தற்காகச் சிறை செல்கிறாள். அங்கு மூன்றாமவளான பற்றிமாவைச் சந்திக்க்pறாள். பற்றிமா இஸ்ரேலியரின் அடாவடித்தனமான நடவடிக்கைளில் கோபமும், இன உணர்வும் தாய் நாட்டில் பற்றும், கொண்ட பெண். தீவிரவாதி எனலாம். இஸ்ரேலியர்கள் சினிமா பார்க்கும் அரங்கில் வெடி குண்டு வைத்ததால் அகப்பட்டுச் சிறை செல்கிறாள். சிறையில் இருவரும் அறிமுகமாகிறார்கள்.

நான்கு பெண்களின் கதையாக இருந்தபோதும் ஹின்ட் ஹீசெனி, அவளது பள்ளிக்கூடம், அவளது நம்பிக்கைகள் என்ற அத்திவாரத்தில் எழுப்பப்பட்ட மாளிகையாக சினிமா அமைகிறது. மாளிகையாக இருப்பது முக்கிய கதாபாத்திரமான மிராலின் வாழ்க்கை.

ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய இராணுவத்தினரின் மூர்க்கத்தனமும், எதேச்சிகார நடவடிக்கைகளும், அடாவடித்தனங்களும் கோபப்பட வைக்கின்றன. தமது வீட்டில் வாழ்ந்தவர்களை ஒரு சிலநிமிட அறிவித்தலுடன் வெளியேற்றி வீதியில் கலைத்துவிட்டு அவர்களது வீட்டை பாரிய இயந்திரங்களால் நிர்மூலமாக்கும் காட்சி மனதைக் குடைகிறது. மனதில் இயலாமையும் கோபமும் கொப்பளிக்க எதுவும் செய்ய முடியாது ஏக்கத்திடன் பார்த்திருக்கும் காட்சி மனதைத் தொடுகிறது. வீதியில் நின்று கல்லெறிந்து தமது எதிர்ப்பைக் காட்டும் சாமானியர்கள் துப்பாக்கி குண்டுகளால் தண்டிக்கப்படுகின்றனர்.

மற்றொரு காட்சியில் பற்றிமாவுக்கு ஆயுற்காலச் சிறைத் தண்டனை வழங்கப்படுகிறது. குண்டு வைத்ததற்காக இரண்டு, இஸ்ரேலிய நீதிபதிக்கு முன் எழுந்து நின்று மரியாதை செய்யாததற்காக மூன்றாவது. சட்டமும், நீதியும் கூட எதேச்சிகார ஆட்சிகளுக்கு  முண்டுக் கொடுப்பதற்காக பாகுபாடு காட்டுகின்றன. ஈவிரக்கமின்றியும் தான்தோன்றித்தனமாகவும் நடந்து கொள்கின்றன. இவை வெறுக்க வைத்தாலும், நாம் அறியாதது அல்ல. மிராலின் அன்புக்குரியவன் பாதையால் செல்லும்போது சடுதியாக பாதுகாப்புச் சாவடியுள் இழுத்து ஓசையின்றி கொன்று முடிக்கிறார்கள். அவன் குற்றவாளியாக இருக்கலாம். இல்லாமலும் இருந்திருக்கலாம். ஆனால் கைது செய்தல், விசாரணை, நீதிமன்றம், வழக்கு என எதுவும் இல்லாது மறைவாகக் கொன்று தடயமின்றி அழிக்கப்படுகிறான். பல வருடங்களின் பின் புதைகுழியிலிருந்து மீட்கப்படக் கூடிய இனங்காணப்படாத உடலின் எச்சங்களில் இவனதும் அடங்கியிருக்கலாம்.

இனவாத அரசுகள் இவ்வாறுதான் தமது இராணுவங்களுக்கு புனிதக் கடமையெனப் பெயர் சூட்டி அளப்பற்ற அதிகாரங்களை வழங்குகின்றன. தட்டிக்கேட்க யாருமில்லை. ஆனால் அதே நேரம் விடுதலை இயக்கங்கள் இனவிடுதலை என்ற பெயரில் தமது மக்கள் மனங்களை மூளைச்சலவை செய்கின்றன. பொது இடங்களில் குண்டு வைத்து அப்பாவி மக்களைக் கொல்லுதல் ஆட்கடத்தல் என பயங்கரச் செயல்களில் ஈடுபடுகின்றன. தாம் செய்யும் ஜனநாயக விரோத, தனிமனித சுதந்திரத்தை ஒடுக்கும் நடவடிக்கைகள் சரியானவை என நம்ப வைக்கும் செயற்பாடுகளில் முனைகின்றன.

முரணான இந்த இரு பக்கங்களையும் இத் திரைப்படம் காட்சிப்படுத்த முனைகின்றது. அதனால் இஸ்ரேல் சார்பான அமெரிக்க மற்றும் மேற்குலக மக்கள் இது பலஸ்தீனக் குரலாக மட்டுமே ஒலிக்கிறது. பக்க சார்பானது எனக் கடுமையாக விமர்சிக்கின்றனர். ஆனால் பாலஸ்தீன பக்கம் சார்பானவர்கள் இது தமது போராட்டத்தை கொச்சைப்படுத்துகிறது என கோபப்படுகின்றனர்.

அன்பு, அமைதி, விட்டு;கொடுத்தல், கல்வியால் சமுதாயத்தை முன்னேற்றலாம் என்ற நம்பிக்கைளின் சின்னமாக ஹின்ட் ஹீசெனி இருக்கிறாள். நடியா பாதிக்கப்பட்ட அபலையாக இருக்கிறாள். பற்றீமா விட்டுக் கொடுக்காத முரட்டுப் போராட்டத்தை நாடுகிறாள். இவர்களுக்கிடையே வந்த புதிய பரம்பரையின் சின்னமான மிரால் வருகிறாள். அவள் தேர்ந்தெடுக்கும் பாதை என்ன? அதைத்தான் இப்படம் பேசுகிறது.

பாலஸ்தீனியப் போராளியான ஹனி, மிராலின் மனத்தில் இடம் பிடிக்கிறான். ஹனி மீதான ஈர்ப்பும், பாலஸ்தீனியப் விடுதலை இயக்கம் மீதான பற்று ஒரு புறமும் கல்வி, சச்சரவற்ற எதிர்காலம், தகப்பன் மேலோன அன்பு ஆகியவை மறுபுறமும் அலைக்கழிக்கின்றன. போதாக்குறைக்கு சந்தேகத்தின் மேல் கைது செய்யப்பட்டு கடுமையான விசாரணைக்கு ஆட்படுகிறாள். மிருதுவான அவளது முதுகுப்புறம் புண்படுமாறு அடிவாங்குகிறாள்.

ஒருவாறு விடுபட்டு வெளிவந்தபோது அவளது அன்புக்குரியவனே அவள் மீது சந்தேகப்படகிறான். காட்டிக் கொடுத்தவள் எனக் குற்றம் சாட்டுகிறான்.

குற்றம் செய்யாத அவள் மனம் துய்ந்து போகிறது. விடுதலை இயக்கம் மீதான முரட்டுப் பற்றுதலால் தமது அன்புக்குரியவர்களையே சந்தேகிக்கும், கொலையும் செய்யத் துணிந்த மனிதர்களைக் கண்ட எமக்கு இது ஆச்சரியமானதல்ல, ஆயினும் மனம் நோகிறது.

மிராலின் தகப்பனாக வரும் ஜமால் அற்புதமான பாத்திரம். Siddig கின் மிகையில்லாத நடிப்பில் சாதாரண அப்பனின் மனநிலையை உணரமுடிகிறது. தீவிரவாத இயக்கங்களிலிருந்து தனது மகளை காப்பாற்றி நல்ல நிலையில் வாழ வைக்க வேண்டும் என்ற தந்தையின் பாத்திரத்தை அழகாகச் செய்கிறார். மனத்தில் நிலைக்கிறார்.

படத்தை நெறியாழ்கை செய்திருப்பவர் Julian Schnabel ஆகும். ஏற்கனவே Before Night Falls, The Diving Bell and the Butterfly போன்ற சினிமாக்கள் மூலமாகக் கவனிப்பைப் பெற்றவராவார்.

Slumdog Millonaire Gfo; Fredia Pinto  புகழ் ; Fredia Pinto பிரதான பாத்திரத்தில் நடித்திருக்கிறார். நன்றாக நடித்திருக்கிறார். ஆயினும் அவரது உருவம் அரபுப் பெண்கள் போலாக இல்லை என்பதையும் குறிப்பிட்டே ஆகவேண்டும். கமெரா Eric Gautier பல காட்சிகள் மனதை அப்பிக் கொள்கின்றன.

இலங்கையில் திரையிடப்படவில்லை. படம் டிவீடியில் கிடைக்கிறது. முடிந்தால் பாருங்கள். எமது வாழ்வுடனான ஒற்றுமை வேற்றுமைகளை அசைபோட்டுப் பார்க்கலாம்.

http://hainallama.blogspot.com/
http://suvaithacinema.blogspot .com/
http://msvoldpupilsforum.blogspot.com/
http://www.geotamil.com /pathivukal/health.html

Muruganandan Muttiah Kathiravetpillai <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க
                                        

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள் இணைய இதழின்  முக்கிய நோக்கம் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை  பலவேறு நாடுகளிலும் வாழும் தமிழர்களுடன் பகிர்ந்துகொள்வதாகும். படைப்புகளை அனுப்பும் எழுத்தாளர்கள் புகைப்படங்களை அல்லது ஓவியங்களை அனுப்பும்போது அவற்றுக்கான காப்புரிமைக்கு உரிமை உள்ளவர்களாக இருந்தால் மட்டுமே அவற்றை அனுப்பவும். தமிழ் மொழியை இணையத்தில் பரப்புவதும் இவ்விணைய இதழின் முக்கிய நோக்கமாகும். படைப்புகளை ngiri2704@rogers.com , editor@pathivukal.com ஆகிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.

Pathivugal Online Magazine''s  main aim is to share the creative works of Tamil writers with Tamils living in various countries. When writers submit their works—such as photographs or paintings—please send them only if you hold the copyright for those items. Spreading the Tamil language on the Internet is also a key objective of this online magazine. Please send your submissions to ngiri2704@rogers.com and editor@pathivukal.com.

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும்.  நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 
பதிவுகள் விளம்பரம்